Translate

Thursday, 9 June 2011

300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !


300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !

பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது. அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலருக்கு பிரித்தானிய எல்லை முகவரகம் வெளியேற்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் சட்டவாளர் நிஷான் பரஞ்சோதி தெரிவித்துள்ளார். ...... read more

Wednesday, 8 June 2011

தில்லி அதிராக மையத்தில் கொசுக்களைப் போலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகள் !

நாம் ஒன்றும் மலையாளிகள் எதிரிகள் அல்ல. ஆனால் இந்தியாவிலேயே சிறிய மாநிலமாகக் கருதப்படுவது கேரளா ஆகும். அங்கு இருக்கும் மலையாளிகள் தான் இந்தியாவை ஆண்டு வருகிறார்கள் என்று சொல்வதே உண்மையாகும். இலங்கை அரசு கூட கேரள மலையாளிகளோடு தமது உறவை இரகசியமாகப் பேணிவருகின்றனர் என்பது உண்மை. இலங்கை அரசின் பல நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக மலையாளிகள் உதவிவருகின்றனர். கீள் கானும் பட்டியலைப் பார்த்தால் எல்லாம் புரியும் !............... read more   

இலங்கையில் கொலைக்களம் தொகுப்பு வெளியீடு பற்றி BBC யில் வாதம் !


இலங்கையில் கொலைக்களம் தொகுப்பு வெளியீடு பற்றி BBC யில் வாதம் !
யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா?  என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. 

இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர். இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்............... read more

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

CTF - PRESS RELEASE - தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

CTF - PRESS RELEASE   08.06.2011

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கட்கு

சிறீலங்கா அரசை வழிக்குக்கொண்டுவர, அதன் மீது, இந்திய மத்திய அரசு ஏனைய நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்கவேண்டும் என வலியுறுத்தும் வகையில், தமிழக சட்டசபையில், தனித்தீர்மானம் கொண்டுவந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றியமைக்கு, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் சார்பில், எங்கள் இதயபூர்வமான நன்றியறிதலை இதன்கண் உங்களுக்கும் தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக

அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் :
திருமாவளவன்

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில்  தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப்
பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள்  மனதார வரவேற்கிறது........... read more

இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்: ஜெயலலிதா

தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா  ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:


இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்........... read more

3 MPs from the Tamil National Alliance to cross to Government?


3 MPs from the Tamil National Alliance to cross to Government?


The United Peoples Freedom Alliance(UPFA)Govt is trying to get 3 MP’s from the Tamil National Alliance(TNA)to cross over to the govt side. Intensive efforts are on currently to entice two MP’s from the Wanni &one from the Batticaloa electoral districts to break away from the TNA.
The two TNA Wanni MP’s being enticed are Vino Noharathalingam & Sivasakthy Anandan.The B’caloa MP being wooed is Seenithamby Yogeswaran.
TNA MPs – Vino Noharathalingam & Sivasakthy Anandan and Seenithamby Yogeswaran
The wooing of the 2 Wanni district MP”s is being done by Industries&Commerce minister Rishad Bathiutheen who was also elected from the Wanni...................... READ MORE

வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்


வேலூர் அருகே கோர விபத்து – சீமான் இரங்கல்

சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 22 பேர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அவலூர் புறவழிச் சாலையில் அருகே நடந்த கோர விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற துயரமான விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் 

இலங்கைத்தீவில் தமிழர்கள் காணமல்போதல் என்பது தமிழின சுத்திகரிப்பின் ஓர் அங்கமே !

இலங்கைத்தீவில், 1979ம் ஆண்டு முதல் இன்று வரை தமிழர்கள் காணமல்போதல் என்பது, சிங்கள பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட தமிழினப் சுத்திகரிப்பின் ஒர் அங்கமாகவே உள்ளது.......... read more



புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.photo i

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.......... read more

லண்டன் தமிழ் இளைஞர்களின் வன்முறைக் கொலைகள் முழு நீளப்படமாகிறதாம் !

ஆபிரிக்க இனத்தவரிடையே காணப்படும் பல குழுக்களும், குழு மோதல்களைப் பற்றியுமே பலர் திரைப்படங்களை எடுத்துள்ளனர். 
ஆனால் முதல் முறையாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில் உள்ள தமிழ் இளைஞர் குழுக்கள் பற்றி படம் ஏன் எடுக்கப்படவேண்டும் என்ற கேள்விகள் தற்போது மேலோங்கியுள்ளது. 
பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் கல்வி, கலாச்சாரம், வணிகம் மற்றும் அரசியலில் என்று பல துறைகளில் முன்னேறியுள்ளனர். அதனை விடுத்து ஒரு சமூகத்தில் உள்ள சிலரது தகாத நடவடிக்கையை படமாக்கி, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கெட்டபெயரை ஏற்படுத்தும் வகையில் இப் படம் அமையபோகிறதா என்ற அசாமும் இங்கே நிலவுகிறது. இது குறித்து மக்கள் உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்வது நல்லது.............. read more

மகிந்தாவை பாதுகாக்கும் காடையர் கூட்டம்: புகைப்படம் !

கொழும்பு நகரப்பிரிவு சிறீலங்கா காவல்துறை அதிகாரி அனுரா சேனாநாயக்காவை ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுராகுமார திஸ்ஸநாயக்கா தொடர்புகொண்டு நிலைமையை விளக்கியுள்ளார். ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச தலைவரைப் பாதுகாப்பதற்கு அங்கு குழுமி நிற்பதாக சேனாநாயக்கா பதிலழித்துள்ளார். ஜே.வி.பியினரின் ஊர்வலம் அலரி மாளிகையை நோக்கி நகர்ந்தல் தாக்குதல் நடத்தவே அவர்கள் நிற்பதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளாராம். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.......... read more

Tuesday, 7 June 2011

வன்னிச்சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தையே நினைவூட்டுகின்றது.


வன்னிச்சூழல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனததையே எனக்கு நினைவூட்டுகின்றது. - நிமல்கா
இலங்கையில் காலம் காலமாக அரச அமைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள மேலாதிக்கமே இனமுரண்பாட்டுக்கான காரணமாகும்.இலங்கையில் பல்வேறு இனங்கள் காணப்பட்டபோதிலும் ஒரு இனத்துக்கு அதிகளவான வளங்கள் பயன்படுத்தப்படுவதைக்காணலாம். யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது விடுதலைசெய்யப்பட்டுவரும் பெண் போராளிகள் சமூகத்தில் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்குள் உள்ளாக்கப்படுவதுடன் ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர்,அதுவும் பெண் என்ற வகையில் வேதனை அடைந்தேன். .................................read more

கொலைகாரனிடமே தஞ்சம் கோரும் இமெல்டா சுகமார்!



தன்னை பாதுகாக்குமாறு யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவ தளபதியிடமே தனக்கு உயிர் ஆபத்து உள்ளதாக இமெல்டா சுகமார் முறைப்பாடு செய்துள்ளாராம்.

தமிழர்களை கொலை செய்த கொலைகாரனிடமே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் திரும்ப திரும்ப சிங்கள அரசுடனும் இராணுவ தளபதியுடனும் உறவாடும் இமெல்டா சுகுமார் அவர்களே தமிழர்களுக்கு நீங்கள் ஆற்றும் பங்கு அளப்பெரியது.

ஐரோப்பிய கண்டத்தை கடந்தும் தமிழீழத்திற்கான குரல் ஒலிக்கும் நேரமிது


mdiy epjp]; r. Fkhud;
tpLjiyg;Gypfis mopj;Jtpl;ljhff; $wp> <oj;jkpoupd; murpay; Nghuhl;lj;ij kOq;fbf;Fk; eupj;je;jpu Ntiyfspy; ,wq;fpAs;sJ kfpe;j uh[gf;rhtpd; rpwpyq;fh muR. gy jkpo; mUtUbfSk; rpq;fs muRf;F Jizahf nraw;gLfpwhu;fs;.  A+jdpYk; tpl jkpod; ve;j tpjj;jpYk; risj;jtdpy;iy vd;gJ cz;ikNa. jkpod; xNunahU tplaj;jpy; kl;Lk; A+jdpYk; tpl NtWgl;L epw;fpd;whd;. gy vl;lg;gu;fisf; nfhz;l ,dk; vd;why; jkpo; ,dkhfNt ,Uf;f KbAk;.

தாயகம் நோக்கிய செயற்பாட்டில் ஓரணியாக செயற்படுவதென ஏகமனதாக முடிவு.


by Thamil Maaran tamilnews4u@yahoo.com
நேற்று (05-06-2011) ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் தமிழீழ செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த சமகால மக்கள் கருத்தரங்கிலேயே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டும்தாயகத்தில் நெருக்கடிகளுக்குள் வாழ்ந்துவரும் மக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடவென இக்கருத்தரங்கு பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி


[காணொளி இணைப்பு] விகடன் செய்தி தளத்திற்கு செந்தமிழன் சீமான் அளித்த செவ்வி


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றசாட்டு குறித்து விகடன் செய்தி தளத்திற்கு அளித்த செவ்வி

அருந்ததி ரோய் ஈழத் தமிழர்களை லண்டனில் சந்திக்கவுள்ளார் !

பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ரோய் அவர்கள் லண்டன் வந்துள்ளார் !
பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ரோய் அவர்கள் தற்சமயம் லண்டன் வந்துள்ளார். இந்திய அரசிற்கு சிம்மசொப்பனமாக இருக்கும் இவர், இந்தியா ஆதிவாசிகளைக் கொண்று குவித்து அவர்களின் காணிகளைக் கைப்பற்றி வருவதாக வெளிப்படையாகவே BBC தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார்............ READ MORE

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுப்பு!



நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அதிகாரபூர்வமான   இணையம் தமிழில் இன்றுமுதல் செயலில்  உள்ளது.
இணைய முகவரிhttp://www.tgte.org/

 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் - மனித உரிமை அமைப்புக்கள் - அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன.......... read more

விவேக சிந்தாமணி


அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் - நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால். 

போர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்!


நாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது.
அதாவது போர்க்குற்றங்கள் நடைபெற்றதென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரனைகள் என தொடங்கினால் யாரை மாட்டிவிட்டு தப்பிக்கலாம் என சிங்களம் தீவிரமாக செயற்படத்தொடங்கியுள்ளது பலரது பெயர்கள் பட்டியல் இடப்பட்டு வேலைகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

துருப்புச் சீட்டாக மாறுகிறதாநிபுணர் குழுவின் அறிக்கை? இதயச்சந்திரன்


BY இதயச்சந்திரன்

தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது.

அம்பாறையில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு இதுவரை வீடுகள் இல்லை;அரச நியமனங்களிலும் தமிழர் புறக்கணிப்பு


தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அம்பாறை மாவட்டத்தில் தற்பொழுது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர் என அரசு சார்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பறைசாற்றுகின்றனர். ஆனால், ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னும் வீடுகள் வழங்கப்படாத அகதிகள் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளனர் என மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சருடன் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூரில் பேச்சு _


  சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ....... READ MORE  

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் தாயார் நளினி விக்கிரமசிங்க காலமானார்

விக்கிரமசிங்கவின் தாயார் நளினி விக்கிரமசிங்க தனது 95 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை காலமானார். டி.ஆர்.விஜேவர்த்தனவின் மூத்தமகளான இவர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவின் துணைவியாவார். அன்னாரின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பொரளை கனத்தை பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது...... READ MORE  

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவு


ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் அமர்வில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன.
இலங்கையில்  இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்று அவசியம் என்று ஸ்விட்சர்லாந்து, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கவுன்சில் அமர்வில் வலியுறுத்தி வரும் நிலையிலேயே நான்கு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளன............. READ MORE

யாழ். அரச அதிபரின் கருத்து தமிழரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது; மனச்சாட்சி குறித்தும் சிவாஜிலிங்கம் ஆச்சரியம்


யாழ். அரச அதிபரின் கருத்து தமிழரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது; மனச்சாட்சி குறித்தும் சிவாஜிலிங்கம் ஆச்சரியம்
கொழும்பில் நடைபெற்ற போர் அனுபவப் பகிர்வு மாநாட் டில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது......... READ MORE

ஜெனீவா - கட்டுநாயக்க - முள்ளிவாய்க்கால் -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய


கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையின் 17ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது. கூட்டத்தின் ஆரம்ப உரையை ஐ.நா. அதிகாரியான சட்டத்திற்குப் புறம்பான மனித படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் நிகழ்த்தினார்.
 
அவர் சமர்ப்பித்த ஒரு அறிக்கையில் எதிர்ப்புகளை அடக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அரசாங்கங்கள் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமெனக் கூறினார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிர்ச் சேதங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை என்பது சவாலானது என அவர் குறிப்பிட்டார்............ READ MORE

இலங்கை அரசின் பித்தலாட்டங்களும் அவதியுறும் மக்களும் - வவுனியாவில் நடந்தது என்ன?

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 900  முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாரிய பிரச்சாரங்கள் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. 
ஆனால் நடந்ததோ வேறு. விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட 900 பேரில் 357பேர் மட்டும் விடுதலையானார்கள். மிகுதிப்பேர் விடுவிக்கப்படவில்லை. ஆற்றாமையால் மக்கள் அழுதார்கள். ஓவென்று அலறினார்கள். கடுமையான விரக்த்தியில் கோசம் எழுப்பினார்கள். அதனைத் தவிர அவர்களால் என்னதான் செய்ய முடியும்?........... READ MORE

புலிகளுக்கு சார்பான கோரிக்கை எனில் தீர்வு இல்லை- மஹிந்த

வடக்கு அரசியல்வாதிகள் யாரேனும் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக கோரிக்கைகளை முன்வைத்தால் அதற்குத் தீர்வு காணப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார். இன்று கொக்காவில் தொலைத் தொடர்பு நிலையத்தைத் திறந்துவைத்த மஹிந்த அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும், வடக்கு அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசித்தே வடக்கு மக்களுக்கு ஒரு தீர்வு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் போர் ஓய்ந்து இரு வருடங்கள் முடிந்தும்கூட, மஹிந்த இதே பல்லவியைக் கூறி வருகிறாரே ஒழிய தீர்வு எடுக்க எதுவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் இதுவரை இல்லை.

சீமானை ஓரங்கட்ட நடக்கும் சதிகளில் இலங்கை அரசும் இணைகிறது

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.

பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில் மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது நம் காதுக்கு வந்த ரகசிய சோர்ஸ் ஒன்று............... READ MORE 

Monday, 6 June 2011

வீதி வீதியாய் புத்த கோயில்: வீடுவீடாய் சிங்கள மொழி; என்ன செய்யப்போகிறோம்?

ஒருமுறை தேவநம்பியதீசன் வேட்டைக்குச் சென்றிருந்தான். நீண்டநேரமாக அலைந்து திரிந்தும் எந்தவொரு மிருகமும் அவன் கண்களில் தென்படவேயில்லை. களைத்துப் போன தேவநம்பியதீசன் தன் பரிவாரங்களை விட்டு நடுக்காட்டுக்கு வந்துவிட்டான். அப்போது அவன் முன்னால் துள்ளியோடியது ஒரு அழகிய மான். மானைத் துரத்தத் தொடங்கிய தீசன், இன்னும் நீண்டதொலைவு காட்டுக்குள் வந்துவிட்டான். ......... read more

மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சியின் பின்னான களியாட்டத்தில் நிர்வான நடணம்?


பல்கலைக்கழக மாணவர்களுக்கு மின்னேரிய இராணுவம் முகாமில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட்டு, வருகிறது. அந்த முகாமில் பயிற்சியளிக்கப்படும் மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்டு நிகழ்வில், பெண்கள் அழைத்து வரப்பட்டு, நிர்வாண நடனம் ஆடப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது............ read more
 

தமக்கு தெரிந்தளவு கூட தமிழ் தெரியாதவர்களே வெளிநாடுகளில் நிதி திரட்ட்டுகின்றனர்


வடக்கு மக்கள் தொடர்பில் யதார்த்தமான உணர்வு இருந்தால் அம்மக்களுக்காக முடிந்தால் ஒரு டொலரையேனும் நன்கொடையாக வழங்குமாறு அவர் புலம்பெயர் தமிழர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொக்காவில் தொலைதொடர்புக் கோபுர ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்............. read more

இலங்கை யுத்த அனுபவ மாநாட்டில் கேள்விகளுக்கு மழுப்பல் பதில்


இலங்கை யுத்த அனுபவ மாநாட்டில் கேள்விகளுக்கு மழுப்பல் பதில் \\
கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற யுத்த வெற்றி அனுபவங்கள் குறித்த மூன்றுநாள் கருத்தரங்கில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாகப் பதில் அளிக்கப்படவில்லை என்று “த எக்கனோமிக்ஸ்” சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

“த எக்கனோமிக்ஸ்” சஞ்சிகை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு:............. read more 

Sunday, 5 June 2011

தனது பாதுகாப்பு ஆலோசகரின் கூற்றை அமெரிக்கா மறுத்துள்ளது

போரில் தமது படையினருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக கொழும்பில் மூன்றுநாள் கருத்தரங்கு ஒன்று நடந்து முடிந்துள்ளது. இக்கருத்தரங்குக்கு வருமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஏற்று அங்கிருந்து ஒருவரும் வராத நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்மித் மேற்படி கருத்தரங்கில் பங்குபற்றினார். அவர் விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவினருக்குத் தெரியாமல் தாம் சரணடைவது என்று நடேசன் தீர்மானம் எடுத்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து பரிசீலனை செய்வது அவசியம் என்று கூறியிருந்தார்........... read 

வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்-தேசிய தலைவர்

பாரதப்போரில் வீமனின் அஞ்ஞாதவாசம் கீசகனின் மரணத்தால்தான் அறியப்பட்டது அவ்வாறே கீசகனை வெல்லும் திறனுடையவன் வீமன் என்பது போல் தேசியத்தலைவரின் அஞ்ஞாதவாசம் தமிழீழத்தின் மலர்வுடன் வெளிவரும் உண்மையாக மாறிவருகின்றது படைத்தரப்பால் பதில் சொல்லமுடியாத புதிராக தொடர்கிறது…............read   

புதிய போர் குற்ற ஆதார வீடியோ ஜெனீவாவில் வெளியீடு: காணொளி இணைப்பு !

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைக் கழக மாநாடு நடைபெற்றது யாவரும் அறிந்ததே. இந் நிகழ்வில் சனல் 4 தொலைக்காட்சி 45 நிமிட ஆவணப்படம் ஒன்றைப் போட்டுக்காட்டியுள்ளது. ஏற்கனவே கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் தமிழ் இளைஞர்களைச் சுடும் காட்சிகளை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி தற்போது புது ஆதாரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகளை சிங்கள இராணுவம் மற்றைய இறந்த உடலங்களோடு தூக்கிப் போடுவதும், அப் பெண்களின் அங்கங்கள் குறித்து பாலியல்ரீதியாக தகாத வார்த்தைகளில் கதைப்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள சில காட்சிகளை அதிர்வு இணையம் இங்கே இணைத்திருக்கிறது.......... read more

ஆயிரம் நாமம் சொல்லி அழைக்கிறோம்


ஆயிரம் நாமம் சொல்லி அழைக்கிறோம் உன்னை
"முதல்நாள்" இறுவட்டிலிருந்து

பாடல் வரிகள் : கதிசெல்வகுமார்
பாடியவர் : வர்ணராமேஸ்வரன்
இசை : பயாஸ் சவாகீர்

http://www.youtube.com/watch?v=jAJlu8cRDW0&feature=player_embedded#at=65

வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து மில்ரன் கீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை.

கொடிய போரின் போதும்அதன் பின்னரும் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் மக்களையும்வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து மில்ரன் கீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை.

Saturday, 4 June 2011

செந்தமிழன் சீமான் மீது பொய்ப் புகார் கொடுத்த நடிகை மீது 5கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தாக்கல


செந்தமிழன் சீமான் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்ப் புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இனத்தை அழித்த காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற முழக்கத்துடன் களமாடிய சீமானின் சீற்றத்தில் 58இடங்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியினரே இந்த கீழ்தரமான செயலில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக காங்கிரசு கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகரே இந்த சதிச் செயலின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....... READ  

நீதிமன்றக் கடிதங்களை வாங்க மறுத்து பயத்தில் திருப்பி அனுப்பும் மகிந்தர் !

அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் 3 தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க சட்டத்தை பயன்படுத்தி இவ்வழக்கு மகிந்தருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது. விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், மகிந்தவுக்கு கொலம்பிய நீதிமன்றம் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதமானது குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பில் ஆஜராக வக்கீலை வைக்கலாம் என்றும், மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அது பிடியாணைக்குரிய கடிதமாக இருக்கலாம் என அஞ்சுகின்ற மகிந்தர் அக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறாராம்........... READ  

மஹிந்தவையும் கூட்டாளிகளையும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்து; ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ ஆவேசம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையும் அவரது சகோதர்களையும் கூட்டாளிகளையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.
ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போதே வைகோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:........... READ 

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரிட்டிஷ் பிரஜை கடந்த 2007ம் ஆண்டில் கொழும்பு சென்றிருந்த போது, காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதுவரை எந்தவித நீதிமன்ற விசாரணைகளும் இல்லாமல் சிறையில் இருந்துவருகிறா என்று நியாயமான விசாரணைகளுக்கான சர்வதேச அமைப்பு அதாவது Fair Trials International கூறியிருக்கிறது.


இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரது நிலைமை குறித்து குடும்பத்தினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.........
READ  

பிரிட்டன் பெண்ணை பாலியல்ரீதியில் துண்புறுத்திய தமிழர் !

இலங்கை காவற்துறையில் முன்னர் பணியாற்றிய தமிழர் ஒருவர் பிரிட்டனில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அத்துடன் நாடு கடத்தப்படும் அபாயத்தையும் அவர் எதிர்கொண்டுள்ளார். பிரிட்டனில் அகதியாக இருந்து வந்த 47 வயதான பர்வேற் கௌரிதரன் மார்க்கண்டு என்ற நபரே குற்றவாளி என டெஸைட்க்ரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹார்ட்டெல்பூலில் கடை நடத்தி வந்த கௌரிதரன், அங்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துள்ளார். அவரது அத்துமீறல் குறித்து அந்தப் பெண் தாயாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முயன்ற சமயத்தில், அதனைப் பறித்துத் தடுத்துவிட்டார். .......... READ 

சனல் 4 யொனத்தன் மிலர் கேள்வி : இலங்கை பிரதிநிதி ஓட்டம்

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1903

தமிழில் எழுத

தமிழில் எழுத visit  http://www.google.com/transliterate/Tamil  ,
 
type 'Kadavul', enter and watch the miracle word appear!

சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை: பார்க்கவேண்டிய காணொளி !

சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை: பார்க்கவேண்டிய காணொளி !
03 June, 2011 by admin
தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்

கருத்தரங்கம் - திருமுருகன் உரை

தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை- தமிழர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காணொளி !

ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து சீமான் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை.
புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

International Day in Support of Victims of Torture - 26 June

தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் - சூன் 26 - மெரினா கடற்கரை


தோழர்களே, தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

செந்தமிழன் சீமான் தன் மீதான பொய்ப்புகாரை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

Thursday, 2 June 2011

ராஜபக்ஷ இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் இறந்ததை மறைக்கிறார் : றொகான் குணரெட்ண !


mahintha-mahintha-02-06-11
உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்................ READ MORE   

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன.
முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். ............... READ MORE  

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்

தோழர்களே, தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.
எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. 
நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.



International Day in Support of Victims of Torture - 26 June