Translate

Thursday, 28 July 2011

யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!


யாழில் தவறான பாலியல் உறவினால் 600கர்ப்பிணிகள் ..!

 யாழில் செல்போண் சிம் விற்பனை செய்யும் முகவர்கள் பாலியல் முகவர்களாக தொழிற்பட்டு வருவதால் யுவதிகள் இவர்களிடம் ரீலோட் மற்றும் சிம் கொள்வனவின் போது யுவதிகளின் இலக்கத்தை அறிந்து விட்டு பின்னர் சிங்கள புலனாய்வினர் உதவியுடன் மிரட்டி வருவதாகவும் அறியப்படுகின்றது .
தற்போதே 600 இற்குமேற்பட்ட கற்பங்கள் பாடசாலை மாணவிகள் உட்பட பல பெண்கள் தவறான பாலியல் உறவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் .
இவர்கள் ஆடவர்களினால் எய்ட்ஸையும் வாங்கிவிட்டனர் ................. read more 

இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)


இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)

chANNEL4சனல் 4 இனால் நேற்று புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிறிலங்கா போர்க்குற்றங்கள் சம்பந்தமான படைவீரர்களின் சாட்சியம் மற்றும் முன்னாள் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா கருத்து ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன............... read more 

ஈழத் தமிழருக்கு பிரச்சினையில் ஜெயலலிதாக்கு முழு ஆதரவு!-சீமான் ஒலிவடிவம் இணைப்பு.



ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். மேலும் நடிகை விஜயலட்சுமி தன்மீது கொடுத்துள்ள புகார் குறித்த விசாரணையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்......... read more 

இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது............ read more 

சுமந்திரன் கூறியது கூட்டமைப்பின் கருத்தல்ல: அரிய நேந்திரன்


சுமந்திரன் கூறியது கூட்டமைப்பின் கருத்தல்ல: அரிய நேந்திரன்


மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றினையே விரும்புவதாக சுமந்திரம் இலண்டனில் கூறியதற்கு அரசாங்கம் வரவேற்பு தெரிவித்தது. ஒட்டுக்குழு மந்திரி கருணாவும் வரவேற்பு கூறி இருந்தார்............ read more 

திமுக பாமக உறவு முறிந்தது

திமுக பாமக உறவு முறிந்தது



திமுக பாமக உறவும் பிரிவும்
திமுக-பாமக: உறவும் பிரிவும்
தமிழகத்தில் தி.மு.க உடனான தனது உறவை பா.மா.க முறித்துக் கொண்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி மு க கூட்டணியிலிருந்து விலகி அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அந்தக் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அண்மையில் இடம் பெற்ற சட்டமன்ற தேர்தல்களின் போது மீண்டும் தி மு க கூட்டணியில் இணைந்து கொண்டது.............. read more 

மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !


மோதலுக்குத் தயார் நிலையில் இருந்த 38 பேர் சிக்கினர் !
வடமராட்சி, அல்வாய்ப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பெரும் கோஷ்டி மோதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மோதலுக்கு ஆயத்தமாக இருந்த இந்த இரண்டு குழுக்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததால் அப்பகுதிக்கு பொலிசார் விரைந்து சென்றதாக மேற்படி தெரிவிக்கப்படுகிறது. அல்வாய் வைரவர் கோயிலுக்குச் சமீபமாக அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் முட்டி மோதிக் கொள்ளத் தயாரான நிலையில் இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது எனவும் அறியப்படுகிறது. ........ read more 

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக 

கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக தற்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது.


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட கோத்தபாய எந்த இழப்பு வந்தாலும் பரவாயில்லை யுத்தத்தை முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

சிப்பாய்களுக்கு வேலையை முடிக்க உத்தரவிடப்பட்டது - சனல்4 புது ஆவணம் !


ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்


ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான் 

தமிழ்நாட்டின் வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை முதல்வர் காப்பாற்ற வேண்டும்: சீமான் தமிழ்நாட்டின் வத்தலகுண்டு அகதிகள் முகாமில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்களும், 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 180 ஈழத் தமிழ் அகதிகள், தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்காக கனடா செல்ல முயற்சித்து ஆந்திராவிற்குத் தப்பிச் சென்ற போது அம்மாநில காவல் துறையினரால் துனி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்திரிக்காவின் திடீர் கரிசனம் -அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்! அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம் ! - தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.


சந்திரிக்காவின் திடீர் கரிசனம் -அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தம்! 
அனைத்துலக சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவோம் ! 
- தொல்.திருமாவளவன் வேண்டுகோள்.
அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகார குழு சிங்கள இனவெறி அரசுக்கு வழங்கி வந்த நிதி உதவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது. இனப்படுகொலை குற்றவாளிகள் இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகளாக விசாரிப்பதற்கு அழுத்தம் கொடுக்கிறவகையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. மனிதநேய அடிப்படையிலான நிதியுதவியை தொடர்ந்து வழங்குவதென்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு இராஜபக்சே கும்பல் உடன்பட்டால் பிற நிதியுதவிகளையும் வழங்குவதென்றும் அந்த குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பின் மூலம் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான மனநிலை அனைத்துலக சமூகத்திடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சிறகு மாத இதழ் - www.siragu.com


சிறகு மாத இதழ் - www.siragu.com

அமெரிக்காவில் இருந்து செயல்படும் தமிழ் உணர்வாளர்கள் சிறகு என்ற மாத இதழை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இதில் திரைப்பட செய்திகளை முன்னிறுத்தாமல் தமிழர் நலனுக்கான கட்டுரைகளையும் செய்திகளையும் முன்னிறுத்தி வருகின்றனர்.
உதாரணத்திற்கு இந்த மாத இதழில் இருக்கும் மீனவர் படுகொலைகள் பற்றிய கட்டுரையையும் நேர்காணலையும் வாசித்து பாருங்கள்.

சனல்4ன் வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

சனல்4ன் வெளியிட்ட புதிய  போர்க்குற்ற ஆதாரம்


2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் – 4 செய்தி வெளியிட்டிருக்கிறது.

திரு.சுமத்திரன் அவர்களுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

திரு.சுமத்திரன் அவர்களுக்கு எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வொன்றில் திரு.சுமத்திரன் அவர்கள் புலம்பெயர் மக்களின் போராட்டங்களை விமர்சித்தது மற்றும் சிங்கள மக்கள் ஏற்கும் தீர்வை மட்டுமே பெறவேண்டும் எனவும் போர்க்குற்றங்கள் பற்றிக் கதைத்து சிங்களவர்களை நாம் கோபப்படுத்தக் கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல நாடுகளில் இதே கருத்தை தெரிவித்திருக்கின்றார்............ read more 

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ்

மாவீரர் நாள் - 2011 நிகழ்வு ஏற்பாட்டுக் குழு - பிரான்ஸ் 
எமது விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மகத்தான எம் மாவீரர் செல்வங்களின் தியாகங்களை போற்றிப் பூசிக்கின்ற புனிதமான அந்த நாளை சிறப்புற நடாத்துவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கியுள்ளனர். சமூகப் பிரதிநிதிகள், தமிழ் அமைப்புக்கள், மற்றும் நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர்களை உள்ளடக்கியதாக இவ் ஏற்பாட்டுக் குழுவும், அதன் ஆதரவுக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டுக் குழு

ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்


ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்

சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Monday, 25 July 2011

இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: ராமதாஸ்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு: ராமதாஸ்


இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவு தனித்தமிழ் ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது............... read more 

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   
இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. ........... read more 

இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுக: இ.கம்யூ

இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றுக: இ.கம்யூ


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் சென்னை சூளைமேடு அமீர்ஜான் தெருவிலுள்ள தாரக் இல்லத்தில் ஜீலை 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது. 


இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர்கள் டி.ராஜா எம்.பி, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.................... read more 

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: ராஜபக்சேவுக்கு சந்திரிகா குமாரதுங்க யோசனை

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு: ராஜபக்சேவுக்கு சந்திரிகா குமாரதுங்க யோசனை


தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அதிபர் ராஜபக்சே முன்வர வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.


இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதால், நம்முடைய வலிமை குறைந்துவிடாது என்றும், மாறாக பல்வேறு திறன்களும், திறமைகளும் நம்மை முன்பைவிட வலுவானதாக மாற்றும் என்று இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்............. read more 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி - மகிழ்ச்சியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்


ஜனநாயக செயற்பாட்டினைத் தம் கையில் எடுத்து தம் உரிமையின்குரலை உலகிற்குத் தெளிவாகத் தெரிவித்த தமிழ் வாக்காளர்களை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது, போற்றுகின்றது............ read more 

தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _


தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசாங்கம் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும் : சுரேஷ் _
  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமேச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ............... read more 

தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ்

தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ்



  நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. எல்லோரது கண்களும் விரைவில் திறந்து கொள்ளும் என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். ............. read more 

இலங்கை தேர்தல் வெற்றி சொல்வதென்ன?

இலங்கை தேர்தல் வெற்றி சொல்வதென்ன?
கொழும்பு: இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர் கட்சி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இலங்கை அரசும், சர்வதேச சமூகமும் தங்களுடன் பேச வேண்டும் என்பதை அப்பகுதி மக்கள் வெளிப்படுத்தியிருப்பதாக, முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 20 இடங்களில் 18 இடங்களை தமிழர் தேசிய கூட்டமைப்பு வென்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி., சிவாஜிலிங்கம், கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே இந்த வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ் தலைவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும், அவர்களது பேரணியின் போது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் தெரிவித்தார். .......... read more  

"வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம்

"வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம்

இலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திரிகா!

 இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இந்த வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம் என்று கூறியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்............. read more  

வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -


வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -


கூட்டமைப்பின் வெற்றி தொடர்பில் ஜமமு தலைவர் மனோ கணேசன்
வாழு, வாழவிடு என்ற செய்தியை தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்கள் -
 
இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்;;  நீங்களும் வாழுங்கள்; எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலே வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுள்ள தேர்தல் வெற்றிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,.............. read more 

த.தே.கூ.வின் வெற்றி சர்வதேசத்துக்கும் அரசுக்கும் விடுக்கப்பட்ட தெளிவான செய்தி


த.தே.கூ.வின் வெற்றி சர்வதேசத்துக்கும் அரசுக்கும் விடுக்கப்பட்ட தெளிவான  செய்தி  

த.தே.கூ.வின் வெற்றி சர்வதேசத்துக்கும் அரசுக்கும் விடுக்கப்பட்ட தெளிவான செய்தி
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெறச் செய்ததன் மூலம் தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெளிவான செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் என்று அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் உத்தியோகபூர்வ பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:.............. read more

அரச தரப்பினருக்கு தமிழ் மக்கள் கொடுத்த “கிக்’(உதை) விக்கிரமபாகு கருணாரட்ன!

அரச தரப்பினருக்கு தமிழ் மக்கள் கொடுத்த “கிக்’(உதை) விக்கிரமபாகு கருணாரட்ன!




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என வடக்கு மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் ஆணித்தரமாக முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளனர். இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26 சபைகளில் போட்டியிட்டு 21சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி ஈட்டியது.................. read more 

பிரித்தானி​யாவில் Stoke-on-T​rent நகரில் கறுப்புயூலை !

பிரித்தானியாவில் Stoke-on-Trent நகரில் இடம் பெற்ற கறுப்புயூலை 28ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் தமிழ்க் கல்விக் கூடத்தின் ஓராம் ஆண்டு நிறைவு நிகழ்வும் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது............................ read more 

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!

தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்! இலங்கை உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து வைகோ கருத்து!

இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.............. read more  

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா? – ச. வி. கிருபாகரன்

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா? –  ச. வி. கிருபாகரன்

சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே.இ 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணைஇ மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன........... read more

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் - வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்

ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம் - வைகோ அவர்கள் இயக்கியுள்ள ஆவணப்படம்


ஈழத்தில் இனக்கொலை, இதயத்தில் இரத்தம்

சிங்களத்துக்கு சரியான பாடம் கற்பித்தார்கள் தமிழ்மக்கள்- மனோகணேசன் தெரிவிப்பு


சிங்களத்துக்கு சரியான பாடம் கற்பித்தார்கள் தமிழ்மக்கள்- மனோகணேசன் தெரிவிப்பு

இந்நாட்டிலே சிங்கள மக்களுக்கு இணையான வாழ்க்கை எங்களுக்கும் வேண்டும்; நீங்களும் வாழுங்கள்; எங்களையும், எங்கள் மண்ணிலே நிம்மதியாக வாழவிடுங்கள், என்ற எளிமையான செய்தியைத்தான் உறுதியான முறையிலே வடகிழக்கில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ், கிளிநொச்சி, வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டுள்ள தேர்தல் வெற்றிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,........................ read more  

உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!


உலகின் 194வது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்!

 இலங்கை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தனித் தமிழ்  ஈழத்திற்கான தீர்ப்பு என்று பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில்  தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசியக்  கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.................... read more 

தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!


தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!


ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம்.
இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விபரங்கள் அறிந்த பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை கைது செய்வார்கள் பின்பு உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

Sunday, 24 July 2011

தமிழீழத் தனியரசுக்கான தேவையினை உறுதி செய்த கறுப்பு யூலையினை நினைவிருத்தி செயற்படுவோம்! - பிரதமர் வி.ருத்ரகுமாரன்


தமிழீழத் தனியரசுக்கான தேவையினை உறுதி செய்த கறுப்பு யூலையினை நினைவிருத்தி செயற்படுவோம்! - பிரதமர்  வி.ருத்ரகுமாரன்


1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.  இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் முழுவிபரம் :......... read more  

படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


படங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது


நோர்வே குண்டுத் தாக்குதலுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது


நோர்வேயில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதலை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்திருப்பதுடன், நோர்வேயின் அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் விசுநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:............. read more

சிங்கள படையினருக்கு பயிற்சி இந்திய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம் - தொல்.திருமாவளவன் அறிக்கை


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு வெளிநாடுகளில் இருந்து ராணுவ அதிகாரிகள் வந்து, பயிற்சி பெற்று செல்கிறார்கள். ......... read more