Translate

Tuesday, 1 November 2011

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்துக் கட்டமைப்புகளினதும் இலக்கு ஒன்றாக இருக்கின்றபோதிலும் அதனை அடைவதற்காக அவைகள் பின்பற்றும் அணுகுமுறைகளே வேறுபட்டுக் காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் அமைப்புக்களுக்குமிடையில் கருத்து முரணபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனைகள் அல்ல. சரியான புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புக்களோடும் ஒன்றாக இருந்து கதைத்துத் தீர்க்கக்கூடிய விடையங்களே. அதன்வழியில் தற்போது தேசியத்தை நேசிக்கும் தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றும் முயற்சிகளும் கைகூடம் சாத்தியங்கள் அதிகரிக்கும் நிலையில் அதைத் தெரிந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளினூடு அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.  

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக,ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

இறையாண்மை எங்கே?


இன்றைய அரசியலில் இறையாண்மை என்று சொல்லாத நாளே இல்லை. எங்கிருந்து வந்தது இறை யாண்மை? யாருக்காக வந்தது இறையாண்மை? தற்போது யாரிடம் உள்ளது இந்த இறையாண்மை? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. SOVEREIGNTY என்ற சொல்லிற்குப் பொருள், “அரசாளுகிற உரிமை” என்பதேயாகும். எந்தக் காலத்திலும் இறைவன் இருந் ததில்லை. இல்லாத இறைவனுக்கு ஆண்மையும் இல்லை. இல்லாத ஒன்றை இறையாண்மை என்று குறிப்பிடுவது பார்ப்பனியக் குறும்பாகும்.

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர்.


தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல் - லெஸ்டர்.

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும்தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்


பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா........... read more 

ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?


ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?   TNA யை எச்சரிக்கிறார் பசில்

ஏதாவதுதொரு சக்தி தலையிட்டு தங்களை காப்பாற்றும் என புலிகள் நம்பினர் என்ன நடந்தது?

விடுதலைப் புலிகள் அமைப்பு சமாதான யெற்பாடு மற்றும் 

அரசியல் தீர்வு விடயங்களில் காட்டிய துளியளவிலான அக்கறையைக் கூட தற்போதைய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிக்காட்டுவதாக தெரியவில்லை. அரசியல் தீர்வு விடயங்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித அர்ப்பணிப்பும் காட்டாமல் இருந்துவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்வு விடயத்தில் இதுவரை வெளிக்காட்டிய ஒரு அர்ப்பணிப்பை யாவது குறிப்பிட டியுமா? என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பஷில் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ............. read more 

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்


தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால் இலங்கையில் நிரந்த அமைதி ஏற்படும் - சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், அதன் மூலம் நாட்டில் நிரந்த அமைதி ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து, அரசாங்கம் வேறு எதனையும் வழங்க நடவடிக்கை எடுத்தால், அதனை பெற்றுக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்......... read more 

கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..

  • கூட்டமைப்பினரை விட விடுதலைப் புலிகள் வல்லவர்கள்..
  • தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
  • உள்நாட்டு விவகாரங்களை வெளியில் கொண்டு செல்லக் கூடாது 
  •  விடுதலைப் புலிகள் வல்லவர்கள்............தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தலையிடக்கூடிய முழுமையான அதிகாரம் இந்தியாவுக்கு இருக்கின்றது என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்......  பாசில் ராஐபக்ச 
அரசியல் தீர்வு விடயத்தில் விடுதலைப் புலிகள் காட்டிய அக்கறையைக் கூட தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்ட முயற்சிக்கவில்லை என பாசில் ராஐபக்ச குற்றச் சாட்டியுள்ளார். 

வாக்களித்த மக்களின் பிரச்சினைகள் என்னவென்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாறாக கூட்டமைப்பினர் தம்மையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்................ read more 

உண்ணாவிரத போராட்டத்தில் மதுரையில் பழ.நெடுமாறன் – இடிந்தகரையில் வைகோ‏

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி, இடிந்தகரையில் மீனவர்கள்  மற்றும் அப்பகுதி  பொது மக்கள் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வருகிற 5-ந்தேதி இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு தலைமை தாங்குகிறார்......... read more

கிளிநொச்சியில் நடைபெறவிருந்த; கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசாரம் தடுத்து நிறுத்தம்


கிளிநொச்சி வலய முன்னாள் கல்விப் பணிப்பாளர் தம்பிராசா குருகுலராஜாவுக்கு சேவை நயப்பு விழாவும், பிரிவுபசார விழாவும் நேற்று நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் மேலிடத்து உத்தரவு ஒன்றின் பேரில் அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது. 

நேற்று நடைபெறவிருந்த முன்னாள் கல்விப் பணிப்பாளருக்கான பிரிவுபசார விழாவை கிளிநொச்சி வலய ஆசிரியர்கள், அதிபர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்............... read more 

அறிக்கை வெளிவர முன்னரே உறவினர்களை மிரட்டும் கோத்தாவின் குழு


அறிக்கை வெளிவர முன்னரே உறவினர்களை மிரட்டும் கோத்தாவின் குழு

நவம்பர் மாதம் 15 அம் திகதியளவில் மஹிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வருகின்றது. இது மஹிந்தவின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்பவே உருவாக்கப்பட்டது என்றாலும் நூறுவிழுக்காடு மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அறிக்கையினை மக்களுக்கு காண்பிப்பதா இல்லையா என்பதனையும் மஹிந்ததான் முடிவெடுக்கவேண்டுமாம்.........read more 

ஈழ விடுதலை நோக்கி தமிழ் சினிமாவின் பார்வை திரும்பி உள்ளது - சத்யராஜ் பேச்சு


இயக்குனர் சேரன் தயாரித்து அமுதன் இயக்கிய “தொடரும் நீதிக்கொலைகள்” என்ற ஆவணப் படம் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டார்.  

அப்போது பேசிய சத்யராஜ், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வெளிவந்த பெரும்பாலான ஆங்கிலப் படங்கள்  அதை தழுவியே எடுக்கப்பட்டன. அதேபோல் இனி தமிழகத்தில் வெளிவரும் பெரும்பாலான தமிழ் படங்கள் ஈழ விடுதலையை சார்ந்ததாகவே இருக்கும்............ read more .

படரும் பாசிச சர்வாதிகாரம்! - பழ. நெடுமாறன்

சர்வாதிகாரச் சாயல் படிந்துவிட்ட ஆட்சியில் பதவியில் இருப்போர்கள் கொஞ்சமும் அஞ்சாமல் பெரும் ஊழல் களில் துணிவாக ஈடுபட்டு வருகின்ற னர். தங்களை யாரும் எதுவும் கேட்க முடியாது எனக் கருதி நாட்டின் வளங்களைச் சூறையாடுகின்றனர்........ read more 

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக, “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன........... read more 

புங்குடுதீவில் மருத்துவர்கள் இல்லாததால் சிறுமி உயிரிழப்பு!


அரச வைத்திய சாலையில் மருத்துவர்கள் இல்லாததால் வயிற்றுவலியில் வேதனைப்பட்ட சிறுமி சிகிச்சைஅளிக்கப்படாமல் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் புங்குடுதீவில் இடம் பெற்றுள்ளது....... read more 

நாங்கள் அகிம்சை வழியில் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்! ரொறன்ரோவில் மாவை சேனாதிராசா


இன்று இலங்கை மண்ணில் சொந்தக்காரர்களாக இருக்கின்ற தமிழர்கள், தமிழர்கள் என்ற அடையாளத்தை இழந்துவிடக் கூடிய நிலை இருக்கிறது. 
அரசாங்கம் அதனைத் தனது நிகழச்சி நிரலாக ஆக்கிக் கொண்டு - இராணுவத்தினுடைய கட்டளையின் அடிப்படையில் - அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது........ read more 

தமிழருக்கு தீர்வு கிட்டுவதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வம் உரிய முறையில் பயன்படுத்துமாறு புலம் பெயர்ந்தோரிடம் சம்பந்தன் வேண்டுகோள்


sambanthanஇலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்று கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு உலகம் சார்ந்த பிரச்சினையாக கணிக்கப்படுகின்றது........ read more 

போர்க்குற்ற சாட்சிகளை மிரட்டும் சிறிலங்கா புலனாய்வுத்துறை – ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல்

 சிறிலங்காப் படையினரிடம் சிறைப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்கள் சிறிலங்கா அரசின் தீவிரவாத முறிடிப்பு பிரிவு காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது............ read more 

“சம்பந்தனிடம் அவதானமாக இருங்கள்“ -ஐ.நா அதிகாரிகளை எச்சரித்த சிறிலங்கா அமைச்சர்

ஐ.நா அதிகாரிகளை எச்சரித்த சிறிலங்கா அமைச்சர் 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழர்களின் ஒரே பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று, சிறிலங்கா அதிபரின் சிறப்பு தூதரும் அமைச்சருமான மகிந்த சமரசிங்க, ஐ.நா பொதுச்செயலரின் செயலக அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ..........read more 

Monday, 31 October 2011

பான் கீ-மூன்-கூட்டமைப்பு எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே வாய்ப்பு இல்லை - நியூயோர்க்கில் இருந்து சவேந்திர


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக் களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை அவர்கள் செல்லக்கூடும். ஆனால் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள். ........... READ MORE 

இலங்கை அரசின் சூழ்ச்சிகளை மீறி நியூயோர்க்கில் நாளை பான் கீ மூன் - கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது. இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது................. read more 

சுயாதீன விசாரணைக்கு இணங்காவிடின் இலங்கையை புறக்கணிப்போம் - கனடா மீண்டும் எச்சரிக்கை!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை என்பவை குறித்து சுயாதீன விசாரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்காவிடின் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.............. read more 

வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றுவதில்லை: ஸ்டாலின்

 தான் தரும் வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றுவதில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பசும்பொன் கிராமத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியது:÷தேவர் நினைவிடத்துக்கு நான் வருவது புதிது அல்ல........... read more 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை, அக்.31: இலங்கையில் 2013-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் மாநாடு நடத்துவதற்கான உரிமையை இந்தியா வாங்கித் தந்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை  ................ read more 

இலங்கை ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் பூரண நம்பிக்கையில்லை - ஹார்பர்


இலங்கை ஜனாதிபதியின் வாக்குறுதிகளில் பூரண நம்பிக்கையில்லை - ஹார்பர்


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதிகளில் பூரண நம்பிக்கை கிடையாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்............. read more 

தமிழர் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நீதிக்கான நடைப்பயணம்!-பிரதமர்.வீ. உருத்திரகுமாரன்.

தமிழர் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நீதிக்கான நடைப்பயணம்!-பிரதமர்.வீ. உருத்திரகுமாரன்.



ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது............ read more 

ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் கீழ் மாவீரர்நாள் நிகழ்வுகள் அமையட்டும்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


முழு மக்களையும் அரவணைக்கும் நோக்கமாக கொண்ட பொதுக் கட்டமைப்பின் கீழ் மாவீரர்நாள் வணக்க நிகழ்வினை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது........... read more 

இலங்கையில் பிறந்த ஏழாவது பில்லியன் அதிஸ்ட குழந்தை -மகிந்தா மனைவி பரிசில்கள் கையளிப்பு


 
இலங்கையில் 31 அக்டோபர் பில்லியன் மக்கள் தொகையில் முதலாவது பெண் பிள்ளை பிறந்துள்ளது .
கொழும்பு கோட்டை மகப்பேறு மருத்துவமனையில் Gonawala, Pamunuwila,Kiribathgoda என்ற WG Dhanushika Dilani பிறந்தார்............ read more 

தமிழர் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் நடைப்பயணம் ! பிரித்தானியாவில் 2வது நாளாக தொடரும் 'நீதிக்கான நடைப்பயணம்'

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து  லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது............ read more 

சர்வதேச இராணுவங்களுடன் மோதும் வல்லமையுடன் எமது படையினர் தயார் நிலையில் உள்ளனர் : இராணுவ தளபதி


சர்வதேச இராணுவங்களின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை இராணுவமும் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை எதிர்வரும் காலங்களில் உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
சர்வதேசத்தின் சவால்கள் எப்பெரிதாயினும் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனும் ஆளுமையும் எமக்கு உண்டு. ஏனெனில் 21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்த ஒரே இராணுவம் இலங்கை இராணுவமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்............ read more 

பிரித்தானியாவில் சிக்கிய இலங்கை மருத்துவர் பணி நீக்கம் !

பிரித்தானியாவில் மன்செஸ்ரர் பகுதியில் 2009, 2010 ஆண்டு காலப் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு வந்தபோது அவர்களைப் பாலியல் முறைகேடு செய்தார் என இலங்கை டாக்டரான பிரியந்த பெரேரா என்பவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது யாவரும் அறிந்ததே. இதற்காக இவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். மகப்பேற்று மருத்துவரான இவரிடம் கர்ப்பிணித் தாய்மார் பரிசோதனைக்காக சென்றபோது அவர்களைப் பரிசோதனை செய்வதாகக் கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் இவர் மூது புகார் இருந்தது................. read more 

லண்டனில் ஈழத் தமிழர் கொலை: கொலையாளிகள் அகப்பட்டனர் !

லண்டனில் கடந்த 22.10.2011 அன்று மிச்சம்(குரொய்டன்) பகுதியில் வைத்து தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். ஹரோ பகுதியில் வசித்துவந்த அகிலகுமார் என்னும் 29 வயது தந்தையையே ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் குத்திக் கொலைசெய்தார்.............. read more 

சிறிலங்காவைத் துரத்தும் பிரித்தானியப் பிரதமர்

அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். ...........read more

தந்தை செல்வா சிலை சேதமாக்கப்பட்டமைக்கு மனோ கணேசன் கண்டனம்

news
திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமையானது ஒரு  காட்டுமிராண்டித் தனமான செயலாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழம்பு மாநகர சபை உறுப்பினருமான மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,................ read more 

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த இரகசிய ஆவணம்

news
 இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது.
 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். ............. read more

இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி ஐ.நா. - கூட்டமைப்பு சந்திப்பு: நியூயோர்க்கில் நாளை

news
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என்று அறிய வந்துள்ளது.
 
இலங்கை அரசு இந்தச் சந்திப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரி வித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனத் தெரிகிறது.................. read more 

கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் உணர்ச்சி பூர்வமான விடயம் : நிமல் சிறிபால டி சில்வா!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது உணர்ச்சி பூர்வமான விடயம் என்று தெரிவித்த இலங்கை பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அந்த விஜயம் பற்றி உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாத நிலையில் அது குறித்து கருத்து வெளியிட முடியாது என்றும் இந்த விஜயத்திற்கும் அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லையென்றும் கூறினார்........... read more 

இலங்கைக்கு பாரிய அவமானம்! மாநாட்டு அழைப்புரையை புறக்கணித்த கனடா!!

இலங்கைக்கு பாரிய அவமானம்! மாநாட்டு அழைப்புரையை புறக்கணித்த கனடா!!


சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது............. read more 

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது. கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் இரா சம்பந்தன்


ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பெருமிதம்
தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு உலகம் சார்ந்த பிரச்சனையாக கணிக்கப்படுகின்றது. அவர்கள் அந்த மண்ணில் படுகின்ற துன்பக் குரல் அல்ல்து அவர்கள் எழுப்புகின்ற அவலக் குரல் உலகின் காதுகளுக்கு கேட்கின்றது................. read more 

இனி வெளிவரும் தமிழ் படங்கள் ஈழ விடுதலை சார்ந்ததாகவே இருக்கும் : சத்யராஜ்


எனி வரும் தமிழ் திரைப்படங்கள் ஈழ விடுதலை சார்ந்தவையாகவே இருக்கும் என புரட்சித் தமிழன் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தொடரும் நீதிக்கொலைகள் என்ற ஆவணப்படம் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவித்ததாவது,............ read more

கரேபிய தீவுகளின் பத்திரிகை மகிந்தரைக் கேலிச்சித்திரம் வரைந்துள்ளது !

கரேபிய தீவுகளில் இருந்து வெளியாகும் கரேபியன் ரைம்ஸ் என்னும் பத்திரிகை மகிந்தரைக் கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் அர்த்தமற்ற கேலிச்சித்திரம் அல்ல. இதனை கூர்ந்து கவனித்தால் அங்கே கிழட்டுச் சிங்கம் ஒன்றும் மற்றும் கொடூரமான சிங்கம் ஒன்றும் இருப்பதை நீங்கள் காணலாம். கொடுமையான சிங்கம் வாயில் இருந்து ரத்தம் கசிவதும் அங்கே தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது. அது இனப் படுகொலையையும் மக்கள் ரத்தத்தையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. கிழட்டுச் சிங்கத்தின் தலையில் பிரித்தானிய ராணிக்குரிய முடியும் அணியப்பட்டுள்ளது............. read more 

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாகயமாக மீண்டும் இந்தியஅதிகாரி!


பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாகயமாக இந்தியாவின் முதன்மை அரசியல்அதிகாரி கமலேஸ்சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் - மாவை சேனாதிராஜா


நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் கனடா ரொரென்ரோ விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
நாங்கள் இலங்கையை விட்டு அமெரிக்காவை நோக்கி பயணமாகியபோது எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் மிகவும் திருப்தியான முறையில் கலந்துரையாடப்பட்டன. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அங்கு பல மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் எமக்கு பூரண திருப்தியைத் தந்துள்ளன. ............... read more 

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர் – சிறிலங்காவுக்கு பேர்த்தில் அவமானம்

சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. .......... read more

சிறிலங்காவைத் துரத்தும் பிரித்தானியப் பிரதமர்

அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். ............ read more 

Sunday, 30 October 2011

பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம் தொடங்கியது !




Click to view More photos 
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' நேற்று சனிக்கிழமை (29.10.2011) தொடங்கியது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையாவினால் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர். நேற்று முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

விரதம் இருப்பதால் நமக்கு என்ன நன்மை?


விரதம் இருப்பதால் நமக்கு என்ன நன்மை?

விரதம் இருப்பதன் மூலம் உடல் தூய்மை பெறும் மனம் வலிமைபெறும் இறைவனது அருள் நமக்கு கிடைக்கும். 
ஓயாமல் சாப்பிடுவதன் மூலம் ஓய்வெடுக்க முடியாமல் இருக்கும் நம் உடலின் ஜீரண உறுப்புகளுக்கும் அப்போது ஓய்வு கிடைக்கும்.
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' நேற்று சனிக்கிழமை (29.10.2011) தொடங்கியது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான ஜெயசங்கர் முருகையாவினால் தொடங்கப்பட்டுள்ள இந்த நடைப்பயணத்தில் குமார், சிவச்சந்திரன், தேவன் ஆகிய விடுதலைச் செயற்பாட்டாளர்களும் இணைந்துள்ளனர். நேற்று முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.

மாவீரர் குடும்பங்கள் மதிப்பளிப்பு நிகழ்வின் இரண்டாம் கட்டமாக 19 குடும்பங்கள் நேற்று லண்டனில் மதிப்பளிப்பு.

ஐக்கிய இராட்சியத்தில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக 19 குடும்பங்கள் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் மதிப்பளிக்கப்பட்டன. 
நேற்றைய தினம் (29-10-2011) வடமேற்கு லண்டன் ஹெயிஸ் பகுதியில் அமைந்துள்ள BROOKSIDE COMMUNITY CENTRE  மண்டபத்திலேயே தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 

செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



இதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள்



வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் நிர்வாணமாக அவள் ஓடியது.ஈழத்தில் இதை போல எத்தனை கொடூரங்கள் நடந்தும் அமைதியாக இருக்கும் சர்வதேசம்.................

மூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா? : சீமான் கேள்வி



ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Saturday, 29 October 2011

இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டும் – பொப் பிறவுன்


இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டும் – பொப் பிறவுன் 

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு உரிய பதிலை இலங்கை அரசு அளிக்கவேண்டும் என அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி தலைவர் பொப் பிறவுன் தெரிவித்துள்ளார்.