தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
புலம்பெயர் தேசத்தில் உள்ள தேசிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் அனைத்துக் கட்டமைப்புகளினதும் இலக்கு ஒன்றாக இருக்கின்றபோதிலும் அதனை அடைவதற்காக அவைகள் பின்பற்றும் அணுகுமுறைகளே வேறுபட்டுக் காணப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வோர் அமைப்புக்களுக்குமிடையில் கருத்து முரணபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவை ஒருவரை ஒருவர் தாக்கும் அளவிற்கு பெரிய பிரச்சனைகள் அல்ல. சரியான புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுப்புக்களோடும் ஒன்றாக இருந்து கதைத்துத் தீர்க்கக்கூடிய விடையங்களே. அதன்வழியில் தற்போது தேசியத்தை நேசிக்கும் தனிநபர்களாலும் அமைப்புக்களாலும் கருத்து முரண்பாடுகளைத் தீர்க்கும் செயற்பாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றும் முயற்சிகளும் கைகூடம் சாத்தியங்கள் அதிகரிக்கும் நிலையில் அதைத் தெரிந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளினூடு அதனைச் சீர்குலைக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றது.


