Translate

Thursday, 30 August 2012

ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக் கூடாது தொடர்வண்டி மறியல்- கொடும்பாவி எரிப்பு (படங்கள்)

Posted Imageஇலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ராணுவப் பயிற்சி கொடுக்கும் என்று திமிராக பேசிய பாதிகாப்பு இணை அமைச்சரை பள்ளம் ராஜுவை கண்டித்தும்,Posted Image இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் இன்று காலை 9 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 150 பேர் பெரம்பூரில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இரண்டு மணிநேரம் தொடர்வண்டிகளை நகர விடாமல் செய்தனர் நாம் தமிழர்கள் . பின்பு காவல் துறையினர் அவர்களை கைது செய்து பெரவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

http://thaaitamil.com/?p=30469

“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!

குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததைஅறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம்.ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வதில்லை.

வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடா


Posted Imageஇலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.

அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு


அவசரமாக இந்ததியா விரைகிறார் மஹிந்த - மன்மோகன் சோனியாவுடன் செப்.20 இல் முக்கிய பேச்சு
 
அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தம் மாத்திரமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ சந்திப்பார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான விஜயமொன்றை மேற்கொண்டு செப்ரெம்பர் 20ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

Wednesday, 29 August 2012

இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

Posted Imageஇந்தியா, சீனா, சிறிலங்கா இடையே ‘சிண்டுமுடிந்த‘ தமிழன் லண்டனுக்குத் தப்பிஓட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் விரிசல் தீவிரமடையக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதி காணி விவகாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் காது வரைக்கும் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த முத்தரப்பு சிக்கலுக்குக் காரணமான கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் வாமதேவன் என்ற தமிழராவார். 

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்

Posted Imageகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கே ஆதரவு: - வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகர்த்தர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் கிழக்கு பிராந்திய மாநாட்டில் இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இனிதே நிறைவேறிய டெசோ


அனலை நிதிஸ் ச. குமாரன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அல்ல எனவும், கலைஞர் தனது கட்சியின் எதிர்காலத்தை நிர்மாணிக்கத் தேவைப்பட்ட ஆயுதமே டெசோ என்கிற மாநாடு எனவும் போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாகப் பல தமிழக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈழப் போர் உக்கிரம் அடைந்து பல்லாயிரம் மக்கள் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் தமிழகத்தை ஆட்சி செய்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. அனைத்தும் முடிந்த பின்னர் இப்படிப்பட்ட மாநாடுகள் எந்த வகையில் ஈழத் தமிழரைக் காவந்து பண்ணும் என்பதனைக் கலைஞர் இன்றுவரை விளக்கவில்லை.

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் : டக்ளஸ் எங்கே?


தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்காணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர் : ‘அறிஞர்’ கருணா


கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார்.

தமிழரின் குடிப்பரம்பலை குறைக்கவே சீனா முயற்சி! குற்றஞ்சாட்டுகிறது கூட்டமைப்பு


தமிழரின் குடிப்பரம்பலை குறைக்கவே சீனா முயற்சி! குற்றஞ்சாட்டுகிறது கூட்டமைப்பு
வடக்கு, கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரை சீனா உதவியாக வழங்கவுள்ளது என வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கும் நடவடிக்கை.

மேலும், சீன அரசு திபெத்தில் சீனர்களைக் குடியமர்த்தி எவ்வாறு திபெத்தியர்களைச் சிறு பான்மையாக்குகின்றதோ அவ் வாறே இலங்கையிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைச் சிறுபான்மையாக்க முயற்சிக்கின்றது.

இலங்கை அரசின் இனவெறியை இந்தியா ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது; விஜயகாந்த்


 
உலக அரங்கில் இலங்கை அரசின் இனவெறி போக்கு தமிழர் நெஞ்சங்களில் எரியும் ஈட்டியென பாய்ந்துள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் சிங்கள அரசின் இராணுவப் பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றன.


இந்த போக்கை தடுத்து நிறுத்த இந்திய அரசு அக்கறை காட்டாது தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு வெறும் இறப்பர் முத்திரையாக உள்ளது - பசில் ராஜபக்ஷ

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சிறந்த செயற்பாடு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படுவது எனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கிடைக்கும் பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவரின் பெயரும் GCE O/L வினாப் பத்திரத்தில் பிழையான விதத்தில் பரபரப்பு (படம் இணைப்பு)

யாரை திருப்திபடுத்த இவ்வாறான வினாக்கள் வினாத்தாளில் இடம்பெற்றன…? அரசையா? அல்லது மாணவர்களையா?

யாழ்ப்பாணம் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு அண்மையில் நடத்திய பொது சாதாரண பரீ்ட்சையில் ஒரு வில்லங்கமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் “பயங்கரவாதம் குறித்த சொல்லுடன் தொடர்பில்லாத நபர் யார்?” என்பதாகும்...........  READ MORE

தமிழக மீனவர்களை தாக்குவது எப்படி- இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆராய்வு


தமிழக மீனவர்களை தாக்குவது எப்படி- இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆராய்வு

இலங்கை இந்திய கடற்பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக இலங்கை இந்திய கடற்படை உயரதிகாரிகளின் நான்கு நாள் கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதுடில்லியில் ஆரம்பமாகியுள்ளது. 30ஆம் திகதிவரை இக்கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

அரச விசுவாசம் காட்டி அடாவடித்தனம் புரியப்போய் வகையாக மட்டிக்கொண்ட (அ)நீதவான் கணேசராசா


‘உதயன்’ நாளிதழின் ஆசிரியருக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் எவற்றையும் முன்னெடுப்பதற்கும் ஆசிரியரைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவைக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை நீடித்துள்ளது.

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

சீனா பக்கம் சாய்கின்ற இலங்கை இந்தியாவுக்கு எப்படி நட்பு நாடாகும்?

கலைஞர் கருணாநிதி கேள்வி? இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சீனாவின் தலையீடு அபிவிருத்தி என்ற போர்வையில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இலங்கை அரசு இந்திய அரசுடனான உறவுகளை புறந்தள்ளி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங் களை சீனாவுடன் மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலையில் இலங்கை எப்படி இந்தியாவிற்கு நட்பு நாடாக இருக்க முடியும்? என தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

தமிழர்களை அவமதிக்கும் வகையிலேயே இந்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள்!

இராணுவப் பயிற்சி குறித்து சீமான் காட்டம்

இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வரும் அரசியல் கட்சித் தலைவர் களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி யளிப்பது தொடரும் என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பள்ளம் ராஜு கூறியிருப் பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அவ மதிப்பதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலை வர் சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு அரசியல் சம உரிமை அளிக்கா மல் அவர்களை இரண்டாம் தர குடி மக்க ளாகவே நடத்தி வருகிறது இலங்கை இனவாத அரசு. தங்களு டைய அரசியல் தன் உரிமைக்காக போராடிய தமிழர்களை பூண்டோடு அழித்தொழிக்க திட்டமிட்ட ஒரு இனப் படுகொலைப் போரைத் தொடுத்தது சிங்கள பெளத்த இனவாத அரசு.

அரசியலுக்காக மதத்தை ஏலமிடும் மஹிந்த அரசு ஐ.தே.கட்சி சீற்றம்

 தேர்தலுக்கான தொனிப்பொருளொன்று தமக்கு இல்லாததால், சமயத்தை ஏலமிட்டு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து அரசு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ் சாட்டியது.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரனை நடத்த வேண்டும்; கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை
news
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரனை நடத்த வேண்டும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புருஸ் லெவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு வரும் ஐ.நா குழு நியமிப்பு ஹன்னி மெகாலி தலைமை

news
 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கை வரவுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) நேற்று நியமித்திருக்கிறார்.

பொம்மை ஆட்சியை முடிவுக்குக்கொண்டு வருவதே நோக்கம்: ஹக்கீம்


சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக ௭ழுந்துள்ள சவால்கள் சர்வதேச ரீதியாகக் கூர்மையாகப் பார்க்கப்படுகின்றன. பிராந்திய வல்லரசுகளும் இந்த விவகாரத்தை மிக அவதானத்துடன் நோக்குகின்றன
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்


கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை. ௭ம்மால் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் ௭ங்களுக்கு வழங்குவார்கள் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்

பிரான்சில் நடைபெற்ற செஞ்சோலை குழந்தைகளின் 6 வது ஆண்டு நினைவு நிகழ்வும், தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு ஈக வணக்க நிகழ்வும.;

தமிழர் தாயகத்தில்14.08.2006 அன்று சிங்கள கொலைவெறி அரசின் பறக்கும் இயந்திரக்கழுகள் அதிகாலை ஏவிய கோழைத்தனமான குண்டுவீச்சினால்  61 பள்ளி மாணவிகள் துண்டு துண்டாகி சிதறிப்போயினர். அன்பான அரவணைப்பும், ஆறுதலான உறவுகளும் என்று பெற்றவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும் பெருமிதத்தோடு தேசியத்தலைவரின் அரவணைப்பில் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் கோழைத்தனமாக கொல்லப்பட்டு 6 வருடங்களாகி விட்டது. என்று மனதையும், நினைவையும்,விட்டு மாறாத குழந்தைகளின் நினைவு நிகழ்வையும், ராசீவு காந்தி  கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை கைதிகளின் விடுதலைக்காக தண்டனையை இரத்துச்செய்ய கோரி தீக்குளித்த தமிழின உணர்வாளர் தோழர் செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவாக பிரான்சு மனிதவுரிமைகள் சதுக்கத்தில் ஈகவணக்க நிகழ்வு நடைபெற்றன.

கியூ பிரிவு பொலிஸாரை நம்பாதீர்கள்! செந்தூரனை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு வைகோ கோரிக்கை


கியூ பிரிவு பொலிஸாரின் பேச்சை நம்ப வேண்டாம்! உண்ணாவிரதி செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மனிதாபிமான நடவடிக்கை எடுங்கள்  என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஏழு ஈழத் தமிழர்களை அரசு விடுதலை செய்துள்ளது.நிரந்தர தீர்வு எட்டும் வரை செந்தூரனின் போராட்டம் தொடரும் என செந்தூரன் அறிவித்துள்ளார் .


செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் அரசு விடுதலை செய்யவேண்டும் என செந்தூரன் கடந்த 23 நாட்களாக உண்ணா நிலையில் இருந்து வருகிறார். செந்தூரனுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் வெளியே வெடித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சிவில் அதிகாரிகள் - வடக்கு, கிழக்கில் மட்டும் உயரதிகாரிகளாக படையதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? - கேள்வி எழுப்பினார் ஹக்கீம்!

Posted Imageநாட்டின் ஏனைய பகுதிகளில் ஆளுநர்களாகவும், அரசாங்க அதிபர்களாகவும் சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கில் படை உயரதிகாரிகள் அவ்வாறான பதவிகளில் அமர்த்தப்பட்டிருப்பது ஏன்? என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடபகுதியின் கரைஓரபகுதியினை கையகப்படுத்தும் நோக்கில் சிங்களகுடியேற்றங்கள்!

தமிழ் மக்களின் இருப்பினை இல்லாமல் செய்வதற்கே வடமாகானத்தில் உள்ள தமிழர்களுடைய நிலங்கள்அபகரிக்கப்படுகின்றது. தமிழ் தரப்புகள் ஒன்றினைந்து சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வளசுறண்டல்களுக்கும், நில அபகரிப்பிற்கும் எதிராக போராட வேண்டும இல்லைஎன்றால் இன்னும் குறுகிய காலத்திற்குள் தமிழர்களுடைய இருப்பு அழிக்கப்பட்டுவிடும் என்று தமிழ் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரித்துள்ளார்.தமிழ் மக்கள் அழியும் போது அவர்களுக்காக குரல் கொடும்கும் சகத்திகளும் மௌனித்துப் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு தமிழ் அரசியல் கைதியும் கோமா நிலையில்!


விசாரணைக்கு என காலிக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் அங்கு சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சுந்தரம் சதீஷ்குமார் எனும் தமிழ் அரசியல் கைதி, வழக்கு முடிந்த நிலையில் காலி கராபிட்டிய மருத்துவமனையில் கோமா நிலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்

இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்
ஓமந்தை, வடக்கு– கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை சீனா உதவியாக வழங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனையளிக்கும் செயற்பாடாகும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ௭ம். பி. தெரிவித்துள்ளார். 

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு    

அரசுக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பலம்பொருந்திய இரு மேற்குலக நாடுகளும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கிவருகின்றன என்று அரச புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது என அறியமுடிகின்றது.

சிறப்பு முகாம்கள் மூடப்படும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம்: ம.தி.மு.க.


சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுவித்து திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

கொடூர தாக்குதலினால் நினைவற்ற நிலையை எட்டியிருக்கும் தமிழ் அரசியல் சிறைக்கைதி!

வவுனியா சிறைச்சாலையில் ஈழ தமிழ் சிறைக்கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் மரணத்திற்கு இட்டுச்சென்ற அவலங்களையும் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு காலி சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலின் காரணமாக தமிழ் அரசியல் சிறைக்கைதி ஒருவர் நினைவற்ற நிலையில் வீழ்ந்திருக்கும் அதிர்ச்சி தகவல் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் ஏற்றிய புலிக்கொடி பற்றி புலனாய்வுப் பிரிவே விசாரணையாம்


புலனாய்வுப் பிரிவினர் ஏற்றிய புலிக்கொடி பற்றி புலனாய்வுப் பிரிவே விசாரணையாம்:-
புலிக்கொடியும் பரபரப்பும்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர் ஊர்வலத்தில், மாட்டு வண்டி ஒன்றில் ஈழ கொடி பறக்கவிடப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வண்டியில் இருந்து கொடியை பாதுகாப்பு தரப்பினர் அப்புறப்படுத்தியிருந்தனர். வடக்கில் மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த புலிகளின் ஆதரவாளர்கள் செய்த வேலையாக இது இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

கணனியை ஊடுருவுவது(hack) போல் மூளையையும் ஊடுருவலாம்.


கணனிகளை ஊடுருவி(hack) அதில் உள்ள தகவல்கள் கடவுச்சொற்கள் திருடுவது போல் (passwords) உங்கள் மூளையையும் ஊடுருவி அதில் உள்ள தகவல்களைத் திருடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கு $300 பெறுமதியான காது ஒலிவாங்கி (ear phone) போன்ற ஒரு கருவி போதுமானதாகும். நாம் அர்த்தமுள்ள ஒன்றைப் பார்க்கும் போது எமது மூளையில் இருந்து வெளிவரும் P300 சமிக்ஞைகளில் இருந்து தகவல்களைப் பெற முடியும்.

உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " திருவரங்கம் " !

உலகின் பெரிய கோயில் நம் திருச்சி " திருவரங்கம் " !
 
கம்போடியாவில் உள்ள " அன்க்கோவர் வாட் " கோயிலை விட சிறியதே என்றாலும், இன்றைக்கு அது இயங்கவில்லை , ஆனால் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஸ்ரீரங்கம் கோயிலே இயங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரிய கோயில் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது ! 6,31,000 m². (6,790,000 sq ft) (156 Acres) with a perimeter of 4 km (10,710 ft). ஏழு பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலில், நான்கு உட்பு
றமும், மூன்று வெளிப்புறமும் அமைந்துள்ளது . 236அடி உயரம் (72 m) கொண்ட இந்த கோயிலின் ராஜகோபுரம் ஆசியாவின் பெரிய கோபுரமாக விளங்குகின்றது , இந்த கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன !

Monday, 27 August 2012

தமிழ் அரசியல் கைதி கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்க; மனோ கணேசன் கோரிக்கை

news
காலி சிறையிலிருந்து, காலி கராபிட்டிய மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஷ்குமாரை கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை


ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் -HRC


வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள்தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

கிழக்கு தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படும்:சுரேஷ் எம்.பி


கிழக்கு தமிழ் மக்களால் தோற்கடிக்கப்படும்:சுரேஷ் எம்.பி

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகள் தமிழ் மக்களால் மிக மோசமாகத் தோற்கடிக்கப்படுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் எச்சரிக்கையால் சிறிலங்கா அதிர்ச்சி – சீனா, ரஸ்யா, இந்தியாவிடம் ஓடுகிறது

Posted Imageபிரித்தானியா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கை அறிவிப்பை, ஏனைய மேற்கு நாடுகளும் பின்பற்றலாம் என்று அச்சம் கொண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணமே கருணாநிதி: நடிகர் ராதாரவி

3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணமே கருணாநிதி: நடிகர் ராதாரவி

இலங்கை இறுதிப்போரின் போது 3 லட்சம் தமிழ் பெண்கள் விதவையாக காரணமே கருணாநிதி என்று நடிகரும் அதிமுக உறுப்பினருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழனை கொல்லலாம் ஆனால் மிருகபலி கொடுக்க கூடாது- பிக்குகளின் காரூண்ய

சிலாபம், முன்னேஸ்வரம் காளி கோயிலில் வருடாந்தம் இடம்பெறும் மிருகபலிப் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கோயிலுக்கு முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெருமளவாள புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளோர். மிருகபலிக்கு எதிராக புத்தபிக்குகளின் காரூண்யம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இதே பிக்குகள்தான் தமிழர்களை கொல்ல வேண்டும் என போர்க்கொடி பிடித்திருக்கிறார்கள்.

டெசோ மாநாடு முடிந்தும், முடியாத ஈழத் தமிழர்களின் அவலமும்..! ஈழதேசம் பார்வையில்..!

டெசோ மாநாடு முடிந்தும், முடியாத ஈழத் தமிழர்களின் அவலமும்..! ஈழதேசம்  பார்வையில்..!

ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை ( ஆச்சியை அல்ல..! ) பறிகொடுத்துள்ளது தி.மு.க., என்று மு.க.ஸ்டாலின்  கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் என்று கனிமொழி கூறியுள்ளார். நேற்று நெல்லையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மானத்தை விளககி நடந்த பொதுக் கூட்டத்தில் தான் இவ்வாறு கூறியுள்ளார்  மு.க.ஸ்டாலின். கடந்த 12 - ம் தேதி நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துக் கூறத்தான் இந்த கூட்டம். அவை பெயருக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அல்ல. அவற்றை செயல்படுத்தக் கோரி  தீர்மான நகலை ஐ.நா.சபையிடம் நேரடியாக கொடுக்கவிருக்கிறோம். நாங்கள் திடீர் என்று தற்போது தான் ஈழத் தமிழருக்காக குரல் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர். 

சிறைக்கைதிகள் மீது இலங்கை அரசின் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்கின்றன

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலைகளில் தனது பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அரசியல் கைதிகள் மீதும் போராளிகள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள உளவியல் மற்றும் பயங்க்ரவாத யுத்தம் இந்திய, சீன அரசுகளதும் அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களதும் துணையோடு தொடர்கிறது.
தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது.

இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தொடரும்



புதுடெல்லி : இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் திசநாயகா மகோத்தலலாகே, கடற்படை கேப்டன் ஹெவாவாசம் கண்டாடஜே ஆகிய 2 பேருக்கு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கடந்த மே 19ம் தேதி முதல் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதி கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்க; மனோ கணேசன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதி கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்க; மனோ கணேசன் கோரிக்கை
news
காலி சிறையிலிருந்து, காலி கராபிட்டிய மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஷ்குமாரை கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு

இலங்கையில் அரசுக்கெதிராகப் பரவலடையும் ஆர்பாட்டங்களுக்கு காரணம் மேற்குலகமே புலம்புகிறது வெளிவிவகார அமைச்சு
news

அரசுக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப் பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் பலம்பொருந்திய இரு மேற்குலக நாடுகளும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இயங்கிவருகின்றன என்று அரச புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது என அறியமுடிகின்றது. 

அதிர்ச்சியில் இந்தியா சிறிலங்காவுக்கும் வருகிறது 'சைனா ரவுண்' இரவுச்சந்தை

அதிர்ச்சியில் இந்தியா சிறிலங்காவுக்கும் வருகிறது 'சைனா ரவுண்' இரவுச்சந்தை 

 
மலேசியா,சிங்கப்பூர், ஹொங்கொங் அகிய நாடுகளில் உள்ளது போன்று சிறிலங்காவிலும் சைனா ரவுண் [China Town] என்ற பெயரில் இரவுச்சந்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தீர்வு விடயத்தில் சர்வதேசம் கரிசனை! தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்! யசூசி அகாசி

தீர்வு விடயத்தில் சர்வதேசம் கரிசனை! தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்! யசூசி அகாசி
 
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச ந
ாடுகள் கூடிய கவனம் எடுக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் என்று யசூசி அகாஷி தெரிவித்தார்.

ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை

ஜெனிவா, ஐநா. பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை
 
ஜெனீவா, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் பொலிஸாரால் ஆஸ்பத்திரியில் அனுமதி

 
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு நேற்றிரவு விரைந்து சென்ற பொலிஸார், அங்கு உண்ணாவிரதம் இருந்து வந்த செந்தூரனை வானில் ஏற்றிக்கொண்டு சென்று சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்த்தனர்.

மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு


மஹிந்த பேசவிருந்த மேடை திடீரென உடைந்து வீழந்ததால் அம்பாறையில் பெரும் பரபரப்பு
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இன்று முற்றாக உடைந்து வீழ்ந்துள்ளது. அம்பாறையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்களின் முன்னோர்கள்


[இந்துக்களின் தாயகம் 
சீனாவில் உள்ளது! - 15]

(பதினைந்தாம் பாகம்)
வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளையும், அவை நடைபெற்ற ஆண்டுகளையும் மட்டுமே, வரலாற்றுப் பாடத்தில் சொல்லிக் கொடுப்பதால், பலருக்கு அந்தப் பாடம் கசக்கின்றது. ஆனால், சரித்திரத்தில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட விளைவுகளையும், அவை எமது அன்றாட வாழ்க்கையில் உண்டாக்கும் தாக்கங்களையும் சொல்லிக் கொடுத்தால், மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். ஆனால், அதிலே ஒரு பிரச்சினை. மக்கள் உண்மைகளை அறிந்து விட்டால், வருங்காலத்தில் ஒரு சமூகப் புரட்சிக்கு வழிவகுத்து விடும். அதனால் தான், நான் இங்கே எழுதிய விடயங்களை பற்றி யாரும் பேசுவதில்லை.  உதாரணத்திற்கு, அலெக்சாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பில் இருந்து ஆரம்பிப்போம். அலெக்சாண்டர் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? உலகம் முழுவதும் ஆள வேண்டுமென்று ஆசைப்பட்டான். அடுத்தடுத்து பல போர்களில் வெற்றிகளை குவித்தான். இந்தியாவில் தோல்வியுற்று திரும்பிச் சென்றான்.... அதன் பிறகு? அலெக்சாண்டர் வழிநடத்தி வந்த கிரேக்கப் படைகள் என்னவாகின. மாசிடோனியாவுக்கு (அலெக்சாண்டரின் தாய்நாடு) திரும்பிச் சென்றனவா?.............  read more 

நெடுந்தீவில் கடற்படை வசமுள்ள சனசமூக நிலையத்தை விடுவிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை

நெடுந்தீவில் கடற்படை வசமுள்ள சனசமூக நிலையத்தை விடுவிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை
 
நெடுந்தீவில் கடற்படையினர் சுவீகரித்து வைத்திருக்கும் சனசமூக நிலையத்தினை விடுவிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழருவி மணியன் பேச்சு : தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன்தான் உலகத் தமிழினத்தின் தலைவன்.

தமிழருவி மணியன் பேச்சு : தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன்தான் உலகத் தமிழினத்தின் தலைவன்.

எமது பூர்வீகத்தை அழிக்கத் துணை நிற்கும் அரச அடிவருடிகள் எம்மைப் பார்த்து கேள்வி கேட்பதா?; செல்வம் எம்.பி சீற்றம்


 
54276fdf1880c63fec893ed4206ba809 
மக்களின் ஆணைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் இலக்கில் தொடர்ந்து பயணித்து வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் என அக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா


வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா

Posted by www.telo.org
வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது. வடக்கு கிழக்கை பிரித்து சிங்கள மயப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் திரிபவர்களுக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குசீட்டை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவர்களில் ஒருவருமான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

உரிமைகளை வென்றெடுக்கா விடினும் தொடரும் கொடுமையை தடுக்கவாவது கிழக்கில் கூட்டமைப்பு வெல்ல வேண்டியது அவசியம்!- குகதாசன்


ponakaran01

“எவன் மற்றவர்களை அடக்கியாள்கிறானோ, அவன் குழப்பத்தில் கலங்குகிறான் எவன் ஒடுக்கப்படுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான்.” கிழக்கில் அரசை எதிர்க்கும் கட்சிகளின் வாக்குகளைப் பறித்தெடுக்க, இலவசமாகப் பண்டங்களை கொடுக்க ஏற்பாடுகள் தயார் நிலையிலிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்


தலைவர் பிரபாகரனும் சந்நிதி முருகனும்

selvasannitti-s
1975ம் ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி இருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம் சுறுசுறுப்பாகிக் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரத நிலையமாகவும் வடமாகணத்தின் மிகப்பெரும் தொழிற்சாலையான சீமெந்து தொழிற்சாலையையும் உள்ளடக்கிக்கி இருந்த துறைமுகநகரமான இப்பிரதேசம் பட்டினசபை என அழைக்கப்பட்ட போதும் மிகப்பெரிய நகரத்திற்குரிய சுறுசுறுப்போடு எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கும்.