Translate

Wednesday, 12 October 2011

மனோ கணேசனின் ஆதரவு எமக்குத் தேவையில்லை - ஐக்கிய தேசியக் கட்சி

கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை  கொண்டுநடத்துவதற்கு மனோ கணேசனின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணி யின் நிபந்தனைகளுக்கு ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி அடிபணியாது............ read more 

மட்டு.வவுணதீவு வீரம்மாகாளியம்மன் உயிர்ப்பலியிடுதலை தடுத்து நிறுத்தினார் யோகேஸ்வரன்!(படங்கள்)


மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாவெட்டுவான் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன்  ஆலயத்தில் வருடா வருடம் நடைபெற்றுவந்த பலி பூசை எனப்படும் மிருகங்களை உயிர்ப்பலியிடும் நிகழ்வினை இம்முறை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளார்.............. read more 

லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் - வாசுதேவ :


லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் - வாசுதேவ :

ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் கொலைக்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ............... read more 

யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை.


யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது.

இம்மானுவல் அடிகளார் திருப்பி அனுப்பப்பட்டமைக்கு அரிமாவளவன் கண்டனம்


ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர்...............read more 

Tuesday, 11 October 2011

தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை நிரந்தரமாக்குவோம்: ஜகத் ஜயசூரிய


  யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவம் ஒரு போதும் இனவாதமாக செயற்படவில்லை. சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு உண்மைகளை நினைவுபடுத்திக் கொடுக்க வேண்டும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். .............  read more 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்பதடுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள்பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1) தேர்தல் தொகுதி - 92ம் மாவட்டம் திருமதிதிருநாவுக்கரசு மனோவதனி
2) தேர்தல் தொகுதி - 93ம் மாவட்டம் திருமைக்கல் கொலின்ஸ் ஜோசப் திருகருணைராஜன் முத்தையா
3) தேர்தல் தொகுதி - பிரான்ஸ் வட பிராந்தியம் திரு.பாக்கியசோதி வள்ளுவன்
4) தேர்தல் தொகுதி - பிரான்ஸ் தென் பிராந்தியம் திருநீக்குலாஸ் மரியதாஸ் நிக்கோலாஸ்ஜோய்
ஆகிய ஐவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நா..அரசாங்கத்தின் தேர்தல்ஆணையம்-பிரானஸ் தெரிவித்துள்ளது..................... read more 

குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படா விட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் ஸ்ரீதரன்

குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படா விட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் ஸ்ரீதரன் 


குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வு கட்டமைப்பாவது உருவாக்கப்படா விட்டால் தமிழ்ச்சமூகம் தனது அடையாளங்களை இழப்பதோடு பேரினவாத ஆக்கிரமிப்பில் கரைந்து உருக்குலைந்து போகும் நிலையை யாரும் தடுக்க முடியாத நிலை ஏற்படலாம். கிழக்கில் நடந்து முடிந்த வடக்கில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் கலாச்சார குடியேற்ற இராணுவ மயப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மொத்தமாகவே இன்னும் ஓரிரு தசாப்தங்களில் தமிழ் மக்களின் அடையாளங்களை வாழ்வியலை பாரதூரமாக சிதைத்துவிடலாம்.. இதே நெருக்கடிகளை மலையக முஸ்லீம் மக்களும் எதிர்நோக்குகிறார்கள்.............. read more 

இலங்கை அரசாங்கம் எனது நிபுணர் குழு அறிக்கைக்கு சாதகமான பதிலை தரும் என்று நீண்ட நெடும்காலம் காத்திருந்தேன்- பான் கி மூன்(வீடியோ இணைப்பு)


 
அது உங்களுக்கு நினைவிருக்கும். அவர்கள் அனைத்தையும் நன்கு கவனத்தில் எடுத்து பல பரிந்துரைகளை தெரிவித்திருந்தார்கள். எனது நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ள விடயங்கள் நிச்சயமாக இலங்கை மக்களால் அமுல்படுத்தபட்டிருக்க வேண்டும்.................... read more 

அமெரிக்காவிடம் வெள்ளைக் கொடி விவகாரம் உண்மையென சரத் சொன்னார்: விக்கிலீக்ஸ்


சிறையில் அடைக்கப்பட சரத் பொன்கோவை தாம் சந்தித்ததாகவும்,
அப்போது சண்டே லீடர் பத்திரிகையில் வந்த செய்தி அனைத்தும் உண்மையானது என பொன்சேகா தன்னிடம் தெரிவித்ததாகவும் அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூட்டின்ஸ் அமெரிக்க தலைமையகத்திற்கு அனுப்பியுள்ள கேபிள் செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:............ read more 

அரசாங்கம் முடிவை நோக்கிப் பயணிக்கின்றது: ரணில் விக்கிரமசிங்க


அரசாங்கத்தை முடிவு நோக்கி இட்டுச் செல்லும் போராட்டத்தை கொழும்பு வாழ் வாக்காளர்கள் ஆரம்பித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஏனைய வாக்காளர்களும், இந்த போராட்டத்தில், முழு மனதுடன் ஒன்றிணையும் காலம் வெகுதூரத்தில் இல்லை................. read more 

மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது


மஹிந்த ராஜபக்சவிற்கும் கோத்தபாய ராஜபக்சவிற்கும் எதிராக கட்சிக்குள் எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவுடன் இணைந்து தமக்கெதிராக சூழ்ச்சித் திட்டமொன்றை வகுப்பதாக ஜனாதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவு மஹிந்தவை எச்சரித்துள்ளது............... read more 

இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது: அமெரிக்க சட்டவாளர்கள்


இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது என்று அமெரிக்க சட்டவாளர்;;கள் திரும்பவும் வலியுறுத்தியுள்ளனர். 
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வா தொடர்பில் அவரது வழக்கில் இருந்து இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாக்கும் என கூறியதாக சிறிலங்கா அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது................. read more 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - அவுஸ்திரேலியா


மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் - அவுஸ்திரேலியா

 
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.............. read more 

கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளிங்டன் அழைப்பு?


கூட்டமைப்பினருக்கு ஹிலாரி கிளிங்டன் அழைப்பு?
தமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த விரையவுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்ட குழு அமெரிக்கா புறப்படவுள்ளது. .......... read more 

உங்கள் ஐ.பீ.சித் தமிழில் வன்னிக்களம்.ஒலிவடிவம் இணைப்பு!



விடுதலைப் போரின் வரலாற்றுப் பக்கங்கள் சொல்லும் செய்தி என்ன?விடுதலை வேள்வியில் ஆகுதியான மாவீரச் செல்வங்களை வணங்கிப் போற்றும் மாவீரர் நிகழ்வுகள் எப்போது? எங்கே? யாரால்? எப்படி?இந்த கேள்வி ஏன் எழுந்தது? கேள்விக்கு விடை என்ன? இந்த கேள்வி எழலாமா?நாம் மாவீரர்களை கௌரவிக்கப் போகின்றோமா? அல்லது நடத்துகின்றோம் என்று நடத்துவோருக்கு அங்கீகாரம் தேட போகின்றோமா?யாருக்காக குழப்பம்? எதற்காக குழப்பம்? குழப்ப முற்படுவோர் யார்?................ read more 

லியாம் பொஃக்ஸ் இலங்கையுடன் இரகசிய ஆயுத ஓப்பந்தம்: சனல் 4 !

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் மேலும் சிக்கலில் மாட்டியுள்ளார். அவரும் அவரது நண்பருமான அடாம் ரிட்டியும் கடந்த 10 வருடங்களாக இலங்கை சென்றுவருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரிட்டியைப் பாவித்து இலங்கை அரசானது ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருப்பதாக அதிர்ச்சியான தகவல் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய மற்றும் காத்திரமான தகவல் இது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்த அதி முக்கிய நபர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே சனல் 4 இத் தகவலை வெளியிட்டுள்ளது............ read more 

கள்ளவாக்கு என்றவுடன் அன்று கொதித்தெழுந்த “ஒரு பேப்பர்” சுகிர்தகலா கோபி ! – பணத்துக்காக மாவீரர் தினத்தை கொச்சைபடுதுவதில் வியப்பில்லை


http://www.ethirinews.com/?p=19859

சுகிர்தகலா , இவரை பற்றி பலருக்கு தெரியாது . கொஞ்சம் தமிழ் வல்லமை  கிடைத்துவிட்டால் எங்கள் சமூகத்தில் யாவரும் ஊடகவியலாளர்கள் தானே. ஐவரும்  அன்று கமல் தனம் நாடுகடந்த அரசை கைப்பற்ற வகுத்த திட்டத்தில் ஒரு பங்காளி . ஒரு தேர்தலில் வாக்கு மூலம் வென்று காட்டாமல் கள்ள வாக்கு போட்டு பலரை  கமல் தனம் கூட்டம் வெல்ல வைக்க எடுத்தட முயற்சிக்கு ஆதரவு தரும் பொழுதே  புரிந்து இருக்க வேண்டும் இவர் எப்படியானவர் என்று. கடைசியில் அந்த  முயற்சியில் தோற்று போய் வெளியேறிய யாவருக்கு இன்று கையில் இருக்கும் ஒரே  ஆயுதம் அந்த பத்திரிகை. 
  • எழுதி தள்ளி கொண்டு இருக்கும் இவர்கள் பார்வையில்  இவர்கள் மட்டுமே தேசிய பற்றாளர்கள் ! 
  • மீதி பலரும் தேச துரோகிகள் !
  • களத்தில் களமாடிய வீரர் கூட , லண்டன் இல் சொகுசாக வாழும் சுகிர்தகலாவுக்கு தேச  துரோகிதான் !

உறவினனோ நண்பனோ எது எவ்வாறாயினும்: நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிவிட்டதா இந்தியா……….?



உறவினனோ நண்பனோ எது எவ்வாறாயினும்: நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிவிட்டதா இந்தியா……….?
இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளும் கூட, மோசமான நிலையில் இருப்பதாக கருத முடியாது. சாதாரணமான நிலையிலேயே உறவுகள் தொடர்கின்றன.
​மேலும் வாசிக்க...

காணிப்பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிராகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்!

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன், வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணிப் பதிவு, நில அபகரிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பவற்றுக்கு எதிராத் தமிழ்தேசிய கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றினை நடத்துவதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.............. read more 

லண்டனில் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ விருதைப்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்!


செல்வி.சாகித்தியாவின் நாட்டிய நுட்பங்கங்களை அவதானித்த பிரதம விருந்தினரான ‘ஆதீத நர்த்தகி’ ஸ்ரீமதி.கிருபாநிதி ரட்னேஸ்வரன் அவர்கள்  ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ என்ற விருதினை செல்வி சாகித்தியா சுரேசிற்கு வழங்கிக் கௌரவித்திருந்தார்.
இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’  ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில்  லண்டன் The Orchard Theater  இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார்.
பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா. Continue reading

தீர்வுப் பேச்சின் நிலை குறித்து விளக்க சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு குழு அமெரிக்கா விரைகிறது

0tnaதமிழர்களுக்கு துரிதகதியில் காத்திரமான ஓர் அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் இராஜதந்திர ரீதியில் வலியுறுத்திவரும் நிலையில் தீர்வுப் பேச்சுக்களின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்காவுக்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரமாக வோஷிங்டனுக்கு விரையவுள்ளது............. read more 

தமிழக மீனவர் தொடர்பில் ஜெயலலிதா கூறியவை உண்மையறிந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் சீமான் பாராட்டு

seemanதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல் தொடர்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களுக்கு நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ........... read more 

ஐ.தே.க.வுக்குப் பெரும்பான்மை கிடைக்காமையால் அரசுக்கு ஏற்பட்டது கௌரவமான தோல்வியே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவிப்பு

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகர சபையினை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தாலும் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை பலமில்லாமை பெரும் சிக்கல் நிலையினைத் தோற்றுவித்திருப்பதாக சுட்டிக்காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இதனால் இந்த சபைக்கான தேர்தலில் தாம் பெற்ற தோல்வியை கௌரவமான தோல்வியாக கருதுவதாக தெரிவித்துள்ளது............. read more 

தமிழ்த்தேசியம் என்ற விடயத்தில் கிழக்கு மாகாண மக்கள் உறுதி யோகேஸ்வரன் எம்.பி.

yogeswaran_mpகிழக்கு மாகாண மக்கள் வடக்கு, கிழக்கு பிரதேசம் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதனையே கடந்தகால தேர்தல்களில் நிரூபித்துள்ளனர். ஆனால், வடபகுதி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அப்பால் அரச கட்சியிலும் ஐக்கிய தேசியக் கட்சியிலுமாக நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்திருக்கும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்........... read more 

தமிழ்த்தேசியம் என்ற விடயத்தில் கிழக்கு மாகாண மக்கள் உறுதி யோகேஸ்வரன் எம்.பி.

இலங்கை அரசின் தற்போதைய போக்குக் காரணமாக தமிழருக்கு இந்தியா மீதும் அவநம்பிக்கை ஏற்படலாம்; மாத்தாயிடம் கூட்டமைப்பினர் கருத்துரைப்பு

news
மக்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாத நிலைக்கு அரசு எங்களைத் தள்ளிக்கொண்டு செல்கின்றது அரசு பேச்சுவார்த்தை என்று ஒருபுறம் கூறிக்கொண்டாலும் மறுபுறம் செய்கின்ற வேலைகள் தமிழ் மக்களுக்கு அச்சத்தையே ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமன்றி கூட்டமைப்பு மீதும் ஏன் இந்தியாவின் மீதும் கூட நம்பிக்கையீனம் ஏற்படும்............... read more 

யாழ்ப்பாணத்தில் இப்போது அதிகரித்துள்ள பாலியல் துஷ்பிரயோகங்கள் புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ;. அரச அதிபர்

news
 முல்லைத்தீவில் அரச அதிபராகத் தான் இருந்த காலப் பகுதியில் அங்கு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக  தன்னிடம் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை எனவும், அங்கு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் யாழ்ப்பாண அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்............. read more 

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம்


mdiy epjp]; r. Fkhud;
jpwe;j nghUshjhuf; nfhs;ifapy; ,Wf;fkhftpUe;j rPdh> cyf murpay; khw;wj;jpw;F Vw;wthW jdJ ehl;bd; murpay; nfhs;iffis khw;wpAs;sJ. jd;id tpl ve;jnthU ehLk; cyfj;jpw;F nghUl;fis Vw;Wkjp nra;a KbahJ vd;fpw epiyia nghUspay; Gul;rpapD}lhf nra;J nfhz;bUf;fpd;wJ rPdh. ,jw;F fly; gpuhe;jpak; kpf Kf;fpakhdJ.  ,jd; ghJfhg;G ,Ug;ig gyg;gLj;j NjitahdJ fliy mz;ba ehLfSld; el;Gwitg; NgZtJ kw;Wk; jdJ ,Ug;ig cWjpahf;fpf; nfhs;tJ. 

இலங்கை, இந்திய அரசுகள் பற்றி ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்....



ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர், மற்றும் மைய ஐ.நா மன்றத்தின் 66வது பொதுச்சபை கூட்டங்கள் முடிந்து அவரவர் தத்தமது இடங்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.
ஐ.நா கூட்டத்தொடருக்கு முன் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த ஈழ படுகொலைகுற்றவாளிகள் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் விடைகாணப்படாமல் முடிந்திருக்கிறது.

கேணல் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட இடத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டனரா ?



இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் ரமேஷ் அவர்கள் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகாமையில் மேலும் சில உடலங்கள் காணப்படுவதற்கான ஆதாரப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. கேணல் ரமேஷ் அவர்கள் இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொகுதியோடு மற்றும் அதே இடத்தில் மேலும் சில உடலங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெட்டமுள்ளிவாய்காலூடாக கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவருடன் சென்று விடுதலைப் புலிகளின் சில முக்கியஸ்தர்கள் சரணடைந்திருந்தனர். அவர்களில் சுமார் 50 பேர் அடங்கலாம் என நேரில் பார்த்த சாட்சிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் - உரைகள் காணொ


சர்வதேச மரணதண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் - உரைகள் காணொளி

தமிழச்சி-உரை

http://www.youtube.com/watch?v=w3i94-XWcWM

கௌதமன்-நன்றியுரை
http://www.youtube.com/watch?v=Q82oFYlBzLI

கொளத்தூர்-மணி-உரை

http://www.youtube.com/watch?v=HmfTxyCXIlM

மகேந்திரன்-உரை
http://www.youtube.com/watch?v=A-35Yuy5Pd4