Translate

Tuesday 24 May 2011

பெண் மாணவர்கள் இராணுவ முகாமில் தங்கியிருப்பாதா ?

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியின் போது இராணுவ முகாம்களில் மாணவர்கள் தங்கியிருப்பதும், ஆண்கள் பெண்கள் என ஒன்றாக கலந்து பயிற்சியில் ஈடுபடுவதனால் இஸ்லாமிய கலாசாரத்திற்கு முரணான விடயங்கள் நடைபெறலாம் என தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவிடம் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்து பயிற்சி விவகாரம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்காவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முக்கியஸ்தர் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திப்பொன்றை மேற்கொண்டது என அதிர்வு இணையம் அறிகிறது............. read more

No comments:

Post a Comment