Translate

Thursday 14 July 2011

கனடாவில் தமிழ் இளைஞரை கொலை செய்தவரை இனங்காட்ட 50 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அறிவிப்பு


கனடாவில் தமிழ் இளைஞரை கொலை செய்தவரை இனங்காட்ட 50 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அறிவிப்பு


கிரிஸ்டின் தனபாலன் எனும் தமிழ் இளைஞரை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்து தருபவருக்கு, சுமார் 50 ஆயிரம் கனேடிய டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என டொரொண்டோ போலிஸார் அறிவித்துள்ளனர்.
இரு வருடங்களுக்கு முன்னர்  இரு குழுக்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட முறுகலின் போது கிரிஸ்டின் தனபாலன் தாக்கி கொலை செய்யப்பட்டார். எனினும் அவர் நண்பர்களுடன் பூங்கா ஒன்றில் கரப்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றது.


இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சுமார் 20 பேர் வரை தொடர்பு பட்டிருந்த போதும், உண்மையான கொலையாளி இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. தகுந்த ஆதாரங்கள் இன்றி சிரமப்பட்டு வரும் காவற்துறையினர் கொலையாளியை இனங்காட்டுபவருக்கு 50 ஆயிரம் கனேடிய டாலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளனர்........... read more 

No comments:

Post a Comment