ஐ.நா. செயலாளரை கூட்டமைப்பு சந்திக்கிறது
சமகால நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படுமாம் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளது. இத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் 25-ம் திகதி பயணத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவினர் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன்போது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு எடுத்துக் கூறப்படும்.............. read more
No comments:
Post a Comment