Translate

Thursday 26 January 2012

பெப்ரவரி 4 சிறி லங்காவின் தமிழர் இனப்படுகொலை தினம்!


சிறி லங்கா ஒரு குற்றவாளி நாடுஇதை நாங்கள் சொல்லவில்லை-ஐக்கிய நாட்டு சபையில்காரியதரசி திரு பான் கி மூன் அவர்கள் விசாரணை குழு ஒன்றை நியமித்து அதன் மூலம்சொன்னார்அமெரிக்க சொல்கிறதுகனடா சொல்கிறதுபிரிட்டின் சொல்கிறதுபிரான்ஸ்சொல்கிறதுபாதுகாப்பு சபையில் இருக்கும் மூன்று நாடுகள் சிறி லங்காவில் நடைபெற்றஇறுதிகட்ட போரில் நடந்த படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை குழு ஒன்று முலம்விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறதுஅத்துடன் நிற்காமல் சர்வதேச ஊடகங்கள் கூறுகிறது,சர்வதேச மனித நேய அமைப்புகள் கூறுகிறதுசர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூறுகிறது.

சிறி லங்கா அரசின் கற்று அறிந்த பாடங்கள்நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திருப்திஅளிப்பதாக இல்லை என்று கூறி இருக்கிறார்கள்இதன் அடிப்படையில் சிறி லங்கா அரசு ஒருகுற்றமிழைத்த நாடாகவே பார்க்க படுகிறதுசிறி லங்கா போர் குற்றம்மனித நேயத்திற்குஎதிராக குற்றம் இழைத்த நாடு என்று இந்த உலகமே கூறி நிற்கும் போதுசிறி லங்காவைசர்வதேச விசாரணையில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு சபையில் இருக்கும் ரஷ்யாசீனாவும்,இந்திய போன்ற நாடுகளும் முன்னிலையில் நிற்கின்றன.
இந்த சர்வதேச போட்டியில் தமிழர் நாம் சிக்கி நிற்கின்றோம்.
இன்று உலகமே சிறி லங்கா குற்றமிழைத்த நாடு என்று கூறி இருக்கும் நிலையில் சிறி லங்காபோர் குற்றம் மட்டும் இழைக்கவில்லை 1948யில் அல்ல 1917யில் இருந்து சிங்கள தேசியஇனவாதிகளால் ஒரு திட்டமிடப்பட்ட செயல்பாட்டில் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டுவந்திருக்கின்றனர்.
யூதர்கள் எப்படி 1948யில் இருந்து பாலஸ்தீன மக்களை தமது நிலங்கள்குடிமனைகளில் இருந்துஅப்புறப்படுத்தி அவர்கள் நிலங்களில் காலனிகளை உருவாக்கினார்களோ அதே வடிவத்தை நாம்சிறி லங்காவில் பார்க்க கூடியதாக இருக்கிறது.
சிறி லங்காவில் 1948யில் ஆரம்பித்த இனவாத படுகொலைகள் சிறி லங்கா சுதந்திரம் பெற்றநாளில் இருந்து தொடர்ச்சியான இன அழிப்புசிங்களமயப்படுத்தல்2009யில் முள்ளிவாய்காலில்ஆயுதப்போராட்டத்தின் முடிவின் பின் உச்ச நிலையை கண்டுள்ளது.
இதே நிலை 1967யில் பாலஸ்தீன மக்களின் ஆயுதப் போரட்டத்தின் முடிவின் பின் இஸ்ரேல்அரசின் யூத மயமாக்கலின் உச்சகட்டத்தில் பாலஸ்தீன மக்களிடம் இன்று அவர்களின்நிலப்பகுதியில் 18தான் பாலஸ்தீன மக்களின் கையில் உள்ளது.

1948யில் இருந்து சிறி லங்காவில் தமிழர்களுக்கு என்ன நடந்தது?

அங்கு நடந்தது ஒரு இனத்தை அடியோடு அழிக்கும் நீண்டகால செயல்திட்டம்சிறி லங்காசரித்திரத்தில்மகாவம்சத்தில் எழுதப்படாது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை சிறி லங்காவில்நடந்ததுநடந்து கொண்டு இருப்பது ஒரு இனப்படுகொலை என்பதை இன்று நாம் உரத்துகூறவேண்டி காலம்இலையேல் பாலஸ்தீன மக்கள் போல் 18நிலப்பகுதியில் வாழும்அளவுக்கு தமிழர்கள் நாம் தள்ளப்பட்டு விடுவோம்.

உலக தமிழர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்சிறி லங்கா ஒரு குற்றமிழைத்த நாடுஎன்று எல்லோரும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில் தமிழர்கள் நாம் சிறி லங்காவில்தமிழர்களை முற்றாக அழிக்கும் இனப்படுகொலை நடந்து கொண்டிருகிறதுஉலத்தில் பலபகுதிகளில் நடந்து மறக்கப்பட்டிருக்கும் பல இனப்படுகொலைகளில் தமிழர்களின்இனப்படுகொலையும் ஒன்றாக மாறிவிடக்கூடாது.
உலகத்தில் மிகவும் பழமையான இனம்பழமையான கலாச்சாரம்பழமையான நாகரீகம்தமிழர்அழிந்து விட நாம் காரணமாக இருந்து விடகூடாது.

சிறி லங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை தடுக்கவும்சர்வதேசம் தமிழர்களுக்குநடந்து கொண்டிருப்பது இனப்படுகொலை என்பதை வலியுரத்தவும்தமிழர்களை பாதுகாக்கவேண்டிய கடமை சர்வதேசத்தினது என்பதை வலியுறுத்தி நாம் எமது மவுனம் கலைத்துபோராடுவோம்.
பெப்ரவரி 4!  சிறி லங்காவின் சுதந்திர தினம்!
 பெப்ரவரி  சிறி லங்காவின் இனப்படுகொலை தினமாக மாற்றுவோம்எல்லோரும் ஒரேகுரலாக பெப்ரவரி 4 சிறி லங்காவின் இனப்படுகொலை தினம் என்று வலியுறுத்துவோம்.
தமிழீழ மக்களை குற்றவாளியின் கையில் இருந்து விடுதலை செய்ய ஒரே குரல் கொடுப்போம்.
வடக்கு கிழக்கு தமிழீழ பிரதேசங்களை மீண்டும் இணைக்க குரல் கொடுப்போம்.
பிரான்சு வாழ தமிழர்களுக்கு!

பிரான்சில் பாரிஸ் சிறி லங்கா தூதகரத்திட்கு அருகாமையில் தமிழர்கள் நாம் பெப்ரவரி 4 மாலைமுன்று மணிக்கு ஒன்று கூடுவோம்.
இடம்Place de Paraguay , Metro : Porte Dauphine RER C : Avenue Foch

ஐரோப்பிய வாழ் தமிழர்களுக்கு!

மார்ச் 5 ஆம் திகதி ஜெனீவாவில் ஐக்கியநாடுகள் சபையின் முன்னாள் தமிழர்களின்இனப்படுகொலையை தடுக்க தன்னையே தீயிற்கு ஈகையாக்கி கொண்ட முருகதாஸ் நினைவுதிடலில் ஒன்று கூடி சிறி லங்கா இனப்படுகொலை நாடு என்று வலியுறுத்துவோம்.

உலகத்தமிழர்கள் நாம்!  தமிழர்கள் நாம் விடுதலை அடைய போராடுவோம்.

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

No comments:

Post a Comment