Translate

Thursday 26 January 2012

ஆணைக்குழு அறிக்கையை ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பமாட்டோம் _


  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அனுப்பாது.


அது உள்நாட்டுக் கட்டமைப்புக்கு ஏற்ப முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டமாகும். அதனை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயற்திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment