Translate

Thursday 15 March 2012

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் நாட்டில் இனக்கலவரம் ஏற்படும்! பேரினவாதி சம்பிக்க


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. அது நிறைவேற்றப்பட்டு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற இனக்கலவரம்  இலங்கையில் இடம்பெறும் என்று பேரினவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பாக தொடர்ந்து கூறுகையில்:
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது.
எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகள் பொறிமுறைக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது.
புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.
எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது.
தேசிய பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதேபோன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது.
எனவே ஜெனீவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்யவேண்டியதில்லை என்றார்.

No comments:

Post a Comment