Translate

Monday 11 July 2011

கனடியத் தமிழரின் மனித உரிமை மாநாடு! கன்சவேட்டிவ் கட்சி அக்கறையுடன் பங்கேற்கிறது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வகட்சிகள் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மாநாடொன்றை கனடிய மனித உரிமைகளிற்கான அமைப்பு நாளை செவ்வாய்கிழமை, யூலை மாதம் 12ம் திகதி ஒழுங்கு செய்துள்ளது. ஸ்காபரோ சிவிக் சென்ராில் மாலை 6மணி முதல் 9 மணிவரைஈழத்தமிழர்களின் அவலங்களை கனடிய தேசிய நீரோட்டத்திடையே எடுத்துச் செல்வதில் பெரும்பாங்காற்றி அரசியற்கட்சிகளிடையே தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துள்ள இவ் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந் நிகழ்வில் கனடாவின் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி முன்னுரிமையாக பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொள்கிறது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஸ்காபரோ நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் கனடாவின் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகுபாடின்றி கலந்து கொள்வதானது ஈழத்தமிழர்களிற்கு சுய மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வொன்று தேவை என்பதற்கான கட்டியங்கூறும் நிகழ்வாக அமையவுள்ளது..................... read more  

No comments:

Post a Comment