Translate

Monday 11 July 2011

கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு!

கூட்டமைப்புக்கு வடக்கில் வாக்களிக்க விடாமல் தடுப்பதில் அரசு மும்மரம் – விக்கிரமபாகு!

வடக்கில் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கருணா, டக்ளஸ் ஆகியோரே என்ற மாயையை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது. பின்னர் இவர்களுடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதே அரசின் நோக்கம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் திட்டமிட்டபடி வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்............... read more  

No comments:

Post a Comment