''ஆயுதம் கடத்தியதாக போடப்பட்ட வழக்கை நான் முறையாக எதிர்கொண்டு வருகிறேன். அப்படி யிருக்க திடீரென போலீஸ் இவ்வளவு கெடுபிடி காட்டி என்னை வளைக்க என்ன அவசியம் வந்தது? ஸ்ரீலங்கா நிறுவனத்தை தோல்பொருள் கண்காட்சியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனக்கோரி, டிரேட் சென்டர் எனப்படும் சென்னை நந்தம்பாக்கம் வணிக வளாகத்தில் நாங்கள் நடத்திய போராட்டம்தான் அரசை இந்த அளவுக்கு ஆவேசப்படுத்தி இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கோரத் தாண்டவம் ஆடி தமிழர்களைக் கொன்று அழித்த சிங்களவர்கள், வணிகத்துக்காக தமிழகத்தில் கால் வைப்பதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? நியாயமாக, இதனைத் தமிழக அரசே தட்டிக்கேட்டிருக்க வேண்டும். தடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யாமல், ஸ்ரீலங்கா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய எங்களை நசுக்கும் விதமாகவே இந்தக் கைது நடக்கிறது................. read more
No comments:
Post a Comment