பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத் திரையிடலின் போது மனித உரிமைகள் தொடர்பிலான பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்வதோடு ஐ.நா மனித உரிமைச் சபையினைச் சேர்ந்த பல நாடுகளில் இராஜதந்திரிகளும் பங்கெடுத்துக் கொள்கின்றனர் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் புதன்கிழமை சனல்-4 தொலைக்காட்சியில் இந்த புதிய ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ஜெனீவாத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றது.
போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு சட்டபூர்வமான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட- ஐ.நா அதிகாரிகளால் ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்றும் குறித்த இந்த புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment