Translate

Wednesday 14 March 2012


முல்லைத்தீவு கொக்கிளாயில் பிள்ளையார் இருந்த இடங்களில் புத்தர்!


முல்லைத்தீவு கொக்கிளாயில் பிள்ளையார், மற்றும் வைரவர் கோவில்கள் இருந்த இடத்தில் இந்து கோவில்கள் அகற்றப்பட்டு புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.  கொக்கிளாய் மருத்துவமனைச் சுற்றாடலில் இருந்த பிள்ளையார், வைரவர் ஆகிய இரு இந்துக் கடவுள்களின் சிலையை அகற்றிவிட்டு, அவ் இடத்தில் புத்தர் சிலையை சிறிலங்கா படையினர் நிறுவியுள்ளனர்.

அங்கு பெரிய அளவில் விகாரை ஒன்றும் கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென குறித்த இடத்தை சுற்றியுள்ள சுமார் ஏழு ஏக்கர் காணியும் அபகரிக்கப்படவுள்ளது. இக் காணிகள் அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.  விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் அங்கு ஒரு புத்த பிக்குவும் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்.
இப் பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த இடம். இங்கு பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருமே வசிக்கவில்லை எனவும் யுத்தத்தின் பின் மீள்குடியமர்வு செய்யப்பட்டபோது, சில சிங்களக் மீனவர் குடும்பங்கள் அப்பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் என அப் பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment