Translate

Tuesday, 11 September 2012

ஆதரவு யாருக்கு?



கிழக்கு மாகாணசபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கு பற்றிய கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி, செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஆகியோரில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம். 

'மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறினால் அதிகாரப்பகிர்வு, ஜனநாயகத்தில் தமிழர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' - இரா.சம்பந்தன்


'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Lewisham Sivan Temple Ther 9-9-2012 - 232 PHOTOS


Monday, 10 September 2012

முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்க வேண்டும்; மனோ கணேசன் கோரிக்கை

news
கடந்த கால வரலாற்று தவறுகள் மாற்றியமைத்து தமிழ்-முஸ்லிம் உறவை கட்டியெழுப்புவதுடன், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பயணத்தையும் ஆரம்பிக்க வேண்டும். அதற்கு பெருந்தன்மையுடன் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் சேர்வது குறித்து கட்சி உயர்பீடம் இன்று கூடுகிறது

news
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்த முக்கிய தீர்மானிக்கும் பொருட்டு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடம் இன்று கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டாட்சிக்குத் தயார் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூட்டமைப்பு அழைப்பு


கூட்டாட்சிக்குத் தயார் முஸ்லிம் காங்கிரஸுக்கு கூட்டமைப்பு அழைப்பு
news
 கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்குத் தாராளமான விட்டுக்கொடுப்புகளுடன் செயற்படுவதற்குத் தயாராக இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுப் பகிரங்கமாகவே அறிவித்தார். 

பௌத்த பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முருங்கன்.


பௌத்த பிதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள முருங்கன்.


தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்கள் பல சிறீலங்கா அரசின் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலிற்குட்பட்டுக் கொண்டுள்ளது. இதில் நாம் முன்னரே சுட்டிக் காட்டியதுபோன்று மன்னார் முருங்கன் பகுதியில் ஒரு இந்து ஆலயம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு ஒரு பெரும் பௌத்த ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமையாகும்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காவல்துறையால் தாக்கப்பட்டு கைது!


கூடங்குளத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மே பதினேழு இயக்கத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குடும்ப அரசியலுக்குள் விரிசலா? - நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றுள்ளாராம் பசில்!

Posted Imageகிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசாரம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பசில் ராஜபக்‌ச சரியாக செயற்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பம் குற்றம் சுமத்தியுள்ளது. பதிலுக்கு பசில் ராஜபக்‌சவும் தனது பணிகளில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அநாவசியத் தலையீடுகளை மேற்கொள்கிறார் என கோபித்துக்குக் கொண்டுள்ளாராம்.

சிறிலங்காவின் அறிவுறுத்தலையும் மீறி தமிழகத்திற்கு செல்லும் சிறிலங்கா யாத்திரிகர்கள்: த ஹிந்து


தமிழகத்திற்கு பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை பிரஜைகளுக்கு  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளபோதும் அங்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மின் துண்டிக்கப்பட்டதில்' ஒரு தொகுதியை இழந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பு!


மட்டக்களப்பு மாவட்டம் வின்சென்ட் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற அம்மாவட்டத்திற்கான வாக்களிப்புகளில் ஏழு தொகுதிகளை கொண்டு முன்னணியில் திகழ்ந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி. ஆனால், திடீரென மின் துண்டிக்கப்பட்ட சூழ்ச்சியினை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி ஆறு தொகுதிகளையே வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் 'காணாமல்போன' அத்தொகுதி, ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்கு சொந்தமாகியுள்ளது.

கிழக்கில் அட்சி அமைப்பது யார்?: இழுபறி


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் போட்டியிட்டவர்களில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது யார் என்பது தொடர்பில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியே மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
ஆனால் கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாமல்போனால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வரவேண்டுமே தவிர, அவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்ற பிரச்சனை இல்லை என்று பிபிசி தமிழோசையிடம் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.

Saturday, 8 September 2012

Provincial Council Elections 2012-09 -08

வாழைச்சேனையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிள்ளையானின் அடியாட்கள் தாக்குதல்

வாழைச்சேனையில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிள்ளையானின் அடியாட்கள் தாக்குதல்
 
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாசிவந்தீவு கிராமத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

மட்டு. ஆரையம்பதியில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளரை கடத்திச் செல்ல எடுத்த முயற்சி தோல்வி


மட்டு. ஆரையம்பதியில் த.தே.கூட்டமைப்பு வேட்பாளரை கடத்திச் செல்ல எடுத்த முயற்சி தோல்வி

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்ற பின்னர் வாக்குப்பெட்டியை சீல் இடும் பணியை பார்க்கச்சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் மகேந்திரலிங்கத்தை தாக்கி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதுடன் அவரது வாகனமும் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் திட்டமிட்டு சதி - 50 கோடி ரூபாய் பிள்ளையானுக்கும், 50 கோடி ரூபாய் கருணாவுக்கும் தேர்தலுக்கு செலவிட அரசாங்கம்


கிழக்குத் தேர்தலில் அரசாங்கம் திட்டமிட்டு சதி - 50 கோடி ரூபாய் பிள்ளையானுக்கும், 50 கோடி ரூபாய் கருணாவுக்கும் தேர்தலுக்கு செலவிட அரசாங்கம்

தற்போது நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபையின் தேர்தலில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் பல அடாவடித்தனங்களை புரிந்துள்ளது.
அதற்கு மேலாக கிட்டத்தட்ட 2000 பேர் வரை தென்பகுதியில் இருந்து சிங்களவர்களை அழைத்து அனைத்து வாக்கு சாவடிக்கும் எஸ்பிஓ உட்பட உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளது.

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி
news
திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலை.
 
திருகோணமலை தேர்தல் தொகுதி
 
த.தே.கூ -28070
மு.கா - 8633
ஐ.தே.க - 2980
ஐ.ம.சு.கூ - 7923
 
மூதூர் தேர்தல் தொகுதி
 
த.தே.கூ - 4049
ஐ.ம.சு.கூ - 458
மு.கா - 300
ஐ.தே.க -81

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்;10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்;10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்
news
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதுடன் நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் 10 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி

திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி
news
திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைத் தமிழ்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
திருகோணமலை புல்மோட்டை தேர்தல் தொகுதியில்
முஸ்லிம் காங்கிரஸ் - 3227 வாக்குகள்
த.தே.கூ - 1559 வாக்குகள்
பெரியகடைத் தேர்தல் தொகுதி

முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்: ஹக்கீம்


நடைபெற்றுமுடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் மஹிந்தவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த திருமாவளவன்.

Posted Imageஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இலங்கை ஜனாதிபதி மத்திய பிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வரும் 20ம் தேதி இந்தியா வருகிறார். அவரது வருகைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்திய அரசே இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே, தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தாதே, போர்க் குற்றவாளி இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கையிலேந்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
குறிப்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அங்கே நடைபெறும் விழாவிற்கு பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை ஜனாதிபதியை அழைத்திருப்பதால் திருமாவளவன் நடத்திய ஆர்ப்பாட்டம் அவ்விடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அரை மணிநேர ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு நேற்று சரியாக 11 மணியளவில் மக்களவை கூடியதும் அவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே சென்று இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு அழைக்க வேண்டாம் என்று அவர் எதிர்ப்புக் குரல் எழுப்பினார். பிறகு ஓரிரு நிமிடங்களில் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் 12 மணிக்கு அவை கூடியதும் திருமாவளவன் அதே அட்டையை ஏந்தியவாறு மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு எதிரே நின்று, போர்க் குற்றவாளி இலங்கை ஜனாதிபதியை அழைக்காதே! என்று தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் லிங்கமும் இதே கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பினார். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியும் திருமாவளவன் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிர்ப்புக் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted Image
http://thaaitamil.com/?p=31565 
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? - யதீந்திரா

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? 
யதீந்திரா
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெறும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்குபற்றாத சூழலில், அரசு தான் விரும்பியவாறான ஓர் ஆட்சியை செய்ய முடிந்தது. ஆனால் இம்முறை அத்தகையதொரு நிலைமை இல்லை. ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், அரசு பெரும்பான்மை பலத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு சவால் என்றே கருதலாம்.

சுஷ்மா ரொம்ப நல்லவர்.. ஈழத் தமிழருக்கு ஆதரவானவர்...: பொன்.ராதாகிருஷ்ணன்


சென்னை: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேஇந்தியாவுக்கு வருமாறு சுஷ்மா ஸ்வராஜ்அழைக்கவில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை தமிழர்களை கருவறுக்கும் கொடூர செயலை 2008-ம் ஆண்டு இலங்கை அரசு அரங்கேற்ற தொடங்கிய நாள் முதல் இலங்கை அரசையும், அதற்கு துணை போன மத்திய காங்கிரஸ் அரசையும் தமிழக பாரதீய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

பிரிட்டனில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியல் வெளியீடு


பிரிட்டனில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகளாக எட்டு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் பெயர்களைக் காவல்துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் சிப்ரஸ் தீவில் ஒளிந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சிப்ரஸ் நாட்டுடன் பிரிட்டனுக்கு “குற்றவாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் ஒப்பந்தம்” எதுவும் கிடையாது என்பதால் சிப்ரஸ் இவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியமோ, அவசரமோ கிடையாது.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்


கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு தற்போது சுமுகமாக முறையில் நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

கோத்தபாயவுக்கு 'புலி வரும்' மனநோய் : பிரையன் செனவிரத்ன தகவல்


இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக
இலங்கை மருத்துவரும், சமூகவியலாளருமான பிரையன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இலங்கை, ஈழம் மனித உரிமைகள் எனும் தொணிப்பொருளுடனான கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவல்களை கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் தாயகத்தை கூறுபோடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை திட்டமிட்டு கூறுபோடுவதற்காக நடைபெறும் கிழக்குமாகாணத் தேர்தல் இன்று  சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தாயக விடுதலைக் கொள்கையில் அதீத உறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் இத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும்   எமது நிலைப்பாட்டை தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்! - பொலனறுவைய. இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு.கூ. முன்னணியில்!


நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 7 September 2012

சிங்களத்திற்கு தினமும் சேவை செய்யும் இந்து நாளிதளின் ...........


சிங்களத்திற்கு தினமும் சேவை செய்யும் இந்து நாளிதளின் உள்நோக்கத்தை கண்டிப்போம் . தமிழர் விரோத இந்து நாளிதழை புறக்கணிப்போம்.

தமிழகத்திற்கு சம்பிக்க எச்சரிக்கை

news
இலங்கையர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கைகளை ௭டுக்க வேண்டும் இல்லையேல் இரு நாட்டுக்கும் இடையில் அரசியல் சமூக ரீதியாக பிளவுகள் ஏற்படும் என மினசக்தி மின்வலு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழருக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்; யாழ்ப்பாணத்தில் சந்திரிகா

news

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசினார்.

கிழக்கு மாகாணத் தேர்தல் தமிழருக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

essayஅரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள்.

நீதியான முறையில் தேர்தல் நடைபெறும் என்பதில் சந்தேகம்: அரியநேத்திரன்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நீதியான முறையில் நடைபெறும் என்பதில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளைக் கொண்டு சந்தேக நிலையை உருவாக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

எதிர்ப்பு காட்டவே சிங்களவர்களை திருப்பி அனுப்பினோம்


இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோதெரிவித்தார்.

தனிநாடே எமக்கான தீர்வு என்பதை மாகாணசபைத் தேர்தல் மூலம் உலகிற்கு உணர்த்த வேண்டும் – தமிழர் சுயாட்சிக் கழகம்

எமது இனத்திற்கு சிறீலங்கா அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, அது தொடர்பான பன்னாட்டுச் சமுகத்தின் நிலைப்பாடு, அரசியல் நிலைமை தொடர்பான சர்வதேசத்தின் பார்வை என்பனவற்றை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் எமது மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள உணர்வாளர்கள்,

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவம் அபகரிக்க ஒப்புதல்! ஈபிடிபி முன்நின்று அரங்கேற்றியது!


கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவம் அபகரிக்க ஒப்புதல்! ஈபிடிபி முன்நின்று அரங்கேற்றியது!

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் படைமுகாம்களை அமைப்பதற்குப் படையினர் கோரியிருந்த 550 பரப்புக் காணியை அவர்களுக்கு வழங்குவதற்குச் சம்மதம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான சம்மதம் பெறப்பட்டுள்ளதாக கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? - யதீந்திரா

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? 

யதீந்திரா
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெறும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்குபற்றாத சூழலில், அரசு தான் விரும்பியவாறான ஓர் ஆட்சியை செய்ய முடிந்தது. ஆனால் இம்முறை அத்தகையதொரு நிலைமை இல்லை. ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், அரசு பெரும்பான்மை பலத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு சவால் என்றே கருதலாம்.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?! ஈழதேசம் பார்வையில்..!

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?!  ஈழதேசம் பார்வையில்..! 
பத்து வருடங்களாக கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று அழிப்பது மற்றும் தாக்கி விரட்டி அடிப்பது என்பது தற்செயலான விசயம் அல்ல, கடந்த பத்து வருடங்களாக, பா.ஜ.க., ஆட்சியில் அமர்ந்த பொழுதுதான்   இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவது என்று தொடங்கி மெல்ல மெல்ல கொல்வதற்கும் அவர்களின் மீன் பிடி கருவிகள் மற்றும் படகுகள் போன்றவற்றை சேதப்படுத்துவது, பிடித்த மீன்களை மீண்டும் கடலில் கொட்டுவது, எஞ்சிய  
மீன்களை கொள்ளை அடித்துக்கொண்டு போவது என்று தொடங்கினார்கள்.

இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவை விசாரிக்க வேண்டும் - வழக்கு!

இலங்கைக்கு சென்ற இந்திஅய் பாராளுமன்ற குழுவினர் இந்தியாவில் ஒரு கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர். இதனையடுத்து எம்.பி.க்கள் குழுவிடம் டக்ளஸ் தேவானந்தா பற்றி விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது............... read more 

இலங்கை அரசாங்கத்திற்கெதிராக செயற்பட்டால் ஆட்சியை இழப்பீர்கள்: ஜெயாவை மிரட்டும் சுவாமி


இலங்கை தொடர்பான தேசியக்கொள்கையை ஜெயலலிதா தலைமையிலான  அரசு மீறினால், தமிழகத்தில் ஆட்சிக்கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி  அமல்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில்,"இலங்கை  அரசுடனான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் தமிழக அரசு தலையிடுவதை  நிறுத்துமாறு மத்திய அரசு,அரசியல் சாசனத்தின் 256 வது பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ராஜ்யசபாவில் அ.தி.மு.க., கொந்தளிப்பு: தவறுக்காக மன்னிப்பு கேட்டார் எஸ்.எம்.கிருஷ்ணா


தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து, கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தை, வெளியுறவு அமைச்சர் அலட்சியப்படுத்தியதால், பார்லிமென்டில், அ.தி.மு.க., பொங்கி எழுந்தது. அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியிடம் "நோட்டீஸ்' அளித்தது. இதனால், தன் தவறுக்காக, அமைச்சர் கிருஷ்ணா, பகிரங்க மன்னிப்பு கேட்டார்................. read more 

இலங்கை அரசின் எதிர்காலச் செயற்பாட்டிலேயே இலங்கை இந்திய நல்லுறவு தங்கியுள்ளது


இலங்கை அரசின் எதிர்காலச் செயற்பாட்டிலேயே இலங்கை இந்திய நல்லுறவு தங்கியுள்ளது
 சுரேஷ்.க.பிரேமச்சந்திரன்
 
தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டமானது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 

நாங்க திருப்பி அடிச்சா தமிழ் நாடு தாங்காது: அமைச்சர் விமல் வீரவம்ச அடாவடி !

கொழும்பு: தமிழ்நாட்டில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்கள் ரிஎன்ஏக்கு வாக்களிப்பதைவிட வேறென்ன தெரிவாக இருக்கமுடியும்: த சோதிலிங்கம்


உரிமைப்போருக்கான போராட்டத்தின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுற்று 3 வருடங்களாகியுள்ள நிலையிலும் இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் இன்னமும் இல்லை, தமிழர்களின் அரசியல் உரிமைகள் என்ற பேச்சைத் தொடங்கினாலேயே தேசத்துரோகி என்றும் கழுகு மரத்தில் ஏற்ற வேண்டும் என்றெல்லாம் தமிழ் விரோத கருத்துக்களை பாராளுமன்றத்திலேயே முன்வைக்க முடியும், ஆனால் அடிப்படையான தமிழர் நிலைமைகள் பற்றி பேச முடியாதபடியான சூழ்நிலைமைகளும் அதைசுற்றி தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனவாத பகைமை காட்டும் பயங்கரவாதத்தினை அரசில் அங்கம் வகிக்கும் இனவாத கட்சிகளும், இனவாத காவலிகளும் நடாத்துகின்றனர், இவற்றிக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை மாறாக அவர்கள் தப்பித்து போகும் நிலைமைகளையே அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

தமிழகம் வரும் சிங்களர்களை வெளியேற்றுவது சனநாயகக் கடமை - பெ.மணியரசன் அறிக்கை!


தமிழகம் வரும் சிங்களர்களை வெளியேற்றுவது தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

சென்னை, 05.09.2012.

தமிழக அரசுக்குத் தெரிவிக்காமலும், உரிய அதிகாரியின் அனுமதி பெறாமலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், சிங்களக் கால்பந்தாட்ட அணியினர் விளையாட வாய்ப்பளித்த அதிகாரியை, தமிழக முதல்வர் செயலலிதா அவர்கள் இடைநீக்கம் செய்து ஆணையிட வைத்தது வரவேற்கத்தக்கது; பாராட்டிற்குரியது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டறிக்கை !


கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டறிக்கை !

தென்தமிழீழத்தில் சூடுபிடித்துள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத் தேர்தல் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புலிகள் -ரம்புக்கல புதிய கண்டு பிடிப்பு !



தமிழகத்துக்கு செல்லும் சிங்களவருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என இலங்கை அரசு அறிவித்தது .
அதற்கு காரணம் அங்கு தமது மக்களுக்கு எதிராக இடம் பெறும் ஆர்ப்பாட்டங்களும் ன்முறைகளுக்கும் பின்னால் புலிகள் நின்று செயல் படுகின்றனர் ..............  read more 
Gyk;ngah; tho; jkpo; cwTfSf;F XH md;ghd Ntz;LNfhs;!

nrg;nuk;gh; 8Mk; ehs; (rdpf;fpoik) eilngwTs;s fpof;F khfhzrigj; Njh;jy; jkpo;NgRk; kf;fisg; nghWj;jtiu kpf Kf;fpakhd Njh;jyhFk;.

,j; Njh;jypy; j.Nj.$l;likg;G mjpfg;gbahd Mrdqf;isg ngw;W fpof;F khfhz rigapd; Ml;rpiaf; ifg;gw;w Ntz;Lk; vd;gJ jkpo; kf;fspd; xUkpj;j ngUtpUg;ghFk;.

,j;Njh;jy; Vd; Kf;fpaj;Jtk; tha;e;jJ?

Wednesday, 5 September 2012

இவை உலகத்தை குலுக்கியவை என்றால். ஈழத்தில் நடந்தவை உலுக்கவில்லையா..? - ஆய்வுக் கண்ணோட்டம்


உலகைக் குலுக்கிய படங்கள் சில�. உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்ற சில சம்பவங்களை விகடன் நிருபரும் புகைப்படவியலாளருமான மகா தமிழ்ப் பிரபாகரன் தொகுத்திருந்தார். அவற்றை ஈழத்தோடு ஒப்பிட்டு பார்க்கின்றேன் நான்.
இவ்வாறு பற்பல நாடுகளில் நடந்தவை அனைத்தும் எம் ஈழத்தில் நடந்தன என்பது யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாதது.

கிழக்கில் தமிழர்களே பெரும்பான்மை- அதை தக்கவைத்து கொள்வார்களா?


கிழக்கு மாகாணத்தில் மூன்று இனத்தவர்களும் சமமாக வாழ்வதாக அரச தரப்பில் பிரசாரம் செய்யப்பட்டாலும் அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி தமிழர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.  

மகிந்தவை நான் அழைக்கவில்லை – வைரகல் அட்டியல் வாங்கிய சுஷ்மா கைவிரித்தார்!


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியா வருமாறு தான் அழைக்கவில்லை என்று பா.ஜ.க. மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இலங்கை வந்த போது வைரக்கல் அட்டியலும், பெருந்தொகை அன்பளிப்புக்களும் வழங்கிய மகிந்தவை தான் சாஞ்சியில் நடக்கும் விழாவுக்கு வருமாறு அழைக்கவில்லை என்றும் இந்திய அரசுதான் அழைத்துள்ளது என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முட்டாள்கள்- விமல் வீரவன்ச கூறுகிறார்


தமிழகத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் மீது தாம் பதில் தாக்குதல் நடத்த வேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இ மெயிலை கண்டுபிடித்தவர்(உருவாக்கியவர்) – ஒரு தமிழர் எத்தனை பேருக்குத் தெரியும் ..??


இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?
ஆம்… அதுதான் உண்மை. இன்று உலகையே ஒரு வலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இ மெயில் வசதியை நம்ம ஊர் தமிழர் ஒருவர்தான் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

கருணாநிதியின் தொடர் துரோகங்கள் . மாறாது எந்நாளும் கருணாவின் குணம் மட்டும். தமிழர்கள் இதை மறக்க மாட்டோம் அய்யா.

கருணாநிதியின் தொடர் துரோகங்கள் . மாறாது எந்நாளும் கருணாவின் குணம் மட்டும். தமிழர்கள் இதை மறக்க மாட்டோம் அய்யா.
 


புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!


புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் கிழக்கு  மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகணத்தில் உள்ள தங்களது உறவுகளை வாக்களிக்க சொல்லுமாறு கேட்டே அந்த அவசர வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு

எழுத்தாளர் அ.இரவி நிகழ்வுக்கு இலண்டனில் இருந்து வருகை தரவுள்ளார். 


அ.இரவி எழுதிய "பாலைகள் நூறு" (சிறுகதைத் தொகுப்பு), "வீடு நெடும் தூரம்" (அரசியல் புதினம்) ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 15 ஆம் தேதி சனிக் கிழமை "சண் சிற்றி" பிளாசாவில் அமைந்துள்ள கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வுக்கு வருகை தருமாறு அழைக்கின்றோம்.
 
தொடர்புகளுக்கு -: 647-237-3619

தமிழ்த் தேசியத்தின் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட அனைவரும் வாக்களியுங்கள்: யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கட்டாயமாக சகல தமிழ் மக்களும் வாக்களித்து, தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணயம், வடகிழக்கு இணைப்பு என்பவற்றினை வலியுறுத்தி தமிழ்த் தேசியத்தின் மேலான பற்றுறுதியை வெளிக்காட்டுமாறு தமிழ்மக்களிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: