Translate

Wednesday, 26 October 2011

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் : ரணில்


அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
அரசாங்கம் மக்களின் அதிகாரங்களை பறித்துக் கொண்டுள்ளது, இவற்றை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்........... read more 

இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் சீனாவுடனான கூட்டுப் பயிற்சி: சுபத்ரா

சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு விவகாரத் தலைவர் மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது............. read more 

கொழும்பு பல்கலைக்கழக மாணவரிடையே மோதல் :முகாமைத்துவ பீடம் மூடப்பட்டது!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ......... read more 

Tuesday, 25 October 2011

மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் !


மூன்றாவது கண்ணை திறக்கும் சக்கரம் ! 



   லக அன்னையின் திருவுருவத்தை சனாதனமான இந்து மதத்தின் சாக்த பிரிவு மூன்று நிலையாக வகைப்படுத்துகிறது முதலில் ஸ்தூல வடிவம் இரண்டாவது சூட்சம வடிவம் மூன்றாவது காரண வடிவம் என்பதாகும் ஸ்தூல வடிவம் என்பது பாசம் அங்குசம் கரும்பு வில் மலர் அம்பு ஆகியவற்றை கொண்டு இடது பாதத்தை ஊன்றியும் வலது காலை மடித்தும் அமர்ந்திருக்கும் திருக்கோலமாகும்

மாவீரர் தினத்தைச் சிதைக்க முயற்சிக்காதீர்கள், வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காது!

மாவீரர் தினத்தைச் சிதைக்க முயற்சிக்காதீர்கள்வரலாறுஎன்றுமே உங்களை மன்னிக்காது! 

'ஐயோ ஓற்றுமைகயாக வாழுங்கோ!
சிங்களவர் ஒற்றுமையாக நின்று நிலத்தை பறிக்கிறான்மொழியை பறிக்கிறான்சொத்தை பறிக்கிறான்கல்வி கலாச்சரத்தை பறிக்கிறான்தமிழ் பெண்களின்மானத்தை பறிக்கிறான் மானம் கெட்ட தமிழர்கள் சண்டை பிடிப்பதிலும் பிழைகாண்பதிலும் சந்தோசமடைகிறார்கள்
.
மானம் கெட்ட தமிழர்களே விழித்தெழுங்கள்.
ஓன்றிணைந்து ஜனநாயக முறையில் சிங்கள அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க முன்வாருங்கள்.
எமது இனத்தின் ஒற்றுமையை குழப்புபவர்களை இனம் காணுங்கள்
.

சிறிலங்கா கொலைக்களம் காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை- பிரிட்டன்.

சிறிலங்கா கொலைக்களம் காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை- பிரிட்டன்.
Tuesday, 25.10.2011, 03:12pm

சனல்4 மீதான குற்றச்சாட்டின் விசாரணை முடிவு! சிறிலங்கா கொலைக்களம் காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை என பிரிட்டன் அறிவிப்பு! இலங்கையில் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து சனல்4 ஊடகத்தில் வெளியாகிய பெரும் நெருக்கடிகளை சிறிலங்கா அரசிற்கு சர்வதேச மட்டத்தில் ஏற்ப்படுத்தி இருந்தது. இந்தக் காணொளியானது பக்கச்சார்பான முறையிலோ அல்லது ஊடக விதிகளுக்கு முரணாகவோ தயாரிக்கப்படவில்லை என பிரிட்டனின் ஊடக கட்டுப்பாட்டுத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதியும் அவரது சகோதரர்களுமே பொருளாதார முடிவுகளை எடுக்கின்றனர்! விக்கிலீக்ஸ்


ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களுமே உண்மையாக பொருளாதார முடிவுகளை எடுக்கிறார்கள் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வாசிங்டனுக்கு அனுப்பிய கேபிள் இரகசிய தபால் விக்கிலீக்ஸ் கசிந்துள்ளது.............. read more 

கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் எம்மை ஒன்றும் பாதிக்காது: பாலித கேகன்ன


Panki- kekanna
கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு வரப்போவதாகவும் அங்கு பான் கி மூனையும் ஹிலாரி கிளிங்டனையும் சந்திக்கப்போவதாகவும் செய்திகள் கேல்விப்பட்டேன். ஆனால் நான் அறிந்தவரை அவ்வாறான சந்திப்புக்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. அது தொடர்பில் எனக்கு ஐ. நா. வட்டாரங்கள் தெரியப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார் பாலித கேகன்ன.
.
அவ்வாறு நடந்தாலும் அது சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒருபோதும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார் பாலித கேகன்ன

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - வசந்தன்.


தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - வசந்தன்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில் தங்கள்  தலைவி சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானாலும் மிக அதிக உற்சாகமாக இருந்தது அதிமுகவினர்தான். எனெனில் பஞ்சாயத்துப் பதவிகளில் தொடங்கி மாநாகராட்சி மேயர் பதவிகள் வரை சகல பதவிகளையும் கைப்பற்றியுள்ளது அதிமுக. தமிழகத்தின் 10 மாநாகராட்சிகளையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது.............. read more 

உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன் அபிக்குமரன்: கான்சர் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக..




கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார். அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் டாக்டர் பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது கான்சரை குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்............. read more 

இதுவரை வெளிவந்த ஈழத்து திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட தயாரிப்பில் "கூட்டாளி" திரைப்படம்! விரைவில் திரைக்கு..


" ஒரு சந்நியாசின் இலக்கு
இறைவனை கண்டடைவது.
ஒடும் நதியின் இலக்கு
சமுத்திரத்தை சென்றடைவது.
ஒரு போராளியின் இலக்கு
பூர்வீகத்தை வென்றெடுப்பதே "
வரலாற்று சுவடுகளை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சர்யமான நிஜம் தென்படும்.
சர்வாதிகாரத்தின் ஆயுள் ?
அற்ப ஆயுள் என்பதே அது.
போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.
இதை உலகிற்கு உரக்கசொன்................. read more

கொச்சி வந்த விஜய்- பெருமளவில் திரண்டு வந்து வரவேற்ற ரசிகர்கள்


வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக கொச்சி வந்த நடிகர் விஜய்யை பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளாவில் விஜய்க்கும் அதிக ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
வேலாயுதம் எப்படி வந்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது நானே எனது படத்தைப் பற்றி பெருமையாக சொல்ல விரும்பவில்லை. மக்கள்தான் படத்தைப் பார்த்துச் சொல்லனும் என்றார் விஜய்..........read more

இரானுவம் தப்பு செய்தால் முறையிடுங்கள் -மக்களுக்கு புதிய தொலை பேசி இலக்கம் அறிமுகம் .


இரானுவம் தப்பு செய்தால் முறையிடுங்கள்  - மக்களுக்கு புதிய தொலை பேசி இலக்கம் அறிமுகம் .

இலங்கை இராணுவதினரா மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் தவறான முறையில் மக்களை துன்புறுத்தினாலோ

அச்சுறுத்தினாலோ அவை தொடர்பாக தமக்கு அறிவிக்கும் படி இராணுவ தலைமையகம் புதிய தொலை பேசி இலக்கம் ஒன்றை அறிமுக படுத்தியுள்ளனர் .
எனவே மக்கள் கீழ் வரும் இலக்கத்திற்கு அளித்து தங்கள் முறைபாடுகளை தெரிவிக்கலாம் ..
Short URL: http://www.ethirinews.com/?p=20942

மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – ஜூலியா:


மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது – ஜூலியா:

 
மத்திய அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.......... READ MORE 

துணைவேந்தருக்கும் இராணுவத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு -


2ஆம் இணைப்பு - ஒருபக்கம் பேச்சுவார்த்தை மறுபக்கம் அடியும் உதையும் - அடாவடித்தனம் தொடர்கிறது:-

 யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படைப்புலனாய்வாளர்களது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நேற்று மாலை பரந்தன்-பூநகரிப்பகுதியில் வைத்த தாக்கப்பட்ட மற்றொரு பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளான். பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்தவரான ராஜவரோதயன் கவிராஜன்(27 வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளார். அவர் யாழ.பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் ஆண்டு மாணவராவார். இவருடன் கூடச்சென்றதாக கூறப்படும் மற்றொரு மாணவன் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். பரந்தன்-பூநகரி வீதியூடாக பயணித்த இவர்களது மோட்டார் சைக்கிளை வழி மறித்த ஆயுததாரிகள் சிலரே கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர்................ READ MORE 

Monday, 24 October 2011

வைத்திலிங்கம் துரைசுவாமி

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (Sir Waithilingham Duraiswamyசூன் 81874 - ஏப்ரல் 121966இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டுஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார்.................... read more 

ஒரு வீரவரலாற்றின் மீள்பார்வை!

பொன். முத்துராமலிங்கம்


ஐரோப்பியர்களின் வருகை கடல்மார்க்கமாக இந்தியாவுக்குப் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த வாஸ்கோடகாமாவில் தொடங்குகிறது.
வாஸ்கோடகாமா தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையில்தான் முதன்முதலில் 20-5-1498-ல் கால் பதிக்கிறார். இதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் மற்றைய நாடுகளைச் சார்ந்தவர்களும் கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு

போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன்  அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனாரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மனிதஉரிமைகளுக்கான கொமன்வெல்த் ஆணையாளர் பதவி – சிறிலங்கா கலக்கம்


கொமன்வெல்த் அமைப்பில் 11 நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர்‘ பதவியை உருவாக்குவது தொடர்பான யோசனையை பேர்த் மாநாட்டில் சிறிலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ......... read more 

சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டை முறியடிக்க அமெரிக்கா வகுத்துள்ள திட்டம்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்தும், சிறிலங்காவுடன் கொண்டுள்ள இராணுவ ரீதியான உறவுகள் குறித்தும் அமெரிக்கா கவலையடைந்துள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜக் கிங்ஸ்ரன் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், தனது பயணத்தின் முடிவில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். "முன்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தது.............. read more 

2012 இல் பில்லியனர்கள் ஆகப்போகும் மஹிந்த குடும்பம்,எப்படி?

இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள்.
.
எப்படித்தான் என்று பார்ப்போம்;.......... read more

அமெரிக்கா அப்படி என்னதான் செய்யப்போகின்றது?

அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது? கூட்டமைப்பினை ஏன் அழைத்துள்ளார்கள்? நோர்வே மீண்டும் ஏன் களத்தில் இறங்கியுள்ளது? இந்தியா அமைதியாக உள்ளதே, இந்தியாவை மீறி அமெரிக்காவால் ஏதும் செய்ய முடியுமா?
.
இப்படி பல கேள்விகள் எம்முன் விரிகின்றது. அமெரிக்காவிற்கு நாளை கூட்டமைப்பு விஜயம் ஒன்றை செய்யப்போவதாக கூறும் நிலையில் அவர்களில் சிலருக்கு இன்னமும் வீசா ஒழுங்குகள் கூட சரிவரவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் ஹிலாரி கிளிங்டனை சந்திக்கவோ அல்லது முக்கிய இராஜ தந்திரிகளைச் சந்திக்கவோ நேர அட்டவணை கொடுக்கவில்லை.............. read more

ஐ.நா. செயலாளரை கூட்டமைப்பு சந்திக்கிறது


சமகால நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படுமாம் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளது. இத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற‌உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் 25-ம் திகதி பயணத்தை மேற்கொள்ளவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுவினர் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன்போது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. செயலாளருக்கு எடுத்துக் கூறப்படும்.............. read more 

அமெ. செல்லும் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது:ததேமு _

அமெ. செல்லும் கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது:  ததேமு _

  அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. ............ read more 

சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகு _


  லிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார். ........... read more 

‌வேதார‌ண்ய‌‌ம் ‌மீனவரு‌க்கு அ‌ரிவா‌‌ள் வெ‌‌ட்டு- இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் ‌மீ‌‌ண்டு‌ம் அ‌ட்டூ‌ழிய‌‌ம்

கோடிய‌க்கரை அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர் ஒருவரை இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌‌ள் அ‌ரிவாளா‌ல் வெ‌ட்டிய‌தி‌ல் அவரது கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதோடு ‌மீ‌ன்களையு‌ம் அப‌க‌ரி‌த்து செ‌ன்று ‌வி‌ட்டன‌ர்.

நாகை மாவ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை அடு‌த்த ‌விழு‌ந்தமாவடியை சே‌ர்‌ந்த 4 ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். கோடிய‌க்கரை‌யி‌ன் தெ‌ன்‌கிழ‌க்கே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்................ read more 

அமெரிக்காவிற்கு தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்கிறதா ?


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்யும். எனவே இதனை வரவேற்கின்றோம் என இடதுசாரி முன்னணியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
ஆனால் தமிழர்களை அழிப்பதற்கு உதவிய அமெரிக்காவின் செயற்பாடுகள் இவ்விடயத்தில் எந்தளவிற்கு உண்மையாக அமையுமென்பதை கூற முடியாதென்றும் அவர் தெரிவித்தார்................ read more 

உலக ஒற்றுமையின் சின்னம் ஐ.நா தினம் இன்றாகும்.

ஐ.நா தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24ல் கொண்டாடப்படுகிறது. ஐ.நா அமைப்பின் நோக்கம், சாதனை, எதிர்காலத் திட்டம் போன்றவற்றை மக்களிடம் சேர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். முதல் உலகப் போர் நடந்த போது அது போல் மீண்டும் ஒரு பயங்கரம் நடக்கக் கூடாது என உலக நாடுகள் எண்ணின. அதற்காக உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க முயற்சித்தனர். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு உலகில் பேரழிவை ஏற்படுத்தியது.............. read more 

அநியாயத்திற்கு ஆக்கிரமித்து கட்டப்படும் கோயில்கள்!

உரிய முறையில் புகார் எழுதி இதனை அரசு அலுவலகங்களில் முறையிட்டும் பயனில்லை. இதே போன்ற திட்டத்துடன் ஊரில் பொது இடங்களை மறித்து கோயில் கட்டும் பணிகள் ஆங்காங்கே நடக்கிறது என்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைச் செய்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி பின் புலமாக இருப்பதும் தெரிகிறது.

இது போன்ற அநியாயங்களுக்கு தினமலர் போன்ற பத்திரிகைகளும் துணை போகின்றன. ........... read more 

>>> மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! >>> மத்திய அரசிற்குத் திமுக ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்: கூடங்குளம் போராட்டக்குழு! >>> கூடங்குளம் அணுஉலை போராட்டம்: பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்! >>> மகனை இழந்த தாய், போலீசார் மிரட்டலால் மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலை! >>> மனு கொடுத்த மாணவி பள்ளியை விட்டு நீக்கம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்! >>> தேவர் ஜெயந்தி விழா: சிலைகளுக்குத் தீவிர பாதுகாப்பு! >>> கிரிமினல் வழக்கு இருந்தாலும் ஹஜ் செய்ய அனுமதி: உயர் நீதிமன்றம்! >>> பேராசிரியை வீட்டில் நகை, பணம் கொள்ளை! >>> இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் வாலிபர் கைது! >>> இந்திய மீனவர் சங்கம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக களமிறங்குறது! லிபியாவில் இனி ஷரீயா (இஸ்லாமிய) ஆட்சி


மிஸ்ரடா : லிபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் அமைந்துள்ள இடம் பொதுமக்கள் பார்வையிட முடியா வண்ணம் பூட்டப்பட்டுள்ளது. கடாபியின் மரணத்துக்கு பின் அங்கு என்ன வகையான ஆட்சி முறை நிலவும் என்ற சர்ச்சை இருந்து வந்தது............ read more 

செனல்4 அலைவரிசை ஊடக விதிகளை மீறவில்லை – பிரித்தானியா :


செனல்4 தொலைக்காட்சி அலைவரிசை ஊடக விதிகளை மீறிச் செயற்படவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செனல்4 ஊடகம் வெளியிட்டிருந்த ஆவணப்படம் ஊடக ஒழுக்க விதிகளை மீறும் வகையில் அமையவில்லை என அந்நாட்டு ஊடக கட்டுப்பாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
 
2009ம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் செனல்4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. குறித்த ஊடகம் பக்கச்சார்பாகவோ அல்லது ஊடக ஒழுக்க விதிகளுக்கு புறம்பாகவோ செயற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது......... read more 

197பெண் போராளிகளை விபசாரத்தில் இலங்கை அரசு தள்ளியுள்ளது -தமிழரசன் குற்றசாட்டு .


197பெண் போராளிகளை விபசாரத்தில் இலங்கை அரசு தள்ளியுள்ளது -தமிழரசன் குற்றசாட்டு .


தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் 197பேரை
இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு நாவற்குழி கைதடி பகுதியில்
விபசாரத்திற்கு தள்ளியுள்ளது என தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலக உறுப்பினர் தமிழரசன் அவர்கள்  
குற்றம் சுமத்தியுள்ளார் ................. read more 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு பத்து நாள் பயணமாக நாளை அமெரிக்கா செல்லவுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பிலும், ஏற்பாட்டிலும் அமெரிக்கா செல்லும் இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ............ read more 

மதிமுக பெருவெற்றி: வைகோ மீண்டும் உற்சாகத்தில் இருக்கிறார் !

நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க, - பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும் என்ற நிலை இருந்தது. ........ read more 

இரவுநேர களியாட்ட விடுதியில் லியாம் பொஃகஸ் பெண்களுடன் ஆடினாரா ?


இரவுநேர களியாட்ட விடுதியில் லியாம் பொஃகஸ் பெண்களுடன் ஆடினாரா ?
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் தனது அமைச்சர் பதவியை இம்மாதம் ராஜினாமாச் செய்தது யாவரும் அறிந்ததே. இலங்கையின் உற்ற நண்பராண இவர் கடந்த 10 வருடங்களில் 14 தடவை இலங்கை சென்றதும் அப்படிச் செல்லும் வேளை தனது உற்ற நண்பரையும் அழைத்துச் செல்வதும் வழக்கம். 


இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றிற்குச் சென்றதாகவும் அங்கே இருந்த பெண்களோடு ஆடியது மட்டுமல்லாது அவர்களைக் கட்டிப்பிடித்ததாகவும் சில செய்திகள் கசிந்துள்ளது. இதனை இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் படம் எடுத்துள்ளதாகவும் அதன் பின்னரே அவர் மேலும் இலங்கைக்கு உதவவேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது........ read more 

ஜனாதிபதி மஹிந்த மீது அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

ஜனாதிபதி மஹிந்த மீது அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலியரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக இன்று அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியை தான் எதிர்பார்ப்பதாக ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்................. read more 

முறைப்பாடு செய்யும் பெண்களிடம் பொலிசார் தொல்லை: இமெல்டா


Imelda sukumar
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளதாக இமெல்டா சுகுமார் கூறியுள்ளார். பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்ற பெண்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைக் கொடுக்கச் செல்லும் போது கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அந்தப் பெண்களிடம் தொலைபேசி இலக்கங்களைக் கேட்பதாகவும் அவர்களின் வீட்டுக்கு வருகிறேன் என பெண்களை துன்புறுத்துவதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்........... read more 

தடுப்பிலுள்ளவர்கள் மீது சித்திரவதைகள் அதிகரிப்பு

மனிதவுரிமை அமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திர வதைகளும் சட்டத்துக்கும் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர் வதாக மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலை யங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள், மோசமான நடத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம் பான கொலைகள் என சுமார் 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பி.பி.சி. பேட்டியில் தெரிவித்துள்ளார்.................. read more 

சர்வாதிகார குடும்ப ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடம்: விக்கிரமபாகு _


  லிபியாவின் மக்கள் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட முஅம்மர் கடாபியின் ஆட்சி பின்னர் மக்களை அடக்கும் சர்வாதிகார, குடும்ப ஆட்சியாக மாறியமையே அவரது அழிவுக்குக் காரணமாக அமைந்தது என இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

உலகின் குடும்ப சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு கடாபியின் மரணம் சிறந்த பாடமாகுமென்றும் அவர் தெரிவித்தார். ................. read more 

சீனாவில் மனிதாபிமானம் முற்றாகவே மரணித்துவிட்டதா?

இரண்டு வயதுக் குழந்தை மீது வாகனத்தினால் மோதிவிட்டு வேன் சாரதி ஒருவர் அலட்சியமாக வேனில் சென்றதுடன் அக்குழந்தை உயிரிழக்கக் காரணமான இரண்டு பேரை சீனநாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக் குழந்தையானது இவ் விபத்திற்கு முகங்கொடுத்து சில நாட்களின் பின்னரே உயிரிழந்துள்ளது. ........... read more 

“போருக்கும் சமாதனதிற்கும் நடுவில் புலம்பெயர் தமிழர்கள்”

போருக்கும் சமாதனதிற்கும் நடுவில் புலம்பெயர் தமிழர்கள் என்ற  தலைப்பில் 21 & 22 நடைபெற்ற கருத்தரங்கில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்............. read more 

அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பை முறையாகப் பயன்படுத்த வலியுறுத்தல்

tnaஅமெரிக்காவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெறும் பேச்சு வார்த்தையில் தமிழர் தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியன குறித்து கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளதுடன் இதுவே தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. .............. read more

எம்மைப் புறந்தள்ளிவிட்டு எவரும் தலைநகரில் அரசியல் நடத்த முடியாது மனோகணேசன் தெரிவிப்பு

monoganeshenஎம்மைப் புறந்தள்ளிவிட்டு எவரும் தலைநகரில் அரசியல் நடத்த முடியாதென்பதை நிரூபித்துக்காட்டியுள்ளோம். இது எனது தனிப்பட்ட வெற்றியல்ல. தலைநகர தமிழ் மக்களின் ஜனநாயக வெற்றியே இதுவென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியில் கொழும்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.............. read more 

7ஆம் அறிவு பாடல் - வீடியோ வடிவில்

7ஆம் அறிவு பாடல் - வீடியோ வடிவில்

அவுஸ்ரேலியாவில் தமிழ்அமைப்புக்களால் சிறீலங்கா குறித்தான மாநாடு !

எதிர்வரும் 28 ஆம் நாள் கொமன்வெல்த் நாடுகளின் மாநாடு தொடங்கவுள்ள நிலையில் உலகத்தமிழ் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்தும் சிறீலங்காகுறித்த பாரிய மாநாடு ஒன்று  சிட்னி நகரில் நடைபெற்று வருகின்றது............  read more 

மட்டு. இளைஞர்களின் நன்மை கருதி கணிணி பயிற்சி நிலையம்!- லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பு


லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக தமது வாழ்வின் கஸ்ட நிலைக்கு சென்றுள்ள இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பு மட்டக்களப்பில் கணிணி பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்துவருகின்றது. 
இந்த கணிணி பயிற்சி கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.


லண்டன் அகிலன் பவுன்டேசன் அமைப்பின் இலங்கை பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அகிலன் பவுன்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவருமான சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிஸன் தலைவர் ஞானமயானந்த ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்....................... READ MORE