Translate

Wednesday, 25 May 2011

சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை !

இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். 

சர்தாரியின் தந்தை மரணம்: முதல் ஆளாக கவலை விசாரித்த மகிந்த !

பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் அப்பா இறந்ததை அடுத்து, பல நாட்டுத் தலைவர்களும் அவரைத் தொடர்புகொண்டு தமது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாக் அதிபரின் அப்பா இறந்த செய்தியைக் கேள்வியுற்ற உடனே மகிந்தர் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல் ஆளாக துக்கம் விசாரித்துள்ளார் என பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 

ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 06

 றுதிக் கட்டப் போரில், திசை தெரியாமல் தவித்த அபலைப் பெண்களை எள்ளி நகையாடிய சிங்கள வீரர்கள், அவர்களை இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தனர். 'தம் சமூகத்துக்கு உரிய பண்பாடு மற்றும் அச்சம் காரணமாக, இந்தக் கொடூரங்கள் தங்கள் குடும்பத்தினருக்குக்கூட தெரிந்துவிடக் கூடாது!’ என்று மனதுக்குள் புழுங்கித் தவித்தனர் பெண்கள். 

காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமான்

தமிழக தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வாழ்த்து கடிதம்....

கவிழக் காரணம் கருணாநிதியே.

தனி நாடு கோரிக்கையைக் கைவிடும்போது, 'வேட்டுக்களால் தீர்மானிக்க முடியாததை, ஓட்டுக்களால் செய்ய முடியும்’ என்றார் அண்ணா. பாதை தவறிய தம்பியைப் பதம் பார்த்து இருக்கிறது ஓட்டு.

பொதுவாகவே, வீழ்ந்துபட்டவர்களை விமர்சிப்பது தவறானதுதான். ஆனால், வீழ்த்தப்பட்ட காரணங்களை உணர்ந்து சொல்வது தேவையானது. இது கருணாநிதிக்காக மட்டும் அல்ல... ஜெயலலிதாவுக்கும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரை!............ read more

ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ?

ராஜீவ் காந்தி.   இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது.  இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?


மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ?   இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்.  கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்............. read more

வெளிநாட்டில் பிள்ளைகள் 75வயது மூதாட்டியை கொலை செய்து இளம்பெண்ணின் நகையை திருடிய -ஆயுத கும்பல்

மட்டக்களப்பில் சிங்கள இராணுவ படைகளுடன் சேர்ந்தியங்கும் ஆயுத குழுவொன்று  பிரித்தானியா  ,ஜேர்மன் நாட்டில் பிள்ளைகள் வசித்து வருகின்ற நிலையில் அவர்களின் பண உதவியுடன் எழுபத்தி ஐந்து வயது மூதாட்டி ஒருவர் மட்டு ,களுவாஞ்சி குடிபகுதியில் பதினெட்டு வயதும் இளம் பெண்ணின் உதவியோடு வாழ்ந்து வந்துள்ளார் .............. read more  

கருணாநிதிக்கு -கவிதையால் சாட்டையடி -..-படித்தால் உங்களுக்கும் சிரிப்பு வரும் ..!

கருணாநிதிக்கு -கவிதையால் சாட்டையடி -..-படித்தால் உங்களுக்கும் சிரிப்பு வரும் ..!
Short URL: http://www.ethirinews.com/?p=7247

"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !


  • புலிகள் போரில் தோற்றனரா ? 
  • எப்படி நடந்திருக்கும் ? 
  • எவ்வாறு அழிக்கப்பட்டனர் ? 
  • புலம்பெயர் நாடுகளில் ஏன் இவ்வளவு குழப்பம் காணப்படுகிறது ? 
  • ஏன் குழு குழுவாக பிரிந்து நிற்கிறாகள் ?



 என்று எம்மில் பலர் நினைப்பது உண்டு. அதற்கான விடைகள் .............. read more

Tuesday, 24 May 2011

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி

சென்னை: வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்று கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.

புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்து மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி. இப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராகிவிட்டார். இந் நிலையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்திய மக்களுக்கும், குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்துவோம்! மக்கள் அரங்கத்தில் உறுதிபூண்ட தமிழர்கள்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்சியாக, முள்ளிவாய்க்காலின் பின்னரான தமிழர்களின் அரசியல் ஆயுதமாக விளங்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக, மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நாடுவாரியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் விளக்கவுரைகளுடன், மக்களின் கேள்விகளுக்கு பதிலுரைக்கும் வகையில் மக்கள் அரங்கம் நிகழ்ச்சி இடம்பெறுகின்றது.............. READ MORE

புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா

புலிகளை அழிக்கவே கருணாநிதியுடன் கூட்டு வைத்தார் சோனியா-வைகோ ஆவேசம்விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை, உயிருடன்தான் இருக்கிறார். அவர் மீண்டு வந்து போரிடுவார் 


சோனியா காந்திக்கு விடுதலைப் புலிகளை அழிக்க கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால் அவருடன் கூட்டணி வைத்தார். தற்போது தேர்தலில் திமுக தோற்று விட்டதால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்............ READ MORE

புலிகளின் தலைவர்களை மேற்குலக நாடொன்று காப்பாற்ற........


''தமிழர்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான்'' ......  KP
''மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றா
ல், முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்''...... KP

2009ம் ஆண்டு மே மாதம் 16, 17ஆம் திகதிகளில் அல்லது 15ஆம் திகதியாகவும் இருக்கலாம் அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் மேற்குலக நாடொன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள் என விடுதலைப் புலிகளின்முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியத் பத்திரிகை ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்............... READ MORE

போர்க் குற்றவாளியை ஐநாவில் இருந்து வெளியேற்றுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை!

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரத்தர பிரதிநிதி பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா மீது நடவடிக்கை எடுக்க கோரி அமெரக்கா அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை நிறுவனம், மனித உரிமைகளுக்கான முன்னெடுப்பு மையம் ஆகியன கூட்டடிணைவாக இந்த கோரிக்கையை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளன.......... READ MORE

பெண் மாணவர்கள் இராணுவ முகாமில் தங்கியிருப்பாதா ?

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியின் போது இராணுவ முகாம்களில் மாணவர்கள் தங்கியிருப்பதும், ஆண்கள் பெண்கள் என ஒன்றாக கலந்து பயிற்சியில் ஈடுபடுவதனால் இஸ்லாமிய கலாசாரத்திற்கு முரணான விடயங்கள் நடைபெறலாம் என தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவிடம் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்து பயிற்சி விவகாரம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்காவுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முக்கியஸ்தர் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திப்பொன்றை மேற்கொண்டது என அதிர்வு இணையம் அறிகிறது............. read more

ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கை றோவால் ஆரம்பம் !

சமீபத்திய தேர்தலில் பெரும்வெற்றிபெற்றும், தமிழ் நாடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் செல்வி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையில் முழு மூச்சாக இறங்கியுள்ளது இந்திய உளவு நிறுவனமன றோ அமைப்பு. அதன் முதல் கட்ட வேலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் அரச படைகளின் பிடியில் இருக்கும் கே.பியை சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைக்காட்சிக்காக அது எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும், மிகவும் ஆபத்தமானவை. இதன் மூலம் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப றோ முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.................. read more

பிரித்தானியாவில் வரலாற்று நாயகர்களின் வீரவணக்க நிகழ்வு.

இடம்ST.MATTHIAS PAROCHIAL CHURCH HALL
Rushgrove Avenue, Colindale, NW9 6QY


நேரம்:  6:00pm  to  9:00pm


காலம்: 28-05-2011

வரலாற்று நாயகர்களான வீரத்தளபதிகள்மற்றும் அவர்கள் வரிசையில்விடுதலைக்கு உரம்சேர்த்து வித்தாகி வாழும் வீரமறவர்களைநினைவுகொள்ளும் வீரவணக்க நிகழ்வு பிரித்தானியாவில்நடைபெறவுள்ளது.

ராஜபக்சவின் ஆட்சியில் மக்கள் அமைதியாக இல்லை காப்பாற்றுங்கள் கூறுகின்றார் கே.பி

தலைப்பபைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும் , ஆனால் உண்மைதான் கே.பிதான் அப்படி கூறியிருக்கின்றார். தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் அதே போல்தான் தன்னை அறியாமலே மனதில் உள்ள உண்மையை கே.பி கூறியிருக்கின்றார்.

கே.பியின் பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்தது அதை உற்றுக் கவணியுங்கள், இரண்டுவிதமான உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும். ஒன்று எமது மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள் தயவு செய்து அவர்களை அமைதியாக வாழ விடுங்கள் என்று ஒன்றும் அமைதியாக வாழ உதவியும் செய்யுங்கள் என இரண்டாவதாக இந்தியாவிடம் கெஞ்சுவார் கே.பி. முதலாவதில் மக்களை  அமைதியாக வாழ விடுங்கள் என இந்தியாவிடம் கேட்கிறார்.!

சாத்தான்கள் ஓதும் வேதத்தால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை - வி. தேவராஜ்

சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார்.

அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை கைவிடப்படுமா?

-இதயச்சந்திரன்
 ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரக் கூடியதாகவுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புமளவிற்கு இறங்கி வந்துள்ளது இலங்கை அரசு.
ஐ.நா. சபை மற்றும் மேற்குலகின் மீது மிகவும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் மன நிலையில் இவ்வகையானதொரு அதிரடி மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழாமலில்லை.

மக்களுக்காக போராடிய போராளிகளும் வறுமையில் தற்கொலை செய்யும் நிலையில்! யாழில் தொடரும் தற்கொலைகள்

  • சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் போராளிகளும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
  • இவர்களுக்கு குடிநீர் இல்லை, மலசலகூட வசதி இல்லை, வீடு இல்லை. இவர்களின் இழப்பை ஈடு செய்ய எவரும் இல்லை.


வறுமையாலும் மன அழுத்தத்தாலும் இன்று யாழ். மாவட்டத்தில் பெண்கள் தற்கொலை செய்கின்ற நிலைமை அதிகரித்தே வருகின்றன.

இவ்வாறானதொரு சம்பவம் நேற்று முன்தினமும் யாழ் புன்னாலைக்கட்டுவான் ஈவினையில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் முன்னாள் பெண் போராளியான லாவண்யா என்ற 21 வயதுடைய யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளாள்................ read more

அமெரிக்காவின் சிஸ்கோ தேர்வு எழுதி திருநெல்வேலியை சேர்ந்த 10 வயது சிறுமி அறிவு சாதனை!

இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).

பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்............. read 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுக அமோக வெற்றி: ஈழத்தமிழர்கள் வெற்றி கொண்டாட முடியுமா?

mdiy epjp]; r. Fkhud;
murpaypy; epue;ju ez;gDk; ,y;iy epue;ju vjpupAkpy;iy vd;W $Wthu;fs;. jkpof murpay; tplaj;jpYk; ,f;$w;Wr; rupahdNj. Ml;rpapy; ,Ug;gtiu ntd;whf Ntz;Lkhapd; rpy murpay; rhzf;fpa Ntiyfisr; nra;Njahf Ntz;Lk;.  ,jidNa 63 tajhd mk;ikahu; n[auhk; n[ayypjh fr;rpjkhf nra;J Kbj;Js;shu;. fle;j ,U tUlq;fSf;Fs; <oj;jkpoiuf; ftUk; gy thu;j;ijfisf; $wp te;Js;shu;. ,tw;iw ,tupd; Ml;rpf;fhyj;jpy; nra;J Kbg;ghuh ,t; mk;ikahu; vd;gNj midtuplj;jpYk; vOk; tpdhthf ,Uf;fpd;wJ.

225 PHTOS - Rararajeswary Amman Temple Ther 22.05.2011

225 PHTOS - Rararajeswary Amman Temple Ther 22.05.2011

Monday, 23 May 2011

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாக பிரித்தானியாவில் நடைபெற்ற இரத்ததானமும், ஆத்மசாந்தி பூசையும்.

ஆம் ஆண்டு படுலொலைசெய்யப்பட்ட மக்களையும்போரில் வீரச்சாவைத் தழுவியமாவீரர்களையும் நினைவுகூர்ந்து பிரித்தானியாவில் ஆத்மசாந்தி பூஜையும்,இரத்ததானமும் இடம்பெற்றது.

நேற்றைய தினம் (20-05-2011) வெள்ளிக்கிழ்மை மாலை பிரித்தானியாவின் லெஸ்ரர்பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் இந்த ஆத்மசாந்தி பூசை இடம்பெற்றது.
இந்த ஆத்மசாந்தி பூசையை பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினர்ஏற்பாடுசெய்திருந்தனர்இதில் அப்பகுதியை சேர்ந்த பெருமளவான மக்கள்கலந்துகொண்டிருந்தனர்.

ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், தனது 3 நாள் இந்திய பயணத்தின் முடிவில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கை குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
ஐ.நா. அறிக்கை மீது இந்திய அரசு நிலைப்பாடு என்ன? சீமான்
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்த பொழுது இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதன்பிறகு இரு அரசுகளின் சார்பாக ஊடகங்களுக்கு ஒரு கூட்டறிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டறிக்கையில் இலங்கை அமைச்சரின் இந்தியப் பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து ஒரு இடத்திலும் குறிப்பிடப்படாதது வியப்பளிக்கிறது.

சீமான் அறிக்கை : தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம்

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா.ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளை. இன்னாளில் தமிழர் தந்தை அய்யா சி.பா.ஆதித்தனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

தமிழனப் படுகொலை அனைத்துலகால் திட்டமிடப்பட்டிருந்தது – பேராசிரியர் கலாநிதி அன்றூ

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை (இன அழிப்பு) பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in Politics/Human Rights - Kingston University) கண்டனம் தெரிவித்துள்ளார்.......... READ MORE

கிளிநொச்சி ஜெயபுரத்தில் உள்ள வீதி ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயருடன்...


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகர் என வெளிநாடுகளால் வர்ணிக்கப்பட்டு வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் கிராமத்தில் வீதி ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகை நாட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

ஜெயபுரத்தில் இருந்து பல்லவராயன்கட்டு நேக்கி பிரயாணிக்கையில் ஜெயபுரம் சந்தைக்கு அருகாமையில் இருக்கும் இரண்டு வீதிகளில் ஒன்றுக்கு ‘மகிந்த ராஜபக்ச மாவத்தை’  என்ற பெயரும், மற்றைய வீதிக்கு ‘அழுத் மாவத்தை’ என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெள்ளை தீந்தை பூசப்பட்ட பலகையில் கறுப்பு மையால்  பிரஸ்தாப வீதிகளின்  பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன........... read 

"சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் சிங்கள இராணுவம்"

 என்னதான் அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்து விட்டதாவும், அதற்குப் பதில் கூறப் போவதில்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறத்தில் அதற்குப் பதில் அனுப்பும் காரியம் மும்முரமாகவே நடக்கிறது. 
இந்தக் குற்றச்சாட்டுகள் சர்வதேச ரீதியாக இலங்கையை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடக் கூடியவை என்பதால், அரசாங்கம் இதைப் பற்றி உள்ளூரில் கூறுவதற்கும் வெளியே நடந்து கொள்வதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.உள்நாட்டில் தாம் பணிந்து போவது போலக் காட்டிக் கொள்ளாமல், அதேவேளை சர்வதேச சமூகத்தைத் திருப்தி செய்ய வேண்டிய நிலை அரசுக்கு உள்ளது. இது தான் இப்போது அரசாங்கத்தின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.............. read

பாணியில் தலிபான்கள் வான் படை தளம் மீது தாக்குதல் -2விமானங்கள் அழிப்பு -.தொடரும் சண்டை ..!video-photo in


தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்  பாணியில் பாகிஸ்தான் கராச்சி பகுதியில் அமைந்துள்ள அதி உயர் பாதுக்காப்புடன்
கூடிய வான்படை தளத்தினுள் உள்நுழைந்த முப்பது தாலிபன் கிளர்ச்சி படை வீரர்கள் திடீர் அதிரடி தாக்குதலை நடத்தினர் .
தமது வீர வேக தாக்குதலின் பின் குறித்த பகுதியினை தமது கட்டு பாட்டிற்குள்  வைத்திருந்த வேளை
அங்கு தரித்து நின்ற இரண்டு P-3c Orion விமானங்களை தாக்கி நீர்மூலமக்கினர் .
அதை அடுத்து முக்கிய  இராணுவ கட்டிடங்கள் மீதும் பாதுகாப்பு நிலைகள் மீதும் எட்டு குண்டு தாக்குதல்கள் நடத்த பட்டன .................. read

யாழ். சிறை பெண் கைதி ஒருவர் உட்பட எட்டு பேர் திங்கள் முதல் உண்ணாவிரதம்

யாழ்பாணம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


ஆனால் வழக்கு முடிவுற்று எட்டு மாதங்கள் கடந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கைதிகளின் விடுதலை தொடர்பான தேவையான ஆவணம் வராததால் தொடர்ந்தும் சிறையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களை உடன் விடுவிக்குமாறு கோரியே இன்று தொடக்கம் உண்ணாவிர போராட்டத்தை  குறித்த கைதிகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்............... read

பல்கலைக் கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் நடத்தப்படுகின்ற கட்டாய தலைமைத்துவ பயிற்சி??

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் கட்டாய தலைமைத்துவ பயிற்சியளிக்கும் திட்டம் திட்டமிட்டபடி இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது............ read

கராச்சி கடற்படைத் தளத்தில் தாக்குதல்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடற்படைத் தளம் ஒன்றிற்குள் அதிரடியாக நுழைந்து பெரும் சேதம் உண்டு பண்ணிய தாலிபன் ஆயுததாரிகளிடம் இருந்து நெடுநேர கடும் சண்டைக்குப் பின்னர் பாதுகாப்பு படையினர் அத்தளத்தின் கட்டுப்பாட்டை மீட்டுள்ளனர்.

மெஹ்ரான் என்ற கடற்படை விமான தளத்திற்குள் ஞாயிறு இரவு அதிரடியாக நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கே ஓடுதளத்தில் நின்றிருந்த விமானங்களை முதலில் தாக்கியிருந்தனர். விமானப் பணிமனைகளில் இருந்த கருவிகளையும் அவர்கள் சேதப்படுத்திருந்தனர். ரொக்கெட் குண்டுகளை வீசி பல யுத்த விமானங்களை அவர்கள் சேதப்படுத்தியும் அழித்தும் இருந்ததாக சம்பவங்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்............. read

தாத்தா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்

  •  கலைஞரின் ஏமாற்று வேலைகள் பலவிதம், சித்து விளையாட்டுகளும், நடிப்புகளும் ஒருவிதம். 
  • ஆனால் 40,000 பொதுமக்கள் சாகும்போது கூட இவர் நாடகமாடி, தனது ஆட்சியையும், குடும்பத்தையும் காப்பாற்ற முனைந்துள்ளார் என்பதே வெட்கக்கேடான விடையமாக உள்ளது. 
  • ஈழத் தமிழர்களுக்கு இவர் செய்த துரோகம் மண்ணில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை மறக்கமாட்டான் !
அமெரிக்க தூதுவர்கள் சிலரைச் சந்தித்த தயாநிதி மாறன், கருணாநிதி ஒருபோதும் மத்திய அமைச்சரைவில் இருந்து விலகமாட்டார் என்றும், 2008ம் ஆண்டு அவர் அவ்வாறு அறிவித்ததும் அனைவரது கவனத்தையும் திசை திருப்பவே என்றும், மற்றும் 2009ம் ஆண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு நாடகமே எனவும் கூறியுள்ளார். இவர் கூறிய கூற்றுக்களை, அப்படியே அமெரிக்க அதிகாரிகள் தமது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய அச்செய்திகளே தற்போது வெளியாகியுள்ளது.............. read



இரு தேசியங்கள்: இடையில் நசிபடும் மனித (பெண்) உடல்கள்.


  இரண்டு வருடங்களுக்க முன்பு இலங்கையில் நடைபெற்று முடிந்ததாக கூறப்படும் போரின் பின் அதன் விளைவுகளை அந்த மனிதர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற காலமிது. போர் ஒன்று நடைபெற்றதற்கும் அப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் உருவாகியமைக்குமான காரணங்கள் இப்பபொழுதும் அப்படியே கவனிப்பாரற்று இருக்கின்றுது. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களும் மற்றும் மனித உடல்களை குறிப்பாக பெண்களின் உடல்களை சித்திரவதையும் வன்புணர்ச்சியும் செய்தற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இந்தப் போரின் இறுதியில் எவ்வாறு இலங்கை இராணுவம்> அதாவது சிங்கள தேசியவாதிகள்> மனித உடல்களை குறிப்பாக தமிழ் பெண்களின் உடல்களை நோக்கினர்> பார்த்தனர்> பயன்படுத்தினர் என்பது தொடர்பாக இக் கட்டுரையானது ஆராய்கின்றது............ read 

கனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள்

“கற்பு என்பது அகராதியில் இருந்துதான் போய்விட்டது…ஆனா மனசிலயிருந்து இன்னும் போகயில்ல” என அணங்கு நாடகத்தில் ஒரு வசனம் வருகின்றது. ஆனா “மனை யில் வீட்டிருப்பவள் மனைவி” என்கின்ற அர்த்தம் பொதிந்த சொல் இன்றும் பரவலாகவும் பொதுவாகவும் தமது பெண் துணையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சொல் அகராதியில் இருந்து இன்னும் போகவில்லை. திருமணமான பெண் என்பவள்; வீட்டில் (மனையில்)  வெறுமனே ஒன்றும் செய்யாது வீட்டிருப்பவள் அல்ல. அவள் இன்றும் ஆண்களுக்கு முன்பு எழுந்து (விதிவிலக்குகள் உண்டு) இறுதியாகவே படுக்கவும் செல்கின்றாள். அதாவது வீட்டின் அனைத்து அல்லது பெரும்பாலான வேலைகளை செய்கின்ற வேலையாள். மேலும் இன்று பெண்கள் தொழில் துறையிலும் வேலை செய்து வீட்டு வேலைகளுகம் செய்கின்றனர். .............. read

Sunday, 22 May 2011

பிரபாகரனை தமது நாட்டுக்கு கொண்டு செல்ல நோர்வே விரும்பியது


விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமது நாட்டுக்கு அழைத்துச் சென்று அடைக்கலத்தஞ்சம் வழங்கவே நோர்வே விரும்பியது என சிறீலங்காவைச் சேர்ந்த தேசிய நாட்டுப்பற்றாளர் அமைப்பின் தலைவர் குணதாசா அமரசேகரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்காவில் சர்வதேசம் முனைப்பு பெற்றிருந்தது ஏன்? ஜான் இக்லான்ட்


Jan egland
ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையம் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக, விடுதலைப்புலிகளை வேறொரு அணுகுமுறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளால் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் ஐ.நா பிரதிநிதியுமான  Jan Egeland தெரிவித்துள்ளார்............... read

போர்க்குற்றத்தில் இருந்து ஏன் இந்தியா சிறிலங்காவை காப்பாற்றுகின்றது. கஸ்பாரின் ஆய்வு


India
இந்தியா சிறிலங்காவின் போருக்கு உதவி செய்தது என்பது வெள்ளிடைமலை. அதேபோல சிறிலங்காவில் தமிழர்க்கு எதிரான போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த நிலையில் சர்வதேச விசாரனை ஒன்று வருமாக இருந்தால் நிச்சயமாக இந்தியாவின் போர்க்குற்றத்திற்கான பங்களிப்பினை சர்வதேச விசாரணை குழு கண்டறிந்து அதனை சுட்டிக்காட்டும். ஆகவேதான் இந்தியா சிறிலங்காவை போர்க்குற்றம் தொடர்பில் தொடர்ந்தும் பாதுகாக்க முற்படுகின்றது.

சிவப்பு மஞ்சள் புலிகளின் நிறமாம்: இராணுவத்தினர் தடை !

சிவப்பு மஞ்சள் நிறங்கள் புலிகளுக்கு சார்பான நிறங்கள் என்றும் அந்த வர்ணங்களை கொண்ட கொடிகளை ஏற்றுவதற்கு தாம் தடைவிதிப்பதாக வல்வெட்டித்துறையில் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை கடற்கரை மைதானத்தில் நேற்று நேதாஜி விளையாட்டு கழகத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக விளையாட்டுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுப்போட்டி ஆரம்பத்தில் நேதாஜி விளையாட்டு கழகத்தின் சிவப்பு மஞ்சள் நிறங்களை கொண்ட கொடி ஏற்றப்பட்டபோது திடீரென அங்கு வந்த இராணுவத்தினர் அக்கொடியை பறித்தெடுத்ததுடன் விளையாட்டுப்போட்டிக்கும் தடை விதித்தனர்............... read more

இந்தியாவின் தாக்குதல் படையாக பிள்ளையான் செயற்படுகின்றார்: சிறீலங்கா புலனாய்வுத்துறை


பிள்ளையான் வசம் அதிக ஆயுதங்கள் உள்ளதாகவும், அதனை அவர் மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் கூலிப்படையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், பிள்ளையான் துணைஇராணுவக்குழுவின் தலைவருமான பிள்ளையான் செயற்பட்டுவருவதாக சிறீலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறை சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு இரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:............. read

சாத்தான்கள் ஓதும் வேதத்தால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை - வி. தேவராஜ்

சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார்............. read

அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை கைவிடப்படுமா? – இதயச்சந்திரன்

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரக் கூடியதாகவுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளி என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்புமளவிற்கு இறங்கி வந்துள்ளது இலங்கை அரசு.

ஐ.நா. சபை மற்றும் மேற்குலகின் மீது மிகவும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் மன நிலையில் இவ்வகையானதொரு அதிரடி மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வி எழாமலில்லை.......... read

பிள்ளையானுக்கு நடந்தது என்ன? ஏன்? - ஆய்வு

  • பிள்ளையானின் இந்தியா சார்பு நிலையும், அண்மைக் காலமாக இவர் மேற்கொண்ட கருணா எதிர்ப்பு பரப்புரைகளுமாகும் என்று வாதிடுவோர் இருக்கின்றனர். 
  • போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டால் கருணாவின் தலைக்கும் ஆபத்து 
  • நாம் சுயநிர்ணய உரிமைக்கான சுய ஆட்சிக்கானவர்கள் என்னும் முடிவி;ற்கு வரும்வரை இவ் கொலைகளும், கடத்தல் நாடகங்களும், அச்சுறுத்தல் மற்றும் வேசமிடுதல்களும் காட்டிக் கொடுப்புக்களும் தொடரும் அதேவேளை, தமிழ் தலைவர்களிடையான பிளவும் அரசின் பிரித்தாளும் நடவடிக்கையும் முற்றுப்பெறாது.

சிறீலங்கா அரசின் மிக நெருங்கிய நண்பனாக பல வழிகளில் உறுதி செய்து இறுதியில் மகிந்த தோழில் கைபோட்டு மகிழ்ந்து கொண்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தற்பொழுது நடந்தது என்ன?

கிழக்கு மாகாணத்தில் அரச படைகளின் ஆக்கிரமிப்பின் பின்னர் நல்லாட்சி நிலவுகின்றது, மக்களாட்சி நிலவுகின்றது என காட்டுவதற்கு வேடமிடப்பட்ட ஒரு சிறீலங்காவின் சார்பு தமிழ் தலைவராக காட்டப்பட்டவர் இப்போது என்ன நிலையில் இருக்கின்றார்................ read

களுவாஞ்சிக்குடி வர்த்தகர் கொலையில் வெளிவராத உண்மைகள்!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி எருவில் பாட சாலை வீதியில் கடந்த 13 ஆம்திகதி மாலை 6.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குமார் என்ற ழைக்கப்படும் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற பிரபல வர்த்தகர் கொல்லப்பட்டிருந்தார்.
தற்பொழுது விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் இக்கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் சில எமக்குக் கிடைத்துள்ளன. இச்சம்ப வம் பற்றித் தெரியவருவதாவது,................ read

முல்லைத்தீவு மக்களின் அவலங்களை நேரில் கண்டறிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள்


[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 04:00.56 AM GMT ]
சொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் வேறிடங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை மேலும் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கரைவலைப் பாடுகளை வைத்து தொழில் செய்து வந்த மக்களிடமிருந்து அதிகார வர்க்கத்தினரால் அந்தப்பாடுகள் பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது,...... read

ஜெயலலிதா முதலமைச்சரானதில் இலங்கையை விட இந்தியாவுக்கே அதிக அழுத்தம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


[ ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011, 11:03.32 AM GMT ]
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இலங்கையை விட  இந்தியாவுக்கே அழுத்தங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
சிங்கள வாராந்தப் பத்திரிகையான சிலுமிண பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சோனியாகாந்தியை சந்திக்க மாட்டேன்: கருணாநிதி

கனிமொழி கைது, பிரதமர் விருந்து என பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதி நாளை புதுடெல்லி செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இந்தத் தகவலைக் கூறினார். பிரதமர் அளிக்கும் விருந்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்றும், தான் நாளை புதுடெல்லி செல்லவுள்ளதாகவும் கூறினார்.

வேலூரில் நாம் தமிழர் இயக்கத்தினர் நடாத்திய பேரணி நிகழ்வின் காணொளி!

ஐ நா சபையால் வெளியிடப்பட்ட போர்க்குற்ற ஆவணத்தை ஆதரித்து வேலூரில் நாம் தமிழர் இயக்கத்தினர் நடாத்திய பேரணி நிகழ்வின் காணொளி.

ஐ.நா. அறிக்கைக்கு எதிரான செயற்பாடுகளில் சில தமிழர்களும் இணைந்துள்ளனர்

ஐ.நா. அறிக்கையின் பிரகாரம் எவ்வித போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை எனக் கூறுபவர்களின் பின்னால் சில தமிழர்களும் இணைந்துள்ளமை மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிக்கின்றார். ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்று இங்குள்ள தமிழ் மக்கள் மீது எவ்வித போர்க் குற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அந்த அறிக்கை மீது எவ்வித விசாரணைகளும் தேவையில்லை எனவும் கூறுபவர்களின் பின்னால் சில தமிழர்களும் இணைந்துள்ளனர். இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்............ read more