Translate

Wednesday, 21 March 2012

ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதான இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது: சித்தார்த்தன்


அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வன்முறைகளை கைவிடச் சொல்லி புலிகளைக் கேட்டேன் - அவாகள் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்! சுமந்திரன் கூறினார்.


தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். இவர் இது குறித்து முக்கியமாக தெரிவித்து இருப்பவை வருமாறு:

இடிந்த கரையிலிருந்து ஓர் குரல் கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவம் செய்யக்கூட..

The Indian Democracy is not allowing a pregent women to come out of the Koodankulam village for her Delivery !!!!!! Jai Hind.

ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு மருத்துவம் செய்யக்கூட கூடங்குளம் பகுதியை விட்டு வெளியே வரவிடாத அளவிற்கு இங்கே மக்களாட்சி நடைபெறுகின்றது !!!!! ஜெய்ஹிந்த்….

தன் கழுத்துக்கு கத்தி வராத வரை எவன் செத்தா எனக்கென எங்களுக்கு மின்சாரம் வந்தால் போதும். நம்ம வீட்டு குழந்தைகள் ஒரு வேளை சரியாக சாப்பிடவில்லை என்றாலே நாம் துடிக்கிறோம். ஆனால் இடிந்தகரையில் அந்த குழந்தைகளுக்கு 2 நாளாக பால் இல்லை, அங்கு கடல்கரையை ஒட்டி ஊர் இருப்பதால் உப்பு தண்ணீர் தான் இருக்கும், குடிக்க நல்ல தண்ணீர் இல்லை எல்லாவற்றையும் அரசாங்கம் நிறுத்தியாகி விட்டது. ஒரே ஒரு நிமிடம் அங்கு உள்ள குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக நினைத்து பாருங்கள், அவர்களுக்காக குரல் கொடுங்கள். 

கனடிய தமிழர் தேசிய அவையின் மே18 இனபடுகொலை நினைவுநாள் அறிவிப்பு


கனடிய தமிழர் தேசிய அவையின் மே18 இனபடுகொலை நினைவுநாள் அறிவிப்பு


தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள்ஆகின்றனஇவ் இன அழிப்பை நினைவு கூரும் முகமாக
கனடாவில் வரும் மே மாதம் கனடிய தமிழர் தேசிய அவையினரால்பல நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
முக்கிய நிகழ்வாக மே 18 ஆம் திகதியில் இனபடுகொலைநினைவுநாள் அல்பெர்ட் கம்பெல் சதுக்கம் ( Albert Campbell Square - Scarborough Town Center ) ல் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

உலக நாடுகள் ஒன்றும் இந்தியா அல்ல சிறீலங்கா புரிகிறது


உலக நாடுகள் ஒன்றும் இந்தியா அல்ல சிறீலங்கா புரிகிறது


ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்மானம் குறித்த இறுதி நேரப் பரபரப்புகள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரிகிளின்ரன் ஜெனிவாவுக்கு நேரடியாக வந்து களத்தில் குதித்துள்ளார். அவர் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு தீர்மானத்தை ஆதரிக்குமாறு கோரி ஏனைய நாட்டுப்பிரதிநிதிகளுடன் தீவிர பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.

மாநாட்டை குழப்ப சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி!


மாநாட்டை குழப்ப சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி!
ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளதாக நாதம் ஊடகசேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்கு வந்திருந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு பலரையும் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா காவல்துறையினர் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்லுமாறு கனடிய அரசு அழுத்தம்.


போருக்கு பின்னர், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கனடிய அரச மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் முக்கிய கட்டத்தினை அடைந்திருக்கும் இந்த வேளையில், கனடிய அரசின் மூன்று பேர் கொண்ட குழுவொன்று கொழும்ப செல்கிறது.
வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் (John Baird ) பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவ்கானிஸ்தானிற்கான தூதுவருமான கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் (Chris Alexander ), பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டிகஸ்ரா(Rick Dykstra), செனட்டர் வேன் வைட் (Vern White) ஆகியோர் கொழும்ப செல்கின்றனர்.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுலாக்குவதே எமது நோக்கம் : ரொபர்ட் ஓ பிளேக்


இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது எமது நோக்கமல்ல, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதே எமது அபிலாஷை என்று மத்திய, தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஈ.டி.வியுடனான ‘ஸ்கைப்’ உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருக்கிறார்.

இம்முறை இலங்கை வெற்றி பெறுவது கடினம் - ‘நியூயோர்க் ரைம்ஸ்‘


இம்முறை இலங்கை வெற்றி பெறுவது கடினம் - ‘நியூயோர்க் ரைம்ஸ்‘

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கை தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியூயோர்க் ரைம்ஸ் இதழில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

ஈழ மண்ணில் நடந்தது குற்றம்! போராளிகளின் உடையில் மக்களுடன் நின்றவர்கள், இராணுவ தரப்பில் நின்று சோதனை செய்தனர்! நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்!



ஈழ மண்ணில் நடந்தது குற்றம்! போராளிகளின் உடையில் மக்களுடன் நின்றவர்கள், இராணுவ தரப்பில் நின்று சோதனை செய்தனர்! நேரில் பார்த்த நிருபரின் சாட்சியம்!
ஈழ மண்ணில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களை நேரில் கண்டு, 'தமிழ்நெட்’ இணையதளம் மூலம் உலகுக்கு அறியச்செய்தவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் யாழ்ப்​பாணத்தைச் சேர்ந்த செய்தி​யாளர் லோகீசன்.
''ஈழத்தில் 2004-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் மீதான இறுதிப்போர் தொடங்கப்பட்டு விட்டது. இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தீவுப் பிரதேசமாகத்தான் வன்னி மண் இருந்தது.

மனித உரிமை மீறல்கள் குறித்து ஆஸ்திரேலிய செனெட்டில தீர்மானம் நிறைவேறியுள்ளது! - இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது



மனித உரிமை மீறல்கள் குறித்து ஆஸ்திரேலிய செனெட்டில தீர்மானம் நிறைவேறியுள்ளது! - இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் மீதான விவாதாமும் வாக்கெடுப்பும் 22/3/12 அன்றோ அல்லது 23/3/12 அன்றோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

இலங்கையின் இறுதிகட்ட போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஆஸ்திரேலிய செனெட்டில் இது தொடர்பிலான ஒரு தீர்மானம் இன்று நிறைவேறியுள்ளது.

இலங்கையில் போருக்கு பின்னர் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் விஷயம் குறித்து முழுமையாக கவனிக்கத் தவறியது என்றும், எனவே ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தையாவது ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஆதரிக்க வேண்டும் என்று செனட் கோருகிறது என்று, அங்குள்ள பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரியனன் கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பிரேரணைகளை முன்வைத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனவும் ஆஸ்திரேலியா கூறுகிறது.

"பொருளாதாரத் தடைகள் இல்லை"

இதனிடையே பிரிட்டனின் அழுத்தமும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனின் மூன்று முன்னாள் வெளியுறவு அமைச்சர்களான டேவிட் மிலிபாண்ட், ஜாக் ஸ்ட்ரா, மார்கிரெட் பெக்கட் ஆகியோரும், தற்போதைய நிழல் வெளியுறவு அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர் ஆகியோர், கார்டியன் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை, ஐ நா வின் மனித உரிமைகள் குழு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதே போன்று இலங்கைக்கு பொறுப்பான அமெரிக்காவின் துணை வெளியுறவுச் செயலர் ராபர்ட் பிளேக் இலங்கையின் மீது அமெரிகாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கும் நோக்கம் இல்லை என்று ஊடங்கங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை ஒரு சுயாதீனமான நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணையை நடத்த முன்வர வேண்டும் எனவும் பிளேக் கூறியுள்ளார்.

ஜெனீவா பிரேரணையால் மக்களை அச்சுறுத்த யாழ்.நகர் முழுவதிலும் இராணுவம் குவிப்பு


ஜெனீவா பிரேரணையால் மக்களை அச்சுறுத்த யாழ்.நகர் முழுவதிலும் இராணுவம் குவிப்பு
சாகச நிகழ்வு என்னும் பெயரில் யாழ்.நகரம் முழுவதிலும் இராணுவத்தினரால் குவிக்கப்பட்டு பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிரேரணையின் மூன்றாவது சரத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா தீவிரம்! அமெரிக்கா வளைந்து கொடுக்குமா ?


சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் மூன்றாவது சரத்தில், திருத்தம் கொண்டு கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரம் காட்டிவருவதாக, இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுமியை பலருடன் சேர்ந்து கற்பழித்த ஆளும் கட்சி அரசியல்வாதி கைது!

சிறுமியை பலருடன் சேர்ந்து கற்பழித்த ஆளும் கட்சி அரசியல்வாதி கைது!

சிறுமி ஒருத்தியை பலருடன் கூட்டாக சேர்ந்து கற்பழித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்க ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்


சென்னை, மார்ச் 21: சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து  ஊடகங்களில் புதிய ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகைப்படங்கள், விடியோக்கள் ஆகியவை மிகவும் வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் கடும் கண்டனத்துக்குரியவை.

திமுகவுக்கு கிடுக்கிப்பிடி


புதுடெல்லி,  மார்ச் 21:இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ராஜ்யசபையில் கொண்டு வரப்பட்டிருந்த வெட்டுத் தீர்மானத்தின் மீதான  ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் திமுக வெளிநடப்பு செய்தது. 
.
பிரதமர் அறிக்கையை பார்த்து விட்டு வெற்றி வெற்றி என்ற சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரிக்காதது ஏன் என்று ராஜ்யசபை அதிமுக  தலைவர் டாக்டர் மைத்ரேயன் கேள்வி எழுப்பி உள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ராஜ்ய சபையில் பேசினார்.  

சிறிலங்காவே உலகில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் ! ஐ.நாவில் கரன் பார்கர் அம்மையார்

சிறிலங்காவே உலகில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் ! ஐ.நாவில் கரன் பார்கர் அம்மையார்



உலக அரங்கில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாகஇ சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ளலாம் எனIEDஅமைப்பின் பிரதிநிதி கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இனவாதம் இனத்துவேசம் தொடர்பில் இடம்பெற்ற விவாத அமர்வில் கரன் பார்கர் அம்மையார் உரையாற்றியிருந்தார்.

வெள்ளை வான் கடத்தலில் கோத்தபாய இராணுவம் -அதிர்ச்சி தகவல் !


இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஆளும் மகிந்தா அரசு மக்கள் மத்தியில் புதிய பீதி ஒன்றை
இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ளது .
கிரிஸ் மனிதர்களின் தொடர் பீதியை உருவாக்கி விட்ட இலங்கை இராணுவம்
தற்போது வெள்ளை வான் கடத்தல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது .

ஜெனீவாவில் ரவுடித்தனம் செய்யும் இலங்கை..


ஜெனீவாவில் ரவுடித்தனம் செய்யும் இலங்கை..
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் நேற்றைய தினம் உப நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த உப நிகழ்வுகளின்போது இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பிரபாகரனின் கொலைச் சூத்திரதாரி இந்தியாவே!


பிரபாகரனின் கொலைச் சூத்திரதாரி இந்தியாவே!
பிரபாகரன் படுகொலை செய்யப்பட வேண்டும் எனவும் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என முதலில் இந்தியாவே தெரிவித்திருந்ததாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பதற்றமான நிலை! தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படடும் அபாயம்!!

இலங்கையில் பதற்றமான நிலை! தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படடும் அபாயம்!!


ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி , இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனித் தமிழீழம் குறித்து ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! திருச்சி உண்ணாவிரத நிறைவில் சீமான் வேண்டுகோள்!!!


தனித் தமிழீழம் குறித்து ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! திருச்சி உண்ணாவிரத நிறைவில் சீமான் வேண்டுகோள்!!!


2012 naam tamilar newsதனித்தமிழ் ஈழம் அமைப்பது குறித்து ஈழத்தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
சிறிலங்காவிற்கு எதிரான போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.............. read more 

புதிய போர் குற்ற ஆதாரம்:கேணல் ரமேஸ் அவர்கள் படுகொலை செய்யப்படும் புகைப்படம் வெளிவந்துள்ளது


புதிய போர் குற்ற ஆதாரம்:கேணல் ரமேஸ் அவர்கள் படுகொலை செய்யப்படும் புகைப்படம் வெளிவந்துள்ளது

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கேணல் ரமேஸ் அவர்களை சிறீலங்கா ராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர் என்ற தகவலும் அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களும் முன்பே நாம் வெளியிட்டிருந்தோம்.
ராணுவத்தினரிடம் சரணடைந்த கேணல் ரமேஸ் அவர்களை ராணுவத்தினரே படுகொலை செய்தனர் என்று சர்வதேச மனித நேய அமைப்புக்களும் ஆதாரங்களோடு நிரூபித்திருந்த நிலையில்,கேணல் ரமேஸ் அவர்கள் தொடர்பான இன்னும் சில ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன............ read more 

10 பவுன்களைக் கொடுத்து 1லட்சம் பவுன்களை சுருட்டிய ஆசாமி !

10 பவுன்களைக் கொடுத்து 1லட்சம் பவுன்களை சுருட்டிய ஆசாமி !

இப்படியும் நடக்குமா என்று எண்ணும் அளவுக்கு ஒரு விடையம் நடந்திருக்கு ! சரி வாருங்கள் மேட்டருக்குப் போகலாம் !

ஜெனீவாவில் நேற்று என்ன நடந்தது ? சுவாரசியமான தகவல்கள் !


ஜெனீவாவில் நேற்று என்ன நடந்தது ? சுவாரசியமான தகவல்கள் !

இன்றைய இரு உப நிகழ்வுகளில் இலங்கைக்கெதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்: முகத்தைசுழிக்க வைக்கும் நாகரிகமற்ற செயற்பாடுகளில் அரச குழுவினர் ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்ற இரு உப நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருக்கும் அரச குழுவினரின் நாகரிகம் அற்ற செயற்பாடுகள்குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், தொடர்ச்சியாக இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருக்கும் கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல்செயலவை ( United States Tamil Political Action Council), பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (Tamil Youth Organisation United Kingdom) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இன்றைய இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தவேளை அரச பிரதிநிதிகள் 

Tuesday, 20 March 2012

இங்கிலாந்தில் கார்களை கழுவினால் ரூ.80ஆயிரம் அபராதம்


இங்கிலாந்தில் கார்களை கழுவினால் ரூ.80ஆயிரம் அபராதம்
ஹோஸ் பைப் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுபவர்கள், வண்டி கழுவுபவர்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு, நிலம் காய்ந்து வருகிறது. நீர்மட்டம் குறைந்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட உரிமையுண்டு அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்

நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ்மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது.
ஆகவேதான் நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி அழைக்கும் செயல் நாட்டில் நடக்கின்றது. தமிழ்மக்களை அழித்தவர்கள் தங்களைக் காப்பற்றத் தமிழரைத் துணைக்களைக்கின்றனர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியபொறுப்பு தமிழ்மக்களுடையது. 

இன்றைய இரு உப நிகழ்வுகளில் இலங்கைக்கெதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்: முகத்தைசுழிக்க வைக்கும் நாகரிகமற்ற செயற்பாடுகளில் அரச குழுவினர்

இன்றைய இரு உப நிகழ்வுகளில் இலங்கைக்கெதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்: முகத்தைசுழிக்க வைக்கும் நாகரிகமற்ற செயற்பாடுகளில் அரச குழுவினர்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்ற இரு உப நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருக்கும் அரச குழுவினரின் நாகரிகம் அற்ற செயற்பாடுகள்குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் விமலின் வாய் வீரம் அம்பலம்!

அமைச்சர் விமலின் வாய் வீரம் அம்பலம்!
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு பகிரங்க அறைகூவல் விடுத்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தொடர்ந்து ஜி- மெய்ல் பாவனையை மேற்கொண்டு வருகின்றார்.

எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது – மனோ கணேசன்


எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது – மனோ கணேசன்

சிலரை பலநாள் ஏமாற்றலாம்பலரை சிலநாள் ஏமாற்றலாம்ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற பாடத்தை உலகம் அரசாங்கத்திற்கு கற்று தந்துள்ளது
இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும்,என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன்,சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. உலகம் வெறும் வாக்குறுதிகளால் அல்ல,நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது.......... read more

தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்லுமாறு கனடிய அரசு அழுத்தம்.


போருக்கு பின்னர், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கனடிய அரச மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் முக்கிய கட்டத்தினை அடைந்திருக்கும் இந்த வேளையில், கனடிய அரசின் மூன்று பேர் கொண்ட குழுவொன்று கொழும்ப செல்கிறது.

40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலையை மூடி மறைக்க முடியாது! இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுப்பெறுவது உறுதி!- ஈலின் டொனஹோ


40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலையை மூடி மறைக்க முடியாது! இலங்கைக்கு எதிரான பிரேரணை வலுப்பெறுவது உறுதி!- ஈலின் டொனஹோ


இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் படையினரால் கொல்லப்பட்டனர் என்பதை  இலங்கை அரசு மூடி மறைக்க முடியாது என அமெரிக்காவின் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா தூதுவர் ஈலின் டொனஹோ தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் வேலை நிறுத்தம்


இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை மூடப்பட்டன.சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இதில் அடைக்கப்பட்டுள்ளன.

இந்தியா துண்டு துண்டாகப் பிரியும்! அமெரிக்கா முயற்சியைக் கைவிடாது! சிங்கள இனவாதி குணதாச


ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான கண்டம் தாண்டும் வரை வடக்கில் திறப்பு விழாக்களுக்கு தடை:-


ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான  கண்டம் தாண்டும் வரை வடக்கில் திறப்பு விழாக்களுக்கு தடை:-
வடக்கிலுள்ள பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்களிலும்; எதிர்வரும் 22ம் திகதி வரை எந்தவொரு கட்டிட திறப்பு விழாக்களையோ பொது நிகழ்வுகளையோ நடத்தக்கூடாதென  வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள கண்டம் தாண்டும் வரை மௌனம் காக்க அவர் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்ததாக கூறப்படுகின்றது.

நாட்டில் மனித உரிமைகளே, சட்டங்களோ பின்பற்றப்படவில்லையாம்;சரத் என் சில்வா


நாட்டில் மனித உரிமைகளே, சட்டங்களோ பின்பற்றப்படவில்லையாம்;சரத் என் சில்வா

நாட்டில் மனித உரிமைகளோ சட்டங்களோ முறையாக பின்பற்றப்படவில்லை என ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சட்டியுள்ளார்.

களத்தில் குதித்தார் ஹிலாரி கிளிண்டன்! அதிர்ச்சியில் சிறிலங்கா


களத்தில் குதித்தார் ஹிலாரி கிளிண்டன்! அதிர்ச்சியில் சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்திப்பதற்கு, சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முயற்சி.

ஜெனீவாவில் சிங்களக் காடையர்கள்! ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டனர்!

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபையில், இன்று திங்கட்கிழமை(19-03-2012) இடம்பெற்ற உப மாநாடொன்றில், சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கை, ஐ.நா காவல்துறையினரால் அடக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டுக்குள், உட்புகுந்த 15க்கும் மேற்பட்ட சிங்களக் காடையர்கள், அடாவடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, பலரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப் படவில்லை – பிளக்



உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: இலங்கைக்கு இந்தியா கடிதம்

கொழும்பு, மார்ச்.20: 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

university and 360 deg Jaffna you can see many parts of Jaffna

A lost paradise?

University and 360 deg Jaffna you can see many parts of Jaffna : http://www.jaffna360.com/places/university-of-jaffna/

How long it will take for us to walk in Thamil Eelam with freedom, without an occupying animal force of Sri lankan regime, violating all our human rights?

இன்று தமிழீழத்தில் என்ன நடக்குது தெரியுமா..?செனிவாவை முடக்கும் சிங்கள இராணுவத்தின் சதியாட்டம்...


தயவு செய்து இந்த செவியாடல்களை அன்புடன் கேளுங்கள்.

இன்று தமிழீழத்தில் என்ன நடக்குது தெரியுமா..? எங்கள் மக்களை சிங்கள இராணுவம் அழைக்கின்றது. உங்களுக்கு நிறைய உதவி செய்கின்றோம் என்று. செனிவாவை முடக்கும் சிங்கள இராணுவத்தின் சதியாட்டம். எங்கள் மக்களை பிட்சக்காரத்தனமாக அழைக்கின்றான்.

இதை அனைவரும் பகிருங்கள்.!!