Translate

Sunday 19 June 2011

புறக்கணிப்போம் !! புறக்கணிப்போம் !! சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாம் புறக்கணிப்போம் என அறை கூவுவோம்.

எம் இனத்திற்கு   எதிரான  போரில்  ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எமது சொந்தங்களை   திட்டமிட்ட  இனப்படு கொலை செய்தும்    கற்பழிப்புச்  செய்தும்  இன்று வரை தமிழின   அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும்  இந்தக்  கொடுங்கோல்   சிறிலங்கா அரசுக்கு  எதிராகப் பொருளாதாரத்தடையை  விதிக்க  வேண்டும்  என்று  இந்திய  அரசை  வலியுறுத்தி  தமிழ்  நாடு  சட்டப்பேரவை  நிறைவேற்றிய   தீர்மானத்தைப் புலம் பெயர் தமிழ் மக்களும் தமிழக,  மலேசியாசிங்கப்பூர் மக்கள் அனைவரும் உடனடியாகநடைமுறைப் படுத்தவேண்டும்.

'' எமது நீண்ட  கால  விடுதலைப்  போராட்ட வரலாற்றில் இத்தீர்மானமானது ஒரு  பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் எமக்கு சாதகமாகப் பயன்படுத்தி  செயல்படுத்துவோம்.''



அத்தோடு சனல் 4  காணொளியை  எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி   இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்.

சிறிலங்காவிற்கு   எதிரான  பொருளாதாரத் தடையை தமிழர்களாயாகிய  நாம் உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

1.  இங்கு விற்பனைக்கு  இறக்குமதி செய்யப்படும்  சிறிலங்காவின்  உற்பத்திப்  பொருட்கள்  எதுவாயினும் அவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும்.

2. சிறிலங்காவிலிருந்து  பொருட்களை   இறக்குமதி செய்யும் மொத்த அங்காடி உரிமையாளர்கள்  அதே  பொருட்களை வேறு நாடுகளி டமிருந்து  இறக்குமதி  செய்து   அதனை  எமது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

3. தென்  ஆப்ரிக்கா  தேசிய   விடுதலைப் போராட்ட   காலத்தில்  உலக  நாடுகளில்  இயங்கும்  துறைமுகத்  தொழிற்  சங்கங்களைக் கொண்டு  எப்படி  ஏற்றுமதி   இறக்குமதி இரண்டையும்  தடுத்தனரோ அதேபோல  நாமும் சிறிலங்காவில்   இருந்து   இறக்குமதி யாகும்  உற்பத்திப் பொருட்களையும் சிறிலங்காவிற்கு ஏற்றமதியாகும் உற்பத்திப் பொருட்களையும்  துறைமுக தொழிற்சங்கங்களை    அணுகிப் போர்க்காலத்தில்  இடம்பெற்ற   இனப்படுகொலையைச் சித்திரிக்கும் சனல்  4  காணொளிப் படத்தைச் சான்றாகக்  காட்டி சிறிலங்காவில்  இருந்து   இறக்குமதியாகும் பொருட்களை கப்பல்களில்  இருந்து  இறக்கவோ ஏற்றவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ள வேண்டும். கப்பல் துறைமுகத் தொழிலாளிகளின் அனுதாபத்தை நாம் தேடவேண்டும்.
4.  நிறவெறி  பிடித்த  தென்   ஆபிரிக்க அரசை எப்படிப்  பன்னாட்டு  சமூகம் விளையாட்டுத்துறை உட்பட அனைத்துத்  துறைகளிலும் தனிமைபடுத்தியதோ அதே போல்,  தமிழினப்படுகொலை  செய்த   சிறிலங்காவையும்  பன்னாட்டுச்  சமூகத்திடமிருந்து  நாம் தனிமைப் படுத்த வேண்டும்.

5. லிபியாசிரியா போன்ற நாடுகளை எப்படி வல்லரசு நாடுகள்  தண்டிக்கின்றதோ அதே போன்று சிறிலங்காவையும் தண்டிக்கவைக்கவேண்டும். இதற்கான எமது  பரப்புரையை    உலகளாவிய மட்டத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும்.  முடியாதது என்று ஒன்றும் இல்லை.

6. எமது வெளிநாட்டுப்  பறப்புக்களை  சிறிலங்கா விமான மூலம்  மேற்கொள்வதை நாம் நிறுத்த வேண்டும்.  
7. சனல் காணொளி   மட்டும் எமது மக்கள் மீது  கட்டவிழ்த்து   விடப்பட்ட இனப் படுகொலையை  உலகம் முழுவதும்  பரப்ப முடியாது. ஆகவே நாமும்  இந்தப்  பரப்புரையை உலகம் முழுவதும்  சனல் காணொளியைக் காட்ட வழிவகை செய்ய வேண்டும்.  அந்தந்த நாட்டு அரசில்வாதிகளுக்கு இந்த சனல்  காணொளியை  கொடுத்து எம்மவர்களின்  இன அழிப்பைப் பார்வையிடக் கேட்கவேண்டும்.

8. அந்தந்த நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களோடு   நாம்  தொடர்பு கொண்டு னல் காணொளியை மறு ஒளிபரப்பக் கோர வேண்டும். கீழ்க்காணும்   இலக்கங்களுடன்     தொடர்பு கொண்டு  கனடியர்களுக்கு  எம்   இனத்தின் மீது சிறிலங்கா மேற்கொண்ட இந்தக்  கொடிய  இன  ஒழிப்பைப் பார்வையிட  ஒரு  சந்தர்ப்பம்    கொடுக்க வேண்டும்  எனக் கேட்க வேண்டும் ( கனடா).

RADIO

CBC                       416.205.6301            
680 News                416 872 6397            
AM 640                     416.646.8640            
CFRB 1010               416.924.6717            

TV

CBC         426.205.6309
CTV                     416.384.5000            

Sun Tv                     416.601.0010            
City Tv                    416.599.2489            
CP 24                      416.384.2400            


PRINT

Toronto Star                     416.869.4301            
National Post                    416.386.2600            
Toronto Sun                      416.947.2211            
G & M                             416.585.5000      

அலை அலையாக தமிழ்   மக்கழாகிய நீங்கள் தொடர்பு கொண்டால் நிசிசயமாக  இவர்கள் மறு ஒளி  ஒலி  பரப்பவார்கள்   இதில் எந்த அசிசமும்   இல்லை.  ஆகவே தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்  மறு  ஒளி பரப்ப கொருங்கள் இந்த நாட்டு மக்களும் இந்த கானைலியை பார்வையிட்டு எம்து அரசிற்கு அனுதிதங்களை குடக்கட்டும்.   

9. நாம் வாழும் நாடுகளின்  அரசியல் தலைவர்கள்,  மத்திய,  மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆகியோரை சந்தித்து சிறிலங்காவிற்கு  எதிரான  பொருளாதாரத் தடையைக்  கொண்டு வருமாறு வற்புறுத்த  வேண்டும். நாங்கள் எமது தொகுதி அரசியல்வாதிகளுக்கு  இந்த சனல் கானேளியை பார்வையிட  தாள்மையாக கேட்டுக் கேள்ளுங்கள்.


10. இலங்கையில் வாழும்  சிங்களவர்களும் தமிழர்களும்  இனத்தால்பேசும் மொழியால்சமயத்தால்,  பண்பாட்டால்,   வரலாற்றால் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை உலக த்தின் கவனத்துக்குக்  கொண்டு வர  வேண் டும்.
இப் பொராட்டத்தில்  புலம்பெயர்  தமிழர்கள் எவரும்  தனிப்பட்டமுறையில்  பாதிக் கப்படவோ   நஸ்டப்படவோ  கூடாது  அது வாடிக்ழகயாளர்களாக  இருக்கட்டும் மொத்த வியாபாரிகளாக இருக்கட்டும் சில்லறை வியாபாரிகளாக  இரக்கட்டும்.

மொத்த  வியாபாரிகள்  இலங்கையிலிருந்து  இறக்குமதி செய்யும் பொருட்களை வேறு நாடு களில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்  இதற்கு நாடு  கடந்த  தமிழீழ  அரசாங்கம் உதவ வேண்டும். நாடு  கடந்த தமிழீழ  அரசிற்கு நாங்கள்  உதவ வேண்டும்.
வாடிக்கையாளர்களெ தயவு செய்து உங்கள்  வியாபாரிகளிடம்  சொல்லுங்கள்  இலங்கையி  இருந்து  பொருட்களை  இறக்கமதி செய்ய வேண்டாம் என அழுத்தி கூறுங்கள்.
இனவாத  இரத்த கறை படிந்த பொருட்களை புறக்கணிப்போம்!! புறக்கணிப்போம்!!  இந்த சந்தாப்பம்  இனிமேல் எமக்கு கிடைக்குமோ  தெரியாது ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் இளக்காது பயன்படுத்துவோம்.
புலம்  பெயர்  தமிழாகள் நாங்கள் தான் எம் இன  விடுதலையையும்  எம்  மக்களையும் காப்பாற்றவேண்டும்.  ஒருவர்  மீது  ஒருவர் நாம் கல் வீசிவிட்டால்  எமக்கு  விடுதலை கிடைக்குமா?  எம்  மண்னின் மீட்புக்காக  தம்  உயிரை அர்ப்பணித்த   எம் மாவீரர்களை ஒரு கணம் சிந்தியுங்கள் ...
இந்ந போராட்டத்தின்  வெற்றியிற்கு வாடிக் கையாளர்களின்  வியாபாரிகளின்  மொத்த வியாபாரிகளின் ஒத்துளைப்பும்  இன்றி  இது சாத்தியமற்றது.
நாம் எல்லோரும் தமிழனாய் ஒன்றிணைந்து எமது கோபதாபங்களை ஓரம்கட்டி ஒருமித்து போராருவோம்.

சிந்தியுங்கள் செயற்படங்கள்.
 
நன்றி
ஜயபாலன்

No comments:

Post a Comment