Translate

Tuesday 6 November 2012

அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் நாட்டம் காட்டி வருகின்றது – பைனான்சியல் டைம்ஸ்


அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் நாட்டம் காட்டி வருகின்றது – பைனான்சியல் டைம்ஸ்
 அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக லண்டனிலிருந்து பிரசூரமாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வெற்று உறுதிமொழிகளை நம்புவதை நிறுத்த வேண்டும்


திருகோணமலையில் 5 பள்ளி மாணவர்களின் படுகொலையும் ஏசிஎப் தன்னார்வ பணியாளர்களின் படுகொலையும் நடந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்கிறது அம்னெஸ்டி இண்டர்நேஷனல்.

நீதிகோரி லண்டனில் தமிழ் உணர்வாளர் மாநாடு


இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு நாளை புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.

வடக்கில் இராணுவத்தை நீக்க வேண்டும் அமெரிக்க தூதுவர்


வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் நடவடிக்கைகளிலிருந்து இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை விடயத்தில் ஐ.நா.பாராமுகமாக உள்ளதா? கேள்வியெழுப்புகிறது இன்னர் சிற்ரி பிரஸ்

ருவண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தீர்வு கண்ட ஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு காணவில்லை என இன்னர் சிற்ரி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ருவாண்டாவில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு எதிராக அந்த நாட்டு அரசு மீது நடவடிக்கை எடுத்த ஐ. நா சபையால் ஏன் இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு காணவில்லை என  இன்னர் சிற்ரி பிரஸ் ஐ.நா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது.

முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளன

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளிகள் காணாமல் போகின்ற சம்பவங்கள் வடக்கில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வன்னியி;ல் சுமார் ஏழு இளைஞர்கள் ஓரே சந்தர்ப்பத்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பை அண்டிய பகுதியொன்றில் அவர்கள் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்று கூடியிருந்த இடமொன்றில் வைத்து படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடித்து செல்லப்பட்டதாக அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன. அச்சங்காரணமாக அவர்கள் பிடித்து செல்லப்பட்டமை தொடர்பாக குடும்பத்தவர்கள் புகார் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

சர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான் பயப்பட ஆரம்பித்துள்ளது -றிக் டிக்ஸ்ரா

Posted Imageசர்வதேசத்தின் பலத்தைக் கண்டு இலங்கை தற்போதுதான்  பயப்பட ஆரம்பித்துள்ளது என இலங்கைக்கான கனேடிய நாடாளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் போனவர்களிற்கான பதிலைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் உள்ள அழுத்தத்தை அது இப்போது தான் புரிந்து கொண்டுள்ளது.

பிரித்தானிய மாநாட்டில் இன அழிப்பை முன்நிறுத்துமாறு தமிழர் பேரவைக்கு த.தே.ம.முன்னணி யோசனை


எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில அடிப்படைகளை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பான மாற்று யோசனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களால் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் நடாத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகவிடுதியில் தங்கிக் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களை இனவாத அடிப்படையில் 27.10.2012 அன்று இரு தமிழ் மாணவர்களையும் 31.10.2012 அன்று சில தமிழ் மாணவர்களையும் சிங்கள மாணவர்கள் உடல்ரீதியாக தாக்கியுள்ளார்கள். தமிழ் மாணவர்கள் தம்மீது நடாத்தப்பட்ட தாங்குதலை எழுத்து மூலம்   கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பியும் சிங்கள மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆகையால் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத்தவறும் நீதியரசர்கள் தியவன்ன குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர்; சரத் என் சில்வா

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத் தவறும் பிரதம நீதியரசர்கள் நாடாளுமன்றிற்கு அருகாமையில் உள்ள தியவன்ன ஓய குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம்:ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி


இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமை கமிஷனில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார். 

ஐ.நா மனித உரிமைச்சபை : சுதந்திர தமிழீழம் நோக்கிய நீதிக்கான சர்வதேச பரப்புரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !



சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்காவினை அம்பலபடுத்தவும், தமிழர்களின் நியாயப்பாட்டினை வலியுறுத்தவும் கிடைத்த இன்னுமொரு இராஜதந்திரக்களமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்கியிருந்தது.

ஐநா மனித உரிமைகள் ஆணையம்: இலங்கை ஏற்றதும் மறுத்ததும்


இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் 2008 ஆம் ஆண்டு மீளாய்வு செய்யப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான மோதல் தீவிரமடையத் துவங்கியிருந்த நேரம் அது.................. read more

வெளிநாட்டுத் தூதுவர்களாக மூத்த இராணுவ அதிகாரிகள்; தமிழரை அழித்ததற்கு பரிசு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், முக்கிய பங்காற்றிய இலங்கை இராணுவத் தளபதிகள் மூவர், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாக  இரண்டாம் நிலைப் பதவிகளில் அமர்த்தப்படவுள்ளனர்.

தமிழர் இனப்படுகொலைக்கு நீதிகோரி லண்டனில் தமிழ் உணர்வாளர் மாநாடு

news
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவிவிடப்பட இனப்படுகொலை ஓர் சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக விசாரணைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் மாநாடு நாளை புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.
இதனை பிரிட்டன் தமிழர் பேரவையும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். தாயகத்துத் தமிழர் பிரதிநிதிகள், தமிழக மக்கள் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனத் தமிழ் கூறும் நல் உலகின் பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜெனிவாவில் இந்தியா குத்துக்கரணம்!


ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது.