Translate

Saturday 23 July 2011

இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: பழ.நெடுமாறன்


இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: பழ.நெடுமாறன்


சென்னை, ஜூலை 23: இலங்கைக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:.......READ MORE

உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில்TNA அமோக வெற்றி –


உள்ளுராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில்TNA அமோக வெற்றி –

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மகிந்த ஏற்றுக்கொண்டு, இனப்பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைக்காதவரை, சர்வதேச அழுத்தங்களிலிருந்து அவரால் இனியும் தப்பிக்க முடியாது............. READ MORE 

யுத்த வலய தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர் :


யுத்த வலய தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர் :

யுத்தம் இடம்பெற்ற வலயத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை விடவும், உரிமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
 
கூடுதலான சுயாட்சி அதிகாரங்களையும், உரிமைகளையுமே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வடக்கில் அதிகளவு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது........... READ MORE 

வல்வெட்டித்துறை முதல் பலபிரதேச சபைகளைக் கைப்பற்றியது த.தே.கூட்டமைப்பு!

வல்வெட்டித்துறை முதல் பலபிரதேச சபைகளைக் கைப்பற்றியது த.தே.கூட்டமைப்பு!



நடைபெற்ற உள்ளுராட்சி சபை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாக தெரியவருகின்றது.
உத்தியோக ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும், ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும் சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
கோப்பாய் -........... READ MORE

தென்மேற்கு லண்டன் ரூட்டிங் பகுதியில் நாளை நா.த.அரசாங்கப் பிரதினிதிகள் மக்களுடனான சந்திப்பு!

ரூட்டிங் பகுதியில் 180-186 Upper Tooting Road,Tooting London SW177EJ , எனும் முகவரியில் அமைந்துள்ள சிவயோகம் மண்டபத்தில் இச் சந்திப்பு நாளை 24-07-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ளது........... READ MORE 

லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நிகழ்வுகள் !


 லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நிகழ்வுகள் !
கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு, இன்று பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்பாக தமிழர்கள் மெளனமான நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு 83 ஜூலைக் கலவரத்தில் உயிர்நீத்த எமது தாயக உறவுகளை நினைவுகூர்ந்தனர். மெழுகு திரிகளை ஏற்றி மெளனமாக அவர்கள் இந் நிகழ்வுகளை நிகழ்த்தியதாக அதிர்வு இணையம் அறிகிறது.............. READ MORE 

லண்டனில் ஓடும் தமிழீழ பஸ்: படம் இணைப்பு !


லண்டனில் ஓடும் தமிழீழ பஸ்: படம் இணைப்பு !


தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பெரி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த புகைப்படங்களை எடுத்துள்ளோம். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:............. READ MORE 

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி -



தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி -


 தமிழரசுக் கட்சி வெற்றி!

Thursday 21 July 2011

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்குங்கள்! தமிழீழச் சொந்தங்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள்!

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்குங்கள்! தமிழீழச் சொந்தங்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள்!

இலங்கையில் சூலை 23 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே கும்பலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழர்களின் வாக்குகளை இராஜபக்சே கும்பல் அச்சுறுத்திப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டும் தமக்கு ஆதரவான ஒற்றுக் குழுக்களைக் கொண்டும் தமிழ் மக்களை மிரட்டி வெற்றி வாகை சூடிவிடலாம் எனக் கணக்குப்போட்டுச் செயல்பட்டு வருகின்றனர்............ read more

ஒவ்வரு தமிழனும் கேட்க வேணும் .. a roaring voice from Kilinochchi !

ஒவ்வரு தமிழனும் கேட்க வேணும் .. 
a roaring voice from Kilinochchi !

 

மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ குழுவினர் உடனடியாக நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.............. read more  

பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்!


மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும்  செய்தி கூறுகின்து.............. read more 

யாழ். புங்குடுதீவுக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!


யாழ். புங்குடுதீவுக் கடலில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!   

யாழ். புங்குடுதீவுப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நல்லதம்பி கிருபானந்தன் (வயது 55) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பீரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

''முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்'' -- த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது.


''முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்'' -- த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது.     


''முள்ளிவாய்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் ''என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தைவெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் த.தே.கூட்டமைப்பு சாவகச்சேரி அமைப்பாளர் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவபாலன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.............. read more 

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: நாம் தமிழர் வேண்டுகோள்




FILE
இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குத் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ........... read more 

வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில் _

வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில் _



  வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார். ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ........ read more  

உண்மைகளை அமைச்சர்கள் வீரவன்சவும் வாசுதேவவும் அம்பலப்படுத்தியுள்ளனர்: மனோ

உண்மைகளை அமைச்சர்கள் வீரவன்சவும் வாசுதேவவும் அம்பலப்படுத்தியுள்ளனர்: மனோ

  சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காகவே தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு தேவை என்பதை அமைச்சர் விமல் வீரவன்சவும் இறுதி யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதையும் வடக்கில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதையும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் பகிரங்கப்படுத்தியுள்ளார்கள். .............  read more 

கூட்டமைப்பு வேட்பாளர்கள் நால்வர் ஆயுதமுனையில் அச்சுறுத்தல் _

கூட்டமைப்பு வேட்பாளர்கள் நால்வர் ஆயுதமுனையில் அச்சுறுத்தல் _

  கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நான்கு வேட்பாளர்கள் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்றால் வெற்றிலை சின்னத்தைக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொள்ள வேண்டுமென்றும் மிரட்டப்பட்டுள்ளனர்............ read more   

"இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி

"இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி?
சென்னை: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார்................. read more  

சிங்களத்தின் கொடும்கரம்: வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?



சிங்களத்தின் கொடும்கரம்:
வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?

இந்தத் தேர்தலில் பாரிய வெற்றி ஒன்றை பெற்று சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கு அரசாங்கமும் அதனோடு இனைந்துள்ள ஈபிடிபியும் முயற்சிக்கின்றன. தேர்தலில் வெற்றியை பெறுவதற்கு கட்சிகள் விரும்புவதும் அதற்கு முயற்சிகள் எடுப்பது ஒன்றும் விமர்சனத்துக்குரிய விடயம் இல்லை............ read more 

போர்க்குற்ற விசாரணையில்லையேல் இலங்கைக்கான உதவி ரத்து : அமெரிக்கா

போர்க்குற்ற விசாரணையில்லையேல் இலங்கைக்கான உதவி ரத்து : அமெரிக்கா

இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டு போர்க்குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கான உதவிகளை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன............ read more 

ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம் - ஐ.தே.க


ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம் - ஐ.தே.க

தேசியப் பிரச்சினை மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் புத்தாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹிலரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விவகாரங்களை அரசாங்கம் தந்திரோபாயமாக அணுக வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறை மற்றும் ஆவேசத்தினால் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.......... read more  

அரசியல் தீர்வு என்ற வகையில் ராஜபக்ஷ அரசு உண்மையில் எதனை முன்வைக்கிறது? பாக்கியசோதி சரவணமுத்து


அரசியல் தீர்வு என்ற வகையில் ராஜபக்ஷ அரசு உண்மையில் எதனை முன்வைக்கிறது? பாக்கியசோதி சரவணமுத்து 

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கென இன்னுமொரு மக்களவைத் தெரிவுக்குழு வரவிருக்கிறது. முன்பு பல செயற்குழுக்கள், புகழ்பெற்ற மங்கள முனசிங்கா ஆணைக்குழு அண்மைக் காலத்திலான சர்வகட்சி பிரதிநிதிகள் மகாநாடு (APRC) எனப் பல குழுக்களையும் வைத்து பார்க்கும் பொழுது இன்னுமொரு தெரிவுக்குழு ஏன் என்ற எளிமையான கேள்வி எழுகிறது. இந்தக் குழுக்கள் எல்லாமே மிகுந்த முயற்சி எடுத்து அறிக்கைகளை தந்தன. அத்தோடு விடயம் முடிந்து போனது. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் இடம் பெறுகின்றன. இவை தொடருமா? அப்படித் தொடர்ந்தால், முன்மொழியப்பட்டுள்ள தெரிவுக் குழுவின் கலந்தாலோசிப்புகளோடு என்ன வகையான உறவை அவை கொண்டிருக்கும். ............ read more 

மகிந்தாவின் கூட்டங்களில் மக்கள் வேண்டா வெறுப்புடன் photo in

இலங்கை கிட்லர் தமிழர் தேசத்தில் வைத்து தமிழர்களை அழித்த நிலையில்,
அதே மண்ணில் வந்து தேர்தல் வாக்கு பிச்சை கேட்க தமிழர்களை மிரட்டி அழைத்து சென்றனர் .
 
அங்கே வேண்டா வெறுப்பாக எம் தமிழ் உறவுகள் இருப்பதனையும்
சிலர் நித்திரை கொள்வதனையும்  படத்தில் காணலாம் .
அதேவேளை காவல்துறை மற்றும் இராணுவத்தினரின்
முற்றுகை காவலை கீழ் வரும் படத்தினை உற்று பாருங்கள் உலக தமிழ் மக்களே நிலைமை புரியும் .
 
இது தான் இன்றைய மகிந்தா சிந்தனை ..!........ read more 

கருணாவின் -தூசண மழையில் நனைந்தது யாழ் போதனா வைத்தியசாலை‏

நேற்று அதிகாலை வெறியில் வந்த கருணாவால் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் தாங்கமுடியாத தூசண வார்த்தைகளால் அர்ச்சனை செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது
அவசர அம்புலன்ஸ் சேவையின் வழமையான திருவிளையாடல் களில் ஒன்று .. யாழ்பிரந்தியத்திற்கு தனிச்சிறப்பாக இயங்கிவரும் நூற்றிப்பத்து அதாவது வண் வண் சீரோ அம்புலன்ஸ் தனக்குரிய பாணியில் மக்களின் அவசர அழைப்பு களை கணக்கெடுக்காது தொலைபேசி அழைப்பை ரிசீவ் பண்ணாது விடும் உன்னத மனிதநேயப்பணியை  புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட கர்ப்பவதியின் அவசரநிலைக்கான அழைப்பை புறக்கணித்ததால் யாழ் முனியப்பர் கோவிலடியிற்கு அருகில் உள்ள உல்லாச விடுதியில் உல்லாசமாக இருந்த  கருணாவின் காதுக்கு உறவுக்காரர் போட்டுக்கொடுத்ததால் மது மாது வெறியில் இருந்த அம்மான் கண்டதை எல்லாம் கண்டபடி கொட்டித்தீர்த்தார்............. read more

சிறிலங்காவை புறக்கணிப்போம்: தமிழகத்தில் தீவீரமடையும் விழிப்பூட்டல் பரப்புரை

சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டம், புலம்பெயர் தமிழர்களால் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுப்பு பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது............ read more 

யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !


யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !
இனப்படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்த மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையில் போட்டியிடும் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு தமது பலத்தை வெளிப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது........... read more

ஈழத்தில் அரசியல் வலிமையை வெளிப்படுத்த த.தே. கூ. மக்கதான வெற்றிபெற வேண்டும்.-திருமாவளவன்

ஈழத்தில் அரசியல் வலிமையை வெளிப்படுத்த த.தே. கூ. மக்கதான வெற்றிபெற வேண்டும்.-திருமாவளவன்


இலங்கையில் ஜூலை 23 அன்று நடைபெறவுள்ள உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழர்களின் வாக்குகளை ராஜபக்சே கும்பல் அச்சுறுத்திப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டும் தமக்கு ஆதரவான ஒட்டுக் குழுக்களைக் கொண்டும் தமிழ் மக்களை மிரட்டி வெற்றி வாகை சூடிவிடலாம் எனக் கணக்குப் போட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.............. read more 

சான்ஸ் கிடைத்தால் மலசல அறையைக் கூட ரிப்பன் கட்டி திறந்திருப்பார்களோ ?


சான்ஸ் கிடைத்தால் மலசல அறையைக் கூட ரிப்பன் கட்டி திறந்திருப்பார்களோ ?


உங்களுக்கு ஒரு விடையம் செல்லவேண்டும். தற்போதுவரை யாழில் உள்ள பாடசாலை அதிபர்கள், கைகளில் பேனாவையும் பேப்பரையும் கொண்டு திரியாமல் ரிப்பனுன் கத்திரிக்கோலுமாக அலையவேண்டி உள்ளதாம் ! ஏன் என்று கேட்கிறீர்களா வாசியுங்கள்.............. read more 

சிங்கள் அரசிற்கு தமிழன் என்றும் தன்மானம் உள்ளவன் என்பதை முரசறையுங்கள்! - சிறீதரன் எம்.பி அவசர வேண்டுகோள்


போரின் வலியில், நலிந்து போயுள்ள மக்கள் மீது, அழுத்தங்களை பிரயோகித்து, அபிவிருத்தி எனும் மாய வலை விரித்து அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்ய சிறிலங்கா அரசு தரப்பு முனைவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் யாழ் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் வழிகாட்ட வேண்டிய தேவையை வலியுறுத்தியும், அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதில் :............. read more 

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்த

மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம்............ read more  

இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை

இந்த விதவைகள் விசேடமாக இளம் விதவைகள் எதிர்கொள்ளுவதும்,வெகு அபூர்வமாகப் பேசப்படுவதுமான மற்றொரு விடயம். அவர்கள் விதவைகளானபடியால் அவர்களது உடற்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே தங்கி விடுகின்றன.இது எவ்வளவு தீவிரமான விடயம் என்பதை எங்களில் அநேகர் சிந்திப்பதேயில்லை.இந்தப் பாலியல் பசிக்கு ஆளாகும் விதவைப் பெண்கள் தங்கள் இயற்கைத் தேவைகளை போக்குவதற்காக வேறு திசைதிருப்பக்கூடிய மார்க்கங்களோ அல்லது பொழுதுபோக்குகளோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என எவ்வாறு நாங்கள் எதிர்பார்க்க முடியும்?......... read more 

Wednesday 20 July 2011

இன்ஸ்பெக்டரான சீமான்! "உச்சிதனை முகர்ந்தால்" பாடல் வெளியீட்டு விழா (காணொளி இணைப்பு)

ஈழம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு புகழேந்தி தங்கராஜை அறிமுகப்படுத்த தேவையில்லை.

இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த நேரத்திலெல்லாம் தமிழகத்தில் ரத்த கண்ணீ­ர் வடித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர்களின் படையில் முதல் ஆளாக நிற்பவர் இவர்............. read more 

போர்க்குற்றவாளி மகிந்தரோடு மேடையில் ஒன்றாகத் தோன்றவிருக்கும் 3 கோமாளிகள்!

போர்க்குற்றவாளி மகிந்தரோடு மேடையில் ஒன்றாகத் தோன்றவிருக்கும் 3 கோமாளிகள்!

இன்று (20.07.2011) கிளிநொச்சி மண்ணில் நடைபெற உள்ள மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு தமிழக பின்னிப் பாடகர்களான மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற அதிர்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள் கிளிநொச்சி செல்லவுள்ளதாகவும், இன்று இவர்களின் இசைக்கச்சேரி நடைபெறும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தர் கலந்துகொள்ளும் இவ்விழாவின் மேடையில் இவர்களும் தோன்றி பாடுவது மட்டுமல்லாது, மகிந்தருக்கும் வாக்குப் போடுமாறு இவர்கள் கோரவுள்ளனராம்.

Tuesday 19 July 2011

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு ராஜபக்சே தலைமையில் இருக்கும் சிங்கள இனவெறி அரசால் நடந்தேறியது.

மதிப்பிற்குரிய பாடகர்கள் மனோ, கிருஷ் மற்றும் பாடகி சுசித்ரா அவர்களுக்கு,

தமிழ்நாட்டில் திறமையானவர்களுக்கு என்றும் மரியாதையையும் இடமும் உண்டு என்ற இலக்கணத்திற்கேற்ப தாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் மரியாதையுடனும், செல்வ செழிப்புடனும் வலம் வருகிறீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் நாடுகளுக்கு உங்களை அழைத்து உங்கள் பாடல்களை விருப்பத்துடன் கேட்டு மகிழ்கிறார்கள். இப்படி உங்களை உயர்ந்த இடத்தில வைக்கும் தமிழர்களின் விருப்பத்திற்கும் எண்ணத்திற்கும் மாறாக நடக்கிறீர்கள் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு ராஜபக்சே தலைமையில் இருக்கும் சிங்கள இனவெறி அரசால் நடந்தேறியது.

மஹிந்தரை பயன்படுத்தி பிரபாகரனைப் பழிவாங்கிய சோனியா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பழிக்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்பதில் சோனியா காந்தி மிகவும் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார் என்று பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார் இந்தியாவின் ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான சாம் ராஜப்பா.

இந்தியாவில் இருந்து வெளியாகின்ற பிரபல பத்திரிகைகளில் ஒன்றான The Statesman இல் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே இத்தகவலை தந்து உள்ளார். ...........  READ MORE 



மஹிந்தரை பயன்படுத்தி பிரபாகரனைப் பழிவாங்கிய சோனியா!

வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வரும் சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது - இதயச்சந்திரன்

வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வரும் சிங்களத்தின் கரங்களில் தமிழ் தேசிய அரசியல் செல்லக் கூடாது இதயச்சந்திரன்
நிரந்தர தீர்விற்கான தேர்தல் அல்ல இது.
ஆயினும் ,சிங்களத்தைப் பொறுத்தவரை, தாயக அரசியல் தளத்தினை கையகப்படுத்த முனையும் தேர்தலே இது..
இன்று...வெற்றிலைச் சின்னத்தோடு வலம்வருகிறது சிங்களம். வேட்டி, சேலைகள் சகிதம் வாக்கு வேட்டைக்கு வருகிறது. நாயின் தலைகளை வாசலில் வீசி, அச்சுறுத்தியபடி வருகிறது பேரினவாதம். வெற்றிலைக்குப் புள்ளடி போட்டால், 'அபிவிருத்தி' செய்வோமென பேரம்பேசுகிறது.

அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்: விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை

அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்: விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை

Wickramabahu_karunarathnaஇனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும்.............. read more  

CNN தொலைக்காட்சி இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்யுமா? - ஆய்வு

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அரச நிர்வாகக் கட்டிடத்தொகுதியில் சென்ற வாரம் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை அமெரிக்க செனட்சபை உறுப்பினர்களும் மனித உரிமை காப்பக முக்கியஸ்தர்களும் அரசின் படமாளிகையில் பார்த்தனர்.............. read more  

உள்ளூராட்சிச் சபை தேர்தல் உணர்த்தும் செய்தி என்ன? - இதயச்சந்திரன்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாய்ச் சின்னத்தில் யாராவது போட்டியிடு கிறார்களோவென்கிற சந்தேகம் எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீட்டு வாசல் கதவுகளில் நாய்களின் தலைகளை தொங்கவிடுவதில் சிலர் அக்கறை கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.............. read more 

தனி மனித உரிமையையும் வேட்டையாடும் சிங்களம்!

தனி மனித உரிமையையும் வேட்டையாடும் சிங்களம்!

இன்று தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் சொல்லமுடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதற்கு சிங்கள அரசும் பூரண ஆதரவை வழங்கிவருகின்றது. அதாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல, இராணுவத்தினரின் கைகளில் தமிழ் மக்களை ஒப்படைத்துள்ளது................... read more 

கிளிநொச்சியில் 60 சதவீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை _


கிளிநொச்சியில் 
60 சதவீதமானோருக்கு 
தேசிய அடையாள அட்டை இல்லை _



  கிளிநொச்சியில் 60 சதவீதத்தினருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லயெனத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பிற்கு அடையாள அட்டைகள் அவசியமானது.

ஆனால் 60 சதவீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை. இதனால் வாக்களிப்பில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். _