Translate

Saturday 5 January 2013

செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன?



ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

கிரகங்கள் குறித்த புராண கதைகள் 
இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

ஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்


ஈழ மண்ணில் இந்தியப் படைகள்: (அவலங்களின் அத்தியாயங்கள்-49): நிராஜ் டேவிட்

இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து வருகின்றது.

ஸ்ரீலங்காப் படைகள் 1987ம் ஆண்டில் மேற்கொண்டிருந்த "ஒப்பரரேசன் லிபரேசன்" நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் சிங்களப் படைகளிடம் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்தியா தனது படைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக சிலர் கூறுகின்றார்கள்.

ஸ்ரீலங்காப் படைகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தையும், தமிழர் வாழும் மற்றப்பகுதிகளையும் விடுவித்து தமிழ் அமைப்புக்களிடம் வழங்குவதற்கே இந்தியப்படைகள் இலங்கை வந்ததாக வேறு சிலர் கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைப் படைகளுக்கு பயிற்சி அளிக்கவென்று இலங்கைக்குள் நுழைந்திருந்த இஸ்ரேலிய “மொஸாட்”  மற்றும் பாக்கிஸ்தான் இராணுவத்தினரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், திருகோணமலைத் துறைமுகம் அமெரிக்காவின் கைகளில் விழுந்துவிடாமல் தடுக்கவுமே இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

இலங்கையின் தென்பகுதியில் எழுந்த புரட்சியை அடக்குவதற்கு இந்தியப் படைகளின் உதவியை ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர். கோரி இருந்ததன் காரணமாகவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பபட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

மேற்கூறப்படுகின்ற கருத்துக்களில் காணப்படுகின்ற உண்மைத்தன்மை, அல்லது இவை பற்றி எழுப்பப்படுகின்ற சந்தேகங்கள் போன்றன எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்தியப் படைகளின் இலங்கை வருகைக்கான காரணங்களில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அழுல்படுத்துவது” என்பதும் பிரதானமாக இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாக அமைந்திருந்த இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதுடன், இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த புலிகளைப் பலவீனப்படுத்துவதும் இந்தியப் படைகளது இலங்கை வருகையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்த “புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவது” என்கின்ற சரத்தை அழுல்படுத்தவே இந்தியப்படைகள் அவசரஅவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில், தமிழர்களின் நலன்களை சிறிதும் கருத்திலெடுக்காது, அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசுடன் இந்தியா கைச்சாத்திட்டுவிட்டு, “தமிழர்களைக் காப்பாற்ற” தனது படைகளை அது அனுப்பிவைத்ததாக கூறுவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அதேபோன்று, இலங்கையின் தென் பகுதியில் ஏற்பட்டிருந்த சிங்கள இளைஞர்களின் புரட்சியை அடக்குவதற்குத்தான் இந்தியப்படைகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டன என்று அப்பொழுது ஜே.ஆர் தெரிவித்திருந்தது உண்மையானால், இந்தியப்படைகள் இலங்கையின் தென்பகுதிக்குத்தான் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அவை வரவழைக்கப்பட்டிருந்தன என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

“ஒப்பந்தத்தை அமுல்படுத்துகின்றோம் பேர்வழிகள்” என்று கூறிக்கொண்டு, புலிகளை நிராயுதயாணிகள் ஆக்கவே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது. பின்னர் புலிகள் மீது இந்தியப்படைகள் தொடுத்திருந்த யுத்தம் இதனை உறுதிப்படுத்தியது.

இவற்றை விட, இலங்கை வந்த இந்தியப்படைகளின் சில உயர் அதிகாரிகளும், இந்தியப் படைகளின் வருகையுடன் சம்பந்தப்பட்ட சில இந்திய இராஜதந்திரிகளும், பின்நாட்களில் வெளியிட்ட சில கருத்துக்களும், இவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்திருந்தன.

இலங்கைக்கு உதவவே இந்தியப் படைகள்

இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு 1988ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொறுப்பாக இருந்த லேப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் அவர்கள் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியின்போது, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்தியப்படைகளுக்கு என்றுமே இருந்தது கிடையாது என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.

“ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக இந்தியப்படைகளின் பலத்தைப் பிரயோகிக்கும் நோக்கம் எங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. அத்தோடு இலங்கையையோ அல்லது அதன் ஒரு பகுதியையோகூட கைப்பற்றும் எண்ணம் இந்தியப்படைகளுக்கு இருந்தது கிடையாது. அப்படியான ஒரு செயலை இந்தயாவில் உள்ள எவருமே விரும்பியிருக்கமாட்டார்கள் என்பதும் நிச்சயம்” என்று அந்த இந்திய இராணுவ உயரதிகாரி அண்மையில் வழங்கியிருந்த அந்தச் செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவராக அப்பொழுது கடமையாற்றியவரும், புலிகள் மீது இந்தியப் படைகளை ஏவிவிடுவதில் முதன்மையானவராக புலிகளாலும், இந்திய இராணுவ அதிகாரிகளாலும் குற்றம்சாட்டப்பட்டவருமான ஜே.என்.தீட்ஷித் அவர்கள் பின்நாட்களில் வழங்கியிருந்த செவ்வி ஒன்றில், “ஸ்ரீலங்காவின் ஜணாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அழைப்பின் பெயரிலேயே இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக” குறிப்பிட்டிருந்தார்.

ஜோஷி ஜோசப் என்ற பிரபல இந்தியப் பத்திரிகையாளருக்கு அவர்  வழங்கியிருந்த அந்தச் செவ்வியில், “இலங்கைக்கு எமது படைகளை அனுப்புவதற்கு உண்மையிலேயே நாங்கள் விரும்பவில்லை. இலங்கைக்குப் படைகளை அனுப்புவது என்பது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு அம்சமும் அல்ல.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினமான 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் திகதி காலைவரை இந்தியப்படைகளை இலங்கைக்கு அணுப்பும் எண்ணம் எமக்கு இருக்கவேயில்லை. இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவது இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த மிகவும் அவசியம் என்று ஜே.ஆர். தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால்தான், படைகளை அனுப்ப ராஜீவ் காந்தி சம்மதம் தெரிவித்தார். இதற்கான எழுத்து மூல கோரிக்கையையும் ஜே.ஆர்.எமக்கு அனுப்பிவைத்தார்|| என்று தீட்ஷித் தெரிவித்தார்.

மேற்கூறப்பட்ட இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டவர்கள் வேறு யாரும் அல்ல. இந்தியப் படைகள் இலங்கையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலும் பிரதான பங்குவகித்த அதி உயர் அதிகாரிகளே இவர்கள்.

இவர்களின் கூற்றுக்களில் இருந்து ஒரு விடயம் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது, ஸ்ரீலங்கா அரசு மீதோ அல்லது ஸ்ரீலங்காப் படைகள் மீதோ நிர்ப்பந்தம் செலுத்தும் நோக்கத்துடன் இந்தியப்படைகள் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை - என்ற விடயம் மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

அப்படியானால் எதற்காக இந்தியப்படைகள் ஈழமண்ணில் வந்திறங்கின?

இதற்கான பதிலையும் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அதி உயர் அதிகாரிகளே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இந்தியப் படைகள் ஈழ மண்ணில் கால்பதிக்கும் முன்னதாகவே, அங்கு புலிகளை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், திட்டமும் அவர்களிடம் இருந்தன என்பதை அந்த இந்திய அதிகாரிகளே பல்வேறு சந்தர்ப்பங்களில் பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

பிரபாகரனை கைப்பற்றிவிடுவோம்.

இலங்கையில் இந்தியப் படைகளின் நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் பங்குபற்றிய கேணல் ஜோன் டெய்லர் என்ற முதன்மை நிலை அதிகாரி பின்நாட்களில் இவ்வாறு நினைவு கூர்ந்திருந்தார்: IPKF இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கை முழுக்க முழுக்க இந்திய புலனாய்வு அமைப்பான “றோ” இனது திட்டமிடலிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கையில் அமைதிப் படையின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி இராணுவ உயரதிகாரிகளுடன் ராஜீவ் காந்தி திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போது, புலிகளின் பலம் பற்றி அவர் கேள்வியெழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த “றோ” உயரதிகாரி ஒருவர், “நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் பிரபாகரனை நாங்கள் கைப்பற்றிவிடுவோம்” என்று அடித்துக் கூறியிருந்தார், என்று கேணல் ஜோன் டெய்லர் நினைவுகூர்ந்திருந்தார்.

இதேபோன்று, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வியில், இந்தியப் படைகள் இலங்கையில் புலிகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று ஆராய்ந்ததாகவும், அப்பொழுது இந்தியப் புலனாய்வு அமைப்புக்கள் “புலிகள் 1977ம் ஆண்டு முதல் எங்களால் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்துமே எங்களுக்கு அத்துபடி. அவர்களில் பலர் எங்கள் சொல்லை மீறமாட்டார்கள்” என்று தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் பற்றி ஜே.என்.தீட்ஷித் எழுதி வெளியிட்டிருந்த Assignment Colombo என்ற புத்தகத்திலும் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது புத்தகத்தில், “ஒருவேளை இந்திய இராணுவம் இலங்கையில் புலிகளுடன் மோதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று இந்தியத் ராணுவத் தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியிடம் நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி முன்நிலையிலேயே நான் இதனைக், கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி, “ஒரு இராவிற்குள் நாங்கள் அவர்கள் கதையை  முடித்துவிடுவோம்” என்று தெரிவித்தார். இதே கேள்வியை இந்தியப் புலனாய்வு பிரிவின் உயரதிகாரி ஆணந்வர்மாவிடம் ராஜீவ் காந்தி கேட்டபோது, அதற்கு அவர், “அவர்கள் எங்களுடைய பையன்கள். அவர்கள் எங்களுடன் உடன்படுவதற்கு மாறாக எதுவும் செய்யமாட்டார்கள்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டதாக தீட்ஷித் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தவறான கருத்து

“இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்தபோது, இங்கு புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. புலிகளே அவர்களை சண்டைக்கு வலிந்திழுத்துக் கொண்டார்கள்.” - என்பது போன்ற ஒரு தவறான கருத்து தற்பொழுதும் இங்குள்ள சிலரிடம் காணப்படவே செய்கின்றது.

ஆனால், உண்மையிலேயே இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால் பதித்தபோது புலிகளை எதிர்கொள்ளும் நோக்கம் அதற்கு இருந்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. புலிகளை நீராயுதபாணிகளாக்கி, அவர்களது கட்டுக்கோப்புக்களை சிதறடித்து, முடியுமானால் அந்த இயக்கத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவே இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அல்லது புலிகளைப் பலவீனப்படுத்திவிட்டு தனது செல்லப்பிள்ளைகளான EPRLF, ENDLF, TELO போன்ற அமைப்புக்களை முதன்மைப்படுத்தி, வடக்குக் கிழக்கின் மீது ஆதிக்கும் செலுத்தும் திட்டமே இந்தியாவிற்கு இருந்தது.

ஆனால், அக்காலத்தில் புலிகள் பெற்றிருந்த பலம், அவர்கள் புரிந்திருந்த தியாகங்கள, அவர்கள் தமது குறிக்கோளில் கொண்டிருந்த உறுதி என்பன, இந்தியாவின் தனது இந்த நோக்கத்தை அடைவதற்கு பலத்த சவாலாக இருந்தன.

இவற்றை எதிர்கொள்ள, புலிகள் மீது போர் தொடுக்க இந்தியா எப்படியான திட்டங்களை தீட்டியிருந்தது என்றும் ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியா தனது குறிக்கோளை அடைவதற்கு எப்படியான இழி செயல்களையெல்லாம் செய்தது என்றும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்றும், தொடர்நதுவரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்

இந்திய-விடுதலைப் புலிகள் யுத்தத்தின் பக்கங்கள் பற்றியும்,  ஈழத் தமிழரைக் குறிவைத்து இந்தியப்படைகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றியும், வன்னிக்காடுகளில் புலிகள் சந்தித்த சவால்கள் பற்றியும், இவைகள் அனைத்திலும் அகப்பட்டு ஈழத் தமிழர் சந்தித்த அவலங்கள் பற்றியும் தொடர்ந்து நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இந்தியப் படைகள் எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்ற கேள்விக்கான உண்மையான விளக்கம் இன்னமும் சரியானபடி தெளிவுபடுத்தப்படாமலேயே இருந்து வருகின்றது.

ஸ்ரீலங்காப் படைகள் 1987ம் ஆண்டில் மேற்கொண்டிருந்த "ஒப்பரரேசன் லிபரேசன்" நடவடிக்கையினால் யாழ்ப்பாணம் சிங்களப் படைகளிடம் வீழ்ந்துவிடாமல் தடுப்பதற்காகவே இந்தியா தனது படைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பிவைத்ததாக சிலர் கூறுகின்றார்கள்.

காணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு!

alt
Add caption

சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் இலங்கை கடற்படையினரது படைமுகாமிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூரியர்- (ரங்கன் / குபேரன்)

நாட்டுப்பற்றாளர் நடராஜா இராஜசூரியர்-
(ரங்கன் / குபேரன்) 
*******************************

தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் அளப்பரிய பணிசெய்த திரு. நடராஜா இராஜசூரியர் (ரங்கன் / குபேரன்) அவர்கள் 27.12.2012 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.

யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதவழியில் முனைப்புப் பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து குபேரன் என்ற பெயருடன் இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றார். அதன்பின்னர் தாயகத்தில் பல களங்களிலும் தளங்களிலும் பணியாற்றி விடுதலைப் போராட்த்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வந்தார்.

சீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி?


 
சீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி? உள்ளே வந்த உளவாளிகள்...! தமிழ்நாட்டில் கொழும்பு திகில்!!!
விகடன் ]
''ஈழத்தில் தமிழினத்தை வேரறுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழகத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.

தாமதமமின்றி 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் - மனோ கணேசன்


தாமதமமின்றி 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் - மனோ கணேசன்
கால தாமதமின்றி 13ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களின் அடிப்படையாக 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொழும்பிலிருந்து எடுக்கும் தீர்மானங்களை வடக்கு கிழக்கு மக்கள் மீது அரசாங்கம் திணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் இராணுவ தலையிடு சர்வதேசத்தில் முறைப்பாடு -


தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் இராணுவ தலையிடு சர்வதேசத்தில் முறைப்பாடு -
தமிழ் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் இராணுவ தலையிட்டால், சர்வதேசத்தில் முறைப்பாடுகளை செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பிப்பதற்காக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல போவதாகவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.

புலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு


மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை
புலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன்  முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு
மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை
களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொல்லப்பட்டார்.

Sunday 30 December 2012

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை 4 லட்சத்தை தாண்டியது


parappukadanthaanmannar%203.jpg
நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலையால் இதுவரை 109672 குடும்பங்களைச் சேர்ந்த 400003 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 7 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். 

அனுராதபுரத்தில் கடமையாற்றும் மருத்துவர் சிவசங்கர் இராணுவத்தால் கைது


அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:

13 ஐ நீக்கினால் மு.கா.எதிர்க்கும் அரசுக்கு அளித்துவரும் ஆதரவும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார் ஜெமீல்


அரசமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை  நீக்கினால் கடுமையாக எதிர்ப்போம். அத்தகைய முயற்சிகள் முற்றாக முறியடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
23 ஆம் பிரிவு விவசாயிகள் அபிவிருத்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் பதினோராவது வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பிரதம பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

ரங்கன் போய்விட்டான்


ரங்கன் போய்விட்டான் அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு.........ச.ச.முத்து ஐயா ...

27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் 'ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்'.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமைமீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே,அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

செம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல


தமிழக அரசியல்  02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த  இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய  என் கருத்துரை வந்துள்ளது.  தமிழர்க்கு விருது! - தமிழில் அல்ல ..! டெல்லியில் அரங்கேறிய அவலம் என்னும் தலைப்பில் இதழின் பக்கங்கள்26-27 இல் வந்ததை இத்துடன் இணைத்துள்ளேன். செம்மொழி நிறுவனத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் எடுத்து வரும் நிகழ்வுகளைத்  தமிழில் நடத்துமாறு அஞ்சலட்டை விடுக்கலாம். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்...................... read more

தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.


நண்பர்களே தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.... சிறு சந்தோசத்திற்க்காக உயிரை பணயம் வைக்காதீர்கள்..... வாகணத்தில் செல்லும்போது பேஸ்புக் உபயோகித்த ஒருவரின் நிலைமையை பாருங்கள்....இனி இது போல் கோர விபத்து நடைபெறாமல் இருக்க உங்களது நட்பு வட்டாரங்களுக்கும் இதை சேர் செய்யுங்கள்.... 
நண்பர்களே தயவு செய்து வண்டியில் செல்லும் போது கைபேசியை உபயோகிக்காதீர்கள்.... சிறு சந்தோசத்திற்க்காக உயிரை பணயம் வைக்காதீர்கள்..... வாகணத்தில் செல்லும்போது பேஸ்புக் உபயோகித்த ஒருவரின் நிலைமையை பாருங்கள்....இனி இது போல் கோர விபத்து நடைபெறாமல் இருக்க உங்களது நட்பு வட்டாரங்களுக்கும் இதை சேர் செய்யுங்கள்....

கம்பளையில் தமிழ் வர்த்தகர் கடத்தல் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு: - மனோ கணேசன்

News Service
கம்பளை நகரில் கோவிந்தசாமி அருணாசலம் பிரபாகரன் என்ற 56 வயது தமிழ் வர்த்தகர் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார். அவர் பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில் குடும்பத்தவர்கள் மக்கள் கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்!

கடும் மழை காரணமாக வட பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளி நொச்சி ஆகிய இடங்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் தமது இல்லிடங்களை விட்டு வெளி யேறி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ளனர் என்ற தகவல் வேதனை தருவதாகும். போரினால் பாதிக்கப்பட்டு தற்காலிக வீடு களில் தஞ்சமடைந்த மக்களை இயற்கையும் பழிதீர்ப்பது கண்டு உள்ளம் பதைக்கிறது.

பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் காலமானார்


பிரபல சமூகத் தொண்டரும் தேசப்பற்றாளருமான திரு இராசையா நவநாயகம் அவர்கள் 27.12.2012 அன்று அதிகாலை காலமானார்.

நவா அண்ணா என்று அன்போடு அழைக்கப்படும் இவர்இ தமிழ்த் தேசியத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்ததோடுஇ பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டதின் அனைத்துச் செயற்பாடுகலிலும் முன்னின்று உழைத்து இன்று வரையும் உறுதியோடு குரல் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலை மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம்: சரத் பொன்சேகா

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை: - ஆனந்தசங்கரி

News Service
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு,தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்றுக் காலை 11 மணிக்கு யாழ். நாச்சிமார் கோவிலடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கெமருன் பங்கேற்ககூடாது: - பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்

News Service
இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய பிரதமரை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். Rochdale Simon Danczuk என்ற இந்த உறுப்பினர், பிரதமர் கெமருன், இலங்கை மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் மீண்டும் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுள்ளார். 

தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு!

News Service
'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் இப்புதிய அறவழிப் போரினை ஏற்று ஊக்குவிக்கின்றன.

போருக்குப் பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் -ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை


பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைக்கான றொய்ட்டர்ஸ் நிலையத்தில், மிக அண்மையில் சிறிலங்கா தொடர்பான ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  ’போருக்குப்பிந்திய சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் அதன் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் சேர்ந்த ஓடுகாலிக்கு உதவப்போன வைத்தியர் மாட்டிக்கொண்டார்


சிறிலங்கா இராணுவத்தில் பாலியல் தொழிலுக்காக சேர்ந்த தமிழ் பெண்ணுக்கு உதவுவதற்காக சென்ற தமிழ் வைத்தியர் ஒருவர் மாட்டிக்கொண்டுள்ளார்.  அனுராதபுரத்தில் சுகாதார வைத்தியஅதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வருங்கால தலைவர்களின் இக்கால சாதனைகள் .....


வருங்கால தலைவர்களின் இக்கால சாதனைகள் .....
தமிழ்நாட்டு மாணவர்களே என்ன செய்கிறீர்கள்.. உங்கள் வெளிப்படாத சாதனைகளை யாரவது வெளியிடுக ...நாமும் பெருமிதம் கொள்ள வேண்டாமா?
மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்

:"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்' என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி'யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

அந்த கிராமத்தில் தங்கி, அந்த மக்கள் படும்பாட்டை அறிந்த மாணவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்தனர். பகலில் மட்டுமே பள்ளி குழந்தைகளால் படிக்க முடியும்; இரவில் படிக்கவே முடியாது. இதை கண்ட மாணவர்கள், மேலும் வருந்தினர்.மாணவர்கள் தங்களின், "பாக்கெட் மணி'யை சேர்த்து, அந்த கிராமத்திற்கு, சூரிய ஒளி மின்சாரம் வழங்க முடிவு செய்தனர். இந்த உன்னத முயற்சிக்கு, பிற மாணவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, கொஞ்சம் வித்தியாசமான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இரவு நேரத்தில், கல்லூரி ஹாஸ்டலில், திடீரென மின்சாரத்தை துண்டித்தனர். மின்Œõரம் இல்லாததால், மாணவர்கள் தவித்து, சத்தம் போட்டு ரகளை செய்யவும், மீண்டும் மின்சாரத்தை வழங்கினர்.ரகளை செய்தவர்கள் மத்தியில் பேசிய மாணவர் ஒருவர், "10 நிமிட நேரம், மின்சாரம் இல்லாததற்கே இப்படி சத்தம் போடுகிறீர்களே, ஆண்டாண்டு காலமாக மின்சாரம் இல்லாமல் எத்தனையோ கிராமங்கள், அந்த கிராமங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவதிப்படுவதை பற்றி ஏன் கவலைப்படுவதில்லை...' என, கேட்டார்.

மனம் வருந்திய மாணவர்கள், ஒவ்வொருவரும், தலா, 10 ரூபாய் கொடுத்து, சேர்ந்த பணத்தை கொண்டு, மற்றொரு கிராமத்திற்கு, சோலார் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு சோலார் விளக்கிற்கு, 4,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 106 கிராமங்களில், 4,000 சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலும், மும்பை, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், சோலார் விளக்குகளை பொருத்தி, புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்."புராஜெக்ட் சிராக்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த மாணவர் அமைப்பில், மும்பை நகர கல்லூரிகளின் பெரும்பாலான மாணவர்கள், உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். நல்ல நோக்கத்திற்காக பாடுபடும் மாணவர்களுக்கு, பல நிறுவனங்களும் பணம் கொடுத்து உதவுகின்றன.கிடைக்கும் பணத்தை கொண்டு, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், வீடுகளுக்கு சோலார் மின் விளக்கு வசதிகள் செய்து கொடுக்கின்றனர்.
மின்சாரம் இல்லாத வீடுகளில்ஒளியேற்றும் கல்லூரி மாணவர்கள்

:"ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள்' என, சிலரால் வசைபாடப்படும் கல்லூரி மாணவர்கள், தங்களின், "பாக்கெட் மணி'
யை சேமித்து, 4,000 வீடுகளில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மும்பையில் உள்ள, எச்.ஆர்., கல்லூரி மாணவர்கள், ஐந்து பேர், இரண்டாண்டுகளுக்கு முன், சுற்றுலா சென்ற போது, மும்பை புறநகர் பகுதியில் ஒரு கிராமத்தை கண்டனர். தலைநகர் மும்பையில் இருந்து, 150 கி.மீ.,யில் இருந்த அந்த கிராமத்தில், மின் வசதி அறவே கிடையாது. மொபைல் போனை, சார்ஜ் செய்வதற்கு கூட, 10 கி.மீ., சென்று, மின்சாரம் உள்ள இடத்தில், சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது.

300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில்


300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.

நேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.

Friday 28 December 2012

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது


இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது என இராணுவத் தரப்பு தெரிவித்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! Read more about முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை! [7557] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை-அஸாத் சாலி எச்சரிக்கை!இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சிங்களர்களின் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்ப்பதாக, முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
"முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன. இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

சூடு பிடிக்கிறது குற்றப்பிரேரணை விவகாரம்; அரசும் எதிரணியும் பகிரங்க தொலைக்காட்சி விவாதம்

news
ஆளும் தரப்பினருக்கும் எதிரணியினருக்கும் இடையில் புதுவருடத்தில் பகிரங்க விவாதம் ஒன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுக்கின்றது.

தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பிலேயே இந்த விவாதம் நடத்தப்படவிருக்கின்றது.

ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து


ஜனநாயகத்தை மதித்து குற்றவியல் பிரேரணைக்கு ராஜபக்ஷ அரசு தீர்வு காண வேண்டும்! – ‘த இந்து’ வலியுறுத்து

மஹிந்த ராஜபக்ஷ அரசானது நிறுவனங்கள் அல்லது ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றைப் பலவீனப்படுத்தாத வகையில்  பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டுவந்த குற்றவியல் பிரேரணை மீதான மோதலுக்குத் தீர்வு காணவேண்டுமென சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த இந்து’ நேற்றைய தனது  ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

அகிலன் பவுண்டேசனின் உதவியுடன் வந்தாறுமூலையில் விசேட தேவையுடையோருக்கான பாடசாலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அனர்த்தின் தாக்கம் காரணமாக விசேட தேவையுள்ள சிறுவர்களாக பிறந்தவர்களை அரவணைக்கும் வகையிலான பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   இலண்டன் அகிலண் பவுன்டேசனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் இந்தபாடசாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அன்பகம் பாடசாலை என்ற பெயரில் திறந்துவைக்கப்பட்ட இப்பாடசாலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அன்பகம் தலைவர் டேவிட் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, இலண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபர் கோபாலகிருஸ்ணன், மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்னா இந்திரகுமார் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் இணைத்தலைவர் சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
 http://www.thinakkathir.com/?p=46065

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் கைது!


அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் குறித்த நபர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளனர். இவ்வாறு பிரவேசித்த 46 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் விசேட விமானம் ஒன்றின் மூலம் நாடு கடத்தியிருந்தது.

பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை


பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு அனுப்பி வைக்குமாறு சுரேஸ் கோரிக்கை
பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு ஆனுப்பி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைச் சிறைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியரிமையுடைய சிறைக் கைதிகளை அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரன் பற்றி எம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை;ஹத்துருசிங்க சொன்னது பொய்: மாணவர்கள் தெரிவிப்பு!


பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை: சிங்கள ஊடகம்


ltte-akka2ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இராணுவப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு செயற்பட்ட உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத, சரணடையாத மற்றும் கைது செய்யப்படாதவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.முன்னாள் புலி உறுப்பினர்கள் பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

மன்னாரில் சிங்கள குடியேற்ற விரிவாக்கம்; கோத்தபாய நேரில் ஆராய்வு!


ts_Mannar_20121226_08p12மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லையோரக்கிராமமான முள்ளிக்குளம் சிங்கள மயப்படுத்திவரும் நிலையில் அதன் உச்சமாக பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய நேரடியாகச் சென்று சிங்கள மயமாக்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கடற்படையினருடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்
மன்னார் மாவட்ட அபிவிருத்தியை ஆராய்தல் என்ற போர்வையில் நேற்று முன்தினம் முள்ளிக்குளம் சென்ற கோத்தபாயவை  வடமேற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹன பெரேரா உட்பட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச்சென்றனர்

யாழில் கைதான 45 பேரும் பூசா முகாமில்!- கைது செய்யப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்


SRILANKA_POLICEயாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடா மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம்!


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாக கனடாவின் ரொரென்ரோ மாநகர சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான றேமன் சோ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மாத்தளையில் தமிழ் இளைஞர் சிங்கள காடையர்களால் அடித்துக் கொலை!


இரத்தோட்டை - பாத்தாளவத்தை மத்திய பிரிவு பண்வில பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சிங்கள காடையர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் 26ம் திகதி மாலை இடம்பெற்றதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 36 வயதுடைய கோபால் என்பவரே உயிரிழந்துள்ளார்.

"கொழும்பு சிறைகளின் தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்"



ஜயலத் ஜெயவர்த்தன
கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சி வழங்கி அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜெயவர்த்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயரிடம் சி.ஐ.டி இனர் விசாரணை


மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய பிதா. இராயப்பு ஜோசப் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

வடக்கில் அடை மழை; குளங்கள் பெருக்கெடுப்பு: மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிப்பு!


வடக்கில் பெய்துவரும் அடை மழை மற்றும் குளங்களின் பெருக்கெடுப்புக் காரணமாக மக்களின் இயல்பு வாழ்வு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து சமூக மக்களையும் மீள்குடியேற்றுமாறு JNP , டக்ளஸிடம் கோரிக்கை

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைத்து இன சமூக மக்களையும் மீள் குடியேற்றுமாறு ஜே.என்.பி கட்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் N;காரியுள்ளது.  
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.என்.பி.யின் பேச்சாளர் முஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கியுள்ளன: வசந்த பண்டார



நாட்டில் இன்று வேலுப்பிள்ளை பிரபாகரனை விட அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகள் தலைதூக்கி வருகின்றன.
எனவே, இவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதற்கு அரசு முயற்சி



தமிழ் இளைஞர்களை மிகவும் திட்டமிட்ட முறையில் வன்முறையில் தள்ளி அவர்களைப் பயங்கரவாதிகள் எனக் காட்டுவதற்கு இந்த அரசு முயல்கிறது. தமிழ் இளைஞர்கள் எவரும் இந்த அரசின் சதி வலையில் சிக்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்: அஸாத் ஸாலி எச்சரிக்கை!



'பொதுபல சேனா' என்ற சிங்கள அமைப்பினூடாகவும், ஏனைய சிங்கள இனவாதிகளினூடாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும், அராஜகங்களையும் அரசு தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடுவதனூடாக முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா அரசு எதிர்பார்க்கின்றது எனக் கேள்வி எழுப்பிய முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி, முஸ்லிம்களை அந்த நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தது. 

கோதாபாய கருத்து தெரிவிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான செயல்..



தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Saturday 15 December 2012

தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க


சனிக்கிழமை காலை 10.30 க்கு "எக்ஸ்பிரஸ் அவன்யு " வாயிலில் "இலங்கையை புறக்கணிப்போம் " பிரச்சாரம் துவங்க உள்ளது .இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்புள்ள தோழர்கள் ,பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தொடர்பு கொள்க : இராஜா ஸ்டாலின் -9884877487.(15/12/12-சென்னை)
Photo

Saturday 8 December 2012

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன?

இதயச்சந்திரன் 

அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக , அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது.

யாருக்குச் சொல்லி அழ?


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் இருக்கும் வரைக்கும் தமிழரின் பாதுகாப்புக்கு ஒரு கவசம் இருந்தது. தமிழரின் மீது கை வைத்தால்பிரபாகரன் படை பதில் சொல்லும் என்ற அச்சம் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்ததுஆனால் அந்தக் கவசத்தை இழந்து நாங்கள் கேட்கஒருவரற்ற இனமாய் நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றோம்.
http://www.infotamil.ch/photos/top/general/K%20%203.jpg


  • "உங்களின் பிள்ளைகள், உறவுகள் புதைக்கப்பட்ட மண்ணில்- அவர்கள் நினைவாக ஒன்று கூடி- அழுவதற்காக, அவர்களின் ஆன்மாக்களோடுஉறவாடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்போருக்காக எதிர்காலத்தில் வாக்களியுங்கள். வாக்குகளுக்காக உங்களைத் தேடிவருவோரிடம் இதையெல்லாம் நிறைவேற்றித் தருவீர்களா என்று கேள்வியை எழுப்புங்கள். அத்தகைய உறுதிமொழி தருவோருக்குவாக்களியுங்கள். இந்தக் கேள்வியை எழுப்பத் தகுந்த தருணம் இதுவே. இதைத் தவற விட்டால் எம் உறவுகளுக்காக மௌனமாகஅழுவதைவிட வேறேதையும் செய்யமுடியாது போகும்." மரணித்த வீரர்களுக்காக ஒரு நினைவுத்தூபியைக் கூட வைத்திருக்க முடியாதநிலை காணப்படுகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்திலேயே இந்த நிலை. சிங்களப் பேரினவாதம் தமிழர் மீது எந்தளவுக்குக்கோலோச்ச முனைகிறது என்பது இதிலிருந்தே வெளிப்படையாகிறது. இறந்தோரை வணங்கும் மரபு தமிழருடையது. ஆனால் அந்த மரபைக்கூடக் கடைப்பிடிக்க முடியாத வகையில் சிங்களப் பேரினவாதம் காடைத்தனங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. சிங்கள அரசுடன் இணங்கிப்போகலாம் என்று தமிழ்மக்களுக்கு ஆலோசனை கூறிவோர்இந்த உரிமையைக் கூட விட்டுக் கொடுக்காதவர்களிடத்தில் இருந்துஎதைத் தான் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? தமிழ் மக்கள் தமது நிலத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை வைப்பதற்குக்குக் கூடஉரிமை இல்லாத போதுஅடிப்படைச் சுதந்திரத்தை எப்படிப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இறந்தவர்களுக்கு மரியாதைசெலுத்துவதே மனிதனின் இயல்பு- மரபு.
    அது எதிரியாயினும் நண்பனாயினும் மாறுபாடு இருக்கக் கூடாது என்பதே நாகரீக மனித சமுதாயத்தின் பண்பு. ஆனால் இறந்து போனஒருவரின் நினைவுத்தூபியைக் கூட விட்டுக் வைக்கக் கூடாது என்று கங்கணம் கட்டியுள்ள சிங்களப் பேரினவாதம் உயிரோடு இருக்கும்தமிழர்களுக்கா உரிமைகளை வழங்கப் போகிறது?

இலங்கை ஊடாக இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்றவர் சிக்கலில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., மற்றும் பென்டிரைவ் மூலம் கடத்த முயன்ற போது கியூ பிரிவு பொலிஸார் தமிம் அன்சாரியை கைது செய்தனர்.

விபசாரத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நாடக நடிகை கைது


விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் தொலைக்காட்சி நாடக நடிகை ஒருவரை கண்டி பொலிஸின் விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த இவர், கண்டி, தங்கொல்லை பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கிருந்தவாரே இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்


தேங்காய் எண்ணெய்  தேய்த்தால் வழுக்கை  ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய்  பயன்படுத்தினால் வழுக்கை  ஆவது -முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய்  எண்ணையே  கலப்படம் தானா ? 
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய்   என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

என்னைப்பார்த்து ஜாதி வெறியன் என்கின்றனர் : ராமதாஸ் ஆவேசப்பேச்சு

திருக்கோவிலூரில் நேற்று பா.ம.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். 

அப்போது அவர், ''தமிழகத்தில் நடைபெறும் 2016 சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் நாம் வெற்றிபெறப்போகின்றோம். இதுவரை வன்னிய மக்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருந்து வந்தது. தற்போது நாம் ஒற்றுமையாகிவிட்டோம். எனவே நாம் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது சுலபம். வன்னியர்கள் ஆண்டால்தான் நாடு உருப்படும். 

ராஜபக்சே சொல்லித்தான் தமிழர்களைக் கொன்று குவித்தோம்.. சிங்கள தளபதி ‘பகீர்’ பேச்சு!


ராஜபக்சேதான் எந்தவித சர்வதேச நெருக்கடி வந்தாலும் அதற்குப் பயப்படாதீர்கள். தொடர்ந்து தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று குவியுங்கள் என்று உத்தரவிட்டார். அவரது ஊக்குவிப்பால்தான் எங்களால் தமிழர்களைக் கொல்ல முடிந்தது என்று பச்சையாகவே பேசி சிங்களத்தின் இன அழிப்பை உறுதி செய்துள்ளார் இலங்கை ராணுவ தளபதியான ஜெகத் ஜெயசூரியா.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்ற மிகச் சிறிய பகுதிக்குள் சிக்கிக் கொண்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொத்து வெடிகுண்டுகளை வீசிக் கொடூரமாகக் கொன்று குவித்தது சிங்கள ராணுவம்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடாமல் நடத்துமாறும், தமிழர்களைக் கொல்லுமாறும் ராஜபக்சேதான் உத்தரவிட்டதாக இலங்கை ராணுவ தளபதி ஜெயசூர்யா பகிரங்கமாகவே கூறியுள்ளார்.

போர்க்காயங்களின் மீது உப்பினைத்தடவும் சிறிலங்கா – அமெரிக்க ஊடகம்


“எனது சொந்த வீட்டில் எனது சொந்த மகளுக்கு பிறந்தநாள் விழா செய்வதற்குக் கூட நான் இராணுவத்தின் அனுமதியைபட பெறவேண்டும். அவர்கள் அனுமதியைத் தர மறுத்ததால் எனது எட்டு வயது நிரம்பிய மகளுக்கு எனது சொந்த வீட்டில் கூட பிறந்த நாளைச் செய்யமுடியாது”
இவ்வாறு அமெரிக்காவினை தளமாகக்கொண்ட The Washington Post ஊடகத்தில் Simon Denyer எழுதியுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தி அறிக்கையின் முழுவிபரமாவது:

முள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் !


நாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக் கொண்டே வந்தார் கர்ணன்.
கிளிநொச்சியை நோக்கி வரும் வழியில் கண்ட இரணமடு குளத்தில் இப்போது இராணுவம் ஏதோ விமான நிலையம் கட்டுகிறார்களாமே என்று கேட்டேன்.