Translate

Saturday 30 June 2012

தமிழனை ஒழித்த திராவிடம்........


சுமத்திய குற்றசாட்டு -- சந்தன மரங்களை கடத்தி விற்றார்.....
தோழர்களே விற்றவன் குற்றவாளி.....சரி அப்போ வாங்கியவன் எங்கே??????????? வாங்கியன் எத்துனை பேர் இதவரை கைது செய்யப்பட்டு இருக்கிறான்??? இதுவரை பதில் இல்லை தோழர்களே.........

இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயார்; சிவ்சங்கர் மேனன்

sivsankar_menan_002
இலங்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும் இதற்காக கோரப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்குச் செய்வதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களை கையளித்தார் சம்பந்தன் – எல்லாவற்றையும் நாம் அறிவோம் என்றார் மேனன்

Posted Imageவடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு பயணத்தில் நடந்தது என்ன? இலங்கையிடம் காட்டத்தைக் காட்டினாரா சிவசங்கர்மேனன்?


கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி


முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடும் போட்டி
கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை பெற்றுக் கொள்வதில் ஆளும் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்


"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்
ஈழமெங்கும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்துவரும் இன்றைய காலத்தில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை மீட்பதற்காய் ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு முகம் கொடுத்த முறிகண்டி மக்கள் தங்கள் வாழ்நிலத்தை மீட்கச் சிறைசென்றிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்த சிறைச்சாலைக்கு மீண்டும் ஏதற்காக இந்த மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற கேள்விதான் இந்த மக்களின் உன்னதமான போராட்டத்திற்கான உக்கிரமான பதிலை அளிக்கிறது. மீள்குடியேற்றம் வடக்கின் வசந்தம் என்ற என்ற பெரும் அரசியல் பிரசாரங்களின் மத்தியில்தான் இந்த மக்கள்மீதான அநீதி அரசின் பொய் பிரசாரங்களை உடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து இந்த மக்கள் நிலத்திற்காக கொண்ட உறுதிதான் நம்பிக்கையைத் தருகிறது.

செங்கல்பட்டு அகதிகள் முகாம் உண்ணாவிரதக் கைதிகள் விடுவிக்கப்படாவிடில் போராட்டம்! சீமான்


தங்கள் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி, செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாம்களில் கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் 14 பேரையும், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு விடுவிக்கப்படாவிட்டால் சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்து, இஸ்லாமிய இடங்களில் விகாரை தாபிப்பது மக்களை துன்பப்படுத்தியுள்ளது: த.தே.கூ


  இந்து, இஸ்லாமிய மக்களின் பூர்வீக வாழ்விடங்களைத் தொல்பொருள் ஆய்வுப் பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தி அங்கு பௌத்த விகாரைகளைத் தாபிப்பது இந்து, இஸ்லாமிய மக்களைப் பெரிதும் துன்பப்படுத்தியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம்


வடமாகாணத் தேர்தல் 2013 செப்ரெம்பரிலேயே மேனனிடம் பஸில் திட்டவட்டம்
news
 வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று திட்டவட்டமாக இந்தியாவிடம் தெரிவித்திருக்கிறது.
 
 
நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜ பக்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித் திருக்கிறார்.

கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்! அமெரிக்க நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலைவரம்!

கேணல் ரமேஸ் படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றில், ரமேஸ் அவர்களின் மனைவியினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தற்போதைய நிலைவரம் குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றினை விடுத்துள்ளது...................... read more

சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் சந்திப்பு


சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் சந்திப்பு
இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு நாள் விஜயத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தார்

இலங்கை குறித்து இந்தியா அதிருப்தி- சிவசங்கர் மேனன் தெரிவிப்பு


இலங்கை குறித்து இந்தியா அதிருப்தி- சிவசங்கர் மேனன் தெரிவிப்பு

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது, வடக்கின் காணிப் பிரச்சினைகள் மற்றும் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் போன்ற விவகாரங்களை தீர்த்து வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமை குறித்து இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை


உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்- மூவர் ஆபத்தான நிலையில்!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்த 28 கைதிகள் பலவந்தமாக அநுராதபுரம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 15 பேர் கடுமையான கா யமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் மிகவும் மேசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

இனியபாரதியை களமிறக்கும் மகிந்தரின் இரகசியத் திட்டம் !

கருணாவுடன் கிழக்கில் இயங்கிவரும் ஆயுதக் குழுவின், பிரமுகர் இனியபாரதியை களமிறக்க மகிந்தர் திட்டமிட்டுள்ளார் என அறியப்படுகிறது. பல கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம் என உலகில் உள்ள அனைத்து ஆடாவடிகளையும் செய்துவரும் இனியபாரதியை மகிந்தர் தனது கிழக்கு மாகாண இணைப்பாளாராகப் போட்டிருந்தார். லண்டனில் வசித்துவரும் முன்நாள் தமிழ் எம்.பியான சந்திரநேரு சந்திரகாந்தனுக்கு கொலை எச்சரிக்கை விட்ட காரணத்தால் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் குள்ளவாளி என அடையாளம் காணப்பட்டார் இனியபாரதி. இவருக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட தண்டனையும் வழங்கப்பட்டது. இதுமட்டுமால்லாது, கற்றுக்கொண்ட பாடத்துக்கான நல்லிணக்க ஆணைக்குழு , இவரை குற்றவாளி என்று அறிவித்தது.

முயற்சிசெய்தால் கிழக்கின் சகல தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் கூட்டமைப்பு வெற்றிபெற முடியும்


தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட கிழக்கு மாகாணத்தில் தனது நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய முயற்சிகளை முன்னெடுப்பதில் வெற்றிகாணக்கூடியதாக இருக்குமானால் அநேகமாக சகல தமிழ்ப்பகுதிகளிலும் தமிழ்  தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறமுடியுமென்று இந்து பத்திரிகை நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறது.

Friday 29 June 2012

Posted Image

வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்குவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது?எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கேள்வி

நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில்,

போலிக் குற்றச்சாட்டுக்களை கூறி வீண் பிரச்சினையை தோற்றுவிக்கிறார் ஜெயலலிதா:கோசல _
  இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இலங்கை கடற்படைக்கு கிடையாது. போலிக் குற்றச்சாட்டுகளைக் கூறி வீண் பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா முற்படக் கூடாது என்று கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. 

 வவுனியா சிறைக் கைதிகளின் உண்ணா விரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது _


 பூஸாவுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி, அநுராத புரம் நீதி மன்ற வழக்குத் தவணை எனத் தெரிவித்து அநுராத புரம் சிறையில் தனியறையில் தடுத்து வைக்கப்பட்டு கழிவு நீர் ஊற்றப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சக கைதியை வவுனியாவுக்கே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வவுனியா சிறைக் கைதிகள் இரண்டாவது நாளாக நேற்றும் தமது உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஜெனீவாவில் பிரித்தானிய தமிழர் பேரவை அதிரடிப் பிரச்சாரம்:
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இன்று வியாழக்கிழமை அன்றைய அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன. ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலார்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாக ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல்ஜியம் வலியுறுத்தியது.


மூதூரில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் உள்ள 3ம் கட்டை மலை அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பௌத்த மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

Thursday 28 June 2012


வடக்கில் தேர்தலை நடாத்துவது தற்போதைக்கு சாத்தியப்படாது: கெஹெலிய ரம்புக்வெல்ல
வடமாகாணத் தேர்தலை நடத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இருப்பினும், வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான உரிய காலம் வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான வேட்பு மனு தாக்கல் திகதிகள் அறிவிப்பு
கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் ஜூலை 12 முதல் 19 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் தலையை விட்டு விட்டு வாலைப் பிடித்துத் தொங்குகிறது: எதிரணி ஊடக மாநாட்டில் மனோ கணேசன் _


  எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், செய்யத் தேவை இல்லாததை எல்லாம், இந்த அரசாங்கம் தனது கட்சி அரசியல் நோக்கங்களுக்காகச் செய்கிறது. நடத்த வேண்டிய வட மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல், அடுத்த வருடம்வரை கால அவகாசம் உள்ள கிழக்கு மாகாணசபை உட்பட ஏனைய மாகாண சபைகளை இப்போது அவசரஅவசரமாகக் கலைத்துவிட்டு தேர்தல்களை நடத்துகிறது. பிடிக்கவேண்டிய தலையை விட்டு விட்டு, பிடிக்கத் தேவையில்லாத வாலைப் பிடித்து அரசாங்கம் தொங்குகிறது என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கிய.................


இங்கிலாந்து தலைநகர் லண்டன் புறநகர் பகுதி சவுத் ஹாலில், ஏராளமான இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும், பணியாற்றுவதா கவும் போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந் தன.
இதையடுத்து இங்கிலாந்து குடியேற்ற துறையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர், போலீஸ் உதவியுடன் அந்த பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடி சோதனை  நடத்தினர். அப்போது விசா முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி வேலை பார்த்த இந்தியர்கள் 36 பேர் சிக்கினர். அவர்கள் 23 வயது முதல் 56 வயதுடையவர்கள். அவர்களை குடி யேற்ற துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உலகின் இரண்டாவது பலஸ்தீனமாக இலங்கையின் வடபகுதி!


இந்தியாவின் தேவைக்காகவே வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பலாத்காரமாக சுவீகரிக்கின்றது என குற்றம்சாட்டும் நவசமசமாஜக் கட்சி, உலகின் இரண்டாவது பாலஸ்தீனமாக வடபகுதி உருவாகியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சி.சிறிதரன் குற்றப்புலனாய்வால் விசாரணை!


வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்கள் சிலவற்றில் வெளியாகியிருந்த சமகால அரசியல் நிலைமைகள் குறித்த செவ்வியொன்று தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

Wednesday 27 June 2012


போராட்டங்கள் என்ன செய்யும்? 

'வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்...' ஆங்கிலத்தில் அறியப்படும் சிறந்த பழமொழி ஒன்றின் அழகான தமிழாக்கம் இது. இனப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முழுமையுமாக முடிந்த பின்னர், இன்றைய சூழலிலும் இலங்கை தமிழ் மக்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைக்கும் வெகுவாக பொருந்தும் விடயம் இது. அதிலும் குறிப்பாக, அரசிற்கு எதிராக சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கை அளித்துவரும் ஊக்கத்தின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது மொட்டவிழும் மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும்.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைப்பு

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்  இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; மன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு


நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். 

அதிர்வு இணையத்தை இலங்கை அரசு இலங்கையில் தடைசெய்துள்ளது !
அதிர்வு இணையத்தை இன்று முதல் இலங்கையில் பார்க்க முடியாத நிலை தோன்றியுள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசானது அதிர்வு இணையத்தை இலங்கையில் முற்றாகத் தடைசெய்துள்ளது. இலங்கை அரசின் மனிதப்படுகொலை, இன அழிப்பு , போர்குற்றங்கள் என்பன தொடர்பாக பல ஆதாரங்களை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் பிரித்தானியா வந்து, பெருத்த அவமானத்துடன் திரும்பிய மகிந்தர், தனக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது யார் என்று அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கோரியிருந்தார் என்ற செய்திகள் வெளியானது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் தங்கியுள்ள இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரிகள் இருவர் ஒரு அறிக்கையை கடந்த வாரம் சமர்பித்துள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

இதனை அடுத்து அதிர்வு இணையத்தை இலங்கையில் தடைசெய்ய, பாதுகாப்பு அமைச்சு, ISP இன்ரர் நெட் வழங்குணருக்கு உத்தரவிட்டுள்ளது.

மனிக்பாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களின் நிலை ?

திருமுறிகண்டியில் இருந்து இரவோடு இரவாக வவுனியா மனிக்பாம் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 19 குடும்பங்களும் அங்கு போதிய வசதிகளும் இருப்பிடங்களும் இன்றி அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.

இந்து மகாவித்தியாலயத்தில் இருந்து 3 பஸ்களிலும் 3 லொறிகளிலுமாக நேற்றிரவு 7.30 மணியளவில் ஏற்றப்பட்ட மக்கள், இரவு 11 மணியளவில் மனிக்பாம் முகாமில் இறக்கப்பட்டனர்.

Tuesday 26 June 2012


தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!

தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!


இலங்கையில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம்
 நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தமிழக வாழ்வுரிமை கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்திருந்தனர். 

உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
news
 எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்தேசிய பிக்குகள் முன்னணி காட்டம்
news
 தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

  வடக்கு தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவோ மேனன் வரவில்லை


வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை. மாறாக வழமையானதும் பொது வானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் காணப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது.


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறந்த இராஜ தந்திர உறவுகள் காணப்படுகின்றன என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது. 


கனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிள் நாடு கடத்தப்படலாம்!

கனடாவில் சிறைத்தண்டனை பெறும் அகதிள் நாடு கடத்தப்படலாம்!

கனடிய குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை பெற்ற அகதிகள், நிரந்தர வாழ்விட உரிமை பெற்றவர்கள் மற்றும் விருந்தினர்களை எளிதாக நாடு கடத்த முடியும். 

மேலும் இவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. இதுதவிர கனடாவுக்குள் அனுமதிக்கப்பட முடியாதவர்கள், நாட்டின் நலனுக்கு எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்று கருதினால் அமைச்சர்கள் அவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும் இந்த புதிய சட்டம் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது
.

யூன் 26ல் அமெரிக்கா - கனடா - பிரான்ஸ் - சுவிஸ் ஆகிய நாடுகளில் நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


tgte-june26_2012.jpg
நாளை செவ்வாய்கிழமை (26-06-2012) தமிழர் தாயகத்தின் திருமுறிகண்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் நில  அபகரிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டும் வகையில், அமெரிக்கா - கனடா - பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டங்களில் அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

நாங்களும் ஆர்ப்பாட்டம் செய்தோம் என்றிருக்க வேண்டாம்


யாழ்ப்பாணம்  - தமிழர் தாயகத்தில் நடந்து கொண்டி ருக்கும் நில அபகரிப்புக் குறித்த பல் வேறு விடயங்கள் தொடர்பில் தமி ழ்த் தரப்புக்கள் எதிர்ப்புக்களைத் தெரி வித்து வருகின்றன.தமிழ்த் தரப்புக் கள் தெரிவித்து வருகின்ற எதிர்ப்பு க்கள் என்பது, அரசாங்கத்தை திசை திருப்புமென்றோ அல்லது நிலஅபகரி ப்பை அரசு நிறுத்துமொன்றோ எதிர் பார்க்க முடியாது.

யூன்-26 : தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம் : வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு !

http://www.youtube.com/watch?v=vdhBvISFuLw&list=UU5FJYFVgMQ2nTU6L9QdM7rg&index=2&feature=plcp
http://youtu.be/vdhBvISFuLw

யூன்26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

திருமுறிகண்டியில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரிப்பு- “எமது நிலம் எமக்கு வேண்டும்”


இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தொடர்சியான போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.



இலண்டனில் யூன் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4:30மணிக்கு ஆர்ப்பாட்ட ஒன்று கூடல்
இடம்: 10, Downing Street, London, SW1A 2AA

யூன் 26ல் தமிழர் தாயக தமிழர் தலைவர்களால், ஒன்றினைந்து முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென, உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


எங்களுக்கு எங்கட காணி நிலம் வேண்டுமென, வன்னியில் இருந்து ஒலித்திருக்கும் தாயொருவரின் குரல், சிங்கள அரசினால் தமிழர் தாயகத்தில் அபகரிக்கப்படும் நிலங்களது வலியினை வெளிப்படுத்தி நிற்கின்றது.

Monday 25 June 2012

,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்


உங்களை அந்தக்கடவுளால் கூட திருத்த முடியாது!!பொய் செல்ல சிலர் அதற்கு ஆமா போடா சிலர்,கடவுளே அப்பாவிகளை இவர்களிடமிருந்து காப்பாற்றும்,இவர்களின் பொய்களை நம்பி சோம்பேறிகளும் மூடர்களும் நேற்று இருந்ததைவிட இன்று பெருகிவிட்டனர்,காரணம் விஞ்ஞானம் தந்த ஊடகங்களை இவர்கள் துஷ்பிரயோகம் செய்வதே!!



இவர்கள் தமது இலக்கை அடைய உம்மையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றுகிறார்கள்,இதில் கெட்டவரிடம் நீர் இலகுவில் ஏமாந்து போகிறீர்,,நல்லவர்களை மட்டும் சோதனையும் வேதனையும் செய்கிறீர்,ஓ!! இவர்களிடம் அதிகம் தொடர்பில் உள்ளதால் இவர்களின் குணம் உமக்கும் வந்துவிட்டதோ??

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !

நாளை மாலை லண்டனில் பாரிய ஆர்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது !
Date: 26.06.2012
Time: 5.00 pm to 7.30pm
Venue : 10 Downing Street, London, SW1A 2AA
தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும், இலங்கை இராணுவத்தினர் நில அபகரிப்பைச் செய்து வருகின்றனர். இந் நிலை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் வடகிழக்குப் பகுதியில் இராணுவத்திற்கும், சிங்களவர்களுக்குமே காணிகள் இருக்கும் நிலை தோன்றும். பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்துவரும் பூர்வீக நிலங்கள் பறிபோகும் அபாயம் தோன்றியுள்ளது. இதனை தடுக்க பிரித்தானியா தலையிடக்கோரி, நாளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் இல்லம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதற்கான பொலிஸ் அனுமதியையும் அவர்கள் சற்று நேரத்துக்கு முன்னதாகப் பெற்றுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர், அதற்கு சற்றும் குறையாத வேறுவடிவிலான  பேரவலத்தை தமிழர் தாயகம் தற்போது எதிர்நோக்கியுள்ளது. 

தமிழர்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதுடன், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருந்த இடம்தெரியாமல் தொலைந்து மறைந்துபோய்விடச் செய்யும், திட்டமிட்ட நாசகார நகர்வை ராஜபக்ஸ்ச தலைமையிலான பௌத்த சிங்களப் பேரினவாத அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது. 

தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்: கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு!


தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்: கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு!


தமிழர் தாயக பிரதேசத்தில் நாளை முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு விடுத்துள்ளார்.

முறிகண்டி மக்களைக் கதறக் கதற மீண்டும் முகாம்களுக்கு ஏற்றிய இராணுவம்: போராட்டம் நிறுத்தப்படாது பா.உ. சிறீதரன்


முறிகண்டி மக்களைக் கதறக் கதற மீண்டும் முகாம்களுக்கு ஏற்றிய இராணுவம்: போராட்டம் நிறுத்தப்படாது பா.உ. சிறீதரன்
திருமுறிகண்டியில் மீளக்குடியமர்விற்காக காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நெடிய பனை மரங்கள், சாட்ச்சி...


எம்மை தாய் தந்தையர் இல்லாதவராக்கி ஒரு வாய் சோற்றுக்கு அலைய விட்ட பாவத்தை எந்த கங்கையில் குழித்து நீ கழுவுவாய்? 
வட்டியும் முதலுமாய் பாவம் உன்னை சூழ்ந்து அழிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


நிலவற்ற வானில், நீடித்து செல்கிறது

நெடிய பனை மரங்கள்,
சாட்ச்சி...

ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்



ஈழமண்… இப்போது மயான பூமி! – ஆனந்த விகடன்

எத்தனை பூச்செடிகள் வைத்து மறைத்தாலும், மயானக் கரை நாற்றம் மறையாது. 30 ஆண்டுகளாக யுத்த பூமி… 3 ஆண்டுகளுக்கு முன் மரண பூமி… இன்று ஈழம்… மயான பூமி!
சீனத்து சென்ட், ரஷ்ய அத்தர், கியூபா ஜவ்வாது என எதைக் கொண்டுவந்து ராஜபக்சாக்கள் தெளித்தாலும்… நள்ளிரவில் எழும் இரத்த ஓலங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அரண்டுகிடக்கும் அரசாங்கத்துக்கு இருண்டதெல்லாம் புலியாகத் தெரிகிறது. ஒரே ஒரு ஆள் புலிக்கொடியை, மே தின ஊர்வலத்தில் காட்ட… கொழும்பில் வெடி வெடித்த அளவுக்குக் குமுறல்கள். (இதை அரசாங்கத்தின் செட்- அப் என்று சொல்பவர்களும் உண்டு! )
உலக நாடுகளில் எது நண்பன், எது எதிரி என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் வேலையாகிவிட்டது.

ஈழத் தமிழர்களின் அழிவுக்கு முகர்ஜியே முழுக் காரணம் நாஞ்சில் சம்பத் காட்டம்


news
 "எல்லாத் துயரச் சம்பவங்களுக்கும் துணை நின்ற பிரணாப் முகர்ஜி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாவது தமிழர்களுக்குத் துயரம்,'' என மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
 
இராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் கூறியவை வருமாறு:
முல்லைப்பெரியாறு அணைக்காகத் தொடர்ந்து வைகோ போராடி வருகின்றமையைப் பொறுக்க முடியாத கேரள அரசு, தற்போது சிறுவாணி, அமராவதி நதிகளின் தண்ணீரைத் தேக்கி வைக்கிறது. இதைக்கண்டித்து கோவையில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும். பிரணாப்பை இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது ஊழல் திமிங்கிலங்களுக்கு மகிழ்ச்சியான விடயம். 

இனப்படுகொலைக்கு சுயாதீன விசாரணை கோரி சென்னையில் பேரணி! – மே 17 இயக்கம் அழைப்பு!


இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று திரளுமாறு பொதுமக்களுக்கு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும்: ஐ.தே.க. _


  இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதனை விடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து கூட்டறிக்கை விடுப்பதால் பலனில்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 

அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக! – இதயச்சந்திரன்


அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக! – இதயச்சந்திரன்

யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை.