
வவுனியா சிறைச்சாலையில் அதிகாரிகள் மூவர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு குறிப்பிட்ட 28 தமிழ்க் கைதிகளுமே பொறுப்பெனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம். இன்று நண்பகல் பணயக்கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட 28 பேரையும் அம்புலன்ஸ் மற்றும் சிறைச்சாலை வாகனங்களின் மூலமாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது இவர்களில் 15 பேர் மிகவும் மேசமாகக் காயமடைந்திருந்தனர். சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரும். அதிரடிப்படையினரும் தாக்குதல் நடத்தியபோதே இவர்கள் காயமடைந்ததாகத் தெரிகின்றது. இவர்களில் மூவருடைய நிலை மிகவும் மோசமாக இருந்ததாக வவுனியா சிறைச்சாலையிலிருந்து கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் மருத்துமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தனியான அறை ஒன்றில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது இன்று பிற்பகல் முதல் கடுமையான தாக்குதல்களும் சித்திரவதைகளும் இடம்பெறுகின்றது. தடிகள், கம்பிகள் என்பவற்றுடன் சப்பாத்துக் கால்களாலும் இவர்கள் தாக்கப்படுவதாக அநுராதபுர சிறைச்சாலையிலிருந்து கசிந்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுடைய கதறல் சத்தத்தை அநுராதபுரம் சிறைச்சாலையின் பல பகுதிகளிலும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment