தமக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் மீண்டும் நினைக்காது இருப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் துணைத் தலைவி யூலி பிஷப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் மேற்கொண்டு, இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.