இலங்கையில் இனப்பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வை எட்ட முயலுமாறு , இலங்கை அரசுக்கு சீனாவும் அழுத்தம் தரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறார்கள்.
சமீபத்தில் இலங்கைக்கான புதிய சீனத்தூதரை சந்தித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, வடக்கில் நடைபெற்று வரும் இராணுவ கட்டமைப்புத் திட்டங்கள் பல சீன உதவியுடன் நடைபெற்றுவருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறுவதை, தூதருக்கு சுட்டிக்காட்டி, இலங்கையில் போர் முடிந்த வட மாகாணத்தில் இன்னும் சகஜ நிலை உருவாகவில்லை,