Translate

Monday 15 October 2012

மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவதமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மதமாற்றம்


மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.
http://www.thinakkathir.com/?p=42424
அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கல்முனையில் ஆடைவிற்பனை நிலையம் ஒன்றில் வேலைசெய்யும் தமிழ் இளம் பெண் ஒருவரை அக்கடை உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள போதிலும் காவல்துறையினர் அவர் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் முஸ்லீம் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான தமிழ் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவர்களின் வறுமை காரணமாக இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர் என்றும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment