Translate

Wednesday 25 April 2012

UK 2012 - புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீடு


UK 2012 - புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீடு

Date :  11th May 2012,   Friday 

Time : 7.00 pm to 10.00 pm
Venue : Council Chamber 
              Civic Centre, Harrow Council
              Station Road
              Harrow,  HA1 2UX     

தமிழர் சிந்திய குருதி வீண் போகாது; தமிழீழம் ஒரு நாள் மலரும் : கருணாநிதி _


  இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

"கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும்


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில்நேற்று தொடங்கிய மாவட்ட காங்கிரஸ்,தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில்,எம்.எல்.ஏ.,ஞானசேகரன்இளைஞர் காங்கிரஸ்தலைவர் யுவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் செயற்பாடுகள் _


  பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயச்சூழலில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்குடன் அரசாங்கத்தினதோ, இராணுவத்தினதோ ஆதரவால் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை கண்டிப்பதாக அகில இலங்கை இந்து மாமன்றம் தெரிவித்துள்ளது.

பாடல்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு அருகில் புத்தர் கோவில்


இலங்கையில் தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில்இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாககக் கருதப்படும் திருக்கேதீஸ்வரம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நின்றபோது போரை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டவர் மஹிந்தவே இராணுவத் தளபதி வாக்குமூலம்


முள்ளிவாய்க்காலில் நின்றபோது
போரை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டவர் மஹிந்தவே
இராணுவத் தளபதி வாக்குமூலம்
news
வன்னியில் நடந்த போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்துமாறு சர்வதேசம் கடும் அழுத்தங்களை வழங்கி வந்தபோதும் போரைத் தொடர்ந்து நடத்தும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக உத்தரவிட்டார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

தனி ஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்: கருணாநிதி சூளுரை


ஈழத்தமிழர்களுக்கு தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி சூளுரைத்துள்ளார்.
வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தம்புள்ளை, காளியம்மன் மீதுள்ள அச்சமே தாக்குதல் நடத்தாமைக்கு காரணம் என்கிறார் ரணில்!- விஜயகலா எம்.பி. நேரில் விஜயம்


தம்புள்ளை பள்ளிவாசலின் மீது தாக்குதலை நடத்திய குழுவினர் அங்கிருக்கின்ற காளி கோயிலின் மீது தாக்குதல் நடாத்தாமைக்கான கருத்தை எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க கூறினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று புதன்கிழமை சந்தித்தபோதே அவர் தம்புள்ளை காளியம்மன் கோவிலின் கதையை கூறினார்.
நாட்டில் உருவாக்கியுள்ள பிரச்சினை விரைவாக தீர்க்கப்படல் வேண்டும். இங்கு பல்வேறு இன, மத, மொழிகளை சேர்ந்தோரும் வாழ்கின்றனர். அரசியலமைப்பின் பிரகாரம் இந்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை இருக்கிறது.

திருக்கேதீஸ்வர ஆலய சூழலில் புத்தர் சிலை எதற்கு?

தம்புள்ளையில் மசூதி அகற்றுவது தொடர்பான விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், இலங்கையில் இந்துக்களின் முக்கிய கோவிலாகக் கருதப்படும் திருக்கேதீஸ்வரவம் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில். ஒரு புத்த கோவில் கட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 

இது குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கவலைகளை வெளியிட்டுள்ளது. 

பிள்ளையார் கோயிலையும் அகற்ற உத்தரவு : சிங்கள பெளத்த பாசிசம்

தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஆலயத்தை அகற்றுவதை அரசு கைவிட வேண்டும்: வேலாயுதம்


விநாயகர் ஆலயத்தை அகற்றுவதை அரசு கைவிட வேண்டும்: வேலாயுதம்


சிறுபான்மையினரின் மத உரிமை மற்றும் கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்படும் என அரசியலமைப்பில் கூறப்பட்டிருக்கின்ற போதிலும் தம்புள்ளையில் பள்ளிவாசலை தகர்த்து அரசு தனது கையாலாகாத் தன்மையை வெளிக்காட்டி விட்டது என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் ஐ. தே. க.வின் உபதலைவருமான கே. வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பெரும்பான்மை இனரின் மிலேச்சத்தனமான செயலை…


மத வழிபாட்டுத்தலம் பெரும்பான்மை இனரால் தாக்கப்படவதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

திருமலை ஆலய இடிப்பு சம்பந்தன் தலையீட்டால் தடுக்கப்படும் - துரைரட்ணசிங்கம்

திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் சட்டவிரோத கட்டட அமைப்புகளை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனம் செலுத்தியுள்ளது. 

“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..:29.04.2012. ஞாயிறு


“ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – சத்தியசீலனோடு ஓர் உரையாடல்..:29.04.2012. ஞாயிறு

40 வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. நேர்மறையானவற்றை உள்வாங்கிக்கொள்ளலும் எதிர்மறையானவற்றை விமர்சித்தலும் மக்களின் தொடரும் போராட்டத்தைச் செழுமைப்படுத்தும். முள்ளிவாய்க்காலில் பேரினவாத அரசு உலக அதிகாரங்களின் அனுசரணையோடு திட்டமிட்டு நிகழ்த்திய இனப்படுகொலையின் பின்னர் நான்கு தசாப்தங்களின் முன்னர் எங்கிருந்து ஆரம்பித்திருக்கிறோம் என்ற விமர்சனத்தை தான் குறித்த சுய விமர்சனத்தோடு நூலுருவில் உருவாக்கியிருக்கிறார் கணேசன்(ஐயர்).

இராஜிவ் காந்தியை கொழும்பிற்கு அழைத்து பிடரியில் அடிபோட்டு அனுப்பியவர்கள்தான் சிறிலங்கா. இந்த பேசினோமா? இல்லையா? திக்குமுக்காடும் இந்தியக்குழு

சிறிலங்காவில் இருந்து நாடு திரும்பிய இந்தியக்குழு திக்குமுக்காடி நிற்கின்றது. காரணம் சிறிலங்கா அரசாங்கத்தின் வழமையான சாக்கடை இராஜதந்திரம்தான். கொழும்பில் இருந்து வெளிக்கிடமுன்னரே தாம் என்னென்ன பேசினோம் இந்தியக்குழு கூறிக்கொண்டே போனது. இறுதியில் இந்தியா சென்ற பின்னரும் பட்டியலிட்டு என்னென்ன மஹிந்தருடன் பேசினோம் என அறிக்கைவிட்டார்கள் ஆனால் அறிக்கை எழுதிய பேனா மை காயமுன்னரே மஹிந்த அரசாங்கம் மறுப்பு அறிக்கையினை விடத் தொடங்கிவிட்டது. இதனால் திக்கற்று, நாதியற்று இருக்கின்றது இந்திய நாடாளுமன்றக்குழு.

யாழ்ப்பாணத்தில் உணர்வு கரைந்து போய் விடுமென யாரும் நினைத்தால் அது சொல்கின்றவரின் பலவீனத்தின் வெளிப்பாடு. கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன


போருக்குப் பின்னரும் இந்த அரசு தமிழ் மக்களை பெரும் படை பலத்துடன் அடக்கி வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டிய கட்டாய தேவையாகும் என நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு! பள்ளிவாசலை அகற்றினால் விளைவுகள் பாரதூரமாகும்!அரசை எச்சரிக்கிறார் அமைச்சர் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றினால் அரசு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் விளைவுகளை, பாரதூரமான பிரச் சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். தம்புள்ளை புனிதப் பிரதேசத்திற்குள் பள்ளிவாசல் இருக்கிறது எனக் கூறப்படுவதை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன். அப்படி எந்த இடத்திலும் எழுதப்படவில்லை; வரையறுக்கப்படவுமில்லை. 

இலங்கையில் அதிகாரப் பகிர்வு: அரசு, எதிர்க்கட்சி மோதல்

கொழும்பு, ஏப். 25: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் விவகாரம் தொடர்பாக அந்நாட்டு அரசும் எதிர்க்கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு விஷயத்தில் "தாமதப்படுத்தும் முயற்சிகளை' அதிபர் ராஜபட்ச மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.

தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதாக உறுதியளிக்கவில்லை : இலங்கை அரசு மறுப்பு

கொழும்பு: தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பது குறித்து, இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கையில் விடுதலை புலிகளுடனான போர் முடிந்த பிறகு, குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களை பார்வையிட, பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழு கடந்த வாரம் இலங்கை பயணம் மேற்கொண்டது. 
ஆறு நாள் பயணம் மேற்கொண்ட இந்த குழுவினர் கடந்த, 21ம்தேதி அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினர்.

ராஜபக்சேவிடம் வலியுறுத்தப்பட்டதா? : ராமதாஸ் கேள்வி

இலங்கை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ’’இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்ததாக இலங்கைக்குச் சென்றிருந்த எம்.பி.க்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஆனால் எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

ஈழத்தை உருவாக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு கருணாநிதி கோரிக்கை


ஈழத்தை உருவாக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு கருணாநிதி கோரிக்கை -திவயின புலம்புகிறது:-
இலங்கையில் ஈழத்தை உருவாக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. முரசொலி பத்திரிகைக்கு வழங்கி செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷை உருவாக்க இந்திய செயற்பட்டது போன்று, இலங்கையிலும் இந்திய இராணுவத்தின் தலையீடு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தென் சூடானில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலயம்!


தென் சூடானில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலயம்!
சுதந்திர தேசமாக விடுதலைப் பெற்றுள்ள தென் சூடானில், சுதந்திர தமிழீழத்திற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்காரியாலம் அமைக்கும் பொறுப்பினை, அவுஸ்லியாவின் சிட்னி வாழ் தமிழர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை சிட்னியின் கொம்புஷ் ஆண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்ட மக்களே இப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். 

இளம் பெண்களின் படங்களை பல மின்னஞ்சல்களுக்கு அனுப்பும் கோஷ்டி !


இளம் பெண்களின் படங்களை பல மின்னஞ்சல்களுக்கு அனுப்பும் கோஷ்டி !
இணைய குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை தாம் அறிந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இணைய குற்றச்செயல்கள் தொடர்பாக தமக்கு 202 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவற்றில் பல முறைப்பாடுகள், பேஸ்புக் தளத்தில் முறைகேடாக ஊடுருவல் இடம்பெற்றமை தொடர்பானது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம்பெண்களின் புகைப்படங்களை இவர்கள் திருடி அவற்றை அரை நிர்வாணமாக்கி பின்னர் பல மின்னஞ்சல்களுக்கு அதனை அனுப்பப்போவதாக சில கோஷ்டியினர் பெண்களி மிரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழத்தை உருவாக்க இந்தியா உதவ வேண்டும் – இந்திய நாடாளுமன்றத்தில் ரி.ஆர்.பாலு


தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள சிறிலங்காவின் கொடுங்கோலாட்சிதொடர்கின்ற நிலையில்தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு
.நாவை இந்தியா இணங்கச் செய்யவேண்டும் என்று இந்தியநாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்றஉறுப்பினர் ரி.ஆர்.பாலு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்று கேள்வி நேரத்தின் போதுஇது பற்றிப்பிரச்சினை எழுப்பிய அவர்சிறிலங்காவில் தமிழர் வாழ்விடங்களைச் சுற்றிசிறிலங்கா இராணுவத்தினரே உள்ளனர்ஆயிரக்கணக்கான தமிழர்கள் முட்கம்பிவேலிகளுக்குப் பின்னால் வாழ்கின்றனர்கொடுங்கோலாட்சி தான் அங்குநடக்கிறது.

தந்திரிகளின் மறுமுகம் - 50 - சேரமான்

தந்திரிகளின் மறுமுகம் - 50 - சேரமான்

சொந்த மண்ணில் தன்னாட்சியுரிமையை நிலைநாட்ட முற்பட்ட ஒரேயொரு குற்றத்திற்காக இருபத்தோராம் நூற்றாண்டில் மிகப்பெரும் இனவழிப்பை சந்தித்த தேசிய இனமாக இன்று ஈழத்தமிழனம் திகழ்கின்றது. இலட்சிய உறுதி தளராத உன்னத தலைவனின் வழிகாட்டலில், உயிரை வேலியாக்கிக் களமாடிய மாவீரர்களின் அதியுச்ச ஈகத்தில், அந்த மாபெரும் தலைவனுக்கு உறுதுணையாக நின்று தோள்கொடுத்த மக்களின் அர்ப்பணிப்பில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு சுவடின்றி துடைத்தழிக்கப்பட்டு, அங்கு சிங்களப் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?


பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடினார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?

தமிழீழத்தை உருவாக்க இந்தியா உதவ வேண்டும் – இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த குரல்கள்

தமிழர் பகுதிகளில் சிங்கள ஆதிக்கமுள்ள சிறிலங்காவின் கொடுங்கோலாட்சி தொடர்கின்ற நிலையில், தமிழீழத் தனிநாட்டை உருவாக்குவதற்கு ஐ.நாவை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுவரை ஒரு இலட்சம் பெண்களுக்கு பிரித்தானியாவில் பிறப்புறுப்பு சிதைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த சட்டவிரோதமான முறையில் பெண்களுக்கு பிறப்புறுப்பு சிதைப்பு பத்து வயதிலேயே செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

குறித்த செயற்பாடுகளில் மருத்துவர் அல்லது பல் மருத்துவர் அல்லது முறையான பயிற்சி எடுக்காத மருத்துவப் பயிற்சியாளர் கூட ஈடுபடுகின்றார்களாம்.

ஒரு சில கலாசாரக் காரணங்களுக்காக இந்த நடைமுறை ஆபிரிக்கா முழுவதும் பரவியுள்ளது.

Science in the worship of Lord Shiva on Mahashivratri


Bharatiya Sher's photos
Science in the worship of Lord Shiva on Mahashivratri

The function of the 'Shiv
pindi'.

1. Emitting waves of Knowledge, Devotion and renunciation

Predominantly 'sattva' waves of knowledge, 'raja' waves of devotion and 'tama' waves of Renunciation (Vairagya) are emitted by the 'Shivpindi'.
During Mahashivratri, the emission increases by 30 percent.

மாவோயிசுட்டுகளால் கடத்தப்பட்டுள்ள தமிழ் கலெக்டரை எப்படியாவது விடுவிக்க வேண்டுமென பல மாந்த நேய குரல்கள் இங்கே ஒலிக்கின்றன…



மாவோயிசுட்டுகளால் கடத்தப்பட்டுள்ள தமிழ் கலெக்டரை எப்படியாவது விடுவிக்க வேண்டுமென பல மாந்த நேய குரல்கள் இங்கே ஒலிக்கின்றன…

இந்த புகைப்படத்தில் இருக்கும் மத்வி முகேசுக்கு வயது இரண்டு……. இவனது அப்பா காட்டிற்குள் உணவு தேடி சென்றிருந்த பொழுது தனியாக வீட்டினுள் இருந்த இந்த இரண்டு வயது குழந்தைகளின் விரல்களை நறுக்கி மாந்த நேயத்தை வெளிப்படுத்தியவர்கள் சட்டீஸ்கர் மாநில காவல்துறை, இந்திய துணை இராணுவத்தினர். அரசின் தடுப்பரண்களை மீறி வெளிவந்தது இந்த ஒரு குழந்தையின் புகைப்படம் மட்டும் தான், இது போல ஏகப்பட்ட குழந்தைகள் இந்திய துணை இராணுவம், அதிரடி படைகள் போன்ற இந்திய அரசின் படைகளிடம் தனிமும் சிக்கி சீரழந்த வண்ணம் உள்ளனர். இதுமட்டுமன்றி ஆயிரக்கணக்கான பழங்குடிகளை மாவோயிசுட்டுகள் என்ற பெயரில் அரசு சிறையில் அடைத்து துன்புறுத்தியும் வருகின்றது.

சீனாவில் தமிழிலும் அறிவுப்பு!!! தமிழகத்தில்...!!!?

சீனாவில் தமிழிலும் அறிவுப்பு!!! தமிழகத்தில்...!!!?

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் தமிழகத்தில் தமிழின் நிலை....!?

கிருஸ்ணாவைப் போன்று சுஷ்மாவுக்கும் மகிந்த ராஜபக்ச ஆப்பு!


இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜுக்கு 13வதுஅரசியலமைப்புத் திருத்தத்தையோ 
அதற்கு அப்பாற்பட்டவிடயங்களையோநடைமுறைப்படுத்துவதாகஇலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்ச எந்தவாக்குறுதியையும்கொடுக்கவில்லை என்றுஇலங்கை அரசாங்கம்கூறியுள்ளது.
12 பேர் கொண்ட இந்தியநாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி இலங்கை வந்த சுஸ்மா சுவராஜ்,இந்தப் பயணத்தின் முடிவில்கடந்த சனிக்கிழமை கொழும்பில்செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.