Translate

Saturday 31 December 2011

ரஹ்மானின் வருகை வெறும் கட்டுக்கதை

news
ரஹ்மான் யாழ்.வருகிறார் என்று வெளியான செய்திகள் வெறும் புரளி என்று அவரே தெரிவித்திருக்கிறார். தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இரு "ஆஸ்கார்' விருதுகளை வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தரவுள்ளார் என்று நேற்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.................... read more 

நியாயமான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வே தமிழரின் தேவை; அரசும் நிலைமையை உணர்ந்து நேர்மையாக செயற்பட முன்வரவேண்டும் என்கிறார் சம்பந்தன்


news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தொடர்ந்து நடத்திவரும் பேச்சுக்களில் மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து வருகிறது. நாம் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே பல தடவை முன்வைத்த விடயங்களையே வலியுறுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் நியாயமான, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம். அதுவே தமிழ் மக்களின் அபிலாஷை, எதிர்பார்ப்பு எல்லாம்............... read more 

சோதனைமுன் நில்லாத சோதிடம் மூடநம்பிக்கையே!


நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து

சென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலா ளர் என்ற தலைப்பில்  நோபல் பரிசு பெற் றுள்ள டாக்டர் வெங் கட்ராமன் ராமகிருஷ் ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதி டமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள் ளார். ............ read more 

தலைமைமீது சந்தேகம் கொள்பவர்களுக்கு மன்னிப்பு கிடையாது : பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயா


  தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். .............  read more 

இழுத்தடிக்கப்படும் தமிழர் விவகாரம்; தீர்வுதான் என்ன?(சிறப்புக்கட்டுரை)


  புத்தாண்டு பிறக்கின்ற மகிழ்ச்சியில் திளைத்து அதனை வரவேற்கின்ற சகலரும் தமது வாழ்நாளில் ஒரு வருடம் ஓடி மறைகின்றதை பெரிதுபடுத்தவோ இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்கவோ தவறி விடுகின்றனர். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டுக்கு இன்று விடைகொடுக்கப்பட்டு நாளைய தினத்தின் புதுவருட மலர்வு காத்திருக்கின்றது................ read more 

சம்பூர் நிலைமைகளை பார்வையிட்டார் இரா.சம்பந்தன்

சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பார்வையிட்டுள்ளார். 

சம்பூரில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்த பின்னர், அந்தப் பகுதிக்கு இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள முதலாவது பயணம் இதுவாகும்............... read more 

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார் சிறிலங்கா அதிபர் – சுமந்திரன் குற்றச்சாட்டு


அதிகாரப்பகிர்வு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது
தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது முன்னைய வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.................... read more 

பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படவேண்டும்-ஜ.தே.க.

13ம் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அரசாங்கம் கருதினால், சட்ட மூலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்............ read more 

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90சத வீதமானவர்கள் இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோய்


வன்னி இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்குண்டிருந்த மக்களில் 90சத வீதமானவர்கள் இலங்கைக்கு இதுவரை அறிமுகமில்லாத மோசமான புதியவகை சுவாச நோயொன்றின் தாக்கத்திற்குள்ளாகியிருப்பதாக யாழ்.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி எச்சரித்துள்ளார்................ read more 

மாகாணங்களுக்கு காணி , பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்ற ஜயலத்தின் கூற்று நகைப்புக்குரியது- அமைச்சர் கேஹலிய


மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். இல்லையேல், 13வது திருத்தச்சட்டம் இரத்துச்செய்யப்படவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
அரசாங்க பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல இது தொடர்பில் கருத்துரைக்கையில்,................ read more

போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பொது மக்கள் கொல்லப்பட்டது உண்மை: பேராசிரியர் றொகான் குணரட்ண


போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட, தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய புலமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் 'வெளிநாட்டு மண்ணில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தல்' என்ற பொருளில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்............... read more 

விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டும் அரசு! நல்லிணக்கம் ஏற்படாது என்கிறது டைம்ஸ்!!


அழிக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தொடர்பில் அரச தரப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி கொண்டு வருகின்றது. இதனால் நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.................. read more 


விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சாட்டும் அரசு! நல்லிணக்கம் ஏற்படாது என்கிறது டைம்ஸ்!!

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினாராம் மண்நிலவன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய, மண்நிலவன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, இன்று குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷவின் முன்னிலையில், சட்டமா அதிபரினால், இந்த குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்................. read more 

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில்


தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். 
 
2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ............. read more 

1200 பொதுமக்களின் மரணங்களுக்கு சிறிலங்கா படையினரே பொறுப்பு

போரின் இறுதிக்கட்டத்தில் 1200 பொதுமக்கள் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டது உண்மையே என்று சிங்கப்பூரைத் தளமாக கொண்ட தீவிரவாத ஆய்வு மற்றும் அரசியல் வன்முறைகள் குறித்த அனைத்துலக நிலையத்தின் தலைவர் பேராசிரியர் றொகான் குணரட்ண தெரிவித்துள்ளார்.............. read more 

தீர்வின் போது காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளக்கப்பட வேண்டும் – அமைச்சர் திஸ்ஸ!



இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது அதில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நிச்சயம் உள்ளடக்கப்பட்டே ஆகவேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது பிரச்சினையைத் தீர்க்கும் முழுமையான தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது …


உலகளவில் தேசிய கல்விக்கு இருந்த கௌரவத்தையும் அதன் தரத்தையும் அரசாங்கம் சீரழித்து விட்டது என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழீழம் என்ற நிலையில் மாற்றம் இல்லை! இந்தியா தான் மாற வேண்டும்: பேராசிரியர் மணிவண்ணன்


சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லைஆனால் இந்தியாதான்தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.

மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்


“மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,” என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது:

பஞ்சாயத்து தலைவருக்கு சந்தியில் வைத்து மக்கள் அடி !மானமுள்ள தமிழா அவசியம் பார் !

பஞ்சாயத்து தலைவருக்கு சந்தியில் வைத்து மக்கள் அடி !மானமுள்ள தமிழா அவசியம் பார் !     
 
கட்ட பஞ்சாயத்து கூடி நாட்டாமை தீர்ப்பு வழங்க வந்த நாடோடி நாட்டமைக்கு மக்கள் மன்றில் வைத்து மக்கள் நலன் விரும்பி மானமுள்ள தமிழன் அடித்த அடியில தலை சிதறி போச்சுதாம்

உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்


உணர்ச்சி அரசியலை தவிர்ப்பீர்

தற்போது தமிழக மக்களிடையே கட்சி பாகுபாடற்ற ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுக்கடுக்கான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களையும் அவர்களது சிந்தனையையும் தூண்டியுள்ளன. ஈழப்போரில் ஆரம்பித்து மீனவர் படுகொலை, மூவருக்கு தூக்குத் தண்டனை, கூடங்குள அணுத் திணிப்பு, முல்லைப் பெரியாறு பிரச்சனை என ஒவ்வொன்றாக அவர்களின் உணர்வுகளை தூண்டியுள்ளன.

2011-ன் பாடம்: பெருஞ் சீற்றங்கொள்... நீ பிழைத்திருக்க!


- ந.வினோத்குமார்
போராட்டம்
எங்களுடைய தேவை அல்ல...
கட்டாயம்!

- கவிஞர் காசி அனந்தன்
ரு பெரு வெடிப்புக்குப் பின்பே இந்த உலகம் என்று நாம் கருதுகிற புவி எனும் கோள் உண்டானதாக அறிவியல் சொல்கிறது. 'அடப் போடா... ஆண்டவன் படைத்திட்டான் இதை!' என்று ஆத்திகம் ஒருபுறம் பொழிப்புரை ஆற்றுகிறது. இந்த வெளி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு செல் உயிரி தோன்றி, அதன் பிறகு தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வந்த பரிணாம நிகழ்வுகளைத் தாக்குப் பிடித்து, இன்று மனிதர்களாக எழுந்திருக்கிறோம். இன்னும் சுருங்கச் சொல்வதானால், குரங்காய் குனிந்திருந்த நாம் நிமிர, இரண்டு கைகளையும் தூக்க வேண்டித்தான் இருந்தது. நாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான சக்கர நாற்காலிகளுக்கு சுங்கத்தீர்வை: பிரித்தானிய அமைப்பு கண்டனம்

பிரித்தானிய யோக்செயாரில் உள்ள PhysioNet என்ற தர்மஸ்தாபனம் இலங்கையின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு தொகை சக்கரநாற்காலிகளை அனுப்பியுள்ளது.
எனினும், இந்த சக்கர நாற்காலிகளை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்வதற்கு சுமார் 3 மாதக்காலத்தை இலங்கையின் அதிகாரிகள் எடுத்துக்கொண்டதாக PhysioNet நிறுவனத்தின் தலைவர் தோம்ஸன் தெரிவித்துள்ளார்................. read more 

மஹிந்தர் முடிவு கூறிவிட்டார் மற்றவர்கள் என்ன மாதிரி? மனோ கேள்வி

Army exibitsஇனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் போர்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ராணுவ முகாம்கள் அகற்றப்படுவது ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இந்நாட்டின் தலைவர் மஹிந்த இராஜபக்‌ஷ தனது முடிவுகளை வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால் இந்த நாட்டின் பிரதான கட்சித்தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ச அமரசிங்க, சரத் பொன்சேகா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் தத்தமது நிலைப்பாடுகளை  பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதற்கான தீர்மானக்கரமான காலம் இன்று வந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.............. read more 

Friday 30 December 2011

இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தைப் பார்வையிட்ட பான் கீ மூன் _


  இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் பார்வையிட்டுள்ளதை அவரது அலுவலகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ......... read more 

அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

சம்பந்தன் விளக்கம்

அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த் தைகள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார். எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என இவர் குறிப்பிட்டுள்ளார்.

கலாசார சீரழிவுகள் மூலம் தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கமலவாசனின் கல்விச் சாதனை


news
பாரம்பரிய கலாசாரப் பின்னணியுடன் வாழும் யாழ். மக்களின் மத்தியில் கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி எமது சமூகத்தையே அழித்து ஒழிக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் அவற்றை முறியடிப்பதற்கான ஒரு சவாலாகவே கணிதப்பிரிவில் கமலவாசனின் தேசிய சாதனை அமைந்துள்ளது. இது எமது மாணவ,மணிகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்............... read more 

காணி காவல்துறை அதிகாரம் வழங்க முடியாதென கூறும் அரசிற்கு முஸ்லீம் காங்கிரஷ் கண்டனம்!

மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாதென்று அரசாங்கம் கூறியிருப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்திருக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலியை மேற்கோள்காட்டி ‘த சிலோன் ருடே’ என்ற ஆங்கிலத்தினசரி இன்று செய்தி வெளியிட்டுள்ளது................. read more 

மனித உரிமை விவகாரங்களில் 2012ல் கனடா காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும். அலெக்ஸ் நெவே.


உலகளாவிய ரீதியில் மனித விவகாரங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை கவனத்தில் கொண்டு 2012ல் கனடா காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும் எனAmnesty International  கனடாவுக்கான செயலர் Alex Neve அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்............... read more 

டில்லியின் வலியுறுத்தலை சாதகமாகப் பரிசீலிக்குக!;

அமைதித்தீர்வு முயற்சிகள் குறித்து இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கும் அதேசமயம், புதுடில்லியின் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசு சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது............ read more

புரட்சியைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பமுடியும்


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்
புரட்சியைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பமுடியும்

துனீசிய நாடு. முகமது பவாசூசிக்கு 25 வயது. அன்று, 2010 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி.  இரண்டு போத்தல்களில் பெயின்ட் அடிக்கப்பயன்படும் தின்னரை வாங்கித் தன்மேல் ஊற்றித் தீவைத்துத் தன்னைக் கொழுத்திக் கொண்டார் முகமது பவாசூசி. இச்சம்பவத்தை, தன்னையும் அரபுப் புரட்சியையும் ஒரே சமயத்தில் கொழுத்தினார் பவாசூசி என எழுதுகிறார் அரபுச் சிந்தனையாளரான ஹமித் தபாசி. ஆம், அது அப்படித்தான் நிகழ்ந்தது. அரபுப் புரட்சி எனும் காட்டுத்தீக்கான பொறியை பவாசூசிதான் கொழுத்தினார். அரபுப் புரட்சியின் அலைகள் எகிப்தின் தாஹிரர் சதுக்கம் துவங்கி கிரெம்ளின் சதுக்கம் வரையிலும் இன்று அலையடித்துக் கொண்டிருக்கிறது..............  read more 

13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் - ஐ.தே.க

13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் - ஐ.தே.க 13ம் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது................... read more 

கொழும்பு விரைகிறார் கிருஷ்ணா..

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டு ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை வரவுள்ளார்.............. read more 

6 மாதங்களுக்கு பின்னர் சிறிலங்காவின் கொலைக்களம் பார்த்தார் பான் கீ மூன்!

6 மாதங்களுக்கு முன்னர் கைக்கு எட்டிய சிறிலங்காவின் கொலைக்களம் ஆவணப் படத்தை இப்போதுதான் பார்த்திருக்கிறார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்............. read more 

"நான் அடிமை இல்லை''

மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்­ஷ தெரிவித்தார். ............. read more 

எம்மை நாமே ஆளும் ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை-சிறிதரன்.


குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்............ read more 

இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி: பான் கீ மூன் திணறல் !


பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளார்.
இந்த காணொளி குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்தும் ஆராய்ந்த பின்னரே கருத்து வெளியிடப்படும் என இன்னர் சிட்டி பிரஸிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கறிவேப்பிலைகளுக்கு கூட்டமைப்பின் செயற்பாடு புரிவதில்லை


வடக்கு  கிழக்கில் அமைதி ஏற்பட்டால் மாத்திரமே அது தென்னிலங்கைத் தமிழருக்கும் ஏற்புடையதாக அமையும். இதனை வலியுறுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் கறிவேப்பிலைகளுக்கு கூட்டமைப்பின் நகர்வுகளை புந்துகொள்ள முடியாதிருக்கின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............ read more 

முகத்துவாரத்தில் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்

கொழும்பு  15, முகத்துவாரத்தில் கடத்தப்பட்ட தமிழ் இளம் வர்த்தகர் இரண்டு தினங்களின் பின்னர் நேற்று வியாழக்கிழமை களனி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காக்கைதீவைச் சேர்ந்த ராஜேந்திரன் முரளிதரன் (வயது 36) என்ற வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் 7 வயது பெண் பிள்ளையின் தந்தையுமாவார்............... read more 

போராட்டம் தீ பற்றி எரியலாமே தவிர போராளிகள் எரிந்து விடக்கூடாது: சீமான்


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,
’’முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் காரணமாகதான் உயிர் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது............ read more 

காணி காவல்துறை அதிகாரத்தை கொடுத்தால் என்னை கைது செய்துவிடுவார்- கதை விடுகிறார் மகிந்த!

வடகிழக்கு இணைப்பு, காவல்துறை, காணி அதிகாரப்பகிர்வு ஆகிய வற்றை பெற்றபின்னர் தன்னை கைது செய்வதற்கு திட்டமிட்டு ள்ளனர் என்றும் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே தமிழ்க் கூட்டமைப்பினர் உள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.................. read more 

மகிந்த ஆட்சி ஜொலிக்கிறது- இவ்வருடத்தில் 1637 பாலியல் பலாத்காரம்!

இலங்கையில் பாலியல் பலாத்கார சம்பவங்களின்  வீதம் அதிகரித்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்தகால புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. 13 வயதிற்றும் 16 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள் மீதான வல்லுறவுகளே...........  read more 

காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத தீர்வு முழுமையாகாது; அவற்றை உள்ளடக்கியே ஆகவேண்டும் அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் தெரிவிப்பு

news
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது அதில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நிச்சயம் உள்ளடக்கப்பட்டே ஆகவேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது பிரச்சினையைத் தீர்க்கும் முழுமையான தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண "உதயனு"க்குத் தெரிவித்தார்.......... read more 

இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ஜனாதிபதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு; சர்வதேசத்தை ஏமாற்றுவதாகவும் சாடல்

இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு தமிழ் மக்களே காரணம் எனக் கூறி, ஜனாதிபதி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயல்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது. ஜனாதிபதி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாடியுள்ளது............. read more 

Thursday 29 December 2011

இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருகிறது - கனேடிய வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தின் சர்வதிகாரப்போக்கு மேலோங்கி வருகிறது - கனேடிய வெளியுறவு அமைச்சர்
03 12 2011
இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் John Baird கனேடிய நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

Wednesday 28 December 2011

புலம் பெயர்ந்து வந்த ஈழத்து இளம் இயக்குனரின் அனலாய் ஒரு பகிரங்க கடிதம்..!


புலம் பெயர்ந்து வந்த ஈழத்து இளம் இயக்குனரின் அனலாய் ஒரு பகிரங்க கடிதம்..!


புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே.!
நாம் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவரிடம் அடிமையாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் அந்த வகையில் ஈழத்து சினிமா ஒன்று இருக்கிறதா ? இல்லையா ?
ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு இனத்தின் பிரச்சனையை உலக அரங்கிற்கு சுலபமாக எடுத்துச் செல்லலாம்.
எமக்கு என்று ஒரு சிறத்த அரசாங்கம் இருந்துள்ளது அதில் மக்களுக்கு வேண்டிய அனைத்து துறைகளும் இருத்துள்ளதை இத்த உலகம் நன்கு அறியும்.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி எடுப்பதற்காக ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ செட்டு போட்டு காட்சி அமைத்து படப்பிடிப்பு செய்வார்கள்.

மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சிரச தொலைக் காட்சி செயற்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்திய மாணவர் இங்கிலாந்தில் சுட்டு கொலை


இந்தியாவை சேர்ந்தவர் அனுஜ் பிட்வே என்பவர் இங்கிலாந்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுநிலை படிப்பு படித்து வந்த இவர், கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு மான்செஸ்டருக்கு நண்பர்களுடன் நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.

விஞ்ஞானப் பிரிவில் ரோயல் கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்


மீள வெளியாகியுள்ள சரியான உ/த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் பிரமித் றுவான் பத்திரண முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆணைக்குழு எல்லை மீறியுள்ளது- சம்பிக்க _


  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பக்கச் சார்பாகவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆணைக்குழு எல்லை மீறிய நிலையில் செயற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.............. read more 

தமிழ் கட்சிகளின் ஒருமித்த குரலே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி- மனோ கணேசன் _




  பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வைத் திணிக்க முயல வேண்டாம் என்றும், போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதுவே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .......... read more 

குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு பிரித்தானியா வலியுறுத்தல் _


  தங்காலைச் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜை படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அவரது காதலியான ரஷ்ய யுவதி மீதான மோசமான தாக்குதல் ஆகியவை மிகவும் பாரதூரமானவையென தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது............... read more 

தமிழ் மக்களின் உரிமைகளை தாரைவார்த்து கொடுத்துவிடமாட்டோ; அதற்கான அதிகாரம் தனக்கில்லை என்கிறார் இரா. சம்பந்தன்

essayஇந்த நாட்டின் நிர்வாக மற்றும் நீதி துறைகளின் அதியுச்ச பதவிகளில் இருந்தவர்கள் 18 ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பை மூன்றே மூன்று ஜே.வி.பியினர் எதிர்த்ததும் நீதிமன்றம் பிரித்ததை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம். அடிப்படை விடயங்களில் நாம் மிகவும் உறுதியாக இருப்போம். ............... read more 

இலங்கைக்கு எதிராக ஜெனிவா கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவருகிறது மேற்குலகம்

news
 எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொட ரில் இலங்கைக்கு எதிரான கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருக்கின்றன எனத் தகவல் வெளியாகியுள்ளது............... read more