Translate

Wednesday 28 December 2011

இந்திய மாணவர் இங்கிலாந்தில் சுட்டு கொலை


இந்தியாவை சேர்ந்தவர் அனுஜ் பிட்வே என்பவர் இங்கிலாந்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லான்கேஸ்டர் பல்கலைக்கழகத்தில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் முதுநிலை படிப்பு படித்து வந்த இவர், கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு மான்செஸ்டருக்கு நண்பர்களுடன் நேற்று சுற்றுலா சென்றுள்ளார்.

இதன் போது 2 வாலிபர்கள் அனுஜ்ஜிடம் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்த வேளை திடீரென தாம் வைத்திருந்த துப்பாக்கியால் அனுஜ்ஜை நெற்றியில் சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அனுஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்குஇது குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் 2 வாலிபர்கள். அவர்களுக்கு 22 வயது இருக்கும். ஆனால் கொலைக்கான பின்னணி என்னவொன்று தெரியவில்லை. என்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை இங்கிலாந்து பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment