Translate

Friday 9 September 2011

இலங்கையில் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதா? – மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து

Posted Image
மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

களமிறக்கப்படும் சமூக விரோதிகள் - சிங்கள அரசின் மறுவியூகம்?



புலம்பெயர்வாழ் தேசங்களில் தமிழீழ மக்களிடையே குழப்பம் விளைவித்து, தமிழீழ தேசிய எழுச்சியை சிதைக்கும் நடவடிக்கைகளில் சமூக விரோதிகளை சிங்கள அரசு களமிறக்கியிருப்பதை உறுதிப்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள் பிரித்தானிய ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

பிரித்தானிய தலைநகர் இலண்டனுக்கு வெளியேயுள்ள நோர்த்ஹாம்ப்ரன் பகுதியில் அமைந்திருக்கும் பல்பொருள் மொத்த விற்பனை நிலையம் ஒன்றை 2010 சனவரி மாதம் கொள்ளையிட்டு அங்கிருந்த ஐந்து இலட்சத்து பதினெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியான பொருட்களை சூறையாடிய குழுவொன்று, இவ்வாரம் நோர்த்ஹாம்ப்ரன் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க கூண்டோடு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இவ்வுண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது............ read more 

கொன்ற தமிழர்களின் உயிர் போதவில்லையா?

Posted Imageகொன்ற தமிழர்களின் உயிர் போதவில்லையா?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களையும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் தள்ளுபடி செய்துள்ளார். ‘21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து, 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது ’ என 26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு


இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை வழங்க இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று கோரி தில்லியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம;
புது தில்லி, செப். 7: இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசியதாவது:...............  read more

புலம்பெயர் தமிழ்மக்களுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சிறீலங்காவுக்கு எதிராக ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது உள்நாட்டில் வாழும் தமிழர்களுக்கே ஆபத்தாக அமையும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.............. read more 

பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும்! - விமல் வீரவன்ச

அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்........... read more 

சம்பிக்க ரணவக்க உளறுகிறார் - மனோ கணேசன் குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்...........  read more 

இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள்; தமிழ், சிங்கள மக்களுக்கு பாதிப்பு : சம்பிக்க


  ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில்இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்தினரால் தீர்மானங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து புது யுகத்திற்குள் காலடிவைத்துள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு பாதகமாக அமையும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்..................... read more 

Thursday 8 September 2011

பொதுமக்களின் இழப்புகளைத் காக்க அமெரிக்கா முயன்றது முடியவில்லை காரணம் கோத்தபாய

 பொதுமக்களின் இழப்புகளைத் காக்க அமெரிக்கா முயன்றது முடியவில்லை 
காரணம் கோத்தபாய!

போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களின் இழப்புகளைத் தவிர்ப் பதற்காக எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடு நிலையாளர் ஒருவரை இலங்கையை ஏற்க வைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது........... read more 

2000 மக்களின் தலைகளை வெட்டிய இலங்கை இராணுவம் ஆதாரம்


2000 மக்களின் தலைகளை வெட்டிய இலங்கை இராணுவம் ஆதாரம் .( Photo in)



இந்த அதிர்சிகர நிழல் படங்களை இதய பலவீனமானவர்கள் கர்ப்பிணி பெண்கள்  .சிறார்கள் பார்க்க முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது .கவனத்தில்  கொள்ளவும்  .இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்த போராளிகள் மக்கள்பலரை சித்திரை வதை செய்த பின்னர் இலங்கை இராணுவம் அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ளது .இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்களின் தலைகளை ,மார்புகளை  வெட்டி படுகொலை செய்துள்ளதாகஇராணுவ அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார் .இவர் தற்போது வெளிநாடொன்றில் தன்னை உரு மறைப்பு செய்து வாழ்ந்து வருகின்றார் ............. read more 

தமிழர்களின் குரலுக்கு மதிப்பளிக்காத இந்திய மத்திய அரசாங்கம்


தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் குரலை இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்து வருவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் திருகோணமலை சம்பூரில் அனல் மின்சார மையத்தை அமைப்பதற்காக இலங்கையுடன் இந்தியா உடன்படிக்கை செய்துக் கொண்டமையை அவர் கண்டித்துள்ளார்.......... read more

இலங்கைக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு : சீன அதிபர்


கொழும்பு, செப்.8: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள எந்த ஒரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா உறுதியளித்துள்ளது.
இந்த உறுதிமொழியை சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, இலங்கை பிரதமரிடம் தெரிவித்துள்ளார்........... read more 

தமது சமூகக் கடமையை உறுதிசெய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை பாசிச அரச மனித விரோதிகளால் தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சமூகவிரோதத் தாக்குதலான மர்ம மனிதர்களின் தாக்குதல் நேற்றும் ஆங்காங்கே நடைபெற்றது.
 இதே வேளை யாழ் பல்கலைக் கழக் மாணவர்கள் இதற்கான எதிர்ப்பைத் தெரிவித்து தமது சமூகக் கடமையை உறிதிசெய்துள்ளனர். 
திறந்த வெளிச் சிறைச்சாலையான தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து மகிந்த பாசிசத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் என்ற வகையில் நேற்று -07.09.2010- நடைபெற்ற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவர்கள் இதன் போது வெளியிட்ட அறிக்கை:............ read more 

காங்கிரஸை காலி செய்வேன் : சீமான் ஆவேசம்!


காங்கிரஸை காலி செய்வேன் : சீமான் ஆவேசம்!   


seeman-kerala-07-09-11
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்று விடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உன் வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது என்றார் சீமான்............... read more 

தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்


தமிழ் பேசும் மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து .யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

வியாழன், 8 செப்டெம்ப்ர், 2011

தமிழர் தாயகப் பிரதேசங்களில் கிறீஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று அடையாள கல்விப் புறக்கணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்............ read more 

"நாங்கள் பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம்" என்று கூறினால், அதன் உண்மை தெரியாமல் உலகம் ஏற்கும் என்று நினைக்கும் சிங்களப் பேரினவாதம்


இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது

  • ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக ஒரங்கட்டி, அவர்களுக்கென்று பாரம்பரிய பூமி என்று ஏதுமில்லை என்று நிரூபிக்க சிங்கள குடியேற்றங்களை மட்டும் செய்வதோடு நின்றுவிடாமல், அப்பகுதிகளின் பெயர்களை சிங்களத்திற்கு மாற்றம் செய்து, பார்க்கும் இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளை வைத்து, எங்கு நோக்கினும் தமிழர் பூமி என்கிற அடையாளம் என்று ஏதுமிருக்கக் கூடாது என்று திட்டமிட்டு செயலாற்றி வரும் ஒரு இனவெறி அரசி்ன் அதிபராகவே மகிந்த ராஜபக்ச உள்ளார் என்பதை உலகம் வேகமாக புரிந்துகொண்டு வருகிறது............. read more 

திருமாவளவனு‌க்கு ஆந்திர அரசு ‌விருது

திருமாவளவனு‌க்கு ஆந்திர அரசு ‌விருது 


ஆந்திர அரசின் கலாச்சார மையம் சார்பில் ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல்.திருமாவளவனுக்கு அம்பேத்கர் தேசிய விருது இன்று வழங்கப்படுகிறது.

இது தொட‌ர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திர அரசின் கலாச்சார மையமும் தலித்கலா மண்டலி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் தலைவர்களுக்கு 'அம்பேத்கர் தேசிய விருது' என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது................... read more 

சிவிலியன்கள் வாழும் இடங்கள் தெரிந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது


சிவிலியன்கள் வாழும் இடங்கள் தெரிந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/tt-amnesty_international1.jpgஅரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் அரச ஊழியர்களே அதிகம் காணப்படுவதாகவும் கொலைகள், ஆட்கடத்தல் தொடர்பில் சான்றுகளை ஆராய இது தவறிவிட்டது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது................ read more 

அதிகரித்துவரும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம்


அதிகரித்துவரும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மற்றைய நாடுகளின் பாரிய உதவியுடன், பங்களிப்புடன் இலங்கை வென்றுள்ளது. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து பல்வேறுபட்ட முறைகளில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தினமும் அதிகரித்த வண்ணமாகவுள்ளது. இவற்றை இலங்கையினால் சமாளிக்க முடியுமா?...........   read more 

Wednesday 7 September 2011

மாயாவதி விமானத்தை அனுப்பட்டும்: அசாஞ்ச் பதிலடி


நான் இந்தியா வர மாயாவதி விமானத்தை அனுப்பட்டும் - விக்கிலீக்ஸ் அசாஞ்ச் பதிலடி
 1/1 

லண்டன், செப். 8 - நான் இந்தியா வருவதற்கு மாயாவதி தமது சொந்த விமானத்தை அனுப்பி வைக்கட்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் மாயாவதித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் மாயாவதியின் ஆடம்பரம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை குறித்து டெல்லி அமெரிக்க தூதரகம் தனது தலைமையகத்திற்கு அனுப்பிய செய்திகளை சமீபத்தில் விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் அம்பலமாக்கியது. இதில் ஒரு புதிய செருப்பு வாங்குவதற்காக மாயாவதி அரசு விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது............... read more 

பின் கதவால் அவசரகாலநிலை மீண்டும் நடைமுறையில் சுட்டிக்காட்டுகிறார் யோகராஜன்


பின் கதவால் அவசரகாலநிலை மீண்டும் நடைமுறையில் சுட்டிக்காட்டுகிறார் யோகராஜன் 

yograjan_mpசர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவசரகாலச் சட்டத்தை ஊடகங்கள் ஊடாக அரசு நீக்கிய போதும் அது தற்போது பின் கதவினூடாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐ.தே.க. வின் தேசியப்பட்டியல் எம்.பி.யான ஆர்.யோகராஜன் தெரிவித்தார்............  read more 

பௌத்த சிங்களவர் அனுபவிக்கும் சகல உரிமையும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும் ஐ.தே.க.வின் கண்டி மேயர் வேட்பாளர் நிரஞ்சன் விஜேரட்

unpநாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சமூகமும் இனக்குழுவும் பாரபட்சமாக நோக்கப்படக்கூடாதெனவும் பௌத்த சிங்கள மக்கள் அனுபவிக்கக் கூடிய அனைத்து உரிமைகளும்............ read more 

பௌத்த சிங்களவர் அனுபவிக்கும் சகல உரிமையும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கும் இருக்க வேண்டும் ஐ.தே.க.வின் கண்டி மேயர் வேட்பாளர் நிரஞ்சன் விஜேரட்

மெனிக்பாம் முகாம் போல் எங்குமே பார்த்ததில்லை

மெனிக்பாம் முகாம் போல் எங்குமே பார்த்ததில்லை 
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் முழு அழிவுகளையும் தான் பார்வையிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு கூறியிருந் ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், தான் பார்வையிட்டதில் மெனிக்பாம் அகதிகள் முகாமின் நிலை சூடானின் தார்பூர் முகாம்களின் நிலையை விட மிகவும் மோசமானதாக இருந்ததாக பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது............. read more 

புதுடில்லியில் குண்டுவெடிப்பு: தமிழர் தலைவர் கண்டனம்


புதுடில்லியில் இன்று காலை டில்லி உயர்நீதிமன்ற நுழைவு வாயில் அருகில் குண்டு வெடிப்பு திடீரென்று நிகழ்ந்துள்ளது மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்............ read more 

பயங்கரவாத தடைச்சட்ட விதிகளை குற்றவியல் தண்டனையின் கீழ் கொண்டுவர முயற்சி: தயாசிறி _


  பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட சரத்துகளையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான விதிகளையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார். வடக்கு , கிழக்கில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டிருந்த இராணுவ மயம் இன்று நாடளாவிய ரீதியில் வியாபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்................... read more 

மருத்துவமனை மீதான தாக்குதல் நடாத்தியது 53வது டிவிசன்


மருத்துவமனை மீதான தாக்குதல் நடாத்தியது 53வது டிவிசன்

 58வது டிவிசன் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு, அந்த அறிக்கை தவறானது என்றும், தாக்குதல் நடாத்தியது 53வது டிவிசன் என்றும் பதிலளித்திருந்தார்........ read more 

தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் இரண்டு முயற்சிகள் – விக்கிலீக்ஸ்


தோல்வியில் முடிந்த அமெரிக்காவின் இரண்டு முயற்சிகள் – விக்கிலீக்ஸ்

போரின் இறுதிக்கட்டத்தில் எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள  அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது........... read more 

Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 1 to 5

Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 1
Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 2
Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 3
Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 4
Tamil National Alliance Meeting Tamil Diaspora in London 4.9.2011 - PART 5

ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது – விடுதலையின் பின் சீமான் ஆவேசம்!


ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது – விடுதலையின் பின் சீமான் ஆவேசம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது............ read more 

அனைத்துலக விசாரணை; ராஜதந்திர முயற்சி மும்முரம்; அரசியல் கட்சிகளின் கருத்தறிய கொழும்பிலுள்ள தூதுவர்கள் முயற்சி


அனைத்துலக விசாரணை; ராஜதந்திர முயற்சி மும்முரம்; அரசியல் கட்சிகளின் கருத்தறிய கொழும்பிலுள்ள தூதுவர்கள் முயற்சி

போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்றை இலங்கைக்கு எதிராக ஏற்படுத்துவது தொடர்பாக இங்குள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறியும் முயற்சியில்  கொழும்பிலுள்ள ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளனர்........... read more 

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன!


கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன! 
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது தெற்கிலிருந்து அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்தோம். எனவே, எமக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு மட்டுமல்ல, மனிதநேயமும் கூட. இவ்வாறு தெஹிவளை � கல்கிஸை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் கீழ் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் நவசமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்............ read more

அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன்


அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன் 
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை அரசாங்கம் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார். அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீளவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.............. read more 

தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன்.


தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன். 
இலங்கையில் போருக்கு பின் மீள் குடியேறும் தமிழர்களுக்கு புனர்வாழ் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தக்குற்றச்சாட்டை கோயம்புத்தூரில் வைத்து சுமத்தியுள்ளார். எனவே இந்தியா மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்................. read more 

புதுக்குடியிருப்பு மருத்துமனை மீதான தாக்குதல் நடத்தியது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா.


புதுக்குடியிருப்பு மருத்துமனை மீதான தாக்குதல் நடத்தியது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா.


`சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த “Lies Agreed Upon,” என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில்நேற்று திரையிடப்பட்டுள்ளது.இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்................... read more 

மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை


மாத்தறையில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுஇடம் சிங்களவர்களால் தீக்கிரை


சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது............... read more 

டெல்லி குண்டு வெடிப்பில் 9 பேர் பலி (காணொளி)

டெ‌ல்‌லி உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அருகே நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 9 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். 45க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் படுகாய‌ம் அடை‌ந்து‌ள்ளன‌ர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எ‌ப்போது‌‌ம் பரபர‌ப்புட‌ன் காண‌ப்படு‌ம் டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ன் 5வது நுழைவு வா‌யி‌ல் அருகே இ‌ன்று காலை ச‌க்‌தி வா‌ய்‌ந்த கு‌ண்டு வெடி‌த்ததாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.............. read more 

“பாதுகாப்பு வலயம்” முற்றாக அழிக்கப்பட்டிருந்தது: நேரில் பார்த்ததை சொன்ன பான் கீ மூன்


இலங்கைப் போரின் இறுதிப் பகுதியில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'பாதுகாப்பு வலயப் பகுதி' முழுமையாக அழிக்கப்பட்டிருந்த காட்சியை தான் நேரில் பார்த்ததாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக கேபிள்களை ஆதாரம்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பிந்திய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது............ read more 

தமிழர் விரோதி நாராயணின் நரிப் புத்தி


தமிழர் விரோதி நாராயணின் நரிப் புத்தி

சிறிலங்கா விவகாரத்தில் தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே .நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது............. read more 

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் போர்க் குற்றாவாளி -ECCHR


மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் போர்க் குற்றாவாளி -ECCHR

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது – European Centre for Constutitional and Human Rights (ECCHR) – ஐரோப்பிய
அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான மையம் போர்மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையினை இந்த அமைப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்டுள்ளது................ read more

என்னடா பதில் சொல்லப் போறீங்க?


என்னடா பதில் சொல்லப் போறீங்க?

ஆக்கம்: ம.கா.செந்தில்குமார்
''ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உயிர்களை சிங்கள வெறியர்கள் கொன்று குவித்தபோது, நாமெல்லாம் என்ன செய்தோம்? இங்குள்ள அரசின் மீதோ அல்லது ஓரிரு அரசியல்வாதிகள் மீதோ குற்றம் சுமத்திவிட்டுத் தப்பிக்க நினைத்தோம். அந்த இன அழிப்புத் துரோகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது............... read more 

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ். இந்து மாணவர்கள் தெரிவு

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு யாழ். இந்து மாணவர்கள் தெரிவு


இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடாத்திய தரம் 10 மாணவர்களுக்கான 8 ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான சுந்தரேஸ்வரன் வித்யாசாகர்,ஆனந் தராஜா ஹரிசங்கர் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் தென்னாபிரிக்க டேபன் மாநகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கு பற்றவுள்ளனர்.
இதில் 50ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 300ற்கு அதிகமான மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அறிந்தும் அறியாமலிருந்த உதவி வழங்கும் நாடுகள்

பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அறிந்தும் அறியாமலிருந்த உதவி வழங்கும் நாடுகள்


விக்கிலீக்ஸில் பரபரப்புத் தகவல்

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந் தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.இருந்த போதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக் கொண்டன என்று தமக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது........... read more 

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறு அதிகரிப்பு

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியக்கூறு அதிகரிப்பு


பான் கீ மூன் தீவிர ஆலோசனை

அடுத்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்தவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன............. read more 

Tuesday 6 September 2011

இந்தியாஇலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவு

புது தில்லி, செப். 5: இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது............ read more