
மெக்சிகோ, அவுஸ்திரேலியா, சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இதயத்தில் ரத்தம் என்ற இருவட்டுக்கு பின்னூட்டல்கள் வந்துள்ளது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.

கொன்ற தமிழர்களின் உயிர் போதவில்லையா?
அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மாணவர்களை சந்திக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்........... read more
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கையிலே வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாக அமையும் என்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்து பாரதூரமான இனவாத பிரகடனமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்........... read more 

இந்த அதிர்சிகர நிழல் படங்களை இதய பலவீனமானவர்கள் கர்ப்பிணி பெண்கள் .சிறார்கள் பார்க்க முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது .கவனத்தில் கொள்ளவும் .இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்த போராளிகள் மக்கள்பலரை சித்திரை வதை செய்த பின்னர் இலங்கை இராணுவம் அவர்களின் தலைகளை வெட்டி கொலை செய்துள்ளது .இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்களின் தலைகளை ,மார்புகளை வெட்டி படுகொலை செய்துள்ளதாகஇராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .இவர் தற்போது வெளிநாடொன்றில் தன்னை உரு மறைப்பு செய்து வாழ்ந்து வருகின்றார் ............. read more 
காங்கிரஸை காலி செய்வேன் : சீமான் ஆவேசம்!![]() இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வரப்போகிறது. பாதி இந்தியாவை உனக்கு எந்த ஒரு சீட்டும் கிடைக்காமல் அன்னா ஹசாரே காலி பண்ணிவிடுவார். தென் இந்தியா காங்கிரஸ் கட்சியை நான் காலி சென்று விடுவேன். கேரளாவில் போய் என் நண்பர்கள் மூலம் என்னுடைய மொழியை பெயர்க்க வைத்து உன் வண்டவாளங்களை எடுத்துச் சொல்வேன். ஆந்திரா சென்று என் அண்ணி நடிகை ரோஜா மூலம் தகவலை மொழிபெயர்த்து அங்கே உனக்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்துவிடுவேன். நாங்கள் இருக்கும் வரை நீ ஆட்சிக்கு வர முடியாது என்றார் சீமான்............... read more |


அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் அரச ஊழியர்களே அதிகம் காணப்படுவதாகவும் கொலைகள், ஆட்கடத்தல் தொடர்பில் சான்றுகளை ஆராய இது தவறிவிட்டது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது................ read more | அதிகரித்துவரும் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் |
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மற்றைய நாடுகளின் பாரிய உதவியுடன், பங்களிப்புடன் இலங்கை வென்றுள்ளது. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து பல்வேறுபட்ட முறைகளில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தினமும் அதிகரித்த வண்ணமாகவுள்ளது. இவற்றை இலங்கையினால் சமாளிக்க முடியுமா?........... read more |
சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவசரகாலச் சட்டத்தை ஊடகங்கள் ஊடாக அரசு நீக்கிய போதும் அது தற்போது பின் கதவினூடாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐ.தே.க. வின் தேசியப்பட்டியல் எம்.பி.யான ஆர்.யோகராஜன் தெரிவித்தார்............ read more
நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சமூகமும் இனக்குழுவும் பாரபட்சமாக நோக்கப்படக்கூடாதெனவும் பௌத்த சிங்கள மக்கள் அனுபவிக்கக் கூடிய அனைத்து உரிமைகளும்............ read more
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் முழு அழிவுகளையும் தான் பார்வையிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு கூறியிருந் ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன், தான் பார்வையிட்டதில் மெனிக்பாம் அகதிகள் முகாமின் நிலை சூடானின் தார்பூர் முகாம்களின் நிலையை விட மிகவும் மோசமானதாக இருந்ததாக பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது............. read more 
58வது டிவிசன் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான எறிகணைத் தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு, அந்த அறிக்கை தவறானது என்றும், தாக்குதல் நடாத்தியது 53வது டிவிசன் என்றும் பதிலளித்திருந்தார்........ read more
போரின் இறுதிக்கட்டத்தில் எஞ்சியுள்ள போராளிகள் சரணடைவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது........... read more
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை எனது தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறவுள்ளது............ read more | கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு: விக்கிரமபாகு கருணாரட்ன! |
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது தெற்கிலிருந்து அவர்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்தோம். எனவே, எமக்கு ஆதரவளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தார்மீக பொறுப்பு மட்டுமல்ல, மனிதநேயமும் கூட. இவ்வாறு தெஹிவளை � கல்கிஸை மாநகரசபைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் கீழ் மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் நவசமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்............ read more |
| அவசரகாலச்சட்டம் பின்கதவால் நடைமுறைப்படுத்தப்படுகிறது: எம்.ஏ.சுமந்திரன் |
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அச்சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தை அரசாங்கம் நியமித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார். அவசரகாலச்சட்டம் பின்கதவால் மீளவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.............. read more |
| தமிழர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மந்தகதியில் நடக்கிறது! இந்தியாவே எமக்கு உதவ வேண்டும் : சீனித்தம்பி யோகேஸ்வரன். |
இலங்கையில் போருக்கு பின் மீள் குடியேறும் தமிழர்களுக்கு புனர்வாழ் நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தக்குற்றச்சாட்டை கோயம்புத்தூரில் வைத்து சுமத்தியுள்ளார். எனவே இந்தியா மீள்குடியேறும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்................. read more |
`சிறிலங்காவின் கொலைக்களங்கள்` ஆவணப்படத்துக்குப் போட்டியாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த “Lies Agreed Upon,” என்ற ஆவணப்படம் ஐ.நா வளாகத்தில்நேற்று திரையிடப்பட்டுள்ளது.இதையடுத்து ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹன்னவும், பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்................... read more
சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது............... read more
டெல்லி உயர் நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாகி உள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா விவகாரத்தில் தமிழர் விரோத நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனே காரணம் என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுயிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் முக்கியமான ஆலோசகராக எம்.கே .நாராயணனே இருந்ததாகவும், சிறிலங்கா விவகாரத்தில் அவரே சிங்கள சார்பு நிலையை எடுக்குமாறு அவருக்கு ஆலோசனை கூறியதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது............. read more
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்காப் படைத்தரப்பினர் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பின்னணியில், சிறிலங்காவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது – European Centre for Constutitional and Human Rights (ECCHR) – ஐரோப்பிய
இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் சங்கம் நடாத்திய தரம் 10 மாணவர்களுக்கான 8 ஆவது தேசிய கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பேர் கொண்ட அணியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான சுந்தரேஸ்வரன் வித்யாசாகர்,ஆனந் தராஜா ஹரிசங்கர் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் தென்னாபிரிக்க டேபன் மாநகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கு பற்றவுள்ளனர்.
வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் தாக்கியதை இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் அறிந்திருந் தன என்று அண்மையில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.இருந்த போதிலும், தாம் அறிந்தவற்றை பகிரங்கப்படுத்துவதை உதவி வழங்கும் நாடுகள் நிறுத்திக் கொண்டன என்று தமக்கு கிடைத்த விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுவதாக பிபிசி தெரிவித்துள்ளது........... read more
அடுத்த வாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்தவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்தன............. read more