Translate

Saturday 3 September 2011

லண்டனில் நாளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கின்றனர்.


லண்டனில் நாளை த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்திக்கின்றனர்.


நாளை மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் லண்டன் தமிழர்களைச் சந்திக்கவுள்ளனர். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள அலெக்ஸ்ஸான்ரா வீதியிலுள்ள சொரஸ்ரியன் சென்ரரில் நாளைமாலை சுமார் 5.30 மணிக்கு இச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இச் சந்திப்பின்போது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க உள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தீர்வு தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும் அறியப்படுகிறது.......... read more

இலங்கை அரசை ஒருபோது நம்பமுடியாது: அதிர்வுக்கு நா.ம.உ ஸ்ரீதரன் பேட்டி !

இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை என்பது எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர் ப.ஸ்ரீதரன் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்களும், அவை பாதியில் முறிந்துபோயுள்ளது தொடர்பாகவும் அவர் மனம் திறந்து தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். இலங்கை அரசை ஒருபோதும் நம்பமுடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர் மூன்றாம் நாடு ஒன்றின் மத்தியஸ்தம் தேவை என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்............ read more 

Thursday 1 September 2011

Walthamstow Katrpaga Vinayagar Temple Ther (4-09-2011)


Public Meeting to help the War Effected Families in Sri Lanka


தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது - அரிமாவளவன்

எல்லைத் தமிழன் mathan.dxb@gmail.com
தோழர் அரிமாவளவனின்  உணர்ச்சி பூர்வமான பதிவு நியாயமான ஒன்று.  

வட இந்தியாவின் இந்தி பேசும் பகுதியில் உள்ள இயல்பான ஆதிக்க வெறி இதுதான்.
அவர்கல் காசுமீரிகளை மதிக்கமாட்டார்கள்.  பீகாரி,பெங்காளி
,அச்சாமி,பஞ்சாபியர் போன்ற இதற வட மாநிலத்தவரையும் மதிக்கமாட்டார்கள்.
காசுமீர்,மணிப்பூரில்  நடுவண் அரசின் துப்பாக்கிகள் இன்றும்
வெடித்துக்கொண்டிருக்கின்றன.

கனடா - ரோரன்ரோவில் இடம்பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொதுக்கூட்டம்.


தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப்பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும்முனைப்பாகச் செயற்பட்டு வருகின்றஉலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர்பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைகனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலைஏழு  மணியளவில் ஆரம்பமானதுஉலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ்ஜேஇம்மானுவேல்அடிகளாரும்உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு  பேச்சாளர்களாககலந்து கொண்டனர்.

57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in)

சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது இறுதி பாதுகாப்பு வலயம் என அழைக்க  பட்ட பகுதிகளிற்குள் தங்கி இருந்த மக்களையும் போராளிகளையும் கைது செய்து  கொன்று குவித்தது . இவ்வாறாக  போராளிகள் குழு ஒரு கொட்டகைக்குள்  பாதுகாப்பு தேடி வாழ்ந்த வேளை அவர்கள் மீது நச்சு எறிகுண்டுகளை வீசி கொன்று அழித்துள்ளது........... read more 
அனைவரும் ஒன்றாய் வாரீர் .ஓரணி சேர்வீர். இது வரலாற்று கடமை .

இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வே


எந்தச் சந்தர்ப் பத்திலும் முப்படையினரைக் கடமையில் ஈடுபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு வழங்கப்பட்டால் இராணுவ ஆட்சியை நோக்கிய நகர்வாகவே அது கருதப்படும்.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்............ read more 

ராஜபக்சே புதிய கட்டுப்பாடு

அவசர நிலை அமலில் இருந்த கால கட்டத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் தான் இருப்பார்கள். எவரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். 


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழர்கள் பலியானார்கள் மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 1200 பேரை கைது செய்ததாக இலங்கை அரசு அறிவித்தது. ........ read more 

சீன உளவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு உளவுபார்த்தது:-


சீன உளவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு உளவுபார்த்தது:-

சீன உளவுக் கப்பல் ஒன்று கொழும்புத்துறைமுகத்தில் நங்கூரமிட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை குறித்த உளவுக் கப்பல் கண்காணித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
குறித்த சீன உளவுக் கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது........... read more 

அரசு மீதான மக்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது


முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்.
அரசு மீதான மக்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது - அ. வரதராஜப்பெருமாள்
 வடக்கு கிழக்கு மாகாணங்கள் பூராவும் குறிப்பாக தற்போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் மர்ம மனிதர்கள் பற்றிய பயத்தில் மக்கள் ஒவ்வோர் இரவும் பயந்து நடுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.இரவில் ஆண்கள் நித்திரை முழித்து தமது பெண்டிர் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட வேண்டியுள்ளது. பெண்கள் எந்த நேரத்தில் மர்ம மனிதர்கள் தங்கள் வீடுகளுக்கும் வந்துவிடுவார்களோ என்று பயந்து பயந்தே இரவுகளைக் கழிக்க வேண்டியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் பயத்தில் இரவில் நித்திரை முழிப்பதனால் அடுத்த நாள் அவர்கள் தமது வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாது உள்ளனர்................ read more 

இலங்கைக்கு இந்திய படையை அனுப்பி ஈழத்தை பெற்றுதா -திருமா நாடாளுமன்றில் ஆவேசம்


இலங்கைக்கு இந்திய படையை அனுப்பி ஈழத்தை பெற்றுதா -திருமா நாடாளுமன்றில் ஆவேசம் -


 
இலங்கைக்கு இந்தியா படைகளை ஈழத்தினை  பெற்று தரும் படி தொல் திருமாவளவன் ஆவேசமாக நாடாளுமன்றில் அதிரடி பேச்சினை பேசியுள்ளார் . 
கேட்டால்  வீடியோ பார்த்தால் நீங்களும் விபப்பீர்கள் .>!............. read more 

அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் !.>


அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் !.>!

தமிழீழ விடுதலை புலிகளின் மா மேதையும் தேசத்தின் குரலுமான
அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியாரான அடேல் பாலசிங்கத்தை கைது செய்து
இலங்கை கொண்டு செல்ல கோத்தா  மற்றும் மகிந்தா புதிய வலை விரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் .
இதற்கு பல நாடுகள் மீதினில் இவர் மீதான அப்பண்ட போலி குற்ற சாட்டை   முன் வைத்துள்ளன .
இவர் சிறார்களிற்கு பயிற்சி அளித்தது   .புலிகள் பாசறையில் ஆயுத பயிற்சி பெற்றது  .மற்றும்........... read more 

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு கூட்டமைப்பு மனு!



சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனுவொன்றைக் கையளித்துள்ளது.

குருநகரில் பதட்டம்! நூற்றுக்கணக்கான இராணுவம் குவிப்பு!


குருநகரில் பதட்டம்! நூற்றுக்கணக்கான இராணுவம் குவிப்பு!


யாழ்.குருநகரில் மர்ம மனிதன் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை பதட்டமான சூழல் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சற்று முன்னர் அந்தப் பகுதியில் மர்ம மனிதர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டதை அடுத்து அவரை மக்கள் மடக்கிப்பிடித்துக் கட்டியபொழுது அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டுச் சென்றிருப்பதாக கிராமத்தில் தகவல் பரவியது..............  read more 

பொதுமக்களிடம் வாங்கிக்கட்டிய இராணுவத்தினர்: யாழ் மக்கள் துணிச்சல் !

திருநெல்வேலிப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வீடுகளுக்குள் நுளைய முயன்ற ஆயுதந்தரித்த சில நபர்களை துரத்திச் சென்ற பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நேற்றிரவு மோதல் உருவாகியுள்ளது. மர்ம நபர் என்ற போர்வையில் இவ்வாறு வீடுகளுக்குள் நுளைய முயன்றவர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது, மக்களைத் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை கலைந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். இதனையடுத்து படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் பதிலுக்கு இராணுவத்தினரை பொதுமக்கள் சிலர் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன............ read more 

கனடாவில் நடந்த உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் !

தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.............. read more 

மூவரது விடுதலையை ஜெயலிதா அம்மையாரும், விஜயகாந்தும் உறுதிப்படுத்த வேண்டும் - சிறீதரன் (காணொளி)

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு 21 வருடங்களுக்கு மேலாக இவர்கள் தண்டனை பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், மரணத்தைத் தீர்மானிக்கும் நிகழ்வுகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந் மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த சகோதரர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்................ read more 

தமிழக முதல்வருக்கு இந்திய மத்திய அரசு விடுத்துள்ள சவால் - வேல்ஸ் இல் இருந்து அருஷ்

75,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஒரு சில மாதங்களில் படுகொலை செய்து, 300,000 மக்களை ஏதிலிகளாக்கி, பல ஆயிரம் இளைஞர், யுவதிகளை இனம்தெரியாத முகாம்களில் அடைத்து ஒரு இனப்படுகொலையின் ஊடாக சிறீலங்கா அரசு போரை நிறைவு செய்துள்ள நிலையில், சிறீலங்கா அரசு மீதான போர்க் குற்றங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையை ஆதரிப்பதற்கோ முன்வராத இந்திய மத்திய அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது மற்றுமொரு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது................ read more 

செங்கொடி மூட்டிய தீயில் இன்னொரு செங்கொடி எரியவேண்டாம்: - நாடு கடந்த தமிழீழ அரசாங்க – ஜனநாயக வாதிகள்

அன்னை புபதிக்குப் பின்னர் ஒரு பெண் தனது உயிரை காந்தியின் தேசத்திற்கு காந்தியம் பற்றி போதிக்க தியாகம் செய்துள்ளார். அவரின் தியாகத்தின் முன் நாம் தலைவணங்கி நிற்கிறோம். அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினரின் துயரில் நாடுகடந்த தமிழீழ் அரசின் ஜனாநாயக வாதிகள்ழும் பங்குகொள்கின்றது............. read more 

மூவர் தூக்குதண்டனை நிறுத்திவைப்பு: சு.சுவாமி கண்டனம்



சென்னை, செப்.1: ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மோசமான முன்னுதாரணம் என்றும் தெரிவித்தார். மேலும், இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது என்றும், இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Wednesday 31 August 2011

தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்


தோழர் செங்கொடியின் உயிர்த் தியாகம் வேதனையளிக்கிறது: சீமான்

இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொண்டுத் தன் இன்னுயிரைத் துறந்துள்ள காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடியின் தியாகம் பெரும் மன வேதனையைத் தருகிறது.
அவருக்கு எமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்............ read more 

தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !

இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் ............. read more 

சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து மருத்துவர் இராமதாசு - திருமா சந்திப்பு


திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களை நேற்று இரவு (30-08-2011) எழுச்சித்தமிழர் சந்தித்து பேரறிவாளன், சாந்தன் முருகன் தண்டனையைக் குறைக்கக் அடுத்தகட்ட போராட்ட வியூகங்கள் குறித்து விவாதித்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்காக பாமக நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து தைலாபுரம் தோட்டத்தில் கூட்டாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ராமதாஸ் கூறியது: தமிழக முதல்வரால் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை வரவேற்று அதற்காக முதல்வருக்கு...


யுத்தத்தின்போது காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களின் நிலை என்ன? _


  யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், இறுதி யுத்தத்தின் போது காணாமல்போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லையென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ................ read more 

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்? _


  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. ......... read more 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும்


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீங்கிய போதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தத் தடையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதற்கு சமாந்திரமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் புதிய சரத்துக்களை அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளது.
இதன்படி உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை ஆகியன தொடர்ந்தம் அமுலில் இருக்கும்............... read more 

20 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி- நெடுமாறன்


20 ஆண்டு கால நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி- நெடுமாறன்

20 ஆண்டு கால தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றி இது என்று 3 தமிழர் உயிர் காப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்............... read more 

அந்தர் பெல்டி அடிக்கும் இந்து நாளிதழ்: தமிழர்களுக்கு தீர்வுவேண்டுமாம் !

இந்து நாளிதழ் இலங்கை அரசின் ஒரு கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. பல வருடங்களாக அவ்வாறு செயல்பட்டு வந்த இந்த நாளிதழ் தற்போது அந்தர் பல்டி அடித்து குத்துக்கரணம் போடுகிறது. சமீபத்தில் கோத்தபாய ராஜபக்ஷ அதிகம் பேசக்கூடாது அவரால் காரியங்கள் பல கெட்டுப்போகிறது என இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் எழுதியிருந்தார். தற்போது வெளியான மற்றுமொரு ஆசிரியர் தலையங்கத்தில் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு ஒன்றைவைக்கவேண்டும் எனவும் அவர் எழுதியுள்ளது, இலங்கை அரசை மட்டுமல்ல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.............. read more 

கூட்டமைப்புக்கு ஓர் எச்சரிக்கைஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்


ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசு மீதான அளவற்ற வெறுப்புக் காரணமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.


புலிகள் செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டு புலிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் புலிகள் மூலமாவது தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று தமிழ் மக்கள் ஆதரிப்பதற்கும் அதுவே காரணம்.



essayஜீலை மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. கூட்டமைப்பின் வெற்றிக்குக் காரணம் என்ன?தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றார்கள் என்பதாலா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்கள் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தினாலா?............... read more 

வேட்டையாடப்படும் தமிழர்களின் வளங்கள்...!



essayஎதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரத்தை இலங்கை அரசு திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இந்தப் பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது............ read more 

அமைச்சர் முன்னிலையில் ஊடகவியலாளர்கள் விரட்டியடிப்பு

தற்போது யாழ். பொது நுலக கேட்போர் கூடத்தில் சிறிலங்கா பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக் கூறப்பட்டு அரச சார்பு ஒட்டுக்குழுவைச் சேர்ந்த ஒருவரால் வெளியேற்றப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர். ............. read more 

ஒரே நாளில் இரு சிறுமிகளை காணோம்

news
 மானிப்பாய் மற்றும் வடமராட்சியில் இரு சிறுமிகள் நேற்றுத் திடீரெனக் காணாமல் போயுள்ளனர். 
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் கனகலிங்கம் லக்சிகா (வயது 13) என்ற சிறுமியை நேற்று நண்பகல் முதல் காணவில்லை என்று வல்வெட்டித்துறைப் பொலிஸில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி நள்ளிரவு வரை திரும்பி வரவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். ............. read more 

வீர வணக்கமும் கண்ணீர் அஞ்சலியும்


tgtel-leter head logo.JPG 
செல்வி செங்கொடி பரசுராமன் அவர்களுக்கு 
வீர வணக்கமும்  கண்ணீர் அஞ்சலியும்

தோழர் செங்கொடிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 
எற்பாடு செய்யப்ப்ட்டுள்ள அஞ்சலி நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

Monday 29 August 2011

1000 சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீர்


இலங்கையில் யுத்தம் முடிவடைந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாகின்ற நிலையில், இறுதி யுத்தத்தின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்............... read more 

சிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒரே தவறு: சீமான்

ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான். ........ read more 

தமிழர்கள் போராட வேண்டும் என்கிறது ஜேவிபி.


அரசாங்கத்தையும் த.தே.கூ வையும் நம்பிப் பயன் இல்லை.

தமிழர்கள் போராட வேண்டும் என்கிறது ஜேவிபி. 

அரசாங்கத்தையும், கூட்டமைப்பையும் நம்பி எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. எனவே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழிகளில் போராட வேண்டும் என தெரிவிக்கும் ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா எதிர்வரும்நாட்களில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இலங்கைக்கு எதிரான தலையீடுகளும் அழுத்தம்களும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையில் இஸ்லாமியக்குழுக்கள்: பெளத்த நிலையம்



சிறிலங்காவைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் இன்று பயங்கரவாதிகளாக மாறிவிட்டனர் என்றும் இதனால் சிங்கள தேசத்துக்குப் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள ராவய பௌத்த நிலையம் என்ற அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது 

இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள்- பீலிஸ் பெரேரா

இலங்கையில் இரு நாளைக்கு பாதுகாப்பற்ற எழுநூறு கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சமூக சேவைகளுக்கான அமைச்சர் பீலிஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இத்தகைய கருக்கலைப்புகள் பெரும்பாலும் இரகசியமான முறையில் உரிய மருத்துவ ஆலோசனைகள் இன்றி இடம் பெறுவதாகவும் இந்த பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் காரணமாக இலங்கையில் புற்றுநோய்களின் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாகவுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சர் பீலிஸ் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார். 


சமூக சேவை அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று வோர்டஸ் ஏஜ் இல் “இலங்கையில் குடும்ப கட்டுப்பாடு” எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Sunday 28 August 2011

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இதை விஜய் ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பாக விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:-

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்............. read more

வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்


  

வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால், பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது....... read more 

ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு



ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

தெற்காசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக்கின் இலங்கை விஜயம் இடம்பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளெக் நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை, இலங்கையில் அவர் விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார். எனினும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்தே பிளெக்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார். 
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். 
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்............. read more