Translate

Saturday 18 August 2012

வல்வெட்டித்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி பிரியதர்ஸனவின் பாலியல் வேட்டையும் பலியாகும் பெண்களும்


வல்வெட்டித்துறை  குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி பிரியதர்ஸனவின் பாலியல் வேட்டையும் பலியாகும் பெண்களும்

படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகள், கணவரை இழந்த இளம் பெண்களை  இலக்கு வைத்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்திவருகின்றன என  குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அமெரிக்க முன்நாள சட்டமா அதிபர் புலிகள் இயக்கத்தில் இணைந்தார்: சிங்கள நாளேடுகள் !

அமெரிக்காவின் முன்நாள் சட்டமா அதிபர் ரம்சே கிளார்க் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்தார் என்று, சிங்கள நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசானது நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தாம் மேற்சபை உறுப்பினர்கள் என்ற குழு ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இக் குழுவில் ரம்சே கிளார்க்கும் இணைந்திருப்பதாக அது தனது அறிக்கையில் சுட்டுக்காட்டி இருந்தது. இதனை அடுத்தே சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் இதற்கு கடும் எதிர்பு கிளம்பியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ரம்சே கிளார்க் அவர்கள் அமெரிக்காவில் பெயர்பெற்ற சட்டமா அதிபராகக் கடமையாற்றிவராவார்.

இலங்கையைப் பிரிக்க நான் ஒத்துக்கமாட்டேன்: கனேடிய தூதர் புதுவிதக் கருத்து !

சிங்கள செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கைக்கான கனேடியத் தூதர் புரூஸ் லீவி புதுவகையான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடு கனடா எனத் தெரிவித்த அவர், அங்கே பயங்கரவாதிகளுக்கு நிதி சேகரிப்பது அனுமதிகப்படமாட்டாது என்று தெரிவித்தார். 

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் ௭மக்குத் தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்


ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியு றுத்தப் பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்ப வில்லை ௭ன தமி ழ்த் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித் தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட் ட மைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  உரை யா ற் றிய போதே அவர் இவ்வாறு தெரிவி த் தார்.

Friday 17 August 2012

புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா)



புங்குடுதீவு பழைய மாணவா் சங்கம்(கனடா) அமைப்பினால் வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபா நிதி உதவியுடன் போரினால் தனது இடது காலை துடையுடன் இழந்து வறுமையில் வாடும் கார்த்திகேஸ்வரி அவா்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 455000பெறுமதியான ஆட்டோ வாகனம் ஒன்றி 
குத்தகை கொள்வனவு அடிப்படையில் கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம்.

மிகுதிப்பணத்தினை அவா் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

ஆட்டோ கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது இந்த உதவி கடந்தவருடம் 2011ஆம் ஆண்டு தலைவர் திருநாவுக்கரசு கருணாகரன் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

கடுமையான பதிவுகளால் ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் 'பேஸ் புக்" கணக்கு

கடுமையான பதிவுகளால் ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் 'பேஸ் புக்" கணக்கு

தி.மு.க. தலைவர் கருணாநிதியின், 'பேஸ் புக்" கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'கலைஞர் கருணாநிதி" என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை ஆரம்பித்தார்.

ஆரம்பித்த நாள் அன்றே சுமார், 2,700 பேர் அந்தப் பக்கத்தில் இணைந்தனர். மறு நாளான நேற்று மாலை வரை, சுமார் 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்திருந்தனர். கருணாநிதியின் 'பேஸ் புக்" பக்கத்தில் 'டெசோ" மாநாட்டுத் தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.

நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன்

நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன்
news
வவுனியா சிறைச்சாலை கலவரத்தில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.

இறுதி வணக்க நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.......................  read more 

இலங்கை அரசு தமிழருக்கு தீர்வுத் திட்டம் எதுவும் வழங்க விரும்பவில்லை; சம்பந்தன் குற்றச்சாட்டு

இலங்கை அரசு தமிழருக்கு தீர்வுத் திட்டம் எதுவும் வழங்க விரும்பவில்லை; சம்பந்தன் குற்றச்சாட்டு
news
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு அதிகபட்ச அதிகாரத் தீர்வுகள் எதனையும் வழங்க விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் ஆனந்தபுரி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெசோ தீர்மானம் ஜ.நா. சபைக்கு; அனுப்பி வைத்து தி.மு.க. அதிரடி; சர்வதேச கவனத்தை ஈர்க்க முடிவு

டெசோ தீர்மானம் ஜ.நா. சபைக்கு; அனுப்பி வைத்து தி.மு.க. அதிரடி; சர்வதேச கவனத்தை ஈர்க்க முடிவு
news
 "டெசோ" மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களையும் ஐ.நா. சபை, ஜெனிவா மனித உரிமைகளின் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக நாடுகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கு   தி.மு.க. சார்பில் அனுப்பிவைக் கப்பட்டுள் ளன என்று தி.மு.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

15-09-2012 அன்று பிரித்தானிய இளையோர் அமைப்பினால் நடத்தப்படவுள்ள “இளந்தளிர் 2012”


15-09-2012 அன்று பிரித்தானிய இளையோர் அமைப்பினால் நடத்தப்படவுள்ள “இளந்தளிர் 2012”


Posted Imageஎதிர்வரும் Sept 15 ஆம் திகதி சனிக்கிழமை ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் “இளந்தளிர் 2012” எனும் கலை நிகழ்ச்சி மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் Oakington Manor School, Wembley, HA9 6NF இல் நடைபெறவுள்ளது.

யாழ். கிட்டு சிறுவர் பூங்காவை அழித்து நல்லூரில் பாடகர் உன்னிக் கிருஸ்ணனுக்கு மேடை அமைப்பு

Posted Imageயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கிட்டு சிறுவர் பூங்காவினை அழித்து நல்லூரில் தென்னிந்தியப் பாடகர் உன்னிக் கிருஸ்ணனின் இசைக் கச்சேரி இடம்பெறுவதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றி தென்னிந்தியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் இடம்பெற்று இவ் வேளையில், ஈழத்தமிழர்களின் மனதை கலங்கப்படுத்தும் வகையில் இச்செயற்பாடு இடம்பெறுகின்றதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க இந்தியா முடிவு! தமிழ் தலைவர்கள் எதிர்ப்பு

Posted Imageஇலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச, இந்தியா வந்திருந்தபோது புத்தரின் சமாதியில் உள்ள அவரது சிதைந்த எலும்புகளை எங்கள் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தோன்றிய புத்த மதம் சீனா, இலங்கை ஆகிய நாடுகளில் தேசிய மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், மியான்மர் நாடுகளிலும் புத்தமதம் பரவியுள்ளது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தனிநாட்டுத் தீர்மானத்துக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள், இப்போதும் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருவிட்டவில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்தின் கெமுனுவோச் படைப்பிரிவின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர். 

மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது செய்திருந்தனர். 

Thursday 16 August 2012

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை


வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வலுச்சேர்க்கும் முயற்சிகள் தொடர்கின்றன – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தனிநாட்டுத் தீர்மானத்துக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள், இப்போதும் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருவிட்டவில் நேற்று நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்தின் கெமுனுவோச் படைப்பிரிவின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு


லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு வேண்டும்: சம்பந்தன்


அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு வேண்டும்: சம்பந்தன்
எமது தலை விதியை நாங்கள் நிர்ணகிக்கக் கூடிய வகையில் சட்ட ரீதியாக வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல், சமூக, பொருளாதார கலாசார அபிலாஷைகள் நிறைவேற்றக்கூடிய அதிகாரம் எமக்கு இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை நான் உணர்கிறேன்: கலைஞர் தெரிவித்தார் !

சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை நான் உணர்கிறேன்: கலைஞர் தெரிவித்தார் !
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக, சர்வதேச சுயாதீன விசாரணை(international independent inquiry)தேவை என்பதனை தாம் உணர்வதாகவும், தாமும் அதனை வலியுறுத்துவதாகவும், இதனை இந்திய பாராளுமன்றம் வரை கொண்டுசெல்ல ஆவன செய்வதாகவும் கலைஞர் கூறியுள்ளார்.

பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க. ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்.


 

பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்க. ஈழத்  தமிழர்கள் பட்டினிப் போராட்டம்.


பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள தமிழீழ அகதிகள் எட்டு பேர்களும் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

சந்திரகுமார், பரமேஸ்வரன், பகீரதன், பிரதீபன், கங்காதரன், தங்கரூபன் , ஜெயமோகன் , செந்தூரன் ஆகிய எட்டு பேர்களும் இன்று ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிறப்பு முகாம்களை இழுத்து மூடுக - தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை


செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடுங்கள்தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை

இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் தமிழக முதல்வர் தலையிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

**video**நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம்--**video**

***நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம் தேரில் பவனி வந்தார் முருகன்*** 
வட தமிழீழத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது.காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார்.


http://www.youtube.com/watch?v=EFpwmk8_LK0&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=_bTz9JjmDFo 

சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன்

அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க்கிராமம் -அரியகுண்டான் - அதாவெட்டுவெவ ஆக மாறிய அநியாயம் இதுதான் நல்லிணக்கமா?

நெடுங்கேணியில் பறிபோயுள்ள மற்றுமொரு தமிழ்க்கிராமம் -அரியகுண்டான் - அதாவெட்டுவெவ ஆக மாறிய அநியாயம் இதுதான் நல்லிணக்கமா? – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா வடக்கு (நெடுங்கேணி) பிரதேச செயலாளர் பிரிவின் பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழர் பூர்வீகக் கிராமமான அரியகுண்டான், அதாவெட்டுவெவ என்று சிங்களப் பெயரிடப்பட்டு வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

ஏறத்தாள 2000 க்குப் பின்பு புலப்பெயர்வில் ஒரு மாற்றம் வந்தது . முன்பு புலத்தில் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை சிங்கப்பூரிலோ , தாய்லாந்திலோ போய்க் கலியாணம் செய்து புலத்திற்கு கூப்பிட்டார்கள் . பின் அது இந்தியாவாக மாறியது . 

தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டு 3550000 கப்பம் பெறப்பட்டது

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனை ஒன்றில் வெள்ளை பூண்டு கொள்கலன் ஒன்றை கொள்வனவு செய்த புறக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று, 50 லட்சம் ரூபா கப்பம் கோரி, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற்ற, வர்த்தகராக தன்னை இனங்காட்டிக் கொண்ட பாதாள உலக தலைவர் உள்ளிட்ட குழுவொன்றை கைதுசெய்ய கொட்டாஞ்சேனை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துறைமுகத்தில், கடந்த 14 ஆம் திகதி ஏறவிற்பனை நடைபெற்றதுடன் அன்று மாலை வர்த்தகர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். துறைமுகத்தில் நடைபெற்ற ஏல விற்பனையில் 15 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாவுக்கு, வர்த்தகர் வெள்ளை பூண்டு கொள்லனை வாங்கியுள்ளார்.

நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்

விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு அனுமதி கொடுத்து, பொலிஸ் அனுமதி மறுத்து, நீதிமன்றத்தில் போராடி,...

யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் கொலையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நிறைவு..


தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஜெயலலிதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.


இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்ட த்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை.


முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுக் கிராமத்தில் பெரியமுறிப்புக் குளத்திற்கு அண்மித்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுடன் சிவன் கோவில் அர்ச்சகரையும் படையினர் மிரட்டியிருக்கின்றனர்.

2012 செப்ரெம்பர் 22ம் நாள் ஐ.நாவை நோக்கி அணிதிரள்வோம்…!!!

ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல்
பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள்
சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி.
ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், ஐ.நா வளாகம் ஜெனிவா.

“நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. ஐநா சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.”

- தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் -

** – ஐநா நிபுணர் குழு அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட குற்றாவாளிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

** – சிங்கள அரசின் சிறைக் கூடங்கள், தடுப்பு முகாம்கள், இராணுவத்தின் இரகசிய வதை முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்.
Posted Image 
** – வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

பசில் ராஜபக்ச தலைமையிலான இலங்கைக் குழுவுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்த இந்தியா


கொழும்பு: இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தலைமையில் அடுத்த வாரம் இந்தியா வரவிருந்த இலங்கைக் குழுவினர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, இந்தியாவுடன் பனிப்போர் எதுவும் இல்லை. குளிர் காலத்து காதலைப் போல இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

“ஈழத்தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள்” – இதுவே வடக்கின் நினைப்பு என்கிறார் பாஸ்வான்


ஈழத்தமிழர் என்றால், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே, வட மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர்,

மீண்டும் மெல்ல மெல்ல வரும் எச்சரிக்கை பிரித்தானியா!


மீண்டும் மெல்ல மெல்ல வரும் எச்சரிக்கை பிரித்தானியா!

பிரித்தானியாவில் இருந்து இலங்கை செல்லும் அந்நாட்டுப் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருக்கும்படி புதிய பயண எச்சரிக்கை ஒன்று பிரிட்டன் அரசால் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயண எச்சரிக்கைக் குறிப்பில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

புத்த மயமாகும் இலங்கை மகிந்தை சிந்தனை முஸ்லீம் பள்ளிவாசல் நிரந்தரமாக அகற்றபடும் அபாயம்


ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட உள்ள தம்புள்ள புனித பூமியின் நிர்மாணிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக கண்டலம சந்தியில் உள்ள வீடுகள் பெக்கோ இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடுகளை வழங்காது, வீடுகளை உடைத்து, காணிகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

புத்தர் சிலை, தேசியக் கூட்டமைப்பு, துணைக்குழுக்கள் : சபா நாவலன்


அவர்கள் யாரை விட்டுவைத்திருக்கிறார்கள்? தெருத்தெருவாக அனாதைகளாக அலைகின்ற ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிவிட்டு அபிவிருத்தி செய்கிறோம் என மனித குலத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் ஆபிரிக்காவில் பல்தேசிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துக்கொண்ட வாழ் நிலங்களும் இயற்கை வளங்களும் ஆயிரக்கணக்கான மக்களைச் சாட்சியின்றி கொன்று குவித்திருக்கிறது. முன்பெல்லாம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு ஏகாதிபத்திய நாடுகளில் இருந்து துப்பாக்கிகளோடும் பரிவரங்களோடும் வந்திறங்கிய இராணுவ அதிகாரிகளுக்குப் பதிலாக இப்போது உள்ளூர் தரகர்களின் துணையோடு மேற்குலகக் காப்ரட் கனவான்கள் வந்து போகிறார்கள்.

நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகளை அரசே மேற்கொண்டது – சாட்சிகள் உண்டு : மனோ கணேசன்


தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்சன் ஆகியோரது படுகொலைகள் அர சாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட சிறப்பு படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனரென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன்

சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன்

அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இனியும் நாம் எம் மக்களை ஏமாற்றக் கூடாது இந்த நாட்டில் எமக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள அனைவரும் போராடுவோம்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

news
எமது மக்கள் நொந்து போய் இருக்கின்றார்கள் எமது மக்கள் அழிந்து போய் இருக்கின்றார்கள் மக்களளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது அவ்வாறு நாம் செயற்படாது விட்டால் மக்கள் எமக்கு எதிராகத் திரும்புவார்கள் அதை நாம் மறந்து விடக் கூடாது.

வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்

வடக்கு, கிழக்கு தமிழர் பிரச்சினை தமிழர் பிரச்சினை நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்
22ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்
news

இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேறும் சிங்களக் குடியேற்றங்கள், ஸ்தம்பிதமடைந்துள்ள மீள் குடியேற்ற நடவடிக்கை உட்பட வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் அண்மைக்காலமாகத் தலைதூக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றில் முழுநாள் விவாதமொன்று நடைபெறவுள்ளது.

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி
கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது.

புலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை

புலி உருவத்தைப் பச்சை குத்தியிருந்த பிரான்ஸ் இளைஞன் கைதாகி விடுதலை
இலங்கைப் படத்தினுள் புலியின் உருவத்தை   கையில் பச்சைகுத்தி, நல்லூர்த் திருவிழாவுக்கு வந்த பிரான்ஸ் நாட்டு இளைஞரை யாழ். பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டார்
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி அனைவரும் பொறுமை காப்போம் என்கிறார் ஹக்கீம்

தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி அனைவரும் பொறுமை காப்போம் என்கிறார் ஹக்கீம்
news

உன்னிச்சை சம்பவத்தின் மூலம் இரு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை இந்தக் காலகட்டத்தில் உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கக்கூடும் என்று அச்சம் காணப்படுகின்றது. இதற்கு இரண்டு சமூகங்களும் துணை போய்விடக்கூடாது. 

தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் : ஜெயலலிதா


சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

Wednesday 15 August 2012

நம்மாளுங்க அப்பவே அப்பிடி ...


நம்மாளுங்க அப்பவே அப்பிடி .... 

பட் இப்போ இங்கிலீஷ் என்ற ஒரு மொழியை கடவுளாக்கி தமிழை மறந்து தமிழரோட தலை எழுத்தையே மாத்திட்டாங்க :( நம்ம முன்னோர் ரியலி கிரேட் :)

மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்......ஆகஸ்ட் மாத நிகழ்வு!


இது, வெளிப்பட வேண்டிய நிகழ்வு மட்டுமல்ல அந்த மக்களது வாழ்வும்-சாவும் வரலாற்றில் வைத்து ஆயப்படவேண்டியதும்கூட..

டெசோ மாநாடு தொல் திருமா உரை


டெசோ மாநாடு தொல் திருமா உரை

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு அன்று 12.8.12 நடைபெற்றது.
 சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு அன்று 12.8.12 நடைபெற்றது.

DMKதலைவர் கருணாதிநிதி தமிழ் இளைஞர்களிடம் மீண்டும் ஆயுதங்களை வழங்கி அழிவை நோக்கி இட்டுச்செல்ல முயற்சி


விமல் வீரவங்ச குற்றச்சாட்டு
DMKதலைவர் கருணாதிநிதி தமிழ் இளைஞர்களிடம் மீண்டும் ஆயுதங்களை வழங்கி அழிவை நோக்கி இட்டுச்செல்ல முயற்சி
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாதிநிதி போன்றவர்கள் மீண்டும் ஒரு முறை தமிழ் இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுத்து அவர்களை அழிவு நோக்கி இட்டுச் செல்ல கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகள் அரச சிறப்புப் படைகளால் ஏவிவிடப்பட்டதற்கு கண்கண்ட சாட்சிகள் உண்டு


மனோ கணேசன்:-
நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகள் அரச சிறப்புப் படைகளால் ஏவிவிடப்பட்டதற்கு கண்கண்ட சாட்சிகள் உண்டு –

தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்சன் ஆகியோரது படுகொலைகள் அர சாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட சிறப்பு படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனரென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ நினைத்திருந்த 30 வருட போராட்டத்திலும் படுகொலை செய்யப்பட்டது


தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ நினைத்திருந்த 30 வருட போராட்டத்திலும் படுகொலை செய்யப்பட்டது
தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ நினைத்திருந்த 30 வருடகால ஜனநாயக போராட்ட காலத்திலும் படுகொலை செய்யப்பட்டது
தமிழர்கள் தனிநாடு கோராமல், ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ நினைத்திருந்த முப்பது வருடகால ஜனநாயக வழிமுறையிலான போராட்ட காலத்திலும், எங்கள் இனம் படுகொலை செய்யப்பட்டது. எங்கள் இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எவரும் மறைத்து விட முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Tuesday 14 August 2012

டெசோ மாநாடு திமுகவின் காலம் கடந்த முடிவு: பாஜக


டெல்லி: இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் திமுக நடத்திய டெசோ மாநாடு காலம் கடந்து எடுத்த முடிவு என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக குரல் கொடுத்தது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காவியுடைப் பயங்கரவாதத்திடம் மண்டியிட்ட ஹக்கீம்!

இலங்கையில் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் உருவாகியிருக்கும் "காவியுடைப் பயங்கரவாதம்" பற்றி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ராவூப் ஹக்கீம், பின்னர் அதற்காக பகிரங்கமாகவே மன்னிப்பக் கோரியிருக்கின்றார். அல்லது மன்னிப்புக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

செஞ்சோலை படுகொலையின் 6ம் ஆண்டு நீங்காத நினைவில்!


செஞ்சோலை படுகொலையின் 6ம் ஆண்டு நீங்காத நினைவில்!

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட இந்தச் சம்பவம் இன்று 6 ஆண்டுகள் கடந்து விட்டது.
ஈழத்தமிழினத்தை இனவழிப்பு செய்துகொண்டிருக்கும் சிங்கள அரசின் இவ்வாறான கொடூர போர்குற்ற செயல்களை தொடர்ச்சியாக நாம் வெளிக்கொண்டு எமது தமிழீழம் நோக்கிய பாதையில் இப்படியான எம் செஞ்சோலைக் குஞ்சுகளின் நீங்காத நினைவுகளை மீண்டும் மீண்டும் பதிவுசெய்வோம்.

தமிழர் பிரச்சனையில் அடுத்து என்ன?: கேள்வி கேட்ட மலேசியாவுக்கான தூதரின் பதவியை பறித்தது இலங்கை அரசு

கோலாலம்பூர்: ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் கல்யாணந்த கொடஹேவின் பதவியை பறித்து அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.
இலங்கைக்கான மலேசிய தூதராகப் பணியாற்றியவர் கல்யாணந்த கொடஹே. அண்மையில் வெளிநாட்டில் உள்ள தூதர்களை அழைத்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது கொடஹே, மலேசியாவில் உள்ள தமிழ் குழுக்கள் தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இல்லை. ஆனால் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது? என்று கேட்டிருக்கிறார்.

காங். கூட்டணியிலிருந்து கருணாநிதி உடனே வெளியேற வேண்டும்-சிங்களத் தலைவர் அழைப்பு


சென்னை: இலங்கைப் பிரச்னையில் இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு தவறானதாகும். அதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும். அதற்காகவே நான் டெசோ மாநாட்டுக்கு வந்தேன். இதுபோன்ற மாநாடுகள் அதிக அளவில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார் சிங்களத் தலைவரும், இலங்கை நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான விக்ரமபாஹு கருணாரத்ன.
டெசோ மாநாட்டுக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பின்னர் பேசுகையில்,..................... read more 

தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் சர்வதேசம் இது அரசுக்கும் தெரியும் என்கிறார் சம்பந்தன்

தமிழ்க் கூட்டமைப்பின் பின்னால் சர்வதேசம்
இது அரசுக்கும் தெரியும் என்கிறார் சம்பந்தன்
news
 "சர்வதேச சமூகம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பின்னால் நிற்கின்றது என்பது இலங்கை அரசிற்கு நன்றாகத் தெரியும். இந்த நிலையில்தான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றார்கள் என்பதைக்காட்டி சர்வதேச சமூகத்தை திசை திருப்பும் நோக்குடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்கு முன்பதாக இலங்கை அரசு நடத்துகின்றது.''

டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்

டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம்
news
 சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
 
"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் தமிழர் விரும்பும் தீர்வை அவர்களே நிர்ணயித்துக் கொள்வதை வலியுறுத்தி இந்தியா ஐ.நாவில் பிரேரணையொன்றைக் கொண்டுவர வேண்டு மென்ற தீர்மானம் பாரதூரமானதாகும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசில் தலைமையிலான மூவரணியுடனான சந்திப்பை திடீரென இடைநிறுத்தியது புதுடெல்லி


சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணியுடன் எதிர்வரும் 24ம் நாள் நடத்தவிருந்த சந்திப்பை இந்திய அரசாங்கம் திடீரென- காரணம் ஏதுமின்றி இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபரோ அல்லது அமைச்சர்களோ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

மட்டக்களப்பில் பிள்ளையானின் ஆதரவாளர்களே வேட்பாளர்களைத் தாக்குகின்றார்கள்:அரியநேத்திரன்



மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் அவரது கட்சியைச் சேர்ந்தோருமே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
 
இவர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு படையினரும், பொலிஸாரும் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு குற்றஞ்சாட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

மக்கள் எழுச்சியே தமிழர்க்கு பாதுகாப்பினைத் தரும்-


டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது


இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை கேட்டுக் கொள்ளும் தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐ.நா. சபையால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. அதனால் எந்தப் பலனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும்.

Monday 13 August 2012

நேற்றுக்காலை சென்னையில் நடைபெற்ற டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழ த் தமிழர் கருத்துக்கு தடை !

நேற்றுக்காலை சென்னையில் நடைபெற்ற டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழ த் தமிழர் கருத்துக்கு தடை !Top News 

நேற்றைய தினம், சென்னை நட்சத்திர ஹோட்டல் அக்ஹட் மெட்ரோ பொலிடனில் நடைபெற்ற டெசோ தீர்மானம் குறித்த விவாதத்தில் 2 ஈழத் தமிழர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தீர்மானங்கள் மீதான விவாதத்தை கலைஞர் தலைமை ஏற்று நடத்த மு.க.ஸ்டாலின், ரி.ஆர்.பாலு, சுபவீரபாண்டியன், கனிமொழி, அமைச்சர் பொன்முடி, போன்றவர்கள் உடன் இருந்தனர்.
அதில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் இருவரின் ஒருவர், எழுந்து ஈழத்துக்கும், தமிழ் ஈழத்துக்குமே வித்தியாசம் தெரியாத இந்திய மத்திய அரசு, 13 வது திருத்தச் சட்டம் மூலமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானது என தனது கருத்தை ஆணித்தரமாகத் தெரிவித்தார். இவர் பேசும்போது குறுக்கிட்ட ரி.ஆர்.பாலு திரு.கண்ணன் அவர்களைப் பேசவிடாது தடுத்தார் !
இதனைத் தொடர்ந்து, தாம் கூறவந்ததையாவது சொல்லவிடுமாறு அவர் வேண்டிக்கொண்டார். தாம் ஒரு ஈழத் தமிழர் என்றும், தமிழ் ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அந் நாட்டின் பூர்விக்கக் குடிமக்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனக் குறிப்பிட்ட திரு.கண்ணன் அவர்கள், தம்மை சிறுபாண்மை இனத்தவர்கள் என்று கூறவேண்டாம் என்பதனையும் ஆணித்தரமாகக் கூறினார்.