Translate

Thursday 16 August 2012

ஜெயலலிதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.


இலங்கையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

நம் உறவுகளாகிய, இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களவர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்தத் தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment