
ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியன் என்ற கோள் ஆட்சி புரியும் மாதம் இது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். ஸ்ரீஜெயந்தியும் இந்த ஆவணி மாதத்தில்தான். (ஆனால் இந்த வருடம் மட்டும் ஆடியிலேயே கிருஷ்ணன் ‘அவதரித்து விட்டான்!’) காஞ்சி காமாட்சி ஆவணி மூல தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் புனிதமானது; மோட்ச கதியை தரவல்லது. இளையான்குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்கள் அவதரித்த மாதம் இந்த ஆவணி. இந்த மாதத்தின் பெருமையை அகத்தியர்-