Translate

Wednesday 17 August 2011

நெஞ்சு விடு தூது


இறைவனியல்பு
 
பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்
பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினா - னன்றியும்
இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு
மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்
வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்

வேலூர் சிறை நோக்கி பரப்புரை பயணம் -‍ குறிப்புகள்


காலை 06.30 ஒன்று கூடுதல் சென்னை கண்ணகி சிலையில்
07.00 கொடியசைத்து பயணம் துவக்கம்
07.30 கத்திப்பாரா ஆலந்தூர் நகராட்சி மண்டபம் முன்பு பரப்புரை
08.30 மறைமலை நகரில் காலை சிற்றுண்டி
10.00 செங்கல்பட்டில் துண்டறிக்கை பரப்புரை
10.30 வாலாஜாபாத் பரப்புரை
11.00 காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் வரவேற்பு தேனீர் / மோர்
           நகர் முழுவதும் துண்டறிக்கை வினியோகம்

வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான்  கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்

தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்

நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்

மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான் 

நச்சு எரி குண்டு வீசி கொல்ல பட்ட மக்கள் எரிந்த புதிய அதிர்ச்சி படங்கள் .!


முள்ளி வாய்க்கள் புதுமாத்தளன் பகுதியில் சிங்கள இனவாத அபடைகளிநாள்  அடைக்கலம்  தேடி 
பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த மக்கள் மீது உலகில் தடை செய்ய பட்ட பொஸ்பரஸ் எரி
குண்டுகளை வீசி படுபாதகமாக இவ் இரக்கமின்றி சிங்கள ஆளும் மகிந்தா அரசு கொன்று குவித்துள்ளது .
 
இவ்வாறு அடையாளம் தெரியாத படி எரிந்து கருகிய நிலையில் உள்ள மக்கள் உடலங்களை 
அந்த களத்தில் நின்ற போராளிகள் மக்கள் வாயிலாக கிடைக்க பெற்றுள்ளது ............... read more 

Monday 15 August 2011

நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (8/08/2011)

நாடுகடந்த தமிழீள அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமார் உடனான கலந்தாய்வின் ஒலிவடிவம் - (8/08/2011)

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்து செல்கிறது

கோத்தபாயாவின் காட்டுமிராண்டித்தனம் கடல் கடந்துசெல்கிறது

அனலை நிதிஸ் குமாரன்
இந்தியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலாளரும்ஜனாதிபதியின் இளைய சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தமிழகஅரசையும்அரசியல்வாதிகளையும் தாக்கிப் பேசினார்இதன் மூலம் மகிந்த ராஜபக்ச மற்றும்அவரின் சகோதரர்களின் சண்டித்தனம் கடல் கடந்து சென்றுவிட்டது என்பதைஎடுத்துக்காட்டுகிறது

தமிழினம் நாதியற்றதா! தட்டிக் கேட்க யாரும் இல்லையா!! ராஜபக்சேவுக்காக நரபலிக்கு இரையாகும் தமிழ்பெண்களை காப்பாற்ற நாதிஇல்லையா!!!? - ம.செந்தமிழ்


தென்தமிழீழத்தில் இருந்து அந்த அழைப்பு… இங்கை பெண்பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போறாங்கள்… ராஜபக்சவுக்கு என்னமோ காலம் கூடாதாம்…
அதுக்கு நரபலி கொடுக்கத்தான் எங்கட பெண்பிள்ளைகளை கடத்திக் கொண்டு போறாங்களாம்… என கலவரத்துடன் தொடர்ந்த குரலைக் கேட்டு எமது உடலும் நடுநடுங்கியது...................... read more 

மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கிறீஸ் மனிதர்கள்: பின்ணணியில் மகிந்தரின் இராணுவம்? (video&Photo in)

நாட்டின் பல பகுதிகளிலும் மக்களை மிகவும்  அச்சத்தில் ஆழ்தியுள்ள கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இராணுவத்தினரினதும்  பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றதா என்றே சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.......... read more 

கோத்தபாய வாயை மூடு…டி.எஸ்.எஸ் மணி ஆவேசம் – (video in )

கோத்தபாய வாயை மூடு…டி.எஸ்.எஸ் மணி ஆவேசம்.............. read more 

இலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது….! அதிர்ச்சி தகவல் (Video in )


கடும் சிரமங்களுக்கு மத்தியில் பல அழுத்தங்களுக்கு அடிபணியாது திரு பேரா.ராஜ் இருதயா அவர்கள் தமிழீழ  வடக்கு பகுதிக்கு சென்றுஅங்கு உள்ள தமிழ்  மக்களின் நிலை மற்றும் சிங்கள இராணுவத்தின் அடக்குமுறைகள் சிங்கள குடியேற்றங்கள்  போற்றவற்றை பகிர்ந்து  கொள்கிறார் . இலங்கையில் இன்னமும் யுத்தம் தொடர்கிறது….!  என்ற தகவல்களுடன்.

எங்கள் அறிக்கையினை இணைத்துள்ளோம் , தயவு செய்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,


எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களேஉங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்
வணக்கம். 
உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும்வேண்டுகோளையும் வைக்கிறது. 
தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே வணக்கம்: தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி


பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,
வணக்கம். 
நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

மீண்டும் வலம் வரும் மாயமான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு

-இதயச்சந்திரன்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கலாநிதி பட்டமளித்துள்ளது பீஜிங்கிலுள்ள பல்கலைக்கழகம்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போது, இவ்வகையான பட்டமளிப்பு விழாக்கள், புதிய பிம்பங்களைக் கட்டமைத்து மனிதாபிமான முகங்களை உருவாக்கி விடுமென சிலர் கற்பிதம் கொள்கிறார்கள்.
பொருண்மியப் பலம் பொருந்திய நட்பு வட்டத்துள் தாம் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதன் ஊடாக அழுத்தங்களைத் தணிக்கலாம் என்கிற கனவிலும் வாழலாம்.

நாட்டை இராணுவ மயப்படுத்தும் முயற்சியே முப்படைகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு; சாடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நாட்டில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுகின்றது என சர்வதேசத்திற்கு காட்டி, அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்து நீடித்து நாட்டை முற்றுமுழுதாக இராணுவமயமாக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்ற............... read more  

போட்டோவுக்கு "போஸ்' கொடுப்பதற்காக ஏழைகளின் வீடுகளுக்கு செல்லும் ராகுல் : நரேந்திர மோடி

ஆமதாபாத் : ""ஏழை மக்களின் குடிசைகளுக்குச் சென்று, அவர்களுடன் சேர்ந்து போட்டோவுக்கு "போஸ்' கொடுக்க விரும்பும் நபர்களும் நம் நாட்டில் இருக்கின்றனர்,'' என, காங்., பொதுச் செயலர் ராகுலை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.............. read more 

என் மீதான காங்கிரஸின் ஊழல் புகாரை காங். நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம்- அன்னா

டெல்லி: என் மீது ஊழல் புகார் கூறியுள்ள காங்கிரஸ் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அதை நிரூபிக்க வேண்டும். அதுவரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாங்கள் கூறிய லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தாலும் கூட நான் எனது போராட்டத்தை விட மாட்டேன். என் மீதான களங்கத்தை துடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறியுள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே.

இதுகுறித்து அவர் கூறுகையில்............... read more 

அன்னா ஹசாரே கைது: டெல்லியில் பரபரப்பு

இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்த அண்ணா ஹசாரேவுக்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த பொலிசார் அவரை இன்று காலை கைது செய்தன............. read more 

கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றினார்

தமிழக அரசு சார்பில் 65வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவை காலை 9.14 மணிக்கு போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொலிசார் வெள்ளை சீருடை அணிந்து அணி வகுத்து அழைத்து வந்தனர்.......... read more 

யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !


யாழ் மண்ணைத் தொட்டுப் பொட்டுவைத்தால் வீரம் வரும்-லியோனி !
வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.நேற்று முந்தினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.............. read more 

போர்க்குற்றங்களை தொடர்ந்தும் வெளிக் கொண்டு வருவோம் - ஹெட்லைன்ஸ் ருடே பிரதம ஆசிரியர்

சிறிலங்கா அரசாங்கம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டமைக்கான நம்பகத்தகுந்த ஆதாரங்கள் ,தங்களிடம் உள்ளதாகவும் போர்க்குற்றங்களை தாம் தொடர்ந்தும் வெளிக்கொண்டு வருவோம் எனவும் ஹெட்லைன் ருடே பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்திருக்கின்றார்........... read more 

அமைதி வழி போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்: அமெரிக்கா

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ள நிலையில், அப்படிப்பட்ட அமைதி வழிப் போராட்டங்களை ஜனநாயக நாடான இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு பேச்சாளர் விக்டோரியா நூலண்ட்-டிடம், ............... read more 

இலங்கையில் பதற்றம்! பெண்களை குறிவைக்கும் மர்ம மனிதர்கள்!

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கடந்த சில தினங்களாக உடல் முழுவதும் கிரீஸ் பூசிய மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்ற செய்தியினால் மக்கள் மிகுந்த பீதியுடன் காணப்படுவதுடன் இரவு வேளைகளில் நித்திரையில்லாமல் கண்விழித்திருக்க வேண்டிய பரிதாப நிலையொன்று தோன்றியுள்ளது................ read more 

அமெரிக்கத் துணைத் தூதரின் இனவெறிப் பேச்சு: திருமாவளவன்

அமெரிக்கத் துணைத் தூதரின் இனவெறிப் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரை அமெரிக்க அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-................ read more 

பேரவையில் இணைந்து செயல்பட தி.மு.க. - காங்கிரஸ் திட்டம்?

சென்னை, ஆக. 14: சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு, "ஒரே பகுதியில் தி.மு.க. உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்' என்று கோரிக்கை எழுப்பி சட்டப் பேரவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் பேரவையைப் புறக்கணித்தனர்.................... read more 

ரூ. 12 கோடி செலுத்தி லண்டன் சென்ற 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில்!


பிரிட்டனிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் 80 பேர் அங்கு கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களும் மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையொன்றை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.................. read more 

லணடன் ஈர்லிங் அம்மன் தேர்த்திருவிழ


பிரித்தனியாவின் ஈர்லிங்   பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய தேர்த்திருவிழ இன்று நடைபெற்று கொண்டிருகின்றது .
 
பல ஆயிரகணக்கான பக்கதர்கள் புடை சூழ அம்மன் வீதி பவனி வந்து கொண்டுள்ளாள் . 

பறக்காவடிகள் .காவடிகள் ..பால்சொம்புகள் …கர்ப்பூர சட்டிகள்  என்பனவடரி  மக்கள் தமது நேர்த்தி கடன்களாக செய்தவண்ணம் 
உள்ளனர் .  காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்று  கொண்டுள்ளன .
 
படங்கள் .
ஈழம் ரஞ்சன் .
 
நன்றி ரஞ்சன்

வன்னிக்குள் இந்தியா இராணுவம் உள்நுழைந்து போராளிகளை கொன்ற அதிர்ச்சி தகவல் .


தமிழீழ விடுதலை புலிகள் மூன்ற தரப்பு ஊடாக மத்தியஸ்தம் வகித்து தமிழர் அரசியல் பிரச்னைக்கு
தீர்வு காணும்
 நகர்வுகளை  ஜீரணித்து  கொள்ள முடியாத இந்தியா புலியளை எவ்வாறு
அழிக்கலாம் என எதிர்பார்த்து கொண்டிருந்தது .
 
அவ்வேளை மகிந்தாவும் காங்கிரசும்  ஆட்சி பீடம் ஏறின.
இதனை மையாமாக வைத்து புலிகளை இல்லா தழிக்கும்  வேகமான தாக்குதல் இராணுவ படை பல ஒத்துழைப்புடன்
புலிகளின் பகுதிகள் நோக்கி மூர்க்க மாக தாக்குதல் நடத்த பட்டன ..................... read more 

சனல்4 தொலைக்காட்சி சேவையை பாராட்டி, நன்றி தெரிவித்து தமிழர் இறையாண்மை அமைப்பு அறிக்கை.



தமிழ்மக்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் சனல்-4 தொலைக்காட்சியினதும், ஊடகவியலாளர் திரு.யோனத்தன் மில்லர் அவர்களினதும் பங்கு என்றென்றும் அழியா இடம்பெறும் என்பது உறுதி. உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் சார்பில் எமது நன்றியையும், பாராட்டையும் தெரிவிப்பதோடு, ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும்வரை தங்கள் தொலைக்காட்சியானது ஊடக தர்மத்தின் வழிநின்று தனது கடமையை செய்யுமென நம்புகிறோம். சனல் – 4 தொலைக்காட்சி சேவையை பாராட்டியும், நன்றிதெரிவித்தும் தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு ஜேர்மனி விடுக்கும் அறிக்கை................ read more 

புலத்து தமிழர்கள் பற்றி கேபி இன் கருத்து அப்பட்டமான பொய்: பிரித்தானியா தமிழர் பேரவை அறிக்கை!


புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் பணத்தை மோசடி செய்வதற்கே கே.பத்மநாதனை முதன்மைப்படுத்தி நேர்டோ (NERDO) என்றஅமைப்பை சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள். தாம் அனுப்பும் பணம் தமது சொந்த நிலம், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதற்கு பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யும் வழிகளினூடாக மட்டுமே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பணத்தை அனுப்புவர்................. read more 

பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதி !

லண்டன் ஈடன் ஹவுஸில் அமைந்துள் புல்ஹாம் அன்ட் வேல்ஸ் கல்லூரியே இவ்வாறு திடீரென மூடப்பட்டுள்ளது. 
பிரித்தானியாவில் இலங்கை மாணவர்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
பிரித்தானியாவில் இயங்கி வந்த உயர் கல்வி நிறுவனமொன்று திடீரென மூடப்பட்டதனால் அதில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த உயர் கல்வி நிறுவனத்தில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது............ read more 

புலிகள் வழக்கில் புதிதாக மூக்கை நுளைக்கும் பிரித்தானியா: Report !

அதாவது புலிகள் மேல் உள்ள தடையை எடுக்கக்கூடாது என்பதில் பிரித்தானியா இவ்வளவு நாட்டம் காட்டவேண்டிய அவசியம் என்ன இல்லை இவ்வளவு அவசரம் என்ன ? 


இறுதிக்கட்டப் போரில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகவும், புலிகள் தங்கள் இலக்கை அடைய அரசியல் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்றும் அதன் சிரேஷ்ட தலைவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது அவ்வியக்கம் இலங்கை இராணுவத்தால் வெல்லப்பட்ட பின்னர் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய விதித்துள்ள தடை தேவையற்றது எனக்கூறி விக்டர் கொப்பே வழக்கு தொடுத்துள்ளார்.
T208/11 என்று அழைக்கப்படும் இந்த வழக்கு ஐரோப்பிய மேல் நீதிமன்றத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஏதாவது ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டு தமது வாதங்களை முன்வைப்பதாயின் செப்டெம்பர் 1ம் திகதிக்கு முன்னதாக அந் நாடு விண்ணப்பிக்கவேண்டும் என நீதிபதி ஆணையிட்டிருந்தார்.................. read more