
இறுதிக்கட்டப் போரில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகவும், புலிகள் தங்கள் இலக்கை அடைய அரசியல் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்றும் அதன் சிரேஷ்ட தலைவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது அவ்வியக்கம் இலங்கை இராணுவத்தால் வெல்லப்பட்ட பின்னர் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய விதித்துள்ள தடை தேவையற்றது எனக்கூறி விக்டர் கொப்பே வழக்கு தொடுத்துள்ளார்.
T208/11 என்று அழைக்கப்படும் இந்த வழக்கு ஐரோப்பிய மேல் நீதிமன்றத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஏதாவது ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டு தமது வாதங்களை முன்வைப்பதாயின் செப்டெம்பர் 1ம் திகதிக்கு முன்னதாக அந் நாடு விண்ணப்பிக்கவேண்டும் என நீதிபதி ஆணையிட்டிருந்தார்.................. read more
No comments:
Post a Comment