Translate

Saturday 22 October 2011

வியட்நாம் நீயுமா? - இதயச்சந்திரன்


வியட்நாம் நீயுமா? - இதயச்சந்திரன்

யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமாயின், அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்துவோமென கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அச்சுறுத்துகின்றார்.

இப்படிச் சொன்னால் மகிந்தர் மனம் குளிர்ந்து போவாரென்பது அவரது கணிப்பு. எரிக் சொல்ஹெமோடு பேச அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவும், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு உரையாட பேராசான் ஜீ.எல்.பீரிசும் பயணம் செய்த  விடயம் கருணாவிற்கு தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி ! காங்கிரஸ் - படுதோல்வி - டெபொசிட் காலி !!

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி !

காங்கிரஸ் - படுதோல்வி - டெபொசிட் காலி !!
ம.தி.மு.க.,வுக்கு உற்சாகம்
இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க., - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்............. read more

மறுமலர்ச்சி தி.மு.கவிற்கு புதிய மறுமலர்ச்சி!

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.
அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்........
. read more

குழந்தைகளை சாப்பிடக் கட்டாயப்படுத்துவது ஆபத்து!


குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரிகத்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவைவிட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்........ read more 

யாழ். குடா நாட்டில் கடவுள்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை: சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் கவலை!

யாழ். குடா நாட்டில் கடவுள்களுக்கே பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவ குருக்கள் தெரிவித்தார்.

இந்து ஆலயங்களில் இந்து மத விக்கிரகங்கள் களவாடப்படுவது தொடர்பாகவும் இந்து ஆலயங்களின் பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்று சனிக்கிழமை யாழ். நாக விகாரையில் சர்வமத குருக்களினால் ஆராயப்பட்டன............reaD more

*இனவாத கொள்கையை மாற்றி அமைத்த சந்திரிக்கா : ராஜித பெருமிதம்*

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இனவாத கொள்கைகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே மாற்றத்தை ஏற்படுத்தியதாக மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட ரீதியில் சந்திரிக்காவை தமக்கு பிடிக்காத போதிலும், அவரது கொள்கைகளை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்............ read more 

பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால்


பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது: பாராளுமன்றில் சம்பந்தன். 
வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த.


அலரிமாளிகைக்கு அழைத்து பிரியானி விருந்து கொடுத்தால் கூட மனோவை மசியவைக்க முடியாது என ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும்: மனோ கணேசனை வாழ்த்திய மஹிந்த. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்தாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஊன்றுகோளில் நிற்பதைவிட சொந்த காலில் நிற்பது நல்லம் தானே என்று தான் ஜனாதிபதியிடம் கோட்டதாகவும் அதற்கு ஜனாதிபதி சிரித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆடுகளம் - அனைத்துலக நடனப் போட்டி




நடனத்திற்கு உலகமே அரங்கம் ஆகும். இதனை எடுத்துக் காட்டும் வகையில் 'உலகலாவிய தமிழ் இளையோர் அவை' 'ஆடுகளம்' என்னும் அனைத்துலக நடனப் போட்டியை முதன் முறையாக இவ்வாண்டு நடாத்தவுள்ளது. யேர்மனியின் முனிக் நகரில் ஒக்டோபர் 22 ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நடனப் போட்டியில் தற்சமயம் 8 நாடுகளில் இருந்து நடனக் குழுக்கள் கலந்து கொண்டு போட்டியிட உள்ளன. பல நூற்றாண்டுகளாக உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதைகளையும் நல்ல கருத்துகளையும் கூறவும் சமூகங்களை ஒள்றிணைத்து உருவாக்கவும் நடனக் கலை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சுவிசில் பேரறிவாளனின் நூல் அறிமுக விழா!


சமாதானத்துக்கான சுவிஸ் தமிழர்  அமைப்பின்” ஏற்பாட்டில் தூக்கு தண்டனையை நிர்நோக்கியிருக்கும் “பேரறிவாளனின் தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்….” என்னும் நூல் அறிமுக விழா சுவிஸ் சூரிச் (Zurich) Volkaus Saal, என்னும்   மண்டபத்தில் ஒக்டோபர்  22 ஆம் திகதி சனிக்கிழமை அன்று  மாலை 4:30   நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் அமெரிக்க விஜயத்தைத் தடுக்க அரசு இமாலய முயற்சி !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டனைச் சந்தித்துப் பேசுவதைத் தடுக்க அரசு, இராஜதந்திர ரீதியிலான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனையும் வெளியுறவுத்துறை அமைச்சின் உயரதிகாரிகளையும் கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன. .......... READ MORE 

எங்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்களுக்கு என்ன நிலை-ரணில்


உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு, மாநகர சபையின் நிர்வாகத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியிருந்தும் இன்னும் ஏன் நிர்வாகத்தைக் கையளிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்
எங்களுக்கே இவ்வாறானதொரு நிலை என்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கப் போகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்


ஐந்து கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானியாவில் ‘நீதிக்கான நடைப்பயணம்’ ! அனைவரும் ஒன்றுபட்டு கரங்கொடுப்போம்

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து  லண்டன் மாநகரம் வரையிலான ‘நீதிக்கான நடைப்பயணமொன்று’ திரு.ஜெயசங்கர் முருகையா அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
29-10-2011 முதல் 7-11-2011 வரைக்குமாக அமையவுள்ள இந்த நடைப்பயணம் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
- ஈழத்தமிழர்களின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமான, நீதியான, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்............. READ MORE 

இளம் பெண்ணின் உயிரைப் பறித்த தமிழ்ச் சமூகம்! அதிர்ச்சித் தகவல்!!


தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தொடர்பில் கொண்டுள்ள மூட நம்பிக்கைகள் மனித உயிர்களைப் பறிகொடுப்பதற்கு வழி ஏற்படுத்துகின்றது.

காலாதிகாலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் சூட்டும் பெயரைத் தவிர்த்து சமூகத்தால் சூட்டப்படும் பெயர்களால் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர் பெண்கள்.

அதாவது விதவை, மலடு எனப் பெயர்கள் சூட்டி அவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது தமிழ்ச் சமூகம். ........... READ MORE 

அடுத்தவேளை என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் மலேசியாவில் ஈழத்தமிழ் அகதிகள் ! அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ்

மலேசிய அரசாங்கத்தினால் அகதிகளுக்கான வதிவிட அனுமதி வழங்கப்படாத நிலை நீடித்துவரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனேயே ஈழத்தமிழ் அகதிகள் வாழ்ந்து வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர் பெண்கள் முதியோர் விவாகாரத்துறை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்தார்......... READ MORE 

தமிழ்நாட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், 10 மாநகராட்சிகள் உட்பட பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி


தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று முடிந்த  உள்ளூராட்சித் தேர்தலில், 10 மாநகராட்சிகள் உட்பட்ட பெரும்பாலான இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.

இதேபோல் மொத்தம் உள்ள 125 நகரசபைகளில் 89 நகரசபைகள் அ.தி.மு.க. வசமாயின. தி.மு.க. 23 நகரசபைகளையும், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தலா 2 நகரசபைகளையும், ம.தி.மு.க. ஒரு நகர சபையையும் கைப்பற்றின. 5 நகரசபைகளின் தலைவர் தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்..................... READ MORE 

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்ற தீர்ப்பு சர்வதேச தாக்கத்தை செலுத்தும் - த வோசிங்டன் போஸ்ட்


தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக்கருத்தை த வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு இரண்டு முதல் 6 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது............. READ MORE 

தருஸ்மன் குழு அல்ல நிபுணர் குழுவாகும் _


  இலங்கை தொடர்பாக தமது தலைமையிலான நிபுணர் குழு தயாரித்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் அறிக்கையாகும். 
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட அமைப்பாகும் என்று அக்குழுவின் தலைவர் மர்ஸூகி தருஸ்மன் தெரிவித்துள்ளார். ..... READ MORE 

எழுச்சிகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன என விக்கிரமபாகு



 அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டில் மக்கள் எழுச்சிகள் வெடிக்க ஆரம் பித்துள்ளன. சட்ட ஒழுங்குகள் அதிகார வர்க்கத்தினரால் மிகவும் மோசமான முறையில் உதாசீனம் செய்யப்படுகின்றன. இதுவே மாற்று சக்திகள் உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்................... READ MORE 

காங்கிரஸ் கட்சி இனி அழிந்துபோகும்..!



அன்றே காந்தி காங்கிரஸ் கட்சியைக் கலைக்க சொன்னாரு.... நாங்க தான் இப்ப காந்தி கண்டக் கனவை நனவாக்கப் போறோம்.. காங்கிரஸ் கட்சியை நாங்க தானே அழிக்கப்போறோம்... .... READ MORE 

ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...!


மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம் தன்  நடிப்புத் திறனை வெளிக்காட்டி வருகிறார். ஏதோ ஒரு இளவரசர் இவ்வாறெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது போல்,  பார்க்கின்ற மக்கள் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொள்கிறார்கள். 
அந்த அளவிற்கு ராகுல்காந்தி, தன் கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா எல்லாருடைய நடிப்புகளையும் மிஞ்சிவிட்டார் என்றால் பாருங்களேன். இதெல்லாம் எப்படி ஓட்டுக்குப் பயன்படும் என்று தெரியவில்லை............. READ MORE 
                 
                            
                          உலகத்திலேயே தலைசிறந்த நடிகன்                                
''அன்னமிட்டக்கை''
''சிரித்து வாழவேண்டும்''.



Friday 21 October 2011

சிறிலங்காவில் இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் - ஸ்ரீபன் கார்ப்பரை தொடர்ந்து யூலியா கிலார்ட் - Gordon Weiss

gordon_weiss"இது தொடர்பாக, குறிப்பாக மூவர் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அவுஸ்திரேலியாவின் நீதித்துறை ஆணைக்குழு தனது அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளது. " இவ்வாறு The Australian இணையத்தளத்தில் Gordon Weiss* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்............ read more 

சம்பந்தனால் கிழக்கிற்கு ஆபத்து- ஒப்பாரி வைக்கும் பிள்ளையான்.

சங்கரி, சம்பந்தன் போன்ற பழுத்துப்போனதுகளாலும், வெளிநாடுகளில் உள்ளவர்களாலும் கிழக்கு மாகாணத்திற்கு ஆபத்து வரப்போவதாக பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்........... read more 

வடக்கு கிழக்கில் காணிப்பதிவுகள் நிறுத்தப்படமாட்டாது - பசில்றாஜபக்ச


வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணிப்பதிவு விவாதம் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்றபோது பசில்றாஜபக்ச இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்
தமிழர்தாயகத்தில் இடம்பெறும் காணிப்பதிவுநடவடிக்கைகள் குறித்து சிறீலங்கா அரசு கவனம்செலுத்தவேண்டும் என தமிழ்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளநிலையில் இன்று நாடாளமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணையின் போது இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனஅபிவிருத்........... read  more 

புலிகளை பின்தொடரும் நெதர்லாந்து நீதித்துறை


நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands) வட மேற்கு ஐரோப்பாவில் வட கடல் (North Sea) ஓரமாகக் காணப்படுகிறது. அதன் புவியியல் எல்லைகளாகக் கிழக்கில் ஜேர்மனி, வடக்கிலும் மேற்கிலும் வட கடல், தெற்கில் பெல்ஜியம் என்பன அமைகின்றன....... read more 

தமிழர் பகுதியில் சிங்களர் குடியேறுவது கஷ்டமாக இருந்தால் வெளியேறுங்கள். சிங்கள அதிகாரி மிரட்டல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஓமடியாமடுகிராமத்தில் தற்போது மகாவலி அபிவிருத்தித்திட்ட பூமி வழங்கல் என்ற வகையில் அப்பகுதிக்கு வந்துள்ள சிங்கள அதிகாரி ஒருவர் 30 சிங்கள குடும்பங்களை அக்கிராமத்தில் குடியேற்றியுள்ளார்......... read more 

விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்


விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல : HOLLAND ஹேக் நீதிபதிகள்

ஹேக்கில் தற்போது நடந்துவரும் ஐந்து தமிழர்க்கு எதிரான வழக்கு: விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல ஆனால் அவர்கள் கிரிமினல் வேலைகளை செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில் குறித்த ஐந்து பேரும் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதிகள் கூறியுள்ளார்கள்

இலங்கையின் கொலைக்களம் - சேனல் 4 தொலைக்காட்சி மீது மறைமுக அழுத்தங்கள்?




இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதற்கு பின்னர் அதன் மீதான அழுத்தங்களை சில PR கம்பெனிகள் மேற்கொள்வதாக சனல் 4 செய்திப் பிரிவின் இயக்குனரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி த கார்ட்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை விரைவில் பதில் அளிக்க வேண்டும் : அமெரிக்கா

அளிக்க வேண்டும் எனவும், இதை செய்ய தவறுமாயின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் விரிவாக பதில்  அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

த.தே.கூட்டமைப்புக்கான அமெரிக்க அழைப்பின் பின்னணி

ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் தீவிரம் பெற்று வருகின்ற நிலையில், அவர்களை நோக்கி சர்வதேச சமூகத்தின் கதவுகள் திறக்கத் தொடங்கியுள்ளன.

போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

போர்க்குற்ற விசாரணை: இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை அது பற்றிய எந்தவொரு முடிவுக்கும் தாங்கள் வரப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக, அமெரிக்க அயலுறவுத் துறை பேச்சாளர் மார்க் ரோனரிடம்,கேள்வி எழுப்பப்பட்டது. ........... read more 

எம்மீது சேறு பூச நினைத்தவர்கள் தம்மீது இன்று கரிபூசிக்கொண்டார்கள் : மனோ _

எம்மீது சேறு பூச நினைத்தவர்கள் தம்மீது இன்று கரிபூசிக்கொண்டார்கள் : மனோ _

  கொழும்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் வாக்குகளைத் தனித்துவமான எமது ஏணிச் சின்ன தமிழ்க் கொடியின் கீழ் திரட்டிக் காட்டியிருக்கின்றோம். இது ஒரு மகத்தான ஆரம்பம். கொழும்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வாக்குகள் என்ற அடுத்த இலக்கை நோக்கிய எமது வெற்றிப்பயணம் தொடருகின்றது. ............ read more 

ஜி.எஸ்.பி பிளஸ் 2013 வரை நீடிப்பு _


  2010 ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் 2013 ஆம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்த மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தகத் திணைக்களம் அறிவித்துள்ளது. ........... read more 

என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?

தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான் 


ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர் 


என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?


முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு   “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும் ஈழத் தமிழர்களின் படுகொலையின், போர் நிகழ்வின் 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாட்சி இல்லா ஓர் இனப் படுகொலையாக ராஜபட்சேவின் இலங்கை அரசால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரினை பற்றி உலக நாடுகள் அறியும் சாட்சியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. .......... read more 

என் நாவிற்கு துணிச்சல் இல்லை: வைகோ




சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் இராஜா அண்ணாமலை மன்றம் அரங்கில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த, 'இன்னுயிர் ஈந்து மூன்று தமிழர் உயிர் காத்த வீரமங்கை தோழர். செங்கொடி வீரவணக்க நினைவேந்தல் மற்றும் மூன்று தமிழரின் மரண தண்டனையை முற்றிலும் நீக்கக்கோரி கூட்டம்' 21.09.2011 அன்று மாலை நடைபெற்ற்றது. ......... read more 

நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மீன்களை இலங்கை மீனவர்கள் கடலில் கொட்டி விட்ட சம்பவத்தால் மீண்டும் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தரங்கம்பாடி தாலுகா புதுப் பட்டினத்தில் தங்கி மீன்பிடித்து வந்தனர். அதேபோல் சம்பவத்தன்று செல்வி என்பவருக்கு சொந்தமான படகில் ரவி, மணிரத்னம், செல்வம் ஆகியோரும்,  சித்ரவேலு என்பவருக்கு சொந்தமான படகில்............ read more 

குடியேற்றங்களை நிறுத்துமாறு கூட்டமைப்பு இன்று பேசியுள்ளது

அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. 
இக்கலந்துரையாடலின் போது, 

அரசு- கூட்டமைப்பு பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பம்

அரசுகூட்டமைப்பு இடையே ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. இந்தப் பேச்சு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. கடந்த 3 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இந்தப் பேச்சு பின்னர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் 16 ஆம் திகதியும் பேச்சு இடம்பெறவில்லை. பேச்சுத் தொடர்பாக தாம் அனுப்பி வைத்த கடிதத்துக்கு அரசு இதுவரை பதிலளிக் கவில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்............. read more 

நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கையாக கருதப்பட வேண்டும் - தாருஸ்மான்


நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகளின் அறிக்கையாக கருதப்பட வேண்டும் - தாருஸ்மான்
இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கையாகக் கருதப்பட வேண்டுமென நிபுணர் குழுவின் தலைவர் மர்சுகீ தாருஸ்மான் தெரிவித்துள்ளார்............. read more 

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க சொல்ஹெய்மிடம் சரணடைந்தது சிறிலங்கா


சிறிலங்காவின் தலைமையை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளை முறியடிக்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடியுள்ளது.
சிறிலங்கா அரசை குறிவைத்து விடுதலைப் புலிகள் போர்க்குற்றச்சாட்டுகளை எழுப்பி வரும் நிலையிலேயே, சிறிலங்கா அரசு இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது............ read more 

சுவிஸ் பாராளுமன்றத்திற்கு முதல்தடவையாகப் போட்டியிடும் தமிழ் மகனை ஆதரித்து வாக்களியுங்கள்.சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு


http://www.eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/t-lathan%20(4).jpgமதிப்பிற்குரிய சுவிஸ் வாழ் தமிழர்களே!மொழி இன உணர்வுடன் ஒன்றுபட்ட தேசிய இனமாக தமிழர்கள் புலம்பெயர்  நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
சொந்த நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமாக உயிர் அச்சுறுத்தல்களுடன்  வாழமுடியாத சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களை ஆதரித்து அரவணைத்து வாழ்வதற்கான வசதிகளையும் வழிமுறைகளையும் புலம்பெயர் நாட்டு அரசாங்கங்கள் தமிழர்களிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்........... read more 

த.தே.கூ உறுப்பினருக்கு கனடா செல்வதற்கான விஸா மறுப்பு.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு கனடா செல்வதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பின் கனடாவுக்கும் செல்வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

இதன் போது கனடாவுக்கு செல்வதற்கான விஸா அனுமதியை கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வழங்க மறுத்துவிட்டது.

தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்போது என்ன சொல்வர்? -கிருஷ்ணமூர்த்தி



“பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார்.......... read more 

“Walk for Justice and Peace”


“Walk for Justice and Peace”
                                      - From Manchester to London -                                     
(Between Saturday the 29th October and Monday the 07th November 2011)
COULD YOU UNITE WITH US TO STOP THE GENOCIDE OF TAMILS?
 History
The Tamils have been living on the Island of Ceylon for thousands of years before the birth of Christ. During the period from 600 BC to 1505 AD, parts of the Island were ruled separately and together from time to time by the Tamils and the Sinhalese.

தமிழர் உயிர் கேட்கும் கூடங்குளம் அணு உலை

தெற்காக இருந்தாலும் வடக்காக இருந்தாலும் தமிழகம் ஒன்றே.    தென் தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த அடிப்படை உரிமைப் போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம்.  நாளைய தமிழர் உயிர் காக்க ஒற்றுமையாய் இன்றே ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுப்போம். 


Subject: Fw:  மக்களுக்காக ஆட்சியா?  இல்லை ஆட்சிக்காக  மக்களா? என்ற கேள்வி நம்முன் உள்ளது. 

புலிகள் இருந்திருந்தால் பாரதவின் கொலைப்பழியும் அவர்கள் மீதே விழுந்திருக்கும் : வினோநோகராதலிங்கம்


விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் பாரத லக்ஷ்மனின் கொலைப் பழியை புலிகளின் தலையில் சுமத்திவிட்டு குற்றவாளிகள் இலகுவாகத் தப்பித்திருப்பார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோநோகராதலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான எமது சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாது தென் பகுதியிலும் சட்டவிரோத ஆயுதங்களைக் களையுமாறு வலியுறுத்தி வந்தோம். ஆனாலும், அது நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

Thursday 20 October 2011