Translate

Saturday 16 June 2012

ஜெயலலிதா தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்


ஜெயலலிதா  தலைமையில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்இந்து அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதுமண ஜோடிகள் தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
1006 ஜோடிகளின் திருமண விழா வருகிற 18ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெறுகிறது. 

இதற்காக கோவில் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருமண விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 1006 புதுமண ஜோடிகளும் பந்தலில் அமர வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா 4கிராம் தங்கத்தாலியுடன் கூடிய மாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். 

பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை கொல்வதற்கு உத்தரவிட்டவர் கோத்தாவே; லங்கா நியூஸ்வெப் அதிர்ச்சித் தகவல்; இராணுவம் மறுப்பு


பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை கொல்வதற்கு உத்தரவிட்டவர் கோத்தாவே; லங்கா நியூஸ்வெப் அதிர்ச்சித் தகவல்; இராணுவம் மறுப்பு
news
 விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 14வயது மகன் பாலச்சந்திரன்,  பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
 
 
இலங்கை இராணுவத்தின் 53ஆவது டிவிசன் தளபதியான பிரிகேடியர் கமால் குணரட்ணவின் (தற்போது மேஜர் ஜெனரல்) மேற்பார்வையிலேயே பிரபாகரன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக அது கூறியுள்ளது.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவர்: அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி


பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஒரு நன்றி கெட்டவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான றஊப் ஏ மஜீதின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பௌசி,

லண்டன் பள்ளியில் குட்டை பாவாடைக்கு தடை !


லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவியர்களின் குட்டை பாவாடை சீரூடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது, எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது. முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டும்.

புலிகள் மீது தடையை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மண்டாடும் இலங்கை !


புலிகள் மீது தடையை நீடிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் மண்டாடும் இலங்கை !
பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர், ஆரியசிங்க நேற்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரைச் சந்தித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இச் சந்திப்பின்போது, விடுதலைப் புலிகள் தொடர்பாக பல கருத்துக்களை ஐரோப்பிய ஒன்றியத் தலைவரிடம் ஆரியசிங்க எடுத்துரைத்துள்ளாராம். ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் இன்னமும் இயங்கிவருவதாகத் தெரிவித்துள்ள அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடுமாறு மண்டாடியுள்ளார்.

இங்கிலாந்து சிறுவர்களின் பொது அறிவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருத்துக்கணிப்பு குழுவினர்.


லண்டனில் உள்ள சிறுவர்களுக்கு பொது அறிவு குறைவாக இருப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பரவலாக பொது அறிவு சார்ந்த கருத்து கணிப்பும் ஆய்வும் நடத்தப்பட்டது. அறக்கட்டளை நிறுவனம் ஒன்று, 2000க்கும் அதிகமான ஆண், பெண், வயது வித்தியாசமின்றி கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை குறித்து அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டன. படங்களை காட்டி பதில் அளிக்கும் விதத்திலும் கேள்விகள் இருந்தன. இதில் கிடைத்த பதில்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இலங்கையில் 45,000 பெண்கள் பாலியல் தொழிலாளிகள்!


இலங்கையில் நாள்தோறும் 80ஆயிரம் ஆண்கள், பெண் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் 37, 000 முதல் 45, 000 வரையிலான பெண் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கின் ஆட்சி இராணுவத்தின் கையில்!-மாவை!


எங்களது தேசத்தில் எங்களை நாம் ஆளக்கூடியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் வடக்கில் நடப்பது என்ன? வடக்கின் ஆட்சியில் இராணுவமும் ஆளுநரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இராணுவத்தின் மிரட்டலால் உண்மைகளைச் சொல்ல அஞ்சும் ஈழத்தமிழர்கள் – இந்திய குழு


இராணுவத்தின் மிரட்டலால் உண்மைகளைச் சொல்ல அஞ்சும் ஈழத்தமிழர்கள் – இந்திய குழு

பார்வர்ட் பிளாக் எம்.பி. வருண் முகர்ஜி தலைமையில் கதிரவன் எம்.எல்.ஏ பார்வர்ட் பிளாக் தேசிய செயலாளர் தேவராஜன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழர் பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இலங்கையில் தங்கியிருந்த இவர்கள் நேற்று (15) காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். சென்னையில் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

திருமலையில் குவியும் பன்னாட்டு முதலீடுகள்–இதயச்சந்திரன் சிறீலங்க


ஊடகவியலாளர்களை, ஒரு நாட்டின் உளவாளிகள் என்ற எழுந்தமானமாக எதுவித ஆதாரமுமற்று குற்றம் சாட்டும் போக்கு ஒன்று வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
இது ஆரோக்கியமான அரசியல் விவாதங்களை உருவாக்க உதவாது என்பதனை, பிரித்தானியாவில் இயங்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளைத் தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவதூறு அரசியலிற்குள் செல்ல விரும்பாததால் இதனை இத்தோடு விட்டு விடுகிறேன்.

யாழ் அரசியல்துறை பொற்பதி கட்டிடத்தை ஒட்டுக்குழு டக்ளஸின் அலுவலமாக மாற்ற முயற்சி.(படங்கள்) தமிழீழம்


யாழ். மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் செயற்பாட்டு நிலையமாக விளங்கிய பொற்பதி அரசியல்துறை செயலக கட்டிடத்தில், தற்போது ஒட்டுக்குழு   ஈ.பி.டி.பியினர் முகாமிட்டு அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த கட்டிடத்தில், 1995ம் ஆண்டு வரையும், பின்னர் சமாதான காலத்திலும்,தமிழீழ விடுதலை  புலிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திவந்தனர். எனினும் யுத்தம் தீவிரமடைந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் வெளியேறினர்................. read more

தரமற்ற கருவிகளால் கூடங்குளத்துக்கு ஆபத்து: அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் (PMANE) கருத்து


தரமற்ற கருவிகளால் கூடங்குளத்துக்கு ஆபத்துஅணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் விஞ்ஞானிகள் (PMANE) கருத்து

16 ஜூன், 2012, சென்னை  கதிரியக்க பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற அணுஉலை அழுத்தக் கலனை (Reactor Pressure Vessel - RPV) ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம் கூடங்குளம் அணுஉலை தொடர்பான இந்திய  ரஷ்ய ஒப்பந்தத்தை இந்திய அணுசக்திக் கழகமும்(NPCIL) அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியமும் (AERB) மீறியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்(PMANE) நிபுணர் குழுசமீபத்தில் தனக்குக் கிடைத்த இரண்டு ஆவணங்களின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது.

தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி


தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்நாம் தமிழர் கட்சி

pranab-mukherjeeகுடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது இராமசந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.
ண்டா என்ற அந்த 33 வயது இளைஞர் இதுவரையில் யாருமே செய்திராத உலக சாதனையை செய்து நயாகரா பகுதியை உலகின் அதி கூடிய மக்கள் பார்வையிட்ட சாதனை பிரதேசம் ஆக்கியுள்ளார். 
நாம் எல்லோரும் தொலைக் காட்சியில் இந்த விந்தை சாதனையை மூச்சை பிடித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தோம். சாதரணமாகவே நயாகரா பகுதிக்கு சென்றாலே அருவியின் சாரலிலும் குளிர் காற்றிலும் நடுங்கி நடை தடுமாறும் எமக்கு தரையில். நிக்கோ காற்றில் கம்பியில் நடந்து அமரிக்காவில் இருந்து கனடாவுக்கு சுமார் 25 நிமிடங்கள் 19 செக்கன்கள் கால எல்லைக்குள் கடந்து வந்தார். 

பாலியல் தொழிலாளிகளை நாடும் இலங்கையர்கள்! நாளாந்த புள்ளி விபரம் வெளியீடு!!


பாலியல் தொழிலாளிகளை நாடுவோரின் எண்ணிக்கை இலங்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, நாள்தோறும் 80ஆயிரம் ஆண்கள், பெண் பாலியல் தொழிலாளிகளை நாடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய புள்ளி விபரத் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதிலும் 37, 000 முதல் 45, 000 வரையிலான பெண் பாலியல் தொழிலாளிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணப் பெண்களை வைத்துக் கொழும்பில் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்!!


வேலை வாய்ப்புக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பல பெண்கள் கொழும்பில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

கிராமப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்குக் கொழும்பிலும் பிற பிரதேசங்களிலும் தொழில் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வரும் ஒரு கும்பலே இவர்களைக் கொழும்பில் சிறைவைத்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வருகின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

Friday 15 June 2012

பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன்

பழம் பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் 14.06.2012 அன்று காலமானார்.கண்ணீர் அஞ்சலிகள்!

ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது – கெஹலிய


ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது – கெஹலிய
ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டனில் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த, ஸ்கொட்லான்ட் யார்ட் புலனாய்வுப் பிரிவு தவறியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் ஆயரைச் சந்தித்த சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினீஸ் !


சிறிலங்கா அரச கட்டமைப்பினாலும்இனாவாதிகளினாலும் அழுத்தங்களைச் சந்தித்துள்ளமன்னார் மறைமாவட்ட ஆயர்
வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களைசிறிலங்காவுக்கானஅமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினீஸ் அவர்கள் சந்தித்துள்ளார்.

இலங்கையில் இசைக் கச்சேரி ஒன்று தான் குறைச்சல் . தமிழர்களின் அழுகுரல் இவ்வுலகிற்க..

இலங்கையில் இசைக் கச்சேரி ஒன்று தான் குறைச்சல் . தமிழர்களின் அழுகுரல் இவ்வுலகிற்கு கேட்காத போது அங்கு கூத்தும் கும்மாளமும் போடுவதற்கு இந்த பாடகர் ஹரிஹரன் இலங்கை செல்கிறார். தமிழர்களின் குரலை மீறி இவர் இலங்கை சென்றால் தமிழ் படங்களில் இவரை புறக்கணிப்போம். அனைவரும் நம் கண்டனத்தை பதிவு செய்வதோடு இவரை அங்கு போகாமல் தடுப்போம். இனப்படுகொலை இலங்கையை புறக்கணிப்போம். 

பெரும்பான்மையினருக்கு அனுமதி ஆனால் தமிழ் மக்களுக்குத் தடை; முல்லைத்தீவில் இராணுவம் பாரபட்சம்


news
 முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில முக்கிய இடங்களுக்குத் தமிழ் மக்கள் செல்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளால் அரிசி ஏற்றி வரப்பட்ட போது கரையொதுங்கிய 100 மீற்றர் நீளமான கப்பல் ஒன்று காணப்படுகிறது.

சமந்தா பவர் மஹிந்தரை உடைப்பவள்


சமந்தா பவர் மஹிந்தரை உடைப்பவள்
essayயார் இந்த சமந்தா பவர்? அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் பெண்மணியே இந்த சமந்தா பவர். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தையும் வெள்ளை மாளிகையையும் உஷார்படுத்தி வருபவர் இந்தச் சமந்தா பவரே என்று இலங்கை அரசு நம்புவதாகத் தோன்றுகிறது.

 ன்னிப் போரின் இறுதி நாள்களிலும், போர் முடிவுக்கு வந்த நாள்களிலும் அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையேயான வட்டமேசை ஆலோசனைகளில் அடிக்கடி உச்சரிக்கப்பட்டதொரு பெயர் சமந்தா பவர். 

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தனி ஈழம் கொடுப்பதற்குச் சமம்;தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் அச்சம்


வடக்கு மாகாண சபைத் தேர்தல் தனி ஈழம் கொடுப்பதற்குச் சமம்;தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் அச்சம்
news
தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும். வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
தனி ஈழத்தை அமைப்பதற்கு மேற்குலகம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே, அரசு அதில் சிக்கக்கூடாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் : கலைஞர் _


  தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் இலட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன் என கலைஞர் கருணநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கலைஞர் 89-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அவரது தொகுதியான திருவாரூரில் நடந்தது. 

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஐ.நா. வுடன் இலங்கை இணைய வேண்டும்: பான் கீ மூன் _


  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டை பிரிக்கும் ஏற்பாடுகள் எம்மிடம் இல்லை – இரா.சம்பந்தன்

தமது கட்சியின் யாப்பில் நாட்டை பிரிக்கும் வகையிலான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் உள்ள தமது கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது அதில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென இரா.சம்பந்தன் ´தி ஹிந்து´ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளின் யாப்பில் நாட்டை பிரிப்பது தொடர்பில் ஏற்பாடுகள் உள்ளதால் அந்த கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சிங்கள தேசிய முன்னணியின் செயலாளர் ஜயந்த லியனகே உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

புலிகள் வெளியிடாத ரகசியம்: கிட்டு, சென்னை அருகே வெடித்த கப்பலில் ஏன் ஏறினார்?


புலிகள் வெளியிடாத ரகசியம்: கிட்டு, சென்னை அருகே வெடித்த கப்பலில் ஏன் ஏறினார்?
விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) இந்தியக் கடலில் வைத்து கப்பலுடன் வெடித்துச் சிதறியது எப்படி? இது பற்றி முன்பு நான்கைந்து வெவ்வேறு விதமாக கூறப்பட்டு வந்தன. அதில் எந்தக் கதை நிஜம் என்பதில் குழப்பங்கள் இருந்தன.
விடுதலைப் புலிகள் இலங்கையில் பலமாக இருந்தபோது, கிட்டுவின் இறப்பு எப்படி நடந்தது என்று விலாவாரியாக வெளியிடவில்லை.

புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்துபோன பேரினவாதக் கனவு!


ஜூன் 3ம் திகதி பிற்பகல் 1.05 மணிக்கு லண்டன் புறப்படுவதாக இருந்த அவர்,
அன்றிரவே இரகசியமாகப் புறப்பட்டுச் சென்றார். இது லண்டனில் மட்டுமல்ல, கொழும்பின் மீதும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் அழுத்தம் கொடுக்கும் நிலையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அடுத்து, காமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா மால்பரோ ஹவுசில் ஒழுங்கு செய்திருந்த விருந்துக்குக் கூட, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், இலங்கையின் தேசியக்கொடியை துறந்து விட்டே செல்ல வேண்டியிருந்தது.

ஆசியாவில் அநாதை நாடாக மாறும் இலங்கை


இலங்கை என்ற இந்தத் தேசத்தை ஆட்சிபுரியும் அரசு தனிவழியிலான அரசியல் பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. செங்கோல் ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோல் ஆட்சி முறைமையையே அது பின்பற்றி வருகின்றது.
இலங்கை என்ற இந்தத் தேசத்தை ஆட்சிபுரியும் அரசு தனிவழியிலான அரசியல் பாதையை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது. செங்கோல் ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோல் ஆட்சி முறைமையையே அது பின்பற்றி வருகின்றது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 8000 ஏக்கர் காணிகளைத் வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது.


வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 8000 ஏக்கர் காணிகளைத்   வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 8000 ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது.
வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன.

நில அபகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!


யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கில் இயல்புநிலை உருவாகியுள்ளதாகவும், இராணுவத்தின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருவதாகவும் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசானது மறுபுறத்தில் இராணுவத் தேவைக்காகவென தமிழர் தாயகத்திலுள்ள தனியார் மற்றும் அரச காணிகளை கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை


இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப்புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டுஅரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Wednesday 13 June 2012

முள்ளிவாய்க்கால் எச்சங்களை அழிக்க சீனாவிலிருந்து நவீன திரவம்: இலங்கை அரசின் கடபத்தனம் அம்பலம்


முள்ளிவாய்க்கால் எச்சங்களை அழிக்க சீனாவிலிருந்து நவீன திரவம்: இலங்கை அரசின் கடபத்தனம் அம்பலம்
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் எலும்புகளை உக்க வைப்பதற்கே இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது.

நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! பின்னணியில் இலங்கைக் கொலையாளி! திடுக்கிடும் தகவல்!


ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க புதிய டீம் பொறுப்பேற்ற பிறகு, விசார​ணை​யில் வேகமும், விசாரிக்கும் முறையில் கடுமையும் கூடி இருக்கிறது.
நண்பர்கள், உறவினர்கள் என்ற பேனரில் இடம்பெற்ற ஏராளமானவர்களிடம் விசாரித்து முடித்து விட்டனர். 'எலிமினேஷன் பிராசஸ்' என்ற வகையில், ஒருசிலரைத் தவிர மற்றவர்களைக் கழற்றி விட்டனர். மிச்சம் இருக்கும் அந்த சிலரிடம் இப்போது தீவிர விசாரணை நடக்கிறது!
இந்த விசாரணையின் அடிப்படையில் பொலிஸுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது...
மார்ச் 28-ம் தேதி இரவு படுடென்ஷனாகக் காணப்பட்ட ராமஜெயம், தன்னை ரிலாக்ஸ் செய்து​கொள்ள விரும்பி இருக்கிறார். அப்போது, அவருக்கு ஏற்கெனவே பழக்கமான சிலருக்கு போன் செய்து பேசி இருக்கிறார்.

தமிழர் தாயகத்தை அடிமைகளின் பிரதேசமாக மாற்ற அரசு முயற்சி; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு


தமிழர் தாயகத்தை அடிமைகளின் பிரதேசமாக மாற்ற அரசு முயற்சி; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு
news
தமிழர் தாயக பூமியான வடக்குப் பிரதேசத்தை அடிமைகள் வாழும் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கே இந்தக் கொடுங்கோல் அரசு இராணுவத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கின்றது எனக் குற்றஞ்சாட்டியுள்ள நவசமசமாஜக்கட்சி, தமிழர்களின் பொறுமையை இந்தப் பேரினவாத அரசு சோதிக்குமானால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித் துள்ளது.
 
மயான பூமியையும் ஆக்கிரமித்து, அங்கு பௌத்த கொடியை நிலைநாட்டி சிங்கள தேசம் என்ற இனவாத மந்திரத்தை ஓதி நாட்டை சிங்களமயமாக்குவதற்கு இந்த அரசு முயற்சிக்கின்றது என்றும் அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

வட பகுதியில் ஆபத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி; சுட்டிக்காட்டுகிறது ஐ.நா. அமைப்பு

news
 இலங்கையில் பாதுகாப்பு நிலைமை ஸ்திரம் அடைந்துள்ளது. அது விரைந்து மீட்சி பெற்று வருகிறது. இருப்பினும் வடக்கில் வாழ்கின்ற இலகுவில் ஆபத்துக்கு உட்படும் நிலையிலுள்ள குடும்பங்களுக்கான ஆதரவு இன்னும் சவாலாகவே உள்ளது என ஐக்கிய நாடுகளின் பிரதம அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுதப் போராட்டம் பற்றிய வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
அத்துடன் சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தல் மற்றும் அவர்களைப் பயன் படுத்துவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஐ.நா. பாதுகாப்புச்சபையால் முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை இலங்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதால் வெட்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முஸ்லிம்களைஅச்சுறுத்தும் விதத்தில் காலி பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் சுவரொட்டிகள் _


  காலி மாவட்டத்தில் பெந்தர,எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஓட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான கோரியுள்ளார். இல்லாவிட்டால் இது ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயமுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

அன்பான தமிழீழ உறவுகளே; சிங்களத்தின் உளவியற் போரை உடைத்தெறிவோம்..!


தமிழீழ இன அழிப்பின் ஒரு அங்கமாய், எமது விடுதலைக்காகப் போராடிய போராளிகளை, சிங்கள இராணுவத்தினர் கைகளைக்கட்டி வைத்துச் சுட்டுக்கொலைசெய்யும் காட்சிப்பதிவுகள் இன்னமும் வெளியாகியபடியே உள்ளன. எமது இனத்தின் மீது சிங்களம் ஏவிவிட்ட கோரத்தின் பதிவுகளாக எம்மனதில் இக்காட்சிகள் நிழலாடுகின்றன . இவை நிச்சயமாக எமது மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்.விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் இவ்வாறான காட்சிகள், பகுதி பகுதிகளாக வெளியிடப்படுவது இன்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

பிரதமராக கோத்தபாய மகிந்த அதிரடித் தீர்மானம்! கொழும்பு தகவல்


இலங்கையின் பிரதமர் டி.எம். ஜயரத்னவிற்கு தற்போது சுகயீனமுற்றிருப்பதால், அவருக்குப் பதிலாக ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்‌சவை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச தீர்மானித்துள்ளார் என கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் விரிவான செய்தி ஒன்றை லங்கா நியூஸ் வெப் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவும் அமெரிக்காவும் முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றன : சம்பிக்க ரணவக்க


இலங்கை அரச தலைவர்களுக்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உரிய கௌரவம் வழங்க தவறுவதாக, ஜாதிக ஹெல உருமயவின் பொதுச்செயலாளர் சம்பிக்க ரணவக்க கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் சுதந்திரமாக வி.புலிகள் செயற்படுவதானால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜாபக்ச லண்டன் சென்ற போது அங்கு வி.புலிகளின் ஆதரவாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியுள்ளனர். இலங்கையின் ஜனாதிபதியின் கௌரவத்தை காப்பாற்றுவதற்கு லண்டனாலோ, மேற்குலக நாடுகளாலினாலோ முடியவில்லை.  ஆனால் இவை ஏனைய நாடுகளின் மனிதாபிமானத்தை பற்றி பேசுகின்றன. 

யூலைக் கலவரத்தில் அடித்த கொள்ளையை மறந்து மகிந்த காமடி..


பௌத்தர்கள் மற்றவர்களது உடைமைகளைப் பறிப்பவர்கள் அல்லர். மாறாகத் தங்களது உடைமைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை கொண்டவர்களாவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.

தமிழரின் கண்ணீருக்கு காரணமான சிவ்சங்கர் இலங்கை வருகிறார்


இலங்கைக்கான அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் எதிர் வரும் 29 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படைகளினால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் திருகோண மலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளமை தொடர்பில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்து இந்திய அரசின் அதிருப்தியையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!
 திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

பெண் பிள்ளைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சிறிலங்கா அமைச்சரே ஏற்றுக் கொண்டார்.

மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சர்வமதப் பிரார்த்தனை

தமிழர்களின் நலனுக்காக சாதி, மத பேதமின்றி பாடுபட்டுவரும் மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப் அவர்களுக்காக சர்வமதப் பிரார்த்தனை ஒன்று மன்னாரில் நிகழ்ந்ததை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.

கலாநிதி ராயப்பு ஆண்டகையை ஒரு மதகுருவாக மட்டும் எண்ணாமல் அவர் ஓர் இனப்பற்றாளரும் மனித உரிமைக்காக உழைப்பவரும் ஆக பார்க்கப்பட்ட அந்தப் பிரார்த்தனை உலகெலாம் ஓரு புத்துணர்வை கொண்டு வந்ததை நாம் அறிவோம்.  இன்றைய காலகட்டத்தில் இத்தனை நெருக்கடியிலும் தனது பணியை மனிதத்திற்காக செயற்படும் அவரின் கொள்கையை எண்ணத்தை யாராலும் போற்றாமல் இருக்க முடியாது.

வரலாறு இடித்துரைக்கும் செய்தி - சேரமான்

Photo: Yesterday
.வரலாறு இடித்துரைக்கும் செய்தி - சேரமான்.
Posted by: on ஜூன் 10, 2012 


நாடு முழுவதும் சிங்களவர்களுக்கு சொந்தமானது’ என்று கடந்த வாரம் பி.பி.சி ஊடாக மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அறிவித்தல், இதுவரை காலமும் ‘இலங்கையர்’ என்ற வெற்...றுக் கோசத்தை தாங்கிப்பிடித்து வந்த பல தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சலசலப்பிற்கு ஆளாகிய தரப்பினரில் சிங்களத்திற்கு பரிவட்டம் கட்டும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் மட்டுமன்றி ‘இணக்க அரசியலின்’ பெயரில் சிங்களத்துடன் நீண்ட காலமாக ஒட்டி உறவாடும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் உள்ளடங்குகின்றன.

வாளேந்திய சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து தனது அரசியல் ‘சாணக்கியத்தை’ வெளிப்படுத்திய சம்பந்தரும் இதில் உள்ளடங்குகின்றார். ஆனால் இவ்வாறான அறிவித்தல்களை சிங்களவர்கள் வெளியிடுவது இது முதற்தடவையன்று. இதே பாணியிலான அறிவித்தல்களை டட்லி சேனநாயக்கா தொடக்கம் சிங்கள தேசத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த அனைத்துத் தலைவர்களும் வெளியிட்டதுண்டு.

சமாதானப் புறா என்று அன்று வர்ணிக்கப்பட்டவரும், இன்று தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பவருமான சந்திரிகா அம்மையாரும் இதில் உள்ளடக்கம்: பொன்சேகாவும் இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவரல்ல. கிறிஸ்துவுக்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் கர்ணவழிப் புரளிகளிலிருந்தும், இதிகாசப் புனைவுகளிலிருந்தும் பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட மகாவம்சத்திலிருந்தே இக்கருத்துருவம் ஊற்றெடுக்கின்றது. இப்புனைவு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்தீவின் வரலாற்றை ஆய்வு செய்த மேலைத்தேய வரலாற்றாய்வாளர்களாலும், அரசறிவியலாளர்களாலும் அடியோடு நிராகரிக்கப்பட்ட பொழுதும், மகாவம்சப் புனைவை நியாயப்படுத்திய ‘பெருமை’ அன்றைய தமிழ் அரசியல்வாதிகளையும், வரலாற்று ஆசிரியர்களையுமே சார்ந்துள்ளது.

அநகாரிக்க தர்மபாலாவின் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட சிங்களவர்களின் ஆரியவம்ச மூலத்தை அன்றைய தமிழ் வரலாற்றாய்வாளர்கள் நிராகரித்திருந்தாலும்கூட, யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றை எழுதும் பொழுது மகாவம்ச வழிநின்று விஜயனின் வருகை பற்றிய கட்டுக்கதையை நியாயப்படுத்துவதற்கும், அதே பாணியில் தமிழ் அரசர்களின் வரலாற்றை திரிவுபடுத்துவதற்கும் இவர்கள் தவறவில்லை.

இதில் முதன்மையானவராகத் திகழ்பவர் இராசநாயகம் முதலியார். பதினெட்டாம் நூற்றாண்டில் ஒல்லாந்தரின் ஆட்சியில் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட ‘யாழ்ப்பாண வைபவ மாலையை’ திரிவுபடுத்தி, சாதிய மூலாம்பூசி இவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு அடிப்படையில் சிங்களவர்களை ஈழத்தீவின் தொல்குடிகளாகவும், தமிழர்களை வந்தேறு குடிகளாகவும் சித்தரிக்கின்றது. இதேபோன்று மகாவம்சம் எழுதப்படுவத்கு முந்திய காலப்பகுதியிலிருந்து வன்னி, புத்தளம், தென்தமிழீழம் ஆகிய பிராந்தியங்களை ஆட்சி செய்த வன்னிச் சிற்றரசர்களை வெறும் ‘நாட்டதிகாரிகளாகவே’ இராசநாயக முதலியாரின் யாழ்ப்பாண வரலாறு வர்ணிக்கின்றது.

இதேபாணியிலேயே சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்கள் எழுதிய ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ போன்ற நூல்களும் அமைகின்றது. இதுவே கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழீழ தாயகம் தோறும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதிலும், பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதிலும், அதற்கு மகாவம்ச கட்டுக்கதை நியாயங்களை சிங்களம் புனைவதற்கும் காலாக அமைந்துள்ளது.

மரத்தை வெட்டுவதற்கு உதவும் ‘கோடாரிக் காம்புகள்’ போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழர்களின் வரலாற்றை சாதிய அடிப்படையில் எழுதிய இவர்களின் கைங்கரியம் இன்று ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பிற்கு பங்கம் விளைவிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. நகுலேச்சரம், திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம் போன்ற தொன்மை வாய்ந்த சைவத் தலங்களை அண்டி பௌத்த விகாரைகளை நிறுவுவதில் சிங்களம் முனைப்புக் காட்டுவதன் நதிமூலமும், அண்மையில் மாதகலில் பௌத்த விகாரை நிறுவப்பட்டதன் ரிக்ஷிமூலமும் இவர்கள் எழுதிய கர்ணவழி ‘வரலாற்று’ நூல்களிலேயே உள்ளன.



ஆனால் இதே காலப்பகுதியில் ஈழத்தீவின் வரலாற்றுப் பின்னணி பற்றி எழுதிய சேர் ஐவர் ஜெனிங்க்ஸ் என்ற பிரித்தானிய சட்டவியல் தத்துவாசிரியர், ஈழத்தின் பூர்வீகக் குடிகளாகத் தமிழர்களே திகழ்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை தர்க்கீக ரீதியாக நிறுவியிருந்தார்: “எக்காலப் பகுதியில் இலங்கையில் தமிழர்கள் குடியேறத் தொடங்கினார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.

ஆனால் பூகோள அடிப்படையில் பார்க்கும் பொழுது சிங்களவர்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் குடியேறினார்கள் என்று நாம் கூறும் வகையில் யாழ்ப்பாணத்திற்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் பருவ காலம் சாதகமாக அமையும் பொழுது தென்னிந்திய தமிழ் மீனவர்கள் தமது கட்டுமரங்களுடன் யாழ்ப்பாணத்தின் கரையை வந்தடைவது வழமையாக உள்ளது.

இந்த வகையில் பார்க்கும் பொழுது இலங்கையில் சிங்களவர்கள் குடியேறத் தொடங்குவதற்கு முன்னரே தமிழர்கள் குடியேறி விட்டார்கள் என்று கூறலாம். 1505ஆம் ஆண்டு இலங்கையை போர்த்துக்கேயர்கள் வந்தடைந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ் இராச்சியம் ஒன்றும், மேற்குக் கரையில் கோட்டையை (தற்பொழுது கொழும்பின் புறநகரில் உள்ளது) மையப்படுத்திய சிங்கள இராச்சியம் ஒன்றும், கண்டியின் மலைப் பகுதிகளை மையப்படுத்திய இன்னொரு சிங்கள இராச்சியமும் இயங்கின.

இந்தியாவில் இந்து மதத்தின் எழுச்சி காரணமாக தமிழ் மொழியில் இப்பொழுது சமஸ்கிருதத்தின் தாக்கம் காணப்பட்டாலும்கூட, இலங்கையில் பிராமணர்களின் செல்வாக்கு குறைவாகக் காணப்படுவதால் இந்தியாவை விட அங்கு தமிழ் மொழி கலப்படமின்றி தூய்மையாகப் பேசப்படுகின்றது.” இவ்வாறு ஈழத்தீவில் தமிழர்களின் பூர்வீக வரலாறு பற்றியும், ஈழத்தமிழர்களால் தமிழ் மொழி கலப்படமின்றி பேசப்பட்டமை குறித்தும் அன்று ஆதாரபூர்வமாக நிறுவிய ஜெனிங்க்ஸ் அவர்கள், பிற்காலத்தில் இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது தமிழர்களின் அரசை அவர்களிடம் கையளிக்காது சிங்களவர்களிடம் பிரித்தானியா கையளித்துச் சென்ற வரலாற்றுத் தவறு பற்றிய தனது கவலையையும் வெளியிடத் தவறவில்லை.



இதுபற்றி 26.11.2007 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்கள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துக் கூறியிருந்தார். இதில் வரலாற்று நகைமுரணாக ஒற்றையாட்சி அமைப்பின் அடிப்படையிலான இலங்கையின் சோல்பரி அரசியல் யாப்பை எழுதிய சட்டவியல் நிபுணர்களில் ஒருவராக ஜெனிங்க்ஸ் அவர்கள் விளங்கியதை நாம் இத்தருணத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

இதனையிட்டு தனது கவலையையும் பிற்காலத்தில் ஜெனிங்க்ஸ் வெளியிடத் தவறவில்லை! இளம் பிராயத்தில் இலங்கையில் தமிழர்கள் எவரையும் தான் கண்டதில்லை என்றும், தான் சந்தித்தவர்கள் அனைவரும் சிங்களவர்களே என்றும் இன்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்ச கருத்து வெளியிட்டாலும், ஈழத்தீவில் தமிழர்களின் தொன்மையை நிலைநாட்டும் சேர் ஐவர் ஜெனிங்க்ஸ் போன்றவர்களின் வரலாற்றுப் பதிவுகளை கோத்தபாயவோ, அன்றி மகாவம்சத்திற்கு புத்துயிர் கொடுக்கும் ஏனைய சிங்கள இனவாதிகளோ மறுக்க முடியாது.

தமிழர்களுக்கும், சிங்களவர்களும் இடையிலான முரண்பாடு என்பது இருபதாம் நூற்றாண்டில் முகிழ்த்த ஓர் இனப்பிரச்சினை அன்று. மகாவம்சம் எழுதப்படுவதற்கு முன்னரே இம்முரண்பாடு முற்றிவெடித்ததை தனது எழுத்துக்களில் ஜெனிங்க்ஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

எல்லாளன் - துட்டகாமினி போருடன் தொடங்கிய இந்த தமிழ் - சிங்கள முரண்பாடு 1815ஆம் ஆண்டில் ஈழத்தீவை ஆங்கிலேயர்கள் முழுமையாகக் கைப்பற்றும் வரை ஓயாது நிகழ்ந்தேறிய வண்ணம் இருந்துள்ளது. போர்த்துக்கேயர்களின் காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக விளங்கிய முதலாம் சங்கிலியனுக்கு எதிராகப் போர்த்துக்கேயர்களுடன் இணைந்து சிங்களவர்கள் சதிசெய்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் வணிகர்களின் போர்வையில் யாழ்ப்பாணத்தில் அன்று தமது ஒற்றர்களாக இயங்கிய சிங்களவர்களை முதலாம் சங்கிலியன் தென்னிலங்கைக்கு நாடுகடத்தியதை போர்த்துக்கேயர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் பின்னர் 1619ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான இரண்டாம் சங்கிலியனுக்கு எதிராக போர்த்துக்கேயர்கள் படையெடுத்த பொழுது, பிலிப் டீ ஒலிவேரா தலைமையிலான போர்த்துக்கேய கூலிப்படையில் சிங்களவர்கள் அங்கம் வகித்திருந்தார்கள். 



இதேபோன்று 1815ஆம் ஆண்டில் கண்டி இராச்சியத்தின் இறுதித் தமிழ் மன்னனான கண்ணுச்சாமியை ஆங்கிலேயேர்களிடம் காட்டிக் கொடுத்துத் தமது தமிழின விரோதப் போக்கையும், மகாவம்ச மனோபாவத்தையும் சிங்களவர்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை. ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை வேரோடு பிடுங்கியெறிவதில் சிங்களவர்கள் கங்கணம்கட்டி நின்றதை எல்லாளன் முதல் கண்ணுச்சாமி வரை தமிழ் அரசர்களுக்கு நேர்ந்த கதி தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

போராடினால் மட்டுமே சுதந்திரமாக வாழ முடியும் என்ற இம்மெய்யுண்மையை ஈழத்தமிழர்களுக்கு வரலாறு உணர்த்தி நிற்கும் அதேவேளை சிங்களவர்களுக்கும் இன்னொரு செய்தியைக் கூறுகின்றது. இதனை இன்று யுத்த வெற்றியின் மமதையில் திழைத்திருக்கும் கோத்தபாயவும், அவரது சகோதரர் மகிந்தரும் ஆணவத்தோடு அலட்சியம் செய்யலாம். அன்று துட்டகாமினியின் பேரனாக விளங்கிய உரோகணை சிற்றரசின் குறுநில மன்னனான கோத்தபாய என்ற மன்னனின் பெயரை வரித்திருப்பதால் இவ் ஆணவம் கோத்தபாய ராஜபக்சவைப் பீடித்திருக்கலாம்: அல்லது நவீன துட்டகாமினியாக தன்னைப் பாவனை செய்து கொள்வதால் இவ் எண்ணம் மகிந்தருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் வரலாறு சொல்லும் இந்த மெய்யுண்மையை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. எல்லாளனின் வீழ்ச்சியுடன் ஈழத்தில் தமிழர்களின் இருப்பு முடிவுக்கு வந்துவிடவில்லை. எல்லாளனுக்குப் பின்னர் சேனன், குத்திகன் என்ற இரண்டு தமிழ் மன்னர்கள் எழுச்சிக் கொண்டு சிங்களத்தை வெற்றிகொண்டார்கள்: ஈழத்தீவு முழுவதையும் ஆண்டார்கள். செண்பகப் பெருமாள் என்ற தமிழ்த் தளபதியை தனது புதல்வனாகத் தத்தெடுத்து கி.பி 1450ஆம் ஆண்டில் அவனது தலைமையில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆறாம் பராக்கிரமபாகு கைப்பற்றிய பொழுது தமிழர்களின் இராச்சியம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அன்று தந்திரோபாயமாக தமிழ் நாட்டிற்குப் பின்வாங்கிச் சென்ற யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் கனகசூரிய சிங்கையாரியன் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1467ஆம் ஆண்டு மீண்டும் படையோடு வந்து யாழ்ப்பாண இராச்சியத்தை மீட்டெடுத்தான்.

இன்று தமிழீழ தாயகத்தை சிங்களம் ஆக்கிரமித்து நின்றாலும் மீண்டும் ஈழத்தமிழனம் வீறுகொண்டெழுவதை தடுத்து நிறுத்த முடியாது என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும். 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் இழந்துபோன தமிழீழ நடைமுறை அரசை மீண்டும் ஈழத்தமிழினம் வென்றெடுக்கும் காலம் நிச்சயம் கனிந்தே தீரும். சிங்களவர்களிடம் இழந்து போன யாழ்ப்பாண இராச்சியத்தை கனகசூரியன் மீட்டெடுத்த நிகழ்வை மீண்டும் இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறு நிச்சயம் பதிவு செய்தே தீரும்: அதற்கான காத்திருப்பே இப்பொழுது நடைபெறுகின்றது. இதுதான் சிங்களத்திற்கு வரலாறு இடித்துரைக்கும் செய்தி: ஈழத்தமிழர்களின் நம்பிக்கையும் இதில்தான் அடங்கியுள்ளது.

நன்றி : ஈழமுரசு
நாடு முழுவதும் சிங்களவர்களுக்கு சொந்தமானது’ என்று கடந்த வாரம் பி.பி.சி ஊடாக மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த அறிவித்தல், இதுவரை காலமும் ‘இலங்கையர்’ என்ற வெற்...றுக் கோசத்தை தாங்கிப்பிடித்து வந்த பல தரப்பினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சலசலப்பிற்கு ஆளாகிய தரப்பினரில் சிங்களத்திற்கு பரிவட்டம் கட்டும் தமிழ் ஒட்டுக்குழுக்கள் மட்டுமன்றி ‘இணக்க அரசியலின்’ பெயரில் சிங்களத்துடன் நீண்ட காலமாக ஒட்டி உறவாடும் முஸ்லிம் கட்சிகளும், மலையகத் தமிழ்க் கட்சிகளும் உள்ளடங்குகின்றன.

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ......

உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது.

உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது.

குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா, சுவிற்சர்லாந்து, மற்றும் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் விளையாட்டு வீரர்கள் விளையாடி இருந்தனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் பெயரில் தமிழ்நாட்டில் உணவகம்

தமிழீழத் தேசியத் தலைவர் பெயரில் தமிழ்நாட்டில் உணவகம்

 தமிழகத்தில் ஏற்காடு எனும் ஊரில் தம்பி பிரபாகரன் உணவகம் என்று தமிழ் உணர்வாளர் ஒருவர் ஆரம்பித்து இருக்கிறார் .

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படமும் புலி சின்னமும் அவரது பதிகையில் வைத்துள்ளார் .

தமிழ்ப் பற்றிக்கும் தைரியத்திற்க்கும் …வாழ்த்துகள்.

வட மாகாண சபை தேர்தல் கூறும் செய்தி என்ன?

வடக்கு மாகாண சபை தேர்தலை இன்னமும் தள்ளி வைக்காமல், உடனடியாக நடத்தி வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு - இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தலை தள்ளி வைப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுவதாகவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. அரசும் தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் வாக்காளர் சேர்க்கை போன்ற பணிகள் முடிவடைந்ததும் தேர்தலை நடத்தப் போவதாக கூறி வருகிறது. இதன் சாராம்சம் என்ன? வடக்கு மாகாண சபை தேர்தலால் யாருக்கு என்ன பயன்? குறிப்பாக, போரினால் பாதிக்கப்பட்டு, வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து வாழக்கையை போராட்டமாகவே நடாத்தி வரும் தமிழ் சமுதாயம் நேரடியாக அடையப் போகும் பயன் என்ன?

தமிழர்களின் போராட்டங்களுக்கு மத்தியில் இனிதே நிறைவுற்ற மகாராணியாரின் வைர விழா கொண்டாட்டங்கள்


அனலை நிதிஸ் ச. குமாரன்
பிரித்தானியாவின் பிரித்தாழும் தந்திரங்களினால் பல லட்சம் மக்கள் உலகம் பூராகவும் மாண்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆசிய, ஆபிரிக்க மற்றும் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆதிக் குடிமக்களின் பொருளாதார, அரசியல், கலாச்சார விழுமியங்களை சிறிதளவேனும் அறியாமல் படையெடுத்து தமது சுய இலாபங்களுக்காக அந்நாடுகளைக் கைப்பற்றிய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் விளைவே பல்வேறு நாடுகளில் இடம்பெறும் இனப் பிரச்சினைகள்.பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரித்தானிய ஏகாதிபத்தியமே தனது இராஜ்ஜியத்தின் விரிவாக்கத்துக்கும் அபிவிரித்திக்கும் பிரித்தாழும் தந்திரத்தை கையாண்டது.
பிற இன மக்களைப் பற்றி சிறிதளவேனும் அறியாமல் வன்முறை மூலமாக அவர்கள் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி பல நாடுகளில் வாழும் மக்களின் அழிவுகளுக்கு காரணமாக இருந்தது பிரித்தானிய இராஜ்ஜியம். தமக்கு ஒரு சட்டம் பிறருக்கு ஒரு சட்டம் என்கிற வகையிலேயே ஐரோப்பிய நாடுகள் தமது செயற்பாடுகளை செய்கின்றன.

"கொக்கு என்று நினத்தாயோ கொங்கணவா"


அவர் திருவள்ளுவர் வீட்டுக்கு பிச்சை கேட்டு வந்தார். நெடு நேரமாகியும் வள்ளுவர் மனைவி பிச்சை போட வரவில்லை. அவர் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார்.

பின்னர் வெளியே பிச்சை போட வந்த போது கொங்கணவ முனிவர் அதே கோபத்தோடு வள்ளுவர் மனைவியயைப்பார்த்தார். ஆனால் அவரது கோபம் வள்ளுவர் மனைவியை எரிக்கவில்லை.

அதுமட்டுமல்ல , வள்ளுவர் மனைவி சிரித்துக்கொண்டே .....