Translate

Saturday 24 December 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கி வைத்தார்!

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளமான www.naathamnews.comஇணையத்தளத்தை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தொடக்கிவைத்தார்.
நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு

 இந்த வருடத்தின் செய்தியாளராக ஜக் லேட்டன் தெரிவு


கனடாவில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் வருவதற்கு காரணகர்த்தா  ஜக்லேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் சிறந்த செய்தியாளராக அதாவது ஊடகங்களில் அதிகளவு செய்திகளை உருவாக்கியவராகமறைந்த என்.டி.பிதலைவர் ஜக் லேட்டன் கனடா அச்சக நிறுவனத்தினால் தெரி வு செய்யப்பட்டுள்ளார்.பொது நல சேவையில் அதிகளவு ஈடுபாடு கொண்டு கட்சித் தலைவராகவும்சிறந்த குடும்பத் தலைவராகவும்இறுதியில் எதிர்க் கட்சித் தலைவராகவும் திகழ்ந்தவர்.

பிரதமருக்கு தேமுதிக கறுப்புக்கொடி

சென்னை, டிச.23:முல்லைப்பெரியாறு உள்பட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனையாக செயல்படுவதால் பிரதமர் சென்னை வரும் 26ந் தேதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்........... READ MORE

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்தும் பேச வேண்டும்: சிறிரெலோ _


  மூன்று தசாப்தகாலமாக பெரும் அழிவுகளையும் இன்னல்களையும் சந்தித்த தமிழ் மக்கள் இன்று யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்வொன்றினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார். ......... READ MORE 

சோனியாவைக் கொன்றது ஆணாக இருந்து பெண்ணாக மாறிய தமிழராம் !


கடந்த 2010 அக்டோபர் மாதம் லண்டன் கிங்-கிரஸ் ரயில் நிலையத்தில் டேவிட் பேர்ஜஸ் என்னும் (ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) சோனியா தற்கொலைசெய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவர் ஓடும் ரயிலின் முன்னால் விழுந்து தற்கொலைசெய்ததாக அறிவிக்கப்பட்டது............ READ MORE 

TNA தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக வேண்டும்:-


கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன
TNA தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக வேண்டும்:-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர். உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். என புதிய இடதுசாரி கட்சி வலியுறுத்தி உள்ளது............... READ MORE 

அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை


அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை
அரசாங்கத்தின் கருத்துக்கள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து TNAயை வெளியேற்றும் நோக்கம் கொண்டவை

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச் செல்வதா அல்லது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொள்வதா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளது...... READ MORE 

பேச்சுக்களைத் தொடர்வதா? - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் முடிவு செய்யும்


காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிருமாறு தாம் விடுத்துள்ள கோரிக்கை சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதா என்று தாம் முடிவு செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த வேண்டுகோள் குறித்து கருத்து வெளியிட்ட போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.............. READ MORE 

இந்தியாவின் அதிகாரப்பகிர்வு முறையை ஏற்க முடியாது


இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது.............. READ MORE 

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் கூட்டமைப்புடன் பேச வேண்டும்


தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானத்துக்கு வரவேண்டும். அதனைவிடுத்து அவசர அவசரமாக கருத்துக்களை வெளியிடுவதாலோ, ஏனைய கட்சிகளுடன் பேசுவதன் மூலமோ எதிர்பார்க்கின்ற பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது............. READ MORE 

தமிழர்களை ஏமாற்றிய இந்தியா, அமெரிக்க, ஐரோப்பா: புது வருடத்தில் சாத்வீக போராட்டம்


பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லை, இராணுவ முகாம்கள் வாபஸ் இல்லை, என்ற ஜனாதிபதியின் அறிவிப்புகள் புதிய ஆண்டில் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தகர்த்து விட்டுள்ளன. புலிகளை அழித்து, போரை முடித்து வைத்து விட்டு சமாதானத்தை வாங்கித்தருகிறோம் என இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள் காப்புறுதி சான்றிதழ்கள் வழங்கியிருந்தன.................. READ MORE 

ஆடும் வரை ஆடட்டும் ஆட்டம் முடியும்போது… .


இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தெரிவுக்குழுவே இறுதி முடிபு எடுக்கும் என அரச தரப்பால் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இதுகாறும் அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டியதில்லை. 
அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வை தெரிவுக்குழுவே தீர்மானித்துக் கொள்ளும் எனவும் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தேவையயனவும் ஜனாதிபதியால் கூறப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுத் தொடர்பான சர்வதேச அழுத்தம் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. ...........; READ MORE 

Friday 23 December 2011

தமிழர்களின் உணர்வை மதிக்காத பிரதமருக்கு எதிராகக் கருப்புக்கொடி:பழ. நெடுமாறன் அழைப்பு!

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறியும், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகக் கோரிக்கையை ஏற்க மறுத்தும் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.கூடங்குளம் அணுமின்உலைப் பிரச்சினையில் போராட்டக் குழுவினருடன் ஒருபுறம் பேச்சு நடத்திக்கொண்டே மறுபுறம் 15 நாட்களில் அணுமின் உலை செயல்படத் தொடங்கும் என எதேச்சதிகார முறையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்.......... read more 

பிரபாகரன் புகழ் பாடும் கருணா


பிரபாகரன் புகழ் பாடும் கருணா

விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்த போது கருணா பிரபாகரன் புகழ் பாடும் கருணாவின் video -

ஆனால் இன்று அதே கருணா????????    
காலம் பதில் சொல்லும்

இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை


விதவைகளை அதிருஸ்டம் கெட்டவர்களாகத் தரம்தாழ்த்திப் பார்ப்பதுடன் சமூகச் சடங்குகளில் அவர்கள் கடைசி இருக்கை


WIDOWSஇந்த விதவைகள் விசேடமாக இளம் விதவைகள் எதிர்கொள்ளுவதும்,வெகு அபூர்வமாகப் பேசப்படுவதுமான மற்றொரு விடயம். அவர்கள் விதவைகளானபடியால் அவர்களது உடற்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே தங்கி விடுகின்றன.இது எவ்வளவு தீவிரமான விடயம் என்பதை எங்களில் அநேகர் சிந்திப்பதேயில்லை.இந்தப் பாலியல் பசிக்கு ஆளாகும் விதவைப் பெண்கள் தங்கள் இயற்கைத் தேவைகளை போக்குவதற்காக வேறு திசைதிருப்பக்கூடிய மார்க்கங்களோ அல்லது பொழுதுபோக்குகளோ இல்லாமல் சாதாரண வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும் என எவ்வாறு நாங்கள் எதிர்பார்க்க முடியும்?

யாழ் குடாநாட்டில் 29 000 விதவைப் பெண்கள் !

யாழ் குடாநாட்டில் 29 000 விதவைப் பெண்கள் !


போர் மற்றும் ஏனை காரணங்களால் தமிழர் தாயகத்தில் 80 ஆயிரத்துக்கும மேற்பட்ட விதவைப் பெண்கள் உள்ளார்கள் என புள்ளி விபரமொன்று தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் மட்டும் 29 ஆயிரம் விதவைப் பெண்கள் உள்ளார்கள் என யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்............ read more 

தென்தமிழீழத்தில்

தென் தமிழீழத்தை ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களப் பேரினவாத அரசானது,கிழக்கின் உதயம் எனும் திட்டத்தின் ஊடாக தமிழர் நிலங்களை அபகரிப்பதோடு தமிழர்களை அவலத்துக்க உள்ளாக்குவதிலேயே குறியாக உள்ளது.............. read more 

மட்டக்களப்பில் தொடர்ந்து கனமழை மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் வழமைக்கு மாறாக கன மழையும் காற்றும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில் எடுத்து மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன............ read more 

விதவைகளுக்கு உதவ புலம்பெயர் உறவுகள் முன்வரவேண்டும்: அரச அதிபர் இமெல்டா வேண்டுகொள்


யாழ். குடாநாட்டில் போர் மற்றும் ஏனைய சூழ்நிலைகள் காரணமாக இதுவரையில் 29,000 பெண்கள் விதவைகளாகியுள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்........... read more 

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்காக சேகரித்த பணம் கொள்ளை


பிரித்தானிய மேர்சிசைட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான 30 வயதுடைய மகேஸ் விக்ரமசிங்கவின் குடும்பத்திற்கு உதவி செய்யவென சேகரிக்கப்பட்ட பணத்தொகையை  திருடிச் சென்றுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.......... read more 

தமிழர்களின் எதிரி சிங்களவர்கள் அல்ல மலையாளிகளே


இலங்கையின் அயல் நாடாகவும் ஆசியாவின் பிராந்தி ஆதிக்க சக்தியாகவும் விளங்கும் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கேரளாவின் மலையாளிகளுக்குமான முறுகல் நிலை நீண்ட நெடும் நாட்களாகவே தொடர்ந்து வருகின்றது.......... read more 

வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்!

 வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்!
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன.......... read more 

பர்மா- தமிழர்கள் அன்றும் இன்றும்

An interview with Mr Solai Thiayagarajan of Yangon
 
Interviewed by Dr R Sri Ravindrarajah of Aum Muruga Society, Sydney
 
http://www.youtube.com/watch?v=kf1xqYN07Wg
 
பர்மாவில் தமிழர்கள் அன்றும் - இன்றும். நேர்முகம் : சோலை தியாகராஜன், செயலாளர், தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம், யாங்கோன், மியான்மர் 


அன்புடன்
சிறீதரன்

உங்கள் பங்களிப்புக்களை உறுதி செய்யவும், தேசிய நினைவெழுச்சி நாளிற்கான வரவு செலவு விபரத்தினை இணையத்தில் பார்வையிடலாம்.

பிரித்தானியாவில் இவ்வாண்டு தேசிய நினைவெழுச்சி நாளுக்காக பங்களிப்புக்களை செய்த மக்கள், மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பங்களிப்புக்களை உறுதிசெய்யும் பொருட்டு வரவு செலவு விபரங்கள் வெளியாகியுள்ளன.

தலையங்கம்: பொய் சொல்வது யார்?

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

மெரினாவில் முல்லைப்பெரியாறு!

ஐ.நா.வின் சித்ரவதைகளுக்கு எதிரான தினமான சூன் 26-ல் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையருகே ஈழத்தமிழர்களுக்கான பெரும் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது மே 17 இயக்கம். இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும்வேளையில் அதேபோல மாபெரும் தமிழர் ஒன்று கூடல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர் இந்த இயக்கத்தினர்.

டிசம்பர் 25 கிறித்துமஸ் தினத்தன்று நடக்கும் இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளைக் கடந்து தமிழர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு கேரளாவுக்கான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கின்றனர்.

நானும் அவளும் கவிஞர் இரா .இரவி ஊர்வன பறப்பன...

நானும் அவளும் கவிஞர் இரா .இரவி 

ஊர்வன பறப்பன அனைத்தும் உண்பவன் நான் 
ஊருகாய் காய் மட்டுமே அசைவம் உன்னாதவள் அவள் 

கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவன் நான் 
கல் கண்ட இடமெல்லாம் விழுந்து வணங்குபவள் அவள் 

புலனாய்வு வலையில் சிக்கிய தலைவர்கள் ..வெளிவந்த அம்பலம் ?

புலனாய்வு வலையில் சிக்கிய தலைவர்கள் ..வெளிவந்த அம்பலம் ?     

போர்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்! லீ ஸ்கொட் -காணொளி


தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில்வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார்............. read more 

டென்மார்க் வெளிநாட்டமைச்சருடன் டென்மார்க் வாழ் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு!!

இன்று பிற்பகல் டென்மார்க் வெளிநாட்டமைச்சில் பொது மக்கள் சந்திப்புக்கான வாய்ப்புக் கிடைத்தது, இதனை சாதகமாக்கி, டென்மார்க் தமிழர் பேரவையின் அரசியல் விவகாரக் குழு  வெளிநாட்டமைச்சரை சந்தித்துள்ளனர்............. read more 

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குத் தர முடியாது;அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவிப்பு அப்படி ஒரு தீர்வே வேண்டாம்: கூட்டமைப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று சிறீலங்கா அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. .......... read more 

கப்டன் தரத்திலுள்ள இராணுவ அதிகாரியைக் கடத்திய ஒட்டுக்குழு: அறிக்கை அம்பலம் !


இலங்கை இராணுவத்தில் பணி புரிந்த மற்றும் கப்டன் தரத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு பிரிவின் கப்டனாகப் பணி புரிந்த விக்கிரமசிங்க என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதுடைய இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். சம்பவ தினமன்று இவரைத் தொடர்புகொண்ட சிலர் பெனாண்டோ என்று அழைக்கப்படும் இவரது நண்பரின் பெயரைச் சொல்லி இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.................. read more 

உச்சிதனை முகர்ந்தால் படம் தொடர்பாக சன் TV சிறப்பு நிகழ்ச்சி !


தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழிழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது............. read more 

லண்டன் கலவரத்தில் நடந்த சில அதிர்ச்சி தரும் காட்சிகள் !

லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பாரிய கலவரத்தில் பங்குகொண்டவர்களை பொலிசார் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் கண்டு அவர்களைப் பிடித்து நீதிமன்றில் நிறுத்தி வருகின்றனர். இந் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது........... read more 

மதுபோதையில் ரயிலுக்கு கீழே விழுந்த பெண்!

இவை அதிர்ச்சியளிக்கும் CCTV கமராவில் பதிவான காட்சிகள்.
மது போதையில் தள்ளாடியபடி ரயிலில் இருந்து இறங்கும் பெண்ணொருவர் ரயில்வே பிளாட்பாரத்தில் அதுவும் ரயிலுக்கு கீழே விழுகிறார்.......... read more  

பொலிஸ் அதிகாரத்தை கோரி காலத்தை வீணாக்குவது ஏன்!- தமிழ் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கேள்வி


இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்ட விவகாரத்தில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அதனை வழங்குமாறு கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலத்தை வீணடிப்பதேன் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார்............... read more 

படையினரின் குற்றங்களைக் சுட்டிக்காட்டாமல் நழுவியுள்ளது ஆணைக்குழு!- இந்து நாளிதழ் விமர்சனம்


இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட  பாதிப்புகள், பொதுமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் குற்றங்களைக் சுட்டிக்காட்டாமல் நழுவியுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு நழுவல்போக்கை கடைப்பிடித்துள்ளது. இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து இந்திய "இந்து" பத்திரிகை விமர்சித்துள்ளது............. read more 

கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி குறித்து விசாரணை


இலங்கைக்கு எதிராக அதாவது பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன............. read more 

அமைச்சுப் பதவியைப் பெற்று உங்களுக்கு பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்? - பஸிலுக்கு சம்பந்தன் சாட்டை


தீர்வுப்பேச்சு உட்பட்ட பல விடயங்களில் அரசுடன் ஒத்துழைத்தே செயற்பட்டு வருகிறோம். இப்போது அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையைக் கொண்டது? பைல்களைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று உங்கள் பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்? இவ்வாறு தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்........... read more 

யாழ். பல்கலைக்கழக விடுதியைச் சூழ இராணுவ சோதனை !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதியை இராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் ஆண்கள் விடுதியின் இருமருங்கிலும் தரித்து நின்று வீதியால் செல்பவர்களை இராணுவத்தினர் சோதனை செய்தனர்........... read more 

இந்தியாவின் அதிகாரப்பகிர்வு முறையை ஏற்க முடியாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு


கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது............. read more 

Thursday 22 December 2011

அறிக்கை : இந்தியா மௌனம் அமெரிக்கா குப்பையில் வீசியது

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்று அது தெரிவித்துள்ளது.......... read more

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!

போதி தர்மர் உண்மையில் ஒரு தமிழரா? கிளம்பியிருக்கும் புதிய சர்ச்சை!!
சென்னையில் எங்கு திரும்பினாலும் சில போஸ்டர்கள் கண்களை உறுத்துகிறது. போதி தர்மர் தமிழரே அல்ல. காசுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம் என்று கோபம் காட்டும் அந்த போஸ்டர்கள் முருகதாஸ் கண்களில் பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இணையத்திலும், துண்டு பத்திரிகைகளிலும் கடும் சொற்போர் புரிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர். போதி தர்மர் தமிழரே அல்ல. அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்கிறார்கள் அவர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் சொல்லும் சங்கதிகள் அத்தனையும் படிக்காதவன் கண்முன் வைக்கப்பட்ட டாக்டரேட் குறிப்புகளாக தலைசுற்ற வைக்கிறது............ read more 

Wednesday 21 December 2011

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை !!

இங்கிலீஷ் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர்.

துணை இழந்த ஈழத்தமிழ் பெண்களும் சமூக வஞ்சனையும்


30 ஆண்டுகளாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது கணவன்மாரை இழந்த ராதிகாவைப் போல பல பெண்கள் உட்பட வடக்கு கிழக்கில் தற்போது 89,000 வரையான கணவனை இழந்த பெண்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் யுத்தத்தின் விளைவாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில ஊடகத்தில் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்....................... read more 

சம்பந்தன் குழுவினர் துரோகிகள் என்கிறார் இனவாத அமைச்சர் சம்பிக்க

அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.......... read more

வடக்கு கிழக்கில் படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படமாட்டது:தினேஸ் குணவர்த்தன


வடக்கு கிழக்கில் தமிழர்வாழ்இடங்களில் உள்ள படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படமாட்டது என அரசதரப்பு பிரதமகொறடா தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் மட்டக்களப்பிலிருந்து வேலூர் மடத்திற்கு திரும்பினார்!

சுவாமி விவேகானந்தரின் வழியில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சுமார் ஏழாண்டு காலமாக பல அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் அவர்கள் இன்று 12.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து நிரந்தரமாக இந்தியாவை நோக்கி இராமகிருஷ்ன மிஷனின் தலைமை மடமான வேலூர் மடத்திற்கு பயணமானார்............   read more

வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது!


வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது!
news
 நக்கீரன் (கனடா)
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையினர் வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும். எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது............. read more 

அறிக்கை முழுமையற்றது; அமெரிக்காவும் நிராகரிப்பு; போர்க் குற்றங்களுக்குப் பதிலளிக்க இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்து

news
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் நல்லிணக்கத்துக்கான அறிக்கையை அமெரிக்காவும் நிராகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையாகப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமையவில்லை என்று அது தெரிவித்துள்ளது. ................. read more

அச்சுறுத்தி தீர்வைத் திணிக்க முயற்சி: அடிபணியமாட்டோம்: மாவை எம்.பி _


  கூட்டமைப்பை அச்சுறுத்தி, அடிபணியச் செய்து ஜனாதிபதி, தீர்வைத் திணிக்க முயற்சிக்கின்றார். அந்த முயற்சிக்கு அடிபணிய மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்............... read more

வட, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இராணுவத்தினர்: சுமந்திரன் விசனம் _


  இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கில் குற்றசெயல்களும் பதற்றங்களும் அதிகரித்து விட்டன என்பதுடன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம். சுமந்திரன் தெரிவித்தார்................ read more