Translate

Friday 23 December 2011

மெரினாவில் முல்லைப்பெரியாறு!

ஐ.நா.வின் சித்ரவதைகளுக்கு எதிரான தினமான சூன் 26-ல் சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலையருகே ஈழத்தமிழர்களுக்கான பெரும் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியது மே 17 இயக்கம். இப்போது முல்லைப் பெரியாறு பிரச்சனை கொழுந்துவிட்டு எரியும்வேளையில் அதேபோல மாபெரும் தமிழர் ஒன்று கூடல் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளனர் இந்த இயக்கத்தினர்.

டிசம்பர் 25 கிறித்துமஸ் தினத்தன்று நடக்கும் இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளைக் கடந்து தமிழர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு கேரளாவுக்கான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்கின்றனர்.

No comments:

Post a Comment