Translate

Saturday 17 December 2011

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் மீது தீவிர விசாரணை

லண்டன் ஸ்ரான்ஸ்ரெட் விமான நிலையத்தில் இருந்து நாடுகடத்தப் பட்ட 55 இலங்கையர்கள் மீது கட்டுநாயக்க விமான நிலைய புலனா ய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் தவர்களில் 48 ஆண்களும் 7 பெண்களும் அடங்குகின்றனர். அவர்கள் பதுளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, திருகோணமலை, வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.


இவர்கள் மீது புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற் கொண்டு வருவதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை இலங்கைக்கு நாடு கடத்தப்படும் தமிழர்கள் இலங்கை யில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என சர் வதேச மன்னிப்புச்சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment