Translate

Saturday 17 December 2011

இராணுவத்தைக் காப்பாற்றவே ஆணைக்குழு அறிக்கை வெளியீடு

சுரேஷ் எம்.பி. தெரிவிப்பு
இராணுவத்தினைக் காப்பாற்ற வேண்டும். ஆகவே இராணுவத்தி னைக் காப்பாற்றுவதற் கான நடவடிக்கையினை என்ன என்ன ஆணைக்குழுவினூடாக அரசாங்கம் செய்ய லாம் என்ற போக்கில் கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றது என தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இத னைக் கூறினார். 

அவர் மேலும் கூறியதா வது, இதன் அடிப்படைகளைப் பார்க்கும் போது இராணுவம் இதனை செய்திருப்பார்கள். ஆனால் சில விட யங்களில் சில இராணுவத் தினர் செய்திருப்பதால் ஒட்டுமொத்த இராணுவத்திற்கும் கெட்டபெயர் உருவாகக் கூடும். ஆகவே அப்படியான இராணுவத்தினர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற பாணியிலும் அறிக்கை அமை கின்றது. ஓர் இடத்தில் நான் பார்த்தபோது சர்வதேச தரம்வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

ஆனால் இல்லாமல் உள்ளார்ந்த விசார ணைக்குழு ஊடாக இருக்க வேண்டும் என்ற பாணியிலும் இந்தக் கருத்து கூறப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வென்பது தொடர் பாக இது வெறுமனே உள்ளூராட்சி சபை களை தரம் உயர்த்துவது தொடர்பாகவோ அல் லது 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப் படுத்தல் ஊடாகவோ நிச்சயமாக இதனைச் செய்ய முடியாது. இது ஒட்டுமொத்தமாக சரியான நடை முறைகிடையாது. என்ன கார ணத்திற்காக யுத்தம் தோன்றியது என்ன காரணத்திற்காக யுத்தம் முடி படைந்தது என்பது தொடர்பாக எந்த விடயமும் கண்டறியாமல் இவர் கள் எடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் அறிக்கை சமர் ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முழுமையான விடயங்கள் கண்டறியப்பட்டால் மாத்திரமே நிவாரணம் கிடைக்குமே தவிர இதற்காக அரசினால் முழுமையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment