Translate

Saturday 18 June 2011

பிரிட்டன் அதிகாரிகளை தோற்கடித்த தமிழ் இளைஞன்!!


பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றமையில் இருந்து கடைசி நிமிடங்களில் தப்பித்துக் கொண்டார் தமிழ் இளைஞனான நடராஜா சுதாகரன் ( வயது 31 ) என்பவர்.

இவர்தான் இலங்கைக்கு திருப்பப்படுகின்றமையை ஆட்சேபித்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கியவர். எனினும் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்............ read more

தனி ஈழம் ஒன்றே தீர்வு: சென்னையில் கல்லூரி ஒன்றின் ஆய்வில் 64 சதவீதம் கருத்து வெளியீடு


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு குறித்து சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

  • 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். 
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 
  • நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
  • read moreனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடக்குமுறைகளும், சிங்கள இனவெறியாட்டங்களும் தொடருமானால் இன்னுமொரு பிரபாகரனுக்கிங்கே பஞ்சமில்லை


எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கின்றது. எது நடக்கவிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை நாங்கள் இப்போது நம்பத் தலைப்பட்டிருக்கின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரைக்கும் இதுதான் என்றும் மாற்றமில்லாத உண்மையும் கூட..!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டியில் நடந்த காட்டுமிராண்டித்தனம் எமக்கு இந்த யதார்த்தத்தை மீள ஒரு முறை உணர்த்தியிருக்கின்றது.
தமிழர்கள் ஆயதம் ஏந்தியது தவறு என்றார்கள் அது தவறாகவேயிருக்கலாம். ஆனால் எதற்காக ஏந்தினார்கள் என்ற கேள்விக்கு பதில் தேடினால் காலத்தில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் என்பதே இன்றும் தமிழ்த் தேசியவாதிகளின் வாதமாகவிருக்கின்றது. அதுதான் நியாயமானது நிஜமானது........... read more

மேலும் வரவுள்ள போர்க்குற்ற ஆதாரங்கள் - நெருக்கடிக்குள் இலங்கை


சனல் 4 காணொளிகள் போன்று மேலும் பல காணொளிகள் எதிர்காலத்தில் வெளிவரலாம் என்று சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரத்தின தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகள் சர்வதேசமெங்கும் பலம்வாய்ந்த செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. அதன் காரணமாக இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.................. read more

உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது... தமிழர்களின் நாடு கடத்தலுக்கு பிரித்தானிய எம்.பி. க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்:


இலங்கையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது. இந்த வெளியேற்ற நடவடிக்கை மூலம் சித்திரவதை நடவடிக்கையில் பிரிட்டனும் தன்னை இணைத்துக் கொள்கிறது என அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி. சியோபயன் குற்றம் சாட்டினார். பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அவர் விமர்சித்தார்............ read more

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவு


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பான் கீ மூன் ஏகமனதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்........... read more

ஜூன் 26 நினைவேந்தல் எதற்காக? - மே 17 இயக்கம்


இது ஒரு சம்பரதாய அஞ்சலி அல்ல. ஐ.நா தினமான “சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினத்தில்” நமது தமிழ் உறவுகள் இலங்கை அரசால் சித்திரவதை செய்யப்பட்டே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை சர்வதேசச் சமூகத்திற்கும், ஊடகத்திற்கும் உணர்த்த வேண்டி இருக்கிறது.

இந்தப் படுகொலைகளையும், சித்திரவதைகளையும் தட்டிக்கேட்காமலும், தடுக்காமலும் இன்று வரை இலங்கை அரசை அனுமதித்து இருக்கின்ற சர்வதேசச் சமூகத்தின் மனசாட்சி என்கிற ஒன்றை அசைத்துப் பார்ப்போம்.


 எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்படுகொலைகளை திட்டமிட்டு, செயல்படுத்திய இனபடுகொலை கூட்டாளி இந்திய அரசு மற்றும் அதற்கு துணை நின்ற இந்திய ஊடகத்திற்கு ஒரு எச்சரிக்கை குறிப்பாக அமையட்டும்.............. read more

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் வழக்கு: சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வொசிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சமஷ்டி நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

ஹேக் உடன்பாட்டின் கீழ் வொசிங்டன் டிசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குடியியல் வழக்குகள் தொடர்பாகவே, சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக நட்டஈடு கோரி சித்திரவதைகளினால் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்கும் அமெரிக்கச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன............ read more

இலங்கை அகதிகள் பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கை!

மதுரை: தமிழ்நாட்டில் படித்த இலங்கை அகதிகளின் குழந்தைகள் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்........ read more

ஐரோப்பிய முள்ளிவாய்க்காலுக்கு தயாராகும் சில நாடுகள்: தடுக்க முடியுமா தமிழர்களால் ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து 26 ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனுப்பப்படும் செய்திகேட்டு, தமது வேலைகளை விட்டுவிட்டு சனல் 4 தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவும், அதன் அறிவிப்பாளரும் கட்விக் விமானநிலையம் விரைந்தனர். ஆனால் தமிழர்களாகிய நாம் என்னசெய்தோம்? அங்கே திரண்டு ஒரு பாரிய போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்த தவறியுள்ளோம். ஒரு புறம் பாராளுமன்றக் கூட்டம் மறு புறம் நாடக ஒத்திகை, அதுஎல்லாம் வழக்கறிஞர்கள் பார்க்கவேண்டிய வேலை நாங்கள் தலையிட முடியாது என்று ஒரு கும்பல் கதைபேசி மணித்தியாலங்களைச் செலவிட்டதே அன்றி நாடுகடத்தப்படுவதை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை............ read more

"Sri Lanka's gov is scared of the Tamil people" (Basque subs)

Since the Sri Lanka's State was founded, the Tamil people's fight for their rights has been incessant. Jude Lal Fernando, althought he's sinhalese (the biggest etnia in the island and the only one who has been always in power), he defends the Tamil people's rights. He has been forced to leave Sri Lanka and move to Ireland because of his political activism. Nowadays he's a professor in the University of Dublin.

Friday 17 June 2011

இலங்கை அரசு,இந்திய அரசோடு கருணாநிதியும் கைகோர்த்ததால்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். தீபச்செல்வன்


ங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின் கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை போர் தின்று நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும்  போர் நடக்கிறது’’
இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகளாய் விரிகின்றன தீபச்செல்வனின் வரிகள். 

கவிஞர் தீபச்செல்வன் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். போருக்கு தன் சகோதரனை பலிகொடுத்தவர். ஆவணப் படங்கள், கட்டுரைகள், கவிதைகள் என போரின் அவலத்தை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். ‘இறுதி எச்சரிக்கை’ என்ற பெயரில் சுவரொட்டிகள் மூலம் இலங்கை ராணுவம் இவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தன் உயிரையும் பொருட்படுத்தாது இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அகதிகள் முகாமில் இருந்து திரும்பிய தன் தாய், தங்கையுடன் இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். சென்னை வந்திருந்த தீபச்செல்வனை சந்தித்தோம்....... read more

விடுதலைப்புலிகளை இலங்கையில் அழித்த காங்கிரஸ், தமிழகத்தில் திமுக வை அழிக்க நினைக்கிறது. திமுக பேச்சாளர்.


Congress destroyed DMK like LTTE
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி.மு.க.வும்,காங்கிரஸும் மறைமுக யுத்தம் நடத்திக் கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.கனிமொழி கைது, அவருக்கு ஜாமீன்கூட கிடைக்காமல் தாமதமாவது...இவையெல்லாம் அந்த யுத்தத்தை உச்சநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன............ read more

Jun16 ஜெயலலிதாவின் தீர்மானம் ராஜபக்சேயை மட்டுமல்ல, சோனியாவையும், பிரதமரையும் நடுங்க வைத்தது.


ஜெயலலிதாவின் தீர்மானம் ராஜபக்சேயை மட்டுமல்ல, சோனியாவையும், பிரதமரையும் நடுங்க வைத்த

ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...
இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.

கிளிநொச்சிப் பகுதியில் இரவில் கேட்க்கும் பெண்கள் அவலக்குரல் !

கிளிநொச்சி நகர வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென அவலக்குரல் எழுப்பியதில் நேற்று முந்தினம் இரவு அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தெரியவருவதாவது:

சம்பவ இரவு 8.30 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து பரந்தன் பகுதி நோக்கி வேறு ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் இரு இளைஞர்கள் தன்னை மறித்ததாகக் கூறிக் கூச்சலிட்டார்............ read more

இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டோம் : சீனா


இலங்கைக்கு எதிரான சக்திகளுக்கு ஒரு போதும் ஆதவளிக்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஹூஜி ஜிண்டாவோ, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.

பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவை இன்று, மொஸ்கோவில் வைத்து சீன ஜனாதிபதி சந்தித்தார். அப்போது நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தில் சீனாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கு மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்தார்......... read more

''கெட்டபின் ஞானி'' - பழ. நெடுமாறன்


''கெட்டபின் ஞானி''  -  - பழ. நெடுமாறன்


''கூடா நட்புக் கேடாய் முடியும்'' என்பது தோல்வியில் பிறந்த ஞானோதயமாகும். கூடா நட்பு என தி.மு.க தலைவர் கருணாநிதி கருதியதும் சுட்டிக்காட்டியதும் யாரை என்பது குறித்து அவரது கட்சிக்குள்ளும் வெளியிலும் விவாதங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கொண்டிருக்கும் உறவைக் கூடா நட்பாக அவர் கருதி இருப்பாரே யானால் அந்த தவற்றினை உணருவதற்கு நாற்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அவருக்கு ஆகியிருக்கிறது.

வடக்கு கிழக்கில் இருத்து இராணுவம் வெளியேற வேண்டும் – சங்கரி

Ananda-Sangari-T
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் இராணுவம் தலையிடுவதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிப்பதாக கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
பொதுமக்களின் அடிப்படை உரிமைகளில் இராணுவம் தலையிடுவதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக வன்மையாக கண்டிக்கின்றது............ READ MORE

கொழும்பு வந்துள்ள நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள் கே.பி.யிடம் தீவிர விசாரணை

விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக கொழும்பு வந்திருக்கும் நெதர்லாந்து புலனாய்வு அதிகாரிகள், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் ஏனைய முன்னாள் புலிகள் இயக்க சந்தேக நபர்களான 12 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் அக்கறையின்றி செயற்படுவதே அரசுக்கெதிரான சர்வதேச அழுத்தத்தின் பிரதான காரணம்


தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றமையே அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்களுக்கான பிரதான காரணமாகும் என்று இடது சாரி முன்னணியின் தலைவர் கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன தெவித்தார்.


அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றினை வழங்குமாயின் அரசாங்கத்திற்கெதிரான சர்வதேச அழுத்தங்கள் அப்படியே இல்லாது போய்விடும். இல்லையேல் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை யாராலும் தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறினார்.............. read more

இலங்கை நெதர்லாந்து கூட்டு நாடகமா ? ரகசிய முகாம்களுக்கு நெதர்லாந்து அதிகாரிகள் விஜயம் !

விடுதலைப் புலிகளின் நிவாகக் கட்டமைப்பைச் சேர்ந்த பூவண்ணன், பிரியன் மற்றும் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த சிலர் உட்பட சுமார் 12 பேரை நெதர்லாந்து அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனால் இவர்களில் பலரை இலங்கை இராணுவம் ஏற்கனவே கொன்றுவிட்டது என்ற ஊர்ஜிதமற்ற செய்திகளும் இருக்கிறது. இந் நிலையில் இலங்கை இராணுவம் இவர் தான் அவர் என்று ஆள் காட்டும் நபரிடமே நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனரா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் புலிகளின் நிதியை முடக்க அல்லது அதன் செயல்பாடுகளைக் கண்டு பிடிக்க நெதர்லாந்து அரசு ஏன் முற்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அமெரிக்கா இந்தியா போன்ற வல்லரசுகள் காட்டாத கவனத்தை நெதர்லாந்து ஏன் காட்டவேண்டும் ?............. read more

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருசிலர் அகதி அந்தஸ்துக்குத் தகுதியானவர்கள்: குடிவரவுக் கட்டுப்பாட்டாளர்


பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்தடைந்திருக்கும் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களில்  ஒருசிலர் மட்டுமே அகதி அந்தஸ்தைப் பெறத் தகுதியானவர்கள் என்று குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவ்வாறு அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுத் திருப்பியனுப்பபப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை இருபத்தியாறு என்றும், அதில் பதினைந்து தமிழர்கள், ஏழு முஸ்லிம்கள், நான்கு சிங்களவர்கள் உள்ளடங்குவதாகவும் குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா மேலும் தெரிவிக்கின்றார்................... read more

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் - மனோ கணேசன் :

இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் சனல் 4 வெளியிட்டுள்ள நெஞ்சை உறைய வைக்கும் ஆவணப்படம் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,............ read more

லண்டனில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கை விமானநிலையத்தில் தடுத்துவைப்பு !

நேற்றைய தினம் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட சுமார் 40 பேர் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று கட்டநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களை, குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்குள் வர அனுமதித்த பின்னர், சிறப்பு குற்றப் புலணாய்வுப் பிரிவினர் இவர்களை விசாரித்து வருவதாகவும், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கொழும்பு விமானநிலையத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.............. read more

பெண்களின் மனதை கவருவது எப்படி? உங்களுக்காக சில யோசனைகள்!

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. 
என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். 
இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். 
ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது............. read more

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருவதாகவும் பிரபல பாடசாலை மாணவிகள் இதில் உள்ளடங்குவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்........... read more

லண்டனிலிருந்து கதறக்கதற பலாத்காரமாக ஏற்றியனுப்பப்பட்ட ஆறு தமிழ்ப் பெண்கள்!

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன............ read more

சனல் 4 காணொளிகள் பொய் இல்லை - நன்கு ஆராய்ந்தே வெளியிட்டோம் - கெலம் மெக்ரே

 இலங்கையின் இறுதிப்போரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகளின் நம்பகத்தன்மையை உரிய துறைசார் வல்லுனர்களை கொண்டு தாம் உறுதி செய்த பிறகே அவற்றை ஒளிபரப்பியதாக அந்த ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கெலம் மெக்ரே பீபீசியிடம் தெரிவித்தார்........... read more

இனப்படுகொலையை வெளிப்படுத்திய சனல் 4வுக்கு உருத்திரகுமாரன் பாராட்டு!


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொலைக்களம் பற்றிய விவரணச்சித்திரத்தை ஒளிபரப்பியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
‘ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தவைணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்............. read more

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் இலங்கைக்கு இரகசிய விஜயம்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் செயலாளர்  ஒருவர் கடந்த வியாழக்கிழமை, கொழும்பு ஹில்டன் விடுதியில் உள்ள ஸ்பைசீஸ் உணவகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சே  மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்............. read more

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாக மாபெரும் கையயழுத்து இயக்கம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உயர்நிலைக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 14.0Š6.Š2011 மற்றும் 15Š.06.Š2011 ஆகிய இரு நாட்களில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்காலச் செயல் திட்டங்கள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கலந்தாய்வு செய்யப்பட்டன. நிறைவாக கட்சியின் நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

ஈழத்தில் இடம்பெற்ற தமிழினத்தின் கொடூரங்களைவிற்றுக்காசாக்கும் சுயநலவாதிகள்!


ஈழத்தில் இடம்பெற்ற தமிழினத்தின் கொடூரங்களைவிற்றுக்காசாக்கும் சுயநலவாதிகள்!

chanel4_CD_sale.jpgஈழத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால்மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் போது நிகழ்ந்த பலஉண்மைக்காட்சிகள் அடங்கிய சனல் 4 வெளியிட்டகாட்சிப்பதிவினை சீடீக்களில் பதிவுசெய்து விற்பனையில்இறங்கியுள்ளது சில சுயனலவாதக் கூட்டம்.

Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video]


WARNING      MOST GRUESOME



Please do not watch this video when your kids are around. It does show some footage not appropriate for younger audience.

Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video]

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் தம் பிள்ளைகள் குறித்த துயரங்கள் குறித்தோ, பிள்ளைகளை இழந்த காரணத்தால் அவர்கள் அழுது ஓலமிடும் விதங்கள் குறித்தோ நான் இங்கு எழுதவில்லை. அது ஏனெனில் அதைவிடவும் முக்கியமான விடயமொன்று இந் நிலைப்பாட்டில் இருப்பதன் காரணத்தால் ஆகும். அது என்னவெனில் இதற்குள் இருக்கும் பாரதூரமான அரசியல் தவறு. தமிழ் இளைஞர்கள் ஒருமுறை ஆயுதம் எடுத்தது அந்த அரசியல் தவற்றின் காரணமாகத்தான். மென்மேலும் அத் தவறானது மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால் அதன் அடுத்த பெறுபேறு தெளிவானது. அத் தவறு என்னவெனில் தமிழ் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் துயரம்....................... read more                

கோரமான முறையில் விமானத்துள் திணிக்கப்பட்டு அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்கள் அனுப்பப்பட்டனர்

பிரித்தானிய தமிழர் பேரவை புலம் பெயர் தமிழர்களை பிரித்தானிய பிரதான பாரளுமன்றக் கட்சிகளுடன் இணைப்பதே வேலைத்திட்டம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. நேற்றைய தினம் (15.06.2011) பிரித்தானியத் தமிழர் பேரவையின் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என்ற அமைப்பு தனது ஒன்று கூடலைப் பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டடத்தில் நடத்தியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதாவது ஒரு வகையில் பங்களித்த இக்கட்சிகள் புலம் பெயர் தமிழர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மறு புறத்தில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் தலைமகள் இக்கட்சிகளுக்குப் பயன் பட்டுப் போவதைப் பெருமையாக எண்ணுகின்றன................ read more

இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற‌ சி.பி.ஐ-கீற்று நந்தன்



இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’. மற்றொன்று, களம் வெளியீடான ‘விடுதலைக்கு விலங்கு (இந்தியாவின் முன்னாள் பிர‌தமர் இராசீவ் காந்தி கொலை வழக்கு வெளிவராத உண்மைகளும், துயர‌ங்களும்)’. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரான கருத்துக்களுடனும், செய்திகளுடனும் வெளிவந்துள்ளன. ..................read more

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்



ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

“நான் தமிழ் நாட்டிற்குச் சென்றிருக்கிறேன். பிரதான அரசியல் வாதிகள் தமது அரசியல் ஈழத் தமிழர் குறித்துப் பேசியே தம்மை அரசியலில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். நான் ஈழத் தமிழ் அகதிகள் வாழும் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். பலர் அங்கேயே பிறந்து வழர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரமாக பதிவின்றி வெளியே சென்றுவர முடியாது. வேலை செய்யமுடியாது............. read more

சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க – சீமான்


சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க – சீமான் 

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை :
சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க:-செந்தமிழன் சீமான்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் புலிகள் தடுத்து வைத்திருக்கப்படுவதை பிரித்தானியா வரவேற்கிறதா ?

பிரித்தானியாவின் நிதியுதவிகள் வடக்கிலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை மீளொருங்கமைக்கப் பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளையிலும், வவுனியாவில் பூந்தோட்டத்திலும், கிழக்கில் வெலிக்கந்தவிலும் அமைந்துள்ள சிறப்பு முகாம்களில் ஏராளமான முன்னாள் போராளிகளை இராணுவத்தினர் தடுத்து வைத்துள்ள நிலையில் அப்போராளிகளை மீளொருங்கிணைக்க தனது நிதி பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளமை யாழ்ப்பாணத்தில் கருத்துவேறுபாட்டைத் தோற்றுவித்துள்ளது. மேற்படி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் பெற்றோர்களுக்குக் கூட அனுமதி இல்லாத நிலையில், போர்க் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இச்செயற்பாட்டை பிரித்தானியா ஆதரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது............ read more

யாழில் பிரபல பாடசாலை மாணவிகள் கருகலைப்பு ..!


யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழில் தமிழ் யுவதிகள் பலர் தவறான  உறவுகள் மூலம்
கற்பம் தரிக்க  பட்டு  அவை அழிக்க பட்டு வருகின்றன .
அவ்வாறு ஒரு பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் கற்பம் தரித்துள்ளார் .
குறித்த செய்தியினை ஆசிரியர் ஒருவருக்கு பெற்றோர்கள் தெரிவித்த நிலையில்
அவர் குறித்த மனைவியினை கொழும்பிற்குகருகலைபிற்கு கூட்டி சென்றுள்ளார் ................ read more

குளோபல் தமிழ்ச் செய்தி களிற்காக யமுனா ராஜேந்திரன் - சனல் 4ன் கொலைக் களம் ஆவணப் படம் இணைப்பு


இயக்குனர் ஹலும் மக்ரே 
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம்
நான் உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பில் முன்னரும் அறிக்கையிட்டு வந்திருக்கிறேன். எண்பதுகளில் மத்திய அமெரிக்காவில் இடம் பெற்ற யுத்தங்கள் பலவற்றை நான் அறிக்கையிட்டிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படுகொலை ஆதாரங்களைக் கொண்ட சிவில் யுத்தத்தை நான் காணவில்லை. அதுவும் அரசாங்கப் படையினராலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள்............ read more

Thursday 16 June 2011

கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவம் கொடூரத் தாக்குதல்:




  •  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கூட்ட மைதானத்துக்குள் திடீரெனப் பிரவேசித்த சுமார் 50 இராணுவத்தினர் திடீர்த் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். பொதுமக்கள் மீது கொட்டன் தடிகளால் தாக்குதல் இடம்பெற்றது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.  
  • சரவணபவன் எம்.பி.யைத் தாக்குதவற்கு படையினர் முற்பட்ட போது அவர்களுடைய அமைச்சரவைப் பாதுகாவலர்கள் அதனைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  • கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் பொல்லுகளால் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். 
  • பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய வாகனங்கள் இராணுவத்தினரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 



யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வியாழக்கிழமை மாலை நடத்திய உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் இராணுவத்தினர் திடீர்த் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர். மைக் பிடுங்கப்பட்டு, மேடை சின்னாபின்னமாக்கப்பட்டு, கதிரைகள் உடைக்கப்பட்டு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அங்கிருந்து கடுமையாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன........... read more

இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்


 16-06-2011 - 15 :28
ஹூத்ரோ விமான நிலையம்
ஹூத்ரோ விமான நிலையம்
ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதில் சுமார் 40 தமிழர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக இருந்தது. இவர்களில் ஒரு சிலரைத் தவிற மற்றவர்கள் கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது................ read more