Translate

Saturday 4 June 2011

செந்தமிழன் சீமான் மீது பொய்ப் புகார் கொடுத்த நடிகை மீது 5கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தாக்கல


செந்தமிழன் சீமான் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்ப் புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இனத்தை அழித்த காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற முழக்கத்துடன் களமாடிய சீமானின் சீற்றத்தில் 58இடங்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியினரே இந்த கீழ்தரமான செயலில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக காங்கிரசு கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகரே இந்த சதிச் செயலின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....... READ  

நீதிமன்றக் கடிதங்களை வாங்க மறுத்து பயத்தில் திருப்பி அனுப்பும் மகிந்தர் !

அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் 3 தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான அமெரிக்க சட்டத்தை பயன்படுத்தி இவ்வழக்கு மகிந்தருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளது. விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில், மகிந்தவுக்கு கொலம்பிய நீதிமன்றம் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதமானது குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது தரப்பில் ஆஜராக வக்கீலை வைக்கலாம் என்றும், மற்றும் ஏனைய அறிவுறுத்தல்களையும் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆனால் அது பிடியாணைக்குரிய கடிதமாக இருக்கலாம் என அஞ்சுகின்ற மகிந்தர் அக்கடிதங்களைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறாராம்........... READ  

மஹிந்தவையும் கூட்டாளிகளையும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்து; ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ ஆவேசம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையும் அவரது சகோதர்களையும் கூட்டாளிகளையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.
ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போதே வைகோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:........... READ 

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரிட்டிஷ் பிரஜை கடந்த 2007ம் ஆண்டில் கொழும்பு சென்றிருந்த போது, காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதுவரை எந்தவித நீதிமன்ற விசாரணைகளும் இல்லாமல் சிறையில் இருந்துவருகிறா என்று நியாயமான விசாரணைகளுக்கான சர்வதேச அமைப்பு அதாவது Fair Trials International கூறியிருக்கிறது.


இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரது நிலைமை குறித்து குடும்பத்தினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.........
READ  

பிரிட்டன் பெண்ணை பாலியல்ரீதியில் துண்புறுத்திய தமிழர் !

இலங்கை காவற்துறையில் முன்னர் பணியாற்றிய தமிழர் ஒருவர் பிரிட்டனில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அத்துடன் நாடு கடத்தப்படும் அபாயத்தையும் அவர் எதிர்கொண்டுள்ளார். பிரிட்டனில் அகதியாக இருந்து வந்த 47 வயதான பர்வேற் கௌரிதரன் மார்க்கண்டு என்ற நபரே குற்றவாளி என டெஸைட்க்ரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹார்ட்டெல்பூலில் கடை நடத்தி வந்த கௌரிதரன், அங்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துள்ளார். அவரது அத்துமீறல் குறித்து அந்தப் பெண் தாயாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முயன்ற சமயத்தில், அதனைப் பறித்துத் தடுத்துவிட்டார். .......... READ 

சனல் 4 யொனத்தன் மிலர் கேள்வி : இலங்கை பிரதிநிதி ஓட்டம்

http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1903

தமிழில் எழுத

தமிழில் எழுத visit  http://www.google.com/transliterate/Tamil  ,
 
type 'Kadavul', enter and watch the miracle word appear!

சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை: பார்க்கவேண்டிய காணொளி !

சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை: பார்க்கவேண்டிய காணொளி !
03 June, 2011 by admin
தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்

கருத்தரங்கம் - திருமுருகன் உரை

தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை- தமிழர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய காணொளி !

ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து சீமான் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களின் முகாம்கள் குறித்து ஆளுநர் உரையில் தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழிக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை.
புதிதாகப் பொறுப்பேற்று உள்ள அரசு இன்று தாக்கல் செய்துள்ள ஆளுநர் உரையில் நம்பிக்கையளிப்பதும் புதியதுமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது.

International Day in Support of Victims of Torture - 26 June

தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் - சூன் 26 - மெரினா கடற்கரை


தோழர்களே, தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

செந்தமிழன் சீமான் தன் மீதான பொய்ப்புகாரை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை களங்கப்படுத்தும் உள்நோக்கத்தோடு திட்டமிட்ட செயல்கள் கடந்த ஓரிரு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

பொய்ப்புகார் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு வழக்கினை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.

Thursday 2 June 2011

ராஜபக்ஷ இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் இறந்ததை மறைக்கிறார் : றொகான் குணரெட்ண !


mahintha-mahintha-02-06-11
உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார். இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்................ READ MORE   

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,

அண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன.
முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

தென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். ............... READ MORE  

ஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்

தோழர்களே, தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.
எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. 
நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.



International Day in Support of Victims of Torture - 26 June

முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது திட்டமிட்ட தமிழினப் படுகொலையே!

வியாழக்கிழமை, ஆனி 02ஆம் நாள், 2011.
news
ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன்
திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க் காலில் அரங்கேறியுள்ளது என்று கூறியுள்ளார் யாழ்.மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் நிஷாந்தன். யாழ்.மாநகர சபையில் இடம் பெற்ற ஐந்தாவது மாதாந்தக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செய் வதற்கு இதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது யாழ்.மாநகர சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் விஜயகாந்த், முள்ளிவாய்க் காலில் மரணமடைந்த மக்களுக்கு அஞ்சலி செய்வதாயின் புலிகளே அந்த மக்களின் மரணத்துக்குக் காரணம் என்று எதிர்க்கட்சி ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித் தார்................. read more  

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வைகோ

யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னது இல்லையே?


ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது வைகோ கூறியதாவது:

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.  .
......... read more  

தமிழர்களை தாக்கிய அரச பயங்கரவாதம் தற்போது தெற்கையும் பதம் பார்க்கின்றது:-


கட்டுநாயக்க இளைஞர் கொலை குறித்து மனோ கணேசன் 
 
வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள இளைஞனின் மரணமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க சம்பம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, .......... read

ஜோசப்பரராஜசிங்கம் - ரவிராஜ் - கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்?


ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கோத்தாபயவின் உத்தரவில் கருணாவின் உதவியாளரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்?
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும் இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.........read 

பாலியல் குற்றத்தையும் விசாரிப்பது அவசியம்;ஐ.நா.அதிகாரி வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்போது பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுவது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார் நீதிக்குப்புறம்பான கொலைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர் கிறிஸ்தோவ் கென்ஸ்............ read more

தமிழ் அரசியல் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனை!

கொழும்பு நியூ மகசீன் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை நீதி மன்ற விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லும் சிறைச்சாலை பொலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் அவர்களை நிர்வாணப்படுத்தி சோதனைகளை மேற்கொள்வதாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்........... read

தமிழீழமே தீர்வு ! ஐரோப்பிய பாராளுமன்றில் வைகோ முழக்கம்: காணொளி இணைப்பு !

நேற்றையத தினம், ஐரோப்பிய நாடாளுமன்ற வழாகக் கட்டிடத்தில் நடைபெற்ற, தீர்மானம் நிறைவேற்றும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய வைகோ அவர்கள் தனித் தமிழீழமே தீர்வு என முழங்கியுள்ளார். 


இக் கூட்டத்தொடரில் போல் பேர்ஃபி உட்பட பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மதியம் 2 மணிக்கு ஆரம்பமான நிக்ழவுகளில், பிரான்ஸ், யேர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் இருந்து வந்த மக்களவைப் பிரதிநிதிகளும் இளையோர் அமைப்பைச் சேர்ந்தோரும் உரையாற்றி இருந்தனர். பின்னர் 2.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வுகளில் அதிகளவான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும், மற்றும் வேற்றின புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர்............ read more

Wednesday 1 June 2011

இறுதிக்கட்டப் போரின்போது புலிகளை சுற்றிவளைத்த கருணா குழுவினர்!


இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் கிழக்கில் பதுங்கியிருக்கக்கூடிய பகுதிகளில் இராணுவத்துடன் இணைந்து கருணா குழுவினர் நிலைகொண்டிருந்தனர்.
இதன் மூலம் விடுதலைப் புலிகளுடனான போரின்போது இலங்கை இராணுவத்தினருக்கு கருணா குழுவினர் உதவியதாக இலங்கையின் இராணுவ உயரதிகாரி மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்துள்ளார்.

முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது கருணா குழுவினர் முன்னின்று உதவியதாக அந்த உயர்ரதிகாரி தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து..(ஒரு அவசரத் தகவல்)


நடந்து முடிந்த ஈழத்திற்கான நீண்ட போரில் சில உலகநாடுகளின் உதவியுடனும் பல கொடுமையான சர்வதேச போர்க்குற்ற நடவடிக்கைகளுடனும் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா ராணுவம் போருக்கு பின்னரும் பல மனிதஉரிமை மீறல்களையும் வன் கொடுமைகளையும் நடத்திவருகிறது. முள்வேலிகளுக்குள் அடக்கப்பட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் காணாமல்போவதும் நூற்றுக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவதுமே இதற்கு சாட்சி.

தாயகம் நோக்கிய செயற்பாட்டிற்கான சமகால கருத்தரங்கு - பிரித்தானியா


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டு, பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
 
இக்கருத்தரங்கு பிரித்தானியத் தலைநகர் லண்டனின் KINGSBURY பகுதியில் No: 368A Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE, மண்டபத்தில் எதிர்வரும் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல – சீமான் அறிக்கை.


தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல – சீமான் அறிக்கை.

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை.
இலங்கை முன்னாள் பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்கே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை.
 ஈழத் தமிழர் பிரச்சனையில் எப்போதும் கடைபிடித்துவரும் மூடு மந்திரச் செயல்பாட்டை இன்னமும் இந்திய அரசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால், நேற்று இரவு கொழும்பில் அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசுகையில் விக்கிரமசிங்கே, வெளியிட்ட விவரங்களைப் பார்க்கும்போது, இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் பேசியுள்ளார்கள்.

சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.


.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்
சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.
மே பதினேழு இயக்கம் நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில்ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறதுஇந்த அறிக்கை போர் பற்றிய இலங்கைஅரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாதஒன்றாக பார்க்கிறதுதமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலைஅடிப்படையிலான போர் மற்றும் இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளதுஎன்பதை அங்கீகரிக்க வேண்டும்போரில் 1,46,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பதுமட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த  விடுதலை கோரிக்கையின்அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர்
ஆக 2,50,000க்கும் மேலாகதமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது 

காணொளி : ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும்

இடம் : செ.தெ. நாயகம் பள்ளி
தேதி :  28 மே 2011, சனிக்கிழமை
நேரம்:  மாலை 4.30 மணி முதல்.
மே பதினேழு இயக்கம'

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - திருமுருகன் அறிமுக உரை 

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் -டி.எஸ்.எஸ் மணி உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையும் ஊடகமும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - பிரியா தம்பி உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையின் சாரம்சங்கள்- சாதகமும், பாதகமும் 



தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - அருள் எழிலன் உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையின் சாரம்சங்கள்- சாதகமும், பாதகமும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் -வழக்கறிஞர் பாண்டிமாதேவி உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையின் சாரம்சங்கள்- சாதகமும், பாதகமும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - தேவசகாயம் உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையும் இந்தியாவும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - தோழர் ராஜேந்திர சோழன் உரை 

தலைப்பு : ஐ.நா அறிக்கையும் இந்தியாவும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - பேராசிரியர் பால் நியூ மேன் உரை 

தலைப்பு : ஐ நா அறிக்கையும் மனித உரிமைப்போரும்

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - க.அய்யநாதன் உரை 

தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை

தமிழீழ விடுதலையும் ஐநா நிபுணர் குழு அறிக்கையும்
கருத்தரங்கம் - திருமுருகன் உரை 

தலைப்பு : சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை

லண்டனில் நடைபெற்ற "மே" மாதத்திற்குரிய சரித்திர நாயகர்களையும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட மக்களினதும் நினைவுவணக்க நிகழ்வு.


"மேமாதத்திற்குரிய சரித்திர நாயகர்களையும்முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களினதும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் இடப்பெற்றது.

பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டு லண்டன் கொலிண்டேல் பகுதியில் அமைந்துள்ள "சென் மெத்தீயூஸ் சேர்ச்மண்டபத்தில் சனிக்கிழமை (28-05-20110) மாலை மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை ஜேர்மனில் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் திரு.நடராஜா ராஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

கோத்தாவிடம் உத்தரவுகளைப் பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களா ? புது ஆதாரம் !

இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் ! அங்கே எமது இளையோர்களைக் கொண்ற சிங்கள வெறியர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ! 
அதுவரை உலகத் தமிழர்கள் ஓயமாட்டார்கள். தற்போது நாம் இருக்கும் நிலை "சுடலை ஞானம்" என்ற நிலையாகும். புரியவில்லையா ? அதாவது யாராவது செத்துப்போனால் சுடலை சென்று அழுவதும், பின்னர் வீடு திரும்பியதும் குழித்துவிட்டு எமது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி நடந்தவற்றை மறந்து சிரித்து சல்லாபிக்கும் ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். உணர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, கொல்லப்பட்ட தமிழர்களின் நிலை இவை அனைத்தையும் நாம் மனதில் நிறித்தி எப்போதும் நீதி கிடைக்க உழைக்கவேண்டும். அதனூடாகவே விடுதலையும் கிட்டும்.............. read more

ராஜபக்ஸ சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராஜேந்திரன்


எமக்கென ஒரு அரசியல் வெளி திறந்து விடப்பட்டிருக்கிறது….
ராஜபக்ஸ சகோதரர்கள் தண்டிக்கப்படுவார்களா? யமுனா ராஜேந்திரன்
 18 மே 2009 ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்து முடிந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால், போர் நடந்து கொண்டிருந்த வேளையில்,  23 மார்ச் 2009 இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளரும் தென் கொரியப் பிரஜையுமான பான் கி மூன் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை கொழும்பில் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அந்தக் கூட்டறிக்கையில் போர்நிகழ்வுக்கான ‘பொறுப்புக் கூறலையும் வெகுமக்கள் அதனால் அடையும் துயர்களையும் கவனம் கொள்வது’ என இருவரும் ஒப்புக் கொண்டார்கள்............... read more

தமிழர்களுக்கு துணை நிற்பேன்: போல் மேர்பி உறுதி !

பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பியை நேற்று (31.05.2011) பெல்ஜியத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது அவர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கின்றார். ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் மனித உரிமை விடங்கள் பற்றி பேசப்பட்டன....................... read more

சனல் 4 காணொளி ஆதாரம்: ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா சீற்றம் !


பிரித்தானியாவின் சனல் 4 தொரலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட சிறிலங்காவின் போர்குற்றங்கள் தொடர்பிலான காணொளி ஆதாரம் சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.
வெளியிடப்பட்டிருந்தது.
சிறிலங்காவில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Christof Heyns  வர்களினால், நேற்று செவ்வாய்கிழமை (மே31) ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில்   அறிக்கையொன்று 
தொடர்பிலான, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட காணொளி விபரணம், உண்மையானவை என்றும், இது குறித்து சிறிலங்கா அரசு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் Christof Heyns  அறிக்கையில் தெரிவிக்க்பட்டடிருந்தது.............. read more

புலிகளை தோற்கடிப்பதற்கு கைக்கூலியாக ஒட்டுக்குழு கருணா ஒத்துழைப்பு வழங்கினார்


புலிகளை தோற்கடிப்பதற்கு கருணா ஒத்துழைப்பு வழங்கினார்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு தற்போதைய பிரதி அமைச்சரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.

கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க இரராணுவ நடவடிக்கைகளின் போது புலிகள் தப்பிச் செல்லாது தடுப்பதற்கு கருணா தரப்பினரை முக்கிய இடங்களில் நிலைநிறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்........ read more

குத்துயிரும் குலையுமாக உள்ள பெண்போராளிகைக் கொல்லும் இராணுவம்: புதிய ஆதாரம் !

போரில் காயமடைந்து, மற்றும் வான்படையின் குண்டு வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் பெண்போராளிகளை செத்த உடலங்களோடு தூக்கிப் போட்டும் இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கை போர்குற்றம் தொடர்பான பல காணொளிகளை வெளியிட்டுவரும் சனல் 4 தொலைக்காட்சி வரும் ஜூன் 14ம் திகதி புது யுத்தக்குற்ற காணொளி ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1 மணித்தியாலம் நடக்கவிருக்கும் இந் நிகழ்ச்சியில் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராயப்படவுள்ளதாகவும் அது செய்தி வெளியிட்டுள்ள............ read more

Monday 30 May 2011

எங்கள் பிரச்சனையை தீர்க்க எங்களுக்கும் தெரியும் -பிற நாடுகள் தலையிட கூடாது -மகிந்தா புது உபதேசம் .!

தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத அரசியல் பலத்தில்  பலம் பெற்றிருந்த வேளை புலிகள் நடத்திய பாரிய சிங்கள இனவழிப்பு படைகளிற்கு  எதிரான மூர்க்க தனமான தாக்குலை நடத்தி பலநூறு படைகளை ஒரே தடவையில் அழித்து பலமில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கைபேற்றி அவற்றுடன்  ஒரு மரபு  படையணியாக புதிய பரிமாணம் பெற்றது .


அப்போது புலிகளின் எதிர் தாக்குதலை முறியடிக்க முடியாத  நிலையிலும் புலிகள் தொடுத்த பல குறிசூட்டு புலிகளின் இராணுவ மரபு நடவடிக்கைகளை தொடர்ந்து உலக நாடுகளின் ஆயுத அரசியல் உதவிகளைநாடியது .

இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் – என்ன செய்யப்போகின்றது இந்தியா?!


மனித உரிமைக்கூட்டத்தில் இலங்கையில் ஏற்பட்ட மனிதப் பேரழிவுகளுக்கு உரிய விசாரனைகள் வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்போது. எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காத போது பாகிஸ்தான் மட்டும் இலங்கை விவகாரம் முடிந்துபோன விடயம் என இலங்கையின் இனப்படுகொலைகள் போர்க்குற்றங்களுக்க ஆதராவாக குரல் கொடுத்துள்ளது.

பாகிஸ்தானின் பல தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் பயிற்சி பெற்றுவருவதாக பல உலக உளவுத்துறைகள் தகவல் வழங்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது......... read more

சிங்கள மட்டையாட்ட அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டம்


சிங்கள மட்டையாட்ட அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டம்

நேற்று (28-05-11) பிரித்தானியவில் காடிப் (Cardiff) எனுமிடத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் காலை 10மணிக்கு விளையாட்டு மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது........ read more