Translate

Wednesday 1 June 2011

தாயகம் நோக்கிய செயற்பாட்டிற்கான சமகால கருத்தரங்கு - பிரித்தானியா


முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தாயக விடுதலைப்பயணத்தில் உருவாகியுள்ள அரசியல் இடைவெளியை நிவர்த்திசெய்யும் பொருட்டு, பிரித்தானியா வாழ் தமிழீழ செயற்பாட்டாளர்களால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
 
இக்கருத்தரங்கு பிரித்தானியத் தலைநகர் லண்டனின் KINGSBURY பகுதியில் No: 368A Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் முகவரியில் அமைந்துள்ள RNB VENUE, மண்டபத்தில் எதிர்வரும் 05-06-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.


தமிழீழம் ஒன்றே தமிழர்களுக்கு முழுமையான விடுதலையை பெற்றுத்தரும் என உளமார ஏற்றுக்கொண்டவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றலாம் என்பதை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

அத்தோடு 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இக்கருத்தரங்கில் அனுமதி இல்லை என்பதையும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்தரங்கு நடைபெறும் இடம்"RNB VENUE"
                                                                       No: 368A Stag Lane,
                                                                       Kingsbury, London,
                                                                       NW9 9AA

காலம்05-06-2011 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை

No comments:

Post a Comment