தமிழ் சட்ட அறிஞர் சங்கம் (ஐ.இ)
TAMIL LAWYERS ASSOCIATION (UK)
முக்கிய அறிவித்தல்
பிரித்தானிய அரசாங்கம் அகதி விண்ணப்பம் செய்து அகதி நிலை மறுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை 28-09-2011 இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இருப்பதால்,
அதற்கு எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராய்வதற்கான பொதுக் கூட்டம் ஒன்று 25-09-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 7 மணிவரை ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் பொதுமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சட்ட அறிஞர்களையும், அகதி வேலைகளில் ஈடுபடுபவர்களையும், தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களையும், சமூக இயக்கங்களையும், பொதுமக்களையும் திரண்டுவந்து கலந்துகொண்டு ஏற்ற ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.
தமிழ் சட்ட அறிஞர் சங்கம் (ஐ.இ)


ஜெனிவாவிலும், நியுயோர்க்கிலும் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதிகளிடம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. .......













இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய தகவல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.........
சில தினங்களுக்கு முன்னர் லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் உள்ள( A Road)- வீதி ஒன்றில் தமிழர் ஒருவர் இரவுவேளையில் சாரத்துடன்(கைலி) நடந்து வந்துகொண்டு இருந்திருக்கிறார். இதனைக் கவனித்த பிறிதொரு தமிழர் தனது காரை நிறுத்தி உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா எனக்கேட்டபோது அவர் தனது சோகக்கதையைச் சொல்லியுள்ளார். இதனை அடுத்து நல்ல உள்ளங்கொண்ட இத் தமிழர் சாரத்துடன் வந்த தமிழரை வீடுவரைகொண்டு சென்று இறக்கிச் சென்றுள்ளார். அப்படி என்ன தான் நடந்தது என்று கேட்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குச் செல்லாம். .....
சிறு குற்றத்துக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பிணையில் விடுதலையாகியுள்ளார். இவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்த கோப்பாய் பொலிசார் அந்தத் தமிழ் இளைஞரை நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். குறிப்பிட்ட அவ்விளைஞன் பிணையில் வெளிவந்த வேளை நீதுமன்றத்தின் பின் வாசலில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிசார் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்...........


இலங்கை இந்த வருட இறுதிக்குள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என பிரித்தானிய அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது...........
வத்தளை தொகுதியிலே அமைந்துள்ள ஒரு தனித் தமிழ் பாடசாலையான வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியை தந்திரமாக அபகரிப்பதற்கு வத்தளையில் உள்ள சில பேரினவாத மற்றும் மதவாத சக்திகள் முயற்சி செய்கின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, வட்டக்கச்சி முருகன் கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு 14 லட்சம் ரூபா பெறுமதியான சுவாமி விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.