ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டம் தமிழகத்தின் கட்சிகளுக்கிடையேயான போட்டி அரசியலில் சிக்கிச் சின்னாபின்னமாகி உள்ளது.
ஈழத்தில் இன்று வாழ்வை மீள் கட்டமைக்கத் தடுமாறும் விதவைகள், உடல் உறுப்புகள் இழந்தோர், அனாதைக் குழந்தைகள் ஆகியோருக்கு தமிழக மக்கள் உதவவேண்டும். மத்திய மாநில அரசுகளும் ரோட்டரி, அரிமா உள்ளிட்ட சமூக அமைப்புகளும் இணைந்து செயற்படும் முறைப்படியான புனரமைப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வேகமாக விரிந்து வரும் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவும், அமெரிக்க - ஐரோப்பிய - ஜப்பான் நாடுகளுக்கு கவலை தருவதாகவும் உள்ளது. சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறுமானால் தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் அந்த வல்லரசு நாடுகள் இலங்கையைத் துண்டாடி தமிழ் ஈழம் உருவாக்குவார்கள்" என்று பேசினார்.
|
No comments:
Post a Comment